Naan Oru A
()
About this ebook
ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்ற கதாபாத்திரத்தினால் இந்த கதையில் ஏற்பட்ட விளைவுகள் பற்றியும், புஷ்பா யார்? புஷ்பாவுக்கும், சுஜாதா முனியாண்டிக்கும் உள்ள பந்தம் என்ன? ஜென்னி, குமாரை காப்பாற்ற செய்யும் தந்திரங்கள் பற்றியும் மர்மமும், நகைச்சுவையும் கலந்து எழுத்தாளர் படைத்துள்ளார். அவர் சிந்தனையில் உதித்ததை, சுவாரஸ்யத்துடன் படிப்போம் வாருங்கள்...
Read more from Rajendrakumar
Bairavan Azhaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsJulie Kodutha Vilai Rating: 0 out of 5 stars0 ratingsInnamum Brammachari Rating: 5 out of 5 stars5/5Ore Naal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSammanthi Rating: 0 out of 5 stars0 ratingsKollathey Yaarum Paarthal! Rating: 0 out of 5 stars0 ratingsIraval Uravugal Rating: 0 out of 5 stars0 ratingsThanimara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsStraw- Oru Extra Rating: 0 out of 5 stars0 ratingsAnthapurathil Oru Nandhalala Rating: 0 out of 5 stars0 ratingsOomai Karu Rating: 0 out of 5 stars0 ratingsKathavukku Irupuramum Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsOru Nalliravin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsIranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsTheerkkaa Sumangali Rating: 0 out of 5 stars0 ratingsNee? Neeya? Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Ingey! Iravil Engey? Rating: 0 out of 5 stars0 ratingsKonal Nizhalai Thurathi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Ore Iravu Rating: 0 out of 5 stars0 ratingsVanakkathukkuriya Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Theriyum Suganthi Rating: 0 out of 5 stars0 ratingsVaalgal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Vasantham Rating: 0 out of 5 stars0 ratingsRayilil Vantha Mayil Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Maranam Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorgam? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Naan Oru A
Related ebooks
Sigappaaga Oru Nizhal Rating: 5 out of 5 stars5/5Iranthavane, Vanakkam Rating: 5 out of 5 stars5/5Meendum Thodarum Rating: 5 out of 5 stars5/5Azhagu Vayathu Aabathu Rating: 0 out of 5 stars0 ratingsIniyavaley Iranthu Po! Rating: 0 out of 5 stars0 ratingsMutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Piragu Oru Maalaiyil... Rating: 3 out of 5 stars3/5Makeup Punnagai Rating: 5 out of 5 stars5/5Idhu Valarum Paruvam Rating: 5 out of 5 stars5/537vathu Elumbu Koodu Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsSangamithrai Rating: 0 out of 5 stars0 ratingsKannamoochi Re... Re... Rating: 5 out of 5 stars5/5Yerkanave Sonnapadi Rating: 0 out of 5 stars0 ratingsMannikka! Manamillai, Mannikka...! Rating: 0 out of 5 stars0 ratingsKalai, Malai, Kolai..! Rating: 0 out of 5 stars0 ratingsOdi Vaa Iniyaa Rating: 5 out of 5 stars5/5Oru Chinna Thavaru Rating: 0 out of 5 stars0 ratingsNizhal Mudichu Rating: 5 out of 5 stars5/5Operation Venus Rating: 0 out of 5 stars0 ratingsKadhal XYZ Rating: 0 out of 5 stars0 ratingsEthuvarai Sorkkam Rating: 0 out of 5 stars0 ratingsVidiyattum, Vidai Solgirean Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Neram Rating: 0 out of 5 stars0 ratingsPanivanbudan kettu Kolgiren Rating: 5 out of 5 stars5/5Ithu Avalin Kathai! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalargal Jakkirathai Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Neera Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIrandam Kaadhal Yutham Rating: 5 out of 5 stars5/5Million Dollar Unmai Rating: 5 out of 5 stars5/5
Reviews for Naan Oru A
0 ratings0 reviews
Book preview
Naan Oru A - Rajendrakumar
http://www.pustaka.co.in
நான் ஒரு A
Naan Oru A
Author :
ராஜேந்திரகுமார்
Rajendrakumar
For more books
https://www.pustaka.co.in/home/author/rajendrakumar
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முதலில் இதைப் படியுங்கள்
கொலை - அவள் சொன்னாள்!
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
கோணல் நிழலைத் துரத்திச் சென்றேன்!
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
முதலில் இதைப் படியுங்கள்
இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள்? நீங்கள் யார்?
குக்கரில் அடுக்கி அடுப்பில் ஏற்றிவிட்டு, அது விஸில் அடிக்கும் வரைக் காத்திருக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பிக்கும் நீங்கள் குடும்பத் தலைவி மிஸஸ் மீனாட்சியம்மாவா?
வேர்க்க விறுவிறுக்க கிரிக்கெட்டோ, டென்னிஸோ ஆடிவிட்டுக் கல்லூரிப் பாடங்களில் மூழ்கும் முன் ரிலாக்ஸ் பண்ணுகிற நேரத்தில் படிக்கும் நீ கல்லூரி மாணவன் சுரேஷா?
ஸ்ரீராமஜெயம் எழுதி முடித்துக் கொட்டாவிவிட்ட நேரம் போகத் தூக்கம் வரும்வரை படித்து வைப்போமே என்று இருக்கும் நீங்கள் ரிடைர்ட் ஆபீஸர் மிஸ்டர் பஞ்சாபகேசனா?
கண்டக்டரிடம் பாஸைத் துளைத்து வாங்கி அண்ணா நகர வரும் வரை படிக்கலாமே என்று ஆரம்பிக்கும் நீங்கள் ஆபீஸ் கோயிங் கேர்ல் மிஸ் கிரிஜாவா?
நீங்கள் யார்?
யாராக இருந்தாலும் சரி. படிக்கும் முன்னால் உங்கள் வயதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காரணம் இருக்கிறது. தலைப்பிலேயே இருக்கிறது.
சின்னப் பையன்களும் பாப்பாக்களும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அப்பால் போங்களடா கண்ணுகளா!
அப்புறம் உங்களைப் பெற்ற பெரியவர்கள் கட்டையை எடுத்துக்கொண்டு உங்களைத் தேடமாட்டார்கள். என்னைத்தான் தேடி வருவார்கள்.
என்னைப் பற்றிக் கொஞ்சம் கொறிக்கிறேனே!
கொஞ்சம் துணிச்சலானவன். சட்டத்தைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பயம் குறைவு. (நீ ஒரு பப்ளிக் சர்வெண்ட். பப்ளிக் நிற்கிறபோது உனக்கென்ன ஸீட்? எழுந்திரு மேன்
என்று பஸ்ஸில் உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டரை எழுப்பி, தான் உட்கார்ந்தவர் என் அப்பா. அவர் பிள்ளையாயிற்றே! நானா சட்டத்துக்குப் பயப்படுகிறவன்?)
இப்போது சில சட்ட மீறல்களைத் தைரியமாகச் செய்யப் போகிறேன். நீங்களும் துணைக்கு வருகிறீர்கள். கடத்தல், கொலை, கற்பழிப்பு, தப்பி ஓடுதல்.
போலீஸ் அதிகாரிகள், சி.பி.ஐ ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் இவர்கள் இந்தக் கதையைப் படிக்கத் தடை போடுகிறேன். ஏன் படிக்கட்டுமே! எனக்கு என்ன பயமா? எனக்கு மந்திரிகள், மாஜி போலீஸ் ஐ.ஜி அருள் எல்லாரையும் தெரியும். மொரார்ஜிதேசாய்கூட என்னைப் பார்த்தால் பிரியத்துடன், ‘க்யா ஹை பாய்?’ என்பார் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.
ஆனால் என் தனி மனித உரிமை எனக்குத் தெரியும். நீங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது. காரணம்? வலுவான காரணம் ஒன்று இருக்கிறது.
ஹலோ மை டியர் யங் மென் அண்ட் லேடீஸ்! அதற்குள் புரட்டினால் எப்படி? அது எந்தப் பக்கம் வருகிறதென்று இப்போதே எப்படிச் சொல்லமுடியும்? அது வருகிறபோது தானாக வரும். நீங்கள் படியுங்கள் மிஸ்டர் ராமமூர்த்தி.
நான் கொஞ்சம் வித்தியாசமானவன் (மறுபடியுமா? பொறுங்கள். நான் இன்னும் சுயபுராணத்தை முடிக்கவில்லை.)
அரைப் பிளேட் பிரியாணிப் பந்தயத்துக்காக செயிண்ட்தாமஸ் மவுண்ட் பின்புறமிருக்கும் இடுகாட்டில் இரவு பன்னிரண்டு மணிக்குத் தேர்ந்தெடுத்த இடத்தில் ஆணி அடித்து வந்திருக்கிறாயா ராஜா?
பை நிறையச் சில்லரை இருந்தும் பிரபாத் டாக்கீஸிலிருந்து பல்லாவரம் வரை நடந்தே போய் நடந்தே வந்து காலுக்கு வெந்நீர்விடாமல் இருந்திருக்கிறாயா மிஸ் மாலதி?
கோடாலி முடிச்சு, வெற்றிலை பாக்கு வாய் மணக்க டவுட்டனில் நடக்கும் ஒரு முனியம்மாவைப் பார்த்து (அவள் தமிழ் தெரியாத ஆங்கிலோ இந்தியர் வீட்டில் வேலை செய்பவள் என்பது அறியாமல்) ‘ஐ லைக் டு ரேப் ஹர்’ என்று சொல்லிவிட்டு, ‘யூ ஸன் ஆஃப் எ பிட்ச்’ என்று ஆரம்பித்து அவள் ஆங்கிலம் முழங்குவதைக் கேட்டு நீங்கள் விழித்ததுண்டா மிஸ்டர் பாலகிருஷ்ணன்.
நான் அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் சொன்னேன். நான் கொஞ்சம் வித்தியாசமாவன் என்று. நான் சுயசரிதம் எழுதினால் அதில் த்ரில் இருக்கும். பச்சையான செக்ஸ் இருக்கும். (கமலாதாஸ் கதையைவிடப் பச்சையாக என் சுயசரிதத்தை வெளியிடச் சொல்லி எழுதுங்ளேன் மிஸஸ் தர்மா நெல்லை நாயகம், விருதுநகர் சிவகுமார்.)
ஏமாற்றங்கள், வெற்றியின் சின்னங்கள், தோல்வியின் துவளல்கள், வெறித்தனமான தாக்குதல்கள் எத்தனையோ?
சாம்பிளுக்கு ஒன்றிரண்டு சொல்கிறேன். நீங்களும் கூடவே வாருங்கள். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கிறது மிஸ்டர் கண்ணன்.
இந்த வருடம் கனரா பாங்க் நண்பர் நாகசாமி படுக்கை மாதிரி ஒரு பெரிய டைரியைக் கொடுத்து அனுபவங்களை எழுதிவை. நாளைக்கு சுயசரிதம் எழுத உதவும் என்றார். ஒரு வரிகூட எழுதவில்லை.
இப்போது இந்தக் கதையின் முதல் பிரதியை அதில் தான் எழுதப் போகிறேன்.
ஆமாம், ஏன் இப்படியொரு தலைப்பைக் கொடுத்தேன்? படித்த பிறகு நீங்கள் நிச்சயமாக அந்த முத்திரையைத்தான் தரப் போகிறீர்கள். அதை நானே கொடுத்து விட்டேன். அவ்வளவுதான்.
அத்தியாயம் ஒன்று
கொலை - அவள் சொன்னாள்!
1
மிகவும் அந்தரங்கமான காட்சியை இருட்டிலிருந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தேன். உணர்ச்சிபூர்வமாக இருந்தேன்.
பால்!
அந்தச் சின்னப் பெண் (13) கேட்டாள். நான் உன்னோடு உன் கட்டிலிலேயே படுத்துக்கொள்ளட்டுமா?
அவளை அண்ணாந்து பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான் அவன்.
ப்ளீஸ் பால். வயிற்றுப் பசிக்குத்தான் உணவு தர முடியவில்லை. இந்தப் பசியையாவது தீர்க்கிறேனே!
மீண்டும் திரும்பியவன் நகர்ந்து கட்டிலில் அவளுக்கு இடமளித்தான்.
அவள் மௌனமாக ஆடைகளைக் களைந்து போர்வையினுள் ஒடுங்கி மல்லாந்திருந்தாள்.
ஒருக்களித்தவாறு படுத்திருந்த அவன் அவளைப் பார்த்தான். மெள்ள நிமிர்ந்து அவள் உதடுகளைத் தன் உதட்டினால் லேசாகத் தடவினான். அவளது கை அவனது முதுகைத் தடவியது, பரவியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
ஆவேசமான தழுவல்கள், உணர்ச்சிகரமான முத்தங்களுக்கிடையே அவனது கை மேஜைப்புறமாக நீண்டது. மேஜை விளக்கு பட்டென்று அணைந்தது.
மீண்டும் விளக்கு எரிந்தபோது,
திரை ‘இண்டர்மிஷன்’ என்றது. பார்லே குளூகோஸ் பிஸ்கெட்டைச் சிபாரிசு செய்தது ஸ்லைடு.
உடம்பில் ஒரு கதகதப்புத் தெரிந்தது. மூன்றாவது தடவையாக (ஒரே நாளில்) பார்க்கிறேன் அந்தப் படத்தை (ப்ளுடைமண்டில் இது ஒரு சௌகரியம். படிக்கட்டு ஆள் தான் வெளியே வரும் போதெல்லாம் சிரிப்புடன் பார்க்கிறான். ‘பன்னாடை’ என்கிறானா?)
‘ஜில்’ என்று பனி படர்ந்த கோகா கோலாவை ஸ்ட்ரா வைத்து உறிஞ்னேன். (இது மூன்றாவதா? ஆறாவதா? வெளியே வரும்போதெல்லாம் வாங்கிக் குடிக்கிறேன்)
பார்த்தேன். பால்கனி வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான் அந்தப் பையன். லாங் ஹேர். அழகான பையன். அவன் போட்டிருந்த பாண்ட் நிச்சயம் ஃபாரின் சரக்காக தான் இருக்கும்.
கோலா தீர்ந்த ஸ்ட்ரா சளக் பொளக் என்று எச்சரித்ததும் பாட்டிலைக் கொடுத்துவிட்டு சிகரெட் ஒன்றை எடுத்து உதட்டில் பொருத்திக் கொண்டேன்.
அந்தப் பையனின் முதுகு என்னமோ எனக்குப் பரிச்சயமானது போலவே இருந்தது!
தீக்குச்சி உரசும் சின்ன ஓசை கேட்டதும் அவன் சட்டென்று திரும்பினான். ஸாரி. திரும்பினாள். அது அவன் இல்லை. அவள்.
ஜென்னி!
என்று கூவி விட்டேன்.
அவள் நிதானமாக நெருங்கி, குனிந்து என் கையில் எரிந்த தணலில் சிகரெட்டை முங்கிப் பற்ற வைத்துக் கொண்டாள்.
‘ப்பூ’ என்று புகையை ஸ்டைலாக வெளியேற்றினாள். ஸோ யூ நோ ஜெனீஃபர்
என்றாள்.
ஜென்னீ! நீ ஜென்னி இல்லே!
நோ.
சுட்டு விரலை ஆட்டினாள். ஐயாம் ஹர் ஸிஸ்டர். அக்கா மேன்.
சுரீரென்று நெருப்பு விரலை தீய்க்கவே உதறினேன். மற்றொரு குச்சியைக் கிழித்து சிகரெட்டைப் பற்றவைக்கும் போது...
ஹாய்
என்றான் அந்தப் பணக்கார வாலிபன்.
ஹே, யூ! ஹாய்
என்றவளின் இடுப்பை வளைத்து இழுத்துக் கொண்டு போனான் அவன்.
படம் ஆரம்பித்து நெடுநேரம் கழித்துத்தான் உள்ளே வந்தார்கள். ஒரு மூலையில் ஒடுங்கிக் கொள்வது இருட்டில் தெளிவாகத் தெரிந்தது.
இதுநேரம் அந்த முனியாண்டி