Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannellam Un Pakkam
Kannellam Un Pakkam
Kannellam Un Pakkam
Ebook165 pages59 minutes

Kannellam Un Pakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

N.C. Mohandoss has written more than 300 novels, more than 500 short stories, 23 novelettes, more than 3000 articles and 4 TV dramas. He has written on social topics and has to his credit more than 100 books published which have appeared in all leading Tamil magazines and newspapers. His writings are dedicatd for the students of Annamalai university tamilnadu for reaserach to obtain Phd.

N.C.Mohandoss has been conffered with doctorate for community services by The world tamil university, Meryland.

Mohandoss attributes his inspiration to the popular "Thuglak" magazine and reveres "Saavi" who encouraged him to write more and more. His success is also due to the efforts of Mr Ramesh of 'DinaMalar' and the constant support and guidance of his friend, Mr Manohar.

N.C.Mohandoss as the Founder of INDIAN FRONTLINERS, KUWAIT, a SERVICE Organisation registered with the Indian Embassy, Kuwait, has pioneered a number of social service activities and extended financial help to several orphanages, hospitals, and senior citizen homes, poor students for their educational and also for the welfare of stranded Indian workers in Kuwait.

Awarded by Dr.Kalam :

At the diamond jubilee of Anbu Paalam service organization function held on 4th oct 2013 --In acknowledgement of the support and assistance extended by NC.Mohandoss to ‘Anbu Paalam’ for the past 20 years, Dr .Kalam felicitated Founder & Writer N.C.Mohandoss with a Momento and Gold Medal . (matter and photo attached).

Mohandoss has also compiled, edited and released 23 parts of FRONTLINERS book, on Talented Indians in Kuwait, India tourism, Indian Embassy services, Indian educational institutions in Kuwait ,community services,Indian Achievers Globally and about Enviroment protection.

Mohandoss hails from a remote village called Nambukuruchy in Tiruchi District, Tamil Nadu which still lacks the post office.

He is working for Kuwait National Petroleum Company . Mohandoss feels a sense of pride in owning that his success is due to the support, patience and guidance of his wife ARULMOZHI, and their only daughter VINU, who correctly reads his mind and reflects his ambitions and aspirations in every way

Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580132405393
Kannellam Un Pakkam

Read more from Nc. Mohandoss

Related to Kannellam Un Pakkam

Related ebooks

Reviews for Kannellam Un Pakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannellam Un Pakkam - NC. Mohandoss

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    கண்ணெல்லாம் உன் பக்கம்

    Kannellam Un Pakkam

    Author :

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    1

    தூக்கநாயகன் பாளையம் பிள்ளையார் கோவிலின் முன்பு பஸ் நின்றபோது ஏறக்குறைய காலியாகியிருந்தது. இருந்த ஒன்றிரண்டு பேர்களும் மூட்டை முடிச்சைக் கட்டி இறங்கிக் கொண்டிருக்க, ஒரு கூட்டம் அவர்களை இறங்கவிடாமல் படிக்கட்டை மறித்துக் கொண்டு சண்டை பிடித்தது.

    சிநேகா சட்டென அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தாள்.

    புத்தகங்களை அள்ளி வயிற்றோடு இணைத்துக் கொண்டு ஜங்கென குதித்தாள்.

    அவள் பக்கத்து டவுனில் பி.ஏ. மூன்றாமாண்டு

    வயது கணக்கு பண்ணிக் கொள்ளுங்களேன்!

    சுடிதார்…

    ஓரடிக்கு வெட்டப்பட்டிருந்த முடியை ரப்பர் பேன்ட்டும், டிசைன் கிளிப்பும் அடக்கி வைத்திருந்தன. கழுத்துப் பக்கம் வியர்வையின் கசகசப்பு.

    மாலை வெயில் நெற்றியைத் தாக்கிற்று. சிநேகாவிற்குக் கைகால்கள் அசந்து போயிற்று. அவளுக்குத் தன் அப்பாவின் மேல் கோபம், கோபமாய் வந்தது.

    செல்லத்துரைக்கு நல்ல வசதி இருக்கிறது. பணத்திற்கு எந்தக் குறைவும் இல்லை. தினம் பத்தும் பத்தும் இருபது கிலோமீட்டர் தூரம் எதற்காகக் கோபிக்கு யாத்திரை செல்ல வேண்டும். பேசாமல் என்னை ஹாஸ்டலில் சேர்த்து விட்டுவிடுங்கள் என்றால் கேட்கமாட்டார்.

    சிநேகா! உன்னை விட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்? நீயும் ஹாஸ்டலுக்குப் போய்விட்டால் வீடு வெறிச்சோடிவிடும்!

    சனி ஞாயிறுக்கு வரேனேப்பா!

    சனி ஞாயிறு மட்டும் போதாது. தினம் தினம் நான் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கணும். உன் மூச்சுக் காற்று எனக்கு வேண்டும். உன் அருகாமை எனது சொப்பனம்! என்று டயலாக் பேசுவார்.

    தோழிகளெல்லாம் ஹாஸ்டலில் ஜாலியாக இருக்கிறார்கள். இங்கே வீட்டில் தனிமை. அப்பா பிசினஸ் பிசினஸ் என்று ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார். எப்போது வீட்டிலிருப்பார், எப்போது வெளியே கிளம்புவார் என்று சொல்ல முடியாது.

    எஞ்சியிருப்பது வேலைக்காரர்களும் ஆயாவும். ஆயாவின் முகத்தையே எத்தனை நேரம்தான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்!

    குழிவிழுந்த கன்னம்… கண்களில் எப்போதும் சோகம். ஏன் எப்போதும் அழுதுவடிகிறீர்கள், சந்தோஷமாய் இருக்கக்கூடாது? என்று கேட்டால், நான் எப்படியிருந்தால் என்னம்மா? எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் அனாதைதானே! என்று புலம்ப ஆரம்பித்து விடுவாள் ஆயா.

    அதுவே சிநேகாவிற்கு எரிச்சலைக் கிளப்பும். அனாதை என்றால் என்ன? சந்தோஷமாய் இருக்கக்கூடாதா? நல்ல துணிகள் உடுத்தக் கூடாதா?

    சிநேகா எத்தனைதான் புதுத்துணிகள் வாங்கிக் கொடுத்தாலும் பிரபாவதி அவற்றை உடுத்த மாட்டாள். தனக்குப் பழைய துணியே போதும் என்று கூறிவிடுவாள்.

    அவரவர்கள் தங்களுக்கு வசதியில்லையே… வாங்கித்தர ஆளில்லையே… காசில்லையே என்று ஏங்கும் போது இந்த ஆயா ஒரு அதிசயம்.

    விசாலமான வீடு, எல்லா வசதியும் இருக்கிறது. ஆனால் சிநேகாவிற்கு நிம்மதியில்லை. எல்லாமிருந்தும் ஏதோ ஒரு குறை. அது, அம்மா இல்லாத குறையா என்று தெரியவில்லை. மனதில் சூன்யம்.

    ஏம்ப்பா… நம் வீட்டில்தான் கார் இருக்கிறதே. டிரைவர் இருக்கிறாரே. என்னை டிராப் பண்ணச் சொல்லக் கூடாதா…?

    கூடாதுன்னு இல்லை…

    அப்புறம்…?

    படிக்கிற வயசுல சொகுசு கூடாதும்மா. சொகுசு படிப்புக்குப் பெரிய எதிரி. நானெல்லாம் அந்தக் காலத்துல எத்தனை மைல் நடந்திருப்பேன் தெரியுமா…? என்று பழம்புராணம் பாடுவார்.

    அதுவும் செல்லத்துரை பிடிவாதம் பிடித்தால் பிடித்ததுதான். எக்காரணம் கொண்டும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்.

    அடுத்தவரின் பாதிப்பு பற்றிக் கவலைப்பட மாட்டார் எத்தனைதான் தன் மேல் அன்பு செலுத்தினாலும் சிநேகாவிற்கு இந்தப் பிடிவாத குணத்தால் அப்பா மேல் ஒரு அந்நியம் தோன்றவே செய்யும்.

    பாவம் அம்மா!

    அம்மாவை இவர் எப்படியெல்லாம் ஆட்டி வைத்தாரோ… யாருக்குத் தெரியும்! பணம் இருக்கிறது. முரட்டுத் தேகம் இருக்கிறது. ஆனால் அப்பாவிற்கு விவேகம் மட்டுமில்லை.

    பிறர் பேச்சைக் கேட்பதில்லை.

    பிறரின் உணர்வுகள் பற்றி புரிந்து கொள்வதில்லை. அலட்சியம். அதுதான் அவளுக்கு அப்பாவின் மேல் பிடிக்காத விஷயம். ஆனால், அதற்காக அவள் பயப்படுவதில்லை. அவரை சீண்டிக் கொண்டேயிருப்பாள்.

    சிநேகா காம்பவுண்டு கேட்டைத் திறந்து கொண்டு புல்தரையில் நடந்தபோது வாட்சுமேன் ஓடிவந்து கேட்டைப் பறக்கத் திறந்து விட்டுவிட்டு, காரிடம் ஓடினான்.

    ஏய்… என்ன இது?

    அப்பா வெளியே போகிறார்.

    எங்கே…

    தெரியாது. அவசரம்!

    என்ன அவசரம்?

    அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா. எஜமான் கோபமாய் இருக்கார்!

    யார் மேல்?

    தெரில. இதோ வரார்… என்று அவன் ஒதுங்கிக்கொள்ள, வீட்டிற்குள்ளிருந்து செல்லத்துரை தாட்… தாட்டென ஓசையெழுப்பி வெளியே வந்து கொண்டிருந்தார். கதர் சட்டை பெரிய கை. இடது விரல் நுனி வேட்டியின் விளிம்பைப் பிடித்திருந்தது.

    சிநேகா வேண்டுமென்றே அவரை மறித்துக் கொண்டு புன்னகைத்தாள். அப்பாவைச் சீண்டிப் பார்ப்பதில் அவளுக்கு எப்போதுமே சந்தோஷம்.

    அப்பா! நான் காலேஜ் விட்டு வந்ததும் வெளியே ஷாப்பிங் போகலாம்னு சொல்லியிருந்தீங்களே…!

    தெரியும்மா. இப்போ அவசர வேலை! நீ குளிச்சு தயாராய் இரு. இதோ அரைமணி நேரத்தில் வந்துவிடுகிறேன். டிரைவர்! நீ வண்டியை விடு!

    அவர் சொல்லி வாய்மூடும் முன்பு வண்டி சீறிக்கொண்டு பாய்ந்தது. கேட்டிற்கு வெளியே புழுதி கிளப்பிக் கொண்டு பறந்தது.

    அப்பாவின் அந்த வேகம் அவளுக்குப் பயத்தைத் தந்தது.

    அம்மா இருந்திருந்தால் அவரை இப்படி ஆவேசப் படவைத்திருப்பாளா? ஏதாவது சொல்லி கட்டுப்படுத்தி இருக்கமாட்டாள்…?

    உடன் அவளுக்கு அம்மாவின் மேல் சிந்தை போயிற்று. அம்மா… நீ எப்படியிருப்பாய்?

    உன் படம் கூட இந்த வீட்டில் இல்லையே… ஏன் அப்பாவிடம் கேட்டால் உன் படம் எடுக்கலை என்கிறாரே… ஏன்?

    ஏன் நீங்கள் படம் எடுத்துக் கொள்ளவில்லை…? உன் பேச்சை எடுத்தாலே அப்பா நழுவுகிறாரே… ஏன்?

    அப்போது சமையல்கட்டிலிருந்து கொசுவத்தில் ஈரக்கையைத் துடைத்தபடி தளர்வுடன் பிரபாவதி வெளிப்பட்டு, சிநேகா! டீ தரட்டுமா…? என்றாள்.

    வேணாம்… குளிச்சுட்டு வந்திடறேன்.

    டிபனுக்கு என்ன பண்ணட்டும்?

    ஆயா! அப்பா எங்கே போறார்?

    எனக்குத் தெரியாதும்மா என்றாள் நடுக்கத்துடன். அவள் சொல்லி விட்டு சமையற்கட்டிற்குள் போக, ஆயா! ஒரு நிமிஷம்! என்று பிடித்து நிறுத்தினாள்.

    நான் ஒன்று கேட்டால் மறைக்காமல் உண்மையைச் சொல்வாயா…?

    என்ன…? அவளது கண்களில் மிரட்சியிருந்தது. வேண்டாம், எதுவும் கேட்க வேண்டாம் என்கிற கெஞ்சல்.

    நீ இந்த வீட்டில் எத்தனை வருடமாய் இருக்கிறாய்…?

    பதினைந்து பதினாறு வருடமாய்…

    அம்மாவை நீ பார்த்திருக்கிறாயா…? என் அம்மா யார்…? அவளுக்கு என்ன நேர்ந்தது? இருக்கிறாளா… இல்லை, செத்துப்போய் விட்டாளா…? அம்மாவின் உடமை என்று நான் மட்டும்தான் இருக்கிறேன். அவர்களது பொருட்களோ… அவர்களது நினைவாக ஒரு படம் கூட இந்த வீட்டில் இல்லையே… அது ஏன்? அம்மா பேச்சை எடுத்தாலே அப்பா எரிந்து விழுகிறாரே… ஏன்…?

    என்னை எதுவும் கேட்காதம்மா. எனக்கு எதுவும் தெரியாது! என்று நழுவினாள், பிரபாவதி.

    அம்மாவைப் பற்றிக் கேட்டால் ஏன் எல்லோரும் ஓடி ஒளிகிறார்கள்…? யோசிக்க யோசிக்க சிநேகாவின் நெஞ்சில் பாரம் அழுத்திற்று.

    2

    பாத்ரூமில் ஷவர் தூறிக் கொண்டிருந்தது. உடை களைந்து மேனியில் டவல் சுற்றியிருந்த சிநேகா குளிக்க மனமில்லாமல் அப்படியே வாஷ்பேஸனின் கண்ணாடியையே வெறித்துக் கொண்டிருந்தாள்.

    அவளுக்கு வேறு எதிலும் அப்போது சிரத்தையில்லை. ‘அம்மா! அம்மா’ என்று கண்ணாடியில் ஈர விரலால் எழுதினாள். அவளுக்கு அழுகை அழுகையாய் வந்தது. ‘உன் அம்மா எங்கே…? அவர்களுக்கு என்னாயிற்று?’. இது தோழிகள் சதா கேட்கும் கேள்வி.

    எங்கம்மா அப்படிச் சொன்னார்கள் இப்படிச் சொன்னார்கள்! எனக்குப் பிடித்ததெல்லாம் செய்து தருவார்கள்! எனக்கு தலைப்பின்னி விடுவார்கள்! எனக்கொரு துன்பம் என்றால் துடித்துப் போவார்கள்! என்னை மடியில் கிடத்தி தூங்க வைப்பார்கள்!

    இதையெல்லாம் கேட்கும்போது அவளுக்குச் சங்கடம் தோன்றும். இல்லாததன்மீது எப்போதும் ஒரு ஆர்வமும் ஆசையும்

    Enjoying the preview?
    Page 1 of 1