Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanmani Karthi
Kanmani Karthi
Kanmani Karthi
Ebook107 pages39 minutes

Kanmani Karthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சந்தோஷ் குமாரின் குழந்தையை காப்பாற்றும் டாக்டர் நிவாஸ். குழந்தையை காப்பாற்றியதற்கு பிரதிபலனாக நிவாஸின் மகளான கண்மணி கார்த்தியை கொலை செய்தவனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் குமார். கண்மணி கார்த்தியை கொலை செய்தவன் யார்? எதற்காக கொலை செய்யப்படுகிறாள் அவள்?கொலைக்கான பின்னனியில் யார் யார் உள்ளார்கள்? இக்குற்றத்தை கண்டறிய குமாருக்கு உதவி செய்தவர்கள் யார்? இறுதியில் குற்றவாளியையும் கொலைக்கான முழு காரணத்தையும் குமார் கண்டுபிடித்தானா? வாசிப்போம்…

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580132407025
Kanmani Karthi

Read more from Nc. Mohandoss

Related to Kanmani Karthi

Related ebooks

Reviews for Kanmani Karthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanmani Karthi - NC. Mohandoss

    https://www.pustaka.co.in

    கண்மணி கார்த்தி

    Kanmani Karthi

    Author:

    என்.சி. மோகன் தாஸ்

    NC. Mohandoss

    For more books

    https://www.pustaka.co.in/home/author/nc-mohandoss

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    திருவனந்தபுரத்திலிருந்து ஓட்ட ஓட்டமாய் ஓடி வந்த அந்த ரயில் எர்ணாகுளத்தில் வந்து நின்றது. மூச்சு வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொண்டது.

    வெளியே மழை தூறிக்கொண்டிருந்தது. துணையாய் மின்னல், இடி.

    அவர் - வாட்ச்சைப் பார்த்தார். மனதிற்குள் திட்டிக்கொண்டார். அவருக்குத் தெரியும் - அது பத்தினி இல்லை என்று. போன மாமாங்கத்திற்கு முன்பு சரியான நேரத்தைக் காட்டியிருக்கிறது. இப்போது - மூச்! சபித்துக்கொண்டே, ஆயிரமாவது தடவையாக, ‘இதைத் தொலைத்துவிட்டு வேறு வாங்க வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் மணி கடன் கேட்டார்.

    அவர் விரல்களால் சொடக்குப் போட்டு, கொட்டாவிக்குச் சமாதானம் சொல்லிவிட்டு மணி சொன்னார் பத்து

    அதாவது இரவு பத்து.

    இங்கே, மணி கேட்டவரோ, இல்லை, கொடுத்தவரோ முக்கியமில்லை. அவர்கள் ஹீரோக்கள் இல்லை. எக்ஸ்ட்ராக்கள்தான்.

    நம்பர் 5433 பெட்டி -

    டி.டி. ஆருக்கு பாத்ரூம் அருகில் நைஸாய டிப்ஸ் கொடுத்துக்கிடைத்த பர்த்தில் சௌகரியமாய்த் தூங்கிக்கொண்டிருந்த சந்தோஷ்குமார் என்கிற குமாரை உலுக்கி எழுப்பினார் சகப் பிரயாணி, எந்தா சாரே! விழிக்கு. எர்ணாகுளம் வந்து!

    தடாபுடாவென்று அல்லது புடாதடாவென்று இறங்கினான். இல்லை குதித்தான் குமார். இடுப்பைவிட்டு நழுவிய லுங்கியை ஆராதித்தான். முகத்தைத் துடைத்துக்கொண்டான். அவசர அவசரமாய்ப் பெட்டியைத் திறந்து... பேன்ட் எடுத்து... மாற்றினான்.

    லுங்கியை உள்ளே வைத்து முடிவிட்டு, தேங்க்ஸ் சார்... என்று சொன்னான் என்பதைவிட வழிந்தான் என்பது பொருந்தும்.

    காரணம், ‘நான் தூங்கிவிட்டால் எழுப்புங்கள்’ என்று குமாரிடம் சொல்லியிருந்தார் அவர். இப்போது அவரே இவனை எழுப்ப வேண்டியதாய்ப் போயிற்று.

    ஒருவார அலைச்சல் அவனைத் தூங்க வைத்துவிட்டது. எனவே அவன் தூங்கியதில் குற்றமில்லை. இனி ஆக வேண்டியதைக் கவனிப்போம். பெட்டியை எடுத்துக்கொண்டு, பாத்ரூமிற்குக் காவல் காத்த ‘கடன்காரர்’களை ஒதுக்கி வெளியே இறங்கினான் குமார்.

    ஸ்டேஷன் இரைச்சலையும் ஆரவாரத்தையும், சலசலப்பையும். இதர சூழ்நிலைகளையும் ஏனைய பல கதைகளிலிருந்து ஞாபகப்படுத்திக் கொள்க. மறுபடியும் வேண்டாம்.

    வாசலில் செக்கர் டிக்கட்டைப் பிடுங்கிக்கொள்ள. ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்து. ‘நான் முந்தி’ ‘நீ முந்தி’ என்று வந்த ஆட்டோக்காரர்களோடு ‘டூ’ விட்டு நடந்தான்.

    மணி பத்து பத்து. மழை மேகம் காணாமல் போயிருந்தது. சிகரெட் எடுத்துப் பற்ற வைத்தான். சுகமான சிந்தனைகளுடன் நடையைத் தொடர்ந்தான்.

    இந்த நேரத்தில் மனைவி சுபா (கவனிக்க திருமணமானவன்) விழித்திருப்பாளா... தூங்கியிருப்பாளா...? என்ற கேள்வி கேட்டு. இரண்டாவது இருப்பாளுக்கு வோட்டளித்தான்.

    குழந்தை சரவணன் (திருமணம் மட்டுமில்லை, இதுவும் ஆயிற்று) வம்பு செய்யாமல் தூங்குவானா? பாவம் சுபா! மொழி தெரியாத ஊரில் பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் அவதிப்படுகிறாள்.

    இருக்கிற துணைவனாகப்பட்ட நானும் அங்கே, இங்கே கேம்ப் போய் விடுகிறேன். பத்திரிகைகளன்றி வேறு துணை இல்லை பராபரமே... என்று இருக்கிறாள் சுபா.

    வேலைக்காரக் கிழவி இருக்கிறாள். ஆனால் அவளின் மலையாளம் கொடுமையானது. கதாமுதாவெனப் பேசுவாள். அத்தனை எளிதில் கிரகித்துக்கொள்ள முடியாது.

    என்னங்க... இந்த ஊர் சுற்றுகிற வேலையை விட்டுடுங்களேன்... என்னால தனியா இருக்க முடியல...

    கொஞ்ச நாள் பொறுத்துக்க சுபா. இப்ப ஊர் சுற்றினா பின்னால நல்லசம்பளம் கிடைக்கும், ப்ரமோஷன் கிடைக்கும். அப்புறமா எப்போதும் உன்னையே சுற்றிச்சுற்றி வரேன்.

    ப்ரமோஷனும் வேணாம். ஒரு மண்ணும் வேணாம். பேசாம, காலைல போனோமா, மாலையில வந்தோமான்னு ஒரு வேலையில இருங்க. அது போதும்.

    "ம்கூம். இப்போதைக்கு அது முடியாது சுபா. மேனேஜர் மிளகாய் மூஞ்சி. அவரிடம் நம்மோட கருணை மனு செல்லுபடியாகாது. அதுதான் சொல்றேனே...

    இன்னும் மூணு மாசம் பொறுத்துக்கொள். அதுக்குள்ளே இந்த மேனேஜர் படவாவை சரி பண்ணிடறேன். நேரத்தை வீணாக்காதே. நாளைக்கு நான் வெளியூர் போகணும்."

    நீங்க என்னதான் சொன்னாலும்... எனக்குத் தனியா இருக்கக் கஷ்டமா இருக்குங்க.

    அதுதான், தனியா இருக்க வேணாம்னு குழந்தை கொடுத்திருக்கேனில்லை! அப்புறம் என்ன?

    சீ, நம்மூர்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்... பேசறதுக்கு, கூடமாட ஒத்தாசை செய்யறதுக்கு... சே!

    போச்சுரா! ஆரம்பிச்சுட்டயா... அப்போ, இன்னைக்கு ‘குட் நைட்’ கிடையாது! அட ஏன் கண் கலங்கற சுபா... ஊர் நினைப்பாவே இருக்கா? வேணுமின்னா போய்ட்டு வரயா...?

    வேண்டாம். இப்பதானே போயிட்டு வந்து பத்து நாள் ஆவுது. எனக்கு என்னவோ, இங்கே இருக்கவே பிடிக்கலை. ஒருத்தர்ட்டயும் பேச முடியல. ஏதாவதொண்ணுன்னா உதவி செய்யக்கூட ஆள் இல்லை...

    "சரி, தமிழ்ப் பெருங்குடி மக்கள் வாழற பாரதியார் ரோடுக்கு வீட்டை மாத்திடுவோம். ஆனா வீடு கிடைக்கமாட்டேன்கிறதே சுபா? கவலைப்படாதே. நம்ம வெங்கட்ராமன் சார் ஒரு வழி பண்றேன்னிருக்கார். அடுத்தது என்ன மலையாளம்தானே? அம்பிகா சொல்லித் தந்தாங்களே... அப்ப என்ன பண்ணே? சரி,

    Enjoying the preview?
    Page 1 of 1