Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marangalum Athan Payangalum
Marangalum Athan Payangalum
Marangalum Athan Payangalum
Ebook134 pages43 minutes

Marangalum Athan Payangalum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காடு, மலைகளில் வாழ்ந்த மனிதன், மரத்திலிருந்து நீண்டதூரம் வெளியில் வந்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறிவிட்டான். அதிகாலையில் அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து அவன் சோம்பல் முறிக்கும்போது தூரத்தில் இருந்து மரம் அவனை பார்த்து சிரிக்கிறது. வாக்கிங் போகும்போது சிலு சிலுவென அடிக்கும் குளிரும் அவன் முகத்தில் அறைந்ததுபோல் இருக்கிறது. என்னை விட்டு நீ நீண்டதூரம் சென்றுவிட்டாலும் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை. உனக்கு நல்ல காற்றை தருவதற்காக அழகிய சிறு சிறு செடிகளாக உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறேன் என்கிறது.

சிறுவயதில் என் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா என்னையும் என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு சிறிய தோட்டத்துக்கு சென்றார். அங்கிருந்த ஒரு குட்டையில் தண்ணீரை முகர்ந்து செடிகளுக்கு ஊற்றும்படி கூறினார். ஒருவருடன் ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு தண்ணீரை ஊற்றி விளையாடினோம்.

காலம் கடந்தது நான் கல்லூரிக்கு பீஸ் கட்ட என் அப்பாவிடம் பணம் கேட்டபோது அவர் என்னுடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வாங்கிவரும்படி கூறினார். மாமாவிடம் பணம் பெற்றுக்கொண்டு, ‘நீங்கள் ஏன் அப்பாவுக்கு பணம் தருகிறீர்கள்?’என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் உன் அப்பாவின் தோட்டத்தில் உள்ள புளிய மரங்கள், வாழை மரங்களை குத்தகைக்கு வாங்கியுள்ளேன். நான் பலமுறை உன்னுடைய படிப்பக்காக் கொடுத்தப் பணம் எல்லாம் உன் அப்பா வளர்த்த மரங்கள் கொடுத்ததுதான்’என்றார். சிறுவயதில் என் நண்பர்களுடன் செடிகளுக்கு தண்ணீர்விட்டதை நினைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டேன். அதற்குப்பின்புதான் மரங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. என் அப்பாவிடமும் மாமாவிடமும் மரங்கள் குறித்து பல தகவல்களைகேட்டு தெரிந்து கொண்டேன். மரங்கள் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுக்கு புத்தகமாக கொடுத்துள்ளேன்.

என்னுடைய நூல்களை இ-புக்ஸாக தொடர்ந்து வெளியிட்டு வரும் புஸ்தகா.காம் இணைய தளத்திற்கும் அதன் மேலாளருக்கும் என்னுடைய நன்றிகள்.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580110405846
Marangalum Athan Payangalum

Read more from Surya Saravanan

Related to Marangalum Athan Payangalum

Related ebooks

Reviews for Marangalum Athan Payangalum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marangalum Athan Payangalum - Surya Saravanan

    http://www.pustaka.co.in

    மரங்களும் அதன் பயன்களும்

    Marangalum Athan Payangalum

    Author:

    சூர்யா சரவணன்

    Surya Saravanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/surya-saravanan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    முன்னுரை

    புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்

    மனிதனின் தர்மங்கள்

    மரத்தின் நன்மைகள்

    தமிழர்களும் மரங்களும்

    மரங்களின் மருத்துவ குணங்கள்

    1.அரச மரம்

    2.அத்தி மரம்

    3.மூங்கில்

    4.ஆலமரம்

    5.இலுப்பை மரம்

    6.தேக்கு மரம்

    7.மா மரம்

    8.பனைமரம்

    9.தென்னை மரம்

    10.முருங்கை மரம்

    11.புளியமரம்

    12. வேப்பமரம்

    13. வாழைமரம்

    என்னுரை

    சொந்தவூர் திண்டுக்கல். எம்.ஏ. அரசியல் கலை பயின்றவர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளாராக பணியாற்றிவருகிறார்.

    கார்ல் மார்க்ஸ். பெண்களுக்கு பின்னால். இத்தாலிய புரட்சி வீரர் மாஜினி, இந்திய தேசியக்கொடி, அறிஞர்கள் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் உள்ளிட்ட 18 நூல்களை எழுதியுள்ளார்.

    சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதம், கட்டுரை வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

    *****

    முன்னுரை

    காடு, மலைகளில் வாழ்ந்த மனிதன், மரத்திலிருந்து நீண்டதூரம் வெளியில் வந்து அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறிவிட்டான். அதிகாலையில் அப்பார்ட்மெண்ட் மாடியில் இருந்து அவன் சோம்பல் முறிக்கும்போது தூரத்தில் இருந்து மரம் அவனை பார்த்து சிரிக்கிறது. வாக்கிங் போகும்போது சிலு சிலுவென அடிக்கும் குளிரும் அவன் முகத்தில் அறைந்ததுபோல் இருக்கிறது. என்னை விட்டு நீ நீண்டதூரம் சென்றுவிட்டாலும் நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னை விட்டுப் பிரிவதும் இல்லை. உனக்கு நல்ல காற்றை தருவதற்காக அழகிய சிறு சிறு செடிகளாக உன் வீட்டு வாசலில் காத்திருக்கிறேன் என்கிறது.

    சிறுவயதில் என் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அப்பா என்னையும் என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு சிறிய தோட்டத்துக்கு சென்றார். அங்கிருந்த ஒரு குட்டையில் தண்ணீரை முகர்ந்து செடிகளுக்கு ஊற்றும்படி கூறினார். ஒருவருடன் ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு தண்ணீரை ஊற்றி விளையாடினோம்.

    காலம் கடந்தது நான் கல்லூரிக்கு பீஸ் கட்ட என் அப்பாவிடம் பணம் கேட்டபோது அவர் என்னுடைய மாமா வீட்டுக்கு அனுப்பி வாங்கிவரும்படி கூறினார். மாமாவிடம் பணம் பெற்றுக்கொண்டு, ‘நீங்கள் ஏன் அப்பாவுக்கு பணம் தருகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான் உன் அப்பாவின் தோட்டத்தில் உள்ள புளிய மரங்கள், வாழை மரங்களை குத்தகைக்கு வாங்கியுள்ளேன். நான் பலமுறை உன்னுடைய படிப்பக்காக் கொடுத்தப் பணம் எல்லாம் உன் அப்பா வளர்த்த மரங்கள் கொடுத்ததுதான்’என்றார். சிறுவயதில் என் நண்பர்களுடன் செடிகளுக்கு தண்ணீர்விட்டதை நினைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டேன். அதற்குப்பின்புதான் மரங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. என் அப்பாவிடமும் மாமாவிடமும் மரங்கள் குறித்து பல தகவல்களைகேட்டு தெரிந்து கொண்டேன். மரங்கள் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களை உங்களுக்கு புத்தகமாக கொடுத்துள்ளேன்.

    என்னுடைய நூல்களை இ-புக்ஸாக தொடர்ந்து வெளியிட்டு வரும் புஸ்தகா.காம் இணைய தளத்திற்கும் அதன் மேலாளருக்கும் என்னுடைய நன்றிகள்.

    -சூர்யா சரவணன்

    *****

    புவி வெப்பமயமாதலைத் தடுப்போம்

    மனிதன் தனது மகனுக்கும் பேரணுக்கு அடுத்தடுத்த தலைமுறைக்கும் என்ன சேகரித்து வைத்திருக்கிறோம். மகனுக்கும் பேரனுக்கும் சொத்து சேர்த்துவைக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு என்ன வைத்துள்ளோம். நீரும் நிலமும் காற்றும் நமக்கு பொதுசொத்தாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பொதுச்சொத்தை நாசமாக்காமல் அளவோடு பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கு விட்டுச் சொல்வோம். வாழ்நாளில் ஒரு மரத்தையாவது நட்டுவைக்காவிட்டால் நம் பிறப்பின் பலன் கேள்விக்குறியாகிவிடும்.

    புவி வெப்பம் அடைந்து மனிதன் அழிவை நோக்கி செல்வதை உணர்ந்த மனிதனின் கவனம் கொஞ்சம் கொஞ்சாமாக மரங்கள் பக்கம் திரும்புகிறது. ‘மரம் வளர்ப்போம்’ ‘இயற்கையைக் காப்போம்’, ‘இயற்கையை நேசி’ ‘இயற்கையோடு வாழ்வோம்’ இவையெல்லாம் சொல்லடைகள் அல்ல இவை அனைத்தும் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டும் வேத வாக்கு என்பது மனிதன் புத்திக்கு எட்ட வேண்டும்.

    ஒளிர்சேர்க்கை செய்யும் உயிர்களைத் தவிர மற்ற அனைத்தும் கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுபவையாகவே உள்ளன, அத்தோடு மனிதர்களின் உருவாக்கங்களும் கார்பனை வெளியேற்றுகின்றன. பூமியில் இவை அனைத்திற்கும் எதிராக கார்பன் ஆக்சிஜன் விகிதாச்சாரத்தை சமன் செய்யப் போராடுவது மரங்கள் ஒன்று மட்டுமே. எனவே புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் முக்கிய காரணியாக இருக்கும் மரங்களை வளர்க்க வேண்டும். இது இன்றைய இன்றியமையாத அவசியமாகயிருக்கின்றது. வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலைமாறி ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்று பேசும் நிலைக்கு வந்துள்ளோம். இன்று இயற்கை அழிவை காக்க, வெப்பம் தவிர்க்க முதற்காரணியாக மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வளர்ந்த மரங்கள் ஒரு வருடத்தில் எடுத்துக்கொள்ளும் கார்பனின் அளவு, ஒரு வாகனம் 26000 மைல் பயணிப்பதால் வெளியிடும் கார்பன் அளவிற்கு ஈடானதாகும், அத்தோடு 18 மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க தேவையான ஆக்சிஜனையும் வெளிவிடுகிறது.ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஆக்சிஜனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி, ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல கோடி ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைக¬ளை நமக்கு கொட்டுகிறது.

    ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.

    ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.

    ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.

    ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.

    ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.

    மரங்கள் பணத்திற்காகவே வெட்டப்படுகின்றன, ஆதலால் மரங்களின் மதிப்பை பணத்தின் மதிப்பிலேயே விளக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இயற்கையின் மீதான நமது எந்த அளவீடுகளும் மிகச் சரியான அளவாக இராது. மண் அரிப்பை

    Enjoying the preview?
    Page 1 of 1