Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aringnar Anna
Aringnar Anna
Aringnar Anna
Ebook128 pages44 minutes

Aringnar Anna

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழக அரசியலில் தனிப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அண்ணா. அவருக்கு முன்பு அந்தக்குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது; இப்படிப்பட்ட சூழலில் அண்ணா மகத்தான தலைவராக உருவானார். இந்தியத் திருநாடே அண்ணாவை திரும்பிப் பார்த்தது. பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் அவர்களைத் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். அண்ணா தனக்கென மேலும் சில தனியானதோர் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டார். கடிதங்கள் மூலம் கருத்துக்கள் தந்தவர்; அண்ணாவின் வரலாறு என்பது தமிழின் வரலாறு; தமிழ் இனத்தின் வரலாறு.

Languageதமிழ்
Release dateOct 3, 2023
ISBN6580141909942
Aringnar Anna

Read more from M. Kamalavelan

Related to Aringnar Anna

Related ebooks

Reviews for Aringnar Anna

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aringnar Anna - M. Kamalavelan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிஞர் அண்ணா

    Aringnar Anna

    Author:

    மா.கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. இளமையில் அண்ணா

    2. இலக்கியத்தில் அண்ணா

    3. நீதிக்கட்சியில் அண்ணா

    4.திராவிடர் கழகத்தில் அண்ணா

    5. திராவிடர் முன்னேற்றம் கண்டார் அண்ணா

    6. கலை, இலக்கியத்துறையில் அண்ணா

    7. அரசு கட்டிலில் அண்ணா

    8. அரசு நலப்பணிகளில் அண்ணா

    9. பண்பு நலன்களில் அண்ணா

    10. இதயத்தில் அண்ணா

    முன்னுரை

    அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவுவிழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழக அரசியலில் தனிப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அண்ணா.

    அண்ணா பற்றி அறிந்து கொள்ள நண்பர் குருமூர்த்தி அவர்கள் 12நூல்கள் தந்து உதவினார்கள். கண்ணியம், இளந்தமிழன் ஆகிய இதழ்களில் வெளியிட்ட அண்ணா சிறப்பு மலர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

    அதுமட்டுமல்ல தினமும் காலை நேரத்தில் நூல் எந்த அளவில் உள்ளது? என்று கேட்டறிந்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

    அண்ணா குடும்பம் நெசவாளி குடும்பம். அவருக்கு முன்பு அந்தக்குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபட்டது கிடையாது; அரசியலும் தெரியாது. அதிகம் படித்துப் பட்டம் பெற்றவர்களும் கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அண்ணா மகத்தான தலைவராக உருவானார். இந்தியத் திருநாடே அண்ணாவை திரும்பிப் பார்த்தது.

    அண்ணாவின் அரசியல் மற்றும் எழுத்துப் பணிகள் அனைவராலும் ஒருமனதாகப் பாராட்டப்பட்டன. அதற்கெல்லாம் ஒரே காரணம் அவரது படிப்பு; படிப்பு; படிப்பு. கல்லூரியில் பட்டம் பெற்றதோடு கடமை முடிந்தது என்று நிக்காமல் காலன் அவரை அழைக்கும்வரை படித்துக் கொண்டேயிருந்தார். உலக அரசியல் பற்றியெல்லாம் நன்கு கற்றுத் தெளிந்தார்.

    நான்கு சுவர்களுக்குள் அடங்கிக்கிடக்க அவர் விரும்பவில்லை. நான்கு திசைகளிலும் சென்று நாட்டுப்பணி புரிய நாட்டம்கொண்டார்.

    பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

    பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் அவர்களைத் தனது அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார். அவர் கொள்கை வழி நடந்தார். அதன்வழி அண்ணா தனக்கென மேலும் சில தனியானதோர் கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டார்.

    அரசியலில் தூய்மையும் நேர்மையும் கொண்டு பணியாற்றினார்.

    "அருமைத்தம்பி,

    மக்களிடம் சென்றிடு;

    அவர்களோடு வாழ்ந்திடு!

    அவர்களிடமிருந்து அறிந்திடு!

    அவர்களை நேசித்திடு!

    அவர்களுக்காக உன் உழைப்பை நல்கிடு!"

    அண்ணா அவர்கள் அருமைத்தம்பிக்கு எழுதிய மடலின் ஒரு சின்னஞ்சிறு நறுக்கு இது.

    கடிதங்கள் மூலம் கருத்துக்கள் தந்தவர்: கழகத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி வளர்த்தவர். காளையர் நெஞ்சில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்தவர்.

    அண்ணாவின் வரலாறு என்பது தமிழின் வரலாறு; தமிழ் இனத்தின் வரலாறு.

    இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் தலைப்பில் இடம் பெற்றுள்ள கவிதை. முனைவர் ஆ.கோ. குலோத்துங்கன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் கண்ணியம் இதழில் வெளியானவை. கவிஞர்களுக்கும், கண்ணியம் இதழ் ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றி.

    அறிஞர் அண்ணா நூலை குறுகிய காலத்தில் அழகுற வெளியிட்ட மணிவாசர் பதிப்பகத்தாருக்கு என் மனம் கனிந்த நன்றி.

    திண்டுக்கல்

    14.09.2009

    அன்புடன்

    மா. கமலவேலன்

    1. இளமையில் அண்ணா

    கற்றவர் தமிழில் கொற்றவர் ஏழ்மையைப்

    பெற்றவர் யார்க்குமே உற்றவர் பற்றெதும்

    அற்றவர் பேரறி ஞராய்ப்பேர் பெற்றவர்

    நற்றமிழ்த் தாய்பெற் றவர் அண் ணாவே!

    - புலவர் ப. தேவகுரு

    காஞ்சிபுரம் கலைக்கோயில்களின் கருவூலம்! ஒரு காலத்தில் பல்லவர்களின் தலைநகராகத் திகழ்ந்த ஊர். வளமான வயல்களும் வளர்ந்தோங்கு தென்னையும், மாவும் நிறைந்த ஊர்.

    வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர். சீனயாத்திரிகன் யுவான்சுவாங் இந்நகருக்கு வருகை தந்து காஞ்சியின் பெருமையை உலகறியச் செய்தவன்.

    அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், கல்வி நிறுவனங்கள் உருவாக்கிக் கல்வி வளர்த்த வள்ளல் பச்சையப்பர் போன்ற சான்றோர்கள் தோன்றிய மண்; சரித்திரம் படைத்த மண்.

    கருணைத் தெய்வம், காஞ்சிமா முனிவர் தவக்கோலம் கொண்டு அருளாட்சி செய்த ஊர்.

    இசை, நாட்டியம், சிற்பம், சித்திரம் என நுண்கலைகளின் இருப்பிடமாய் புகழ் பெற்ற ஊர் காஞ்சிபுரம்.

    உழவுத் தொழிலையும், நெசவுத் தொழிலையும் மக்கள் மேற்கொண்டு வாழ்ந்தனர்.

    காஞ்சிபுரம் கைத்தறி நெசவுக்கு மட்டுமல்ல; பட்டு நெசவுக்கும் பெயர் பெற்ற ஊர். காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், கடல் கடந்து சென்று நம்மவர்களின் கைவண்ணத்தைப் பறைசாற்றுகின்றன.

    1909-ஆம் ஆண்டு இந்திய விடுதலைப்போர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டு.

    மிண்டோமார்லே சீர்திருத்தத்தைப் பிரிட்டிஷ் அரசு 1909- ஆம் ஆண்டு அறிவித்தது.

    மத்திய, மாகாண அரசுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தல் என்பன போன்ற அறிவிப்புகள் இந்தச் சீர்திருத்த மசோதாவில் சொல்லப்பட்ட சில அறிவிப்புகள் ஆகும். மேலும் முஸ்லீம்களுக்கெனத் தனித் தொகுதியையும் இந்த மசோதா அறிமுகம் செய்தது. எனவே காங்கிரஸ் பேரியக்கம் மிண்டோமார்லே சீர்திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தது.

    1909-ஆம் ஆண்டு என்றவுடன் இந்த நிகழ்வுகள் ஒவ்வொரு இந்தியனின் கண்முன்பு நினைவுக்கு வரும்; வரவேண்டும்.

    அதே 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் பதினைந்தாம் தேதி காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் அண்ணா பிறந்தார். அண்ணா குடும்பம் வசித்த பகுதி சின்னக் காஞ்சிபுரம் ஆகும்.

    அண்ணாவின் தந்தை நடராசன், தாயார் பங்காரு அம்மாள் ஆவார். அண்ணாவின் முழுப்பெயர் அண்ணாதுரை ஆகும்.

    அண்ணாவின் பெற்றோர்கள் குழந்தை அண்ணாவை சீராட்டிப், பாராட்டி வளர்த்தார்கள். அண்ணாவிற்கு ஒரு சித்தி உண்டு. சித்தியின் பெயர் இராசாமணி. இராசாமணி அம்மையாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து, சிறு வயதிலேயே இரண்டு குழந்தைகளுமே இறந்துவிட்டன. தான் பெற்ற குழந்தைகளை இழந்த இராசாமணி அம்மையார், அண்ணாவின் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்தார். அண்ணாவும் சித்தியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அண்ணா சித்தியை தொத்தா என்று செல்லமாக அழைப்பார்.

    காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் பள்ளியில் அண்ணா தொடக்கக் கல்வி பயின்றார். அந்தகால வழக்கப்படி சடைமுடி வளர்த்திருந்தார். தொத்தா

    Enjoying the preview?
    Page 1 of 1