Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ner Kaanalgal - Part 3
Ner Kaanalgal - Part 3
Ner Kaanalgal - Part 3
Ebook223 pages1 hour

Ner Kaanalgal - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“எந்த வேர்வைக்குமே - வெற்றிகள் வேர்வைக்குமே; உன்னை உள்ளத்தில் ஊர்வைக்குமே,” என்பார் காவியக் கவிஞர் வாலி. உண்மைதான் அது.

திரியைத்துண்டிவிட்டால் தீபம் சுடர்விட்டு எரியும். இளைஞர்களிடையே நம்பிக்கையைத் தூண்டிவிட்டால் போதும்... சாதனைகள் நிகழ்த்துவர்.

சாதனைச் சரித்திரம் படைத்த சான்றோர்கள் பத்துப்பேர் பெற்ற வெற்றி வரலாற்றை இந்நூலில் காணலாம். அவர்கள் பெற்ற வெற்றிகள் நேர்காணல் முறையில் இங்கே கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 2, 2021
ISBN6580141907047
Ner Kaanalgal - Part 3

Read more from M. Kamalavelan

Related to Ner Kaanalgal - Part 3

Related ebooks

Reviews for Ner Kaanalgal - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ner Kaanalgal - Part 3 - M. Kamalavelan

    https://www.pustaka.co.in

    நேர்காணல்கள் - தொகுதி 3

    Ner Kaanalgal - Part 3

    Author:

    மா. கமலவேலன்

    M. Kamalavelan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/m-kamalavelan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    எந்த வேர்வைக்குமே - வெற்றிகள் வேர்வைக்குமே; உன்னை உள்ளத்தில் ஊர்வைக்குமே, என்பார் காவியக் கவிஞர் வாலி. உண்மைதான் அது.

    திரியைத்துண்டிவிட்டால் தீபம் சுடர்விட்டு எரியும். இளைஞர்களிடையே நம்பிக்கையைத் தூண்டிவிட்டால் போதும்... சாதனைகள் நிகழ்த்துவர்.

    சாதனைச் சரித்திரம் படைத்த சான்றோர்கள் பத்துப்பேர் பெற்ற வெற்றி வரலாற்றை இந்நூலில் காணலாம். அவர்கள் பெற்ற வெற்றிகள் நேர்காணல் முறையில் இங்கே கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.

    பலவகைகளில் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.

    - நேரில் சென்று சந்தித்து உரையாடுதல்

    - நூல்கள் எழுதியிருந்தால் அவற்றை வாசித்தல்.

    - சாதனைகளைப் பார்த்தறிதல்.

    - அவர்களோடு தொடர்பு உடையவர்களை சந்தித்து அவர்களைப்பற்றிக் கேட்டறிதல்.

    பின்னர் அவற்றை உள்ளத்தில் அசைபோட்டு நேர்காணலின் போது வினாக்கள் தொடுத்தேன். அவர்களும் ஆர்வத்தோடு அனுபவங்களை பொதிகைத் தொலைக்காட்சி நேயர்களோடு பகிர்ந்துகொண்டார்கள்.

    நேயர்களை நெகிழ்விக்கும் நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.

    தமிழறிஞர், இசை ஆய்வறிஞர், இலக்கண ஆய்வறிஞர், தொல்லியல் ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியப் படைப்பாளி, இயற்கை வேளாண் அறிஞர், என துறைதோறும் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளின் சுருக்கமான பதிவுதான் நேர்காணல்கள் என்ற இந்த நூல்.

    அன்புடன்

    மா.கமலவேலன்

    பொருளடக்கம்

    1. முதுமுனைவர் இரா. இளங்குமரனார்.

    2. மம்மது

    3. வண்ணதாசன்

    4. பொன்னீலன்

    5. தோப்பில் முகமது மீரான்

    6. நாறும்பூநாதன்

    7. முனைவர் நெல்லை.ந. சொக்கலிங்கம்

    8. முனைவர் வி.வேதாச்சலம்

    9. கோ. ராஜேஸ்வரி கோதண்டம்

    10. எஸ்.ஆர். சுந்தரராமன்

    1. முதுமுனைவர் இரா. இளங்குமரனார்.

    ஆயிரம் பிறை கண்ட அறிஞர். பாவாணரின் முதல் வரிசை மாணவர். தனித்தமிழ் இயக்கத்தின் தூணானவர். பன்னூல் ஆசிரியர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

    இரா. இளங்குமரனார்

    நேயர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம். இன்று நாம் சந்திக்க இருக்கும் நம் விருந்தினர் முதுமுனைவர், செந்தமிழ் அந்தணர், நம் காலத் தமிழ்க்காசு, ஆயிரம் பிறை கண்ட அறிஞர், என்றெல்லாம் தமிழ்கூறும் நல்லுலகால் பாராட்டப்படுபவர் போற்றப்படுபவர், அதுமட்டுமல்ல, பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் அவர்கள் இவரைப்பற்றிக் கூறும்போது பன்னூல் ஆசிரியர், தூய தமிழ் இலக்கியத்தின் தூய தமிழ்த் தொண்டர், பாவாணரின் முதல் வரிசை மாணவர், தமிழ் இயக்கத்தின் தூண் என்றெல்லாம் பெருமைபட பாராட்டிப் பேசுவார் அப்படிப்பட்ட நல்லவர் அறிஞர், சான்றாண்மையாளர் திரு. இரா. இளங்குமரனார் அவர்களை இன்று சந்திக்கிறோம். நேயர்கள் சார்பிலே அவர்களை வரவேற்கிறோம். ஐயா வணக்கம்.

    இளங்குமரனார் : வணக்கம்

    கமலவேலன் : ஐயா, என்னுடைய முதல் வினாவே, உலகப் பொதுமறை என்று போற்றப்படுகின்ற திருக்குறளிலிருந்தே தொடங்கலாம் என்று நினைக்கிறேன். திருக்குறளிலே தங்களுக்கு ஆழ்ந்த புலமையும் திருக்குறள் நெறியிலேயே, வாழ்ந்துகொண்டிருக்கிற தன்மையும் பெற்றிருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வயதில் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது? அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள் ஐயா.

    இளங்குமரனார் : இயல்பாக என் குடும்பத்தில் இருந்தவர்கள் எல்லாருமே கற்றவர்கள். அதில் என் அண்ணார் ஒருவர் முத்தையா என்பவர். அவர் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் நாட்குறிப்பு என்ற நூலை வைத்திருந்தார். அது அவருடைய படுக்கையின் பக்கத்தில் இருந்தது. தற்செயலாக ஒருநாள் நான் பார்த்தேன். அதைப் பிரித்தேன். பிரிக்கும்பொழுது என் கண்ணில் தட்டுப்பட்ட முதல் பாடல் படை, குடி, கூழ், அமைச்சு நட்பு, அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்று இருந்தது. அதைப் படிப்பதற்கு எளிமையாக இருந்தது. அதற்கு உரையும் இருந்தது. அதை அப்படியே இரண்டு மூன்று முறை படித்து மனப்பாடம் ஆனது. ஒரு குறளை இரண்டு மூன்று முறை படித்தால் மனப்பாடம் ஆகிவிடுகிறது. அப்படியானால் இதைத் தொடரலாமே என்ற எண்ணம் வந்தது. என்னுடைய குறிப்பேட்டில் அந்தக் குறள்களை எழுதிக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் மூன்று, நான்கு, ஐந்து என்று மனப்பாடம் செய்தேன். அதை மீள ஒப்பித்தேன். என்னுடைய பன்னிரண்டு பதின்மூன்று வயதிற்குள் திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்தேன். இது அடித்தளம். பள்ளியிலே ஒருநாள் என்னுடைய ஆசிரியர் திருக்குறளில் பெற்றோர் கடமை, பிள்ளைகள் கடமை இதைப்பற்றிய செய்திகள் இருக்கின்றன. தெரிந்தவர்கள் யாராவது சொல்லலாம் என்று கேட்டார். அப்பொழுது நான் எழுந்தேன். ஐயா தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்று ஒரு குறள் இருக்கிறது. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் இருக்கிறது. ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்ற குறளும் இருக்கிறது. பெற்றோர் கடமை, பிள்ளைகள் கடமை அதிலே இருக்கிறது என்றேன். உடனே ஆசிரியர் கேட்டார். உங்கள் வீட்டில் படித்தவர்கள் இருக்கிறார்களா என்று கேட்டார். ஆம் ஐயா, என்னுடைய தந்தையார் பெயரே படிக்கராமு என்பது. எப்பொழுதும் படித்துக்கொண்டே இருப்பார். பல்லாயிரம் பாடல்களை இராமாயணத்தை ஒப்பிப்பார். அப்படிப்பட்டதால் அது குடும்பத்தின் சொத்தாக அமைந்தது. என் உடன் பிறந்தார் அனைவருமே அப்படிப்பட்ட நிலையில் வளர்ந்ததால் எனக்கு அவர் கேட்ட வினா உங்கள் வீட்டில் படித்தவர்கள் இருக்கிறார்களா என்றால் வீட்டுக்கே பெருமை தருகிற நூல், நாட்டுக்கே பெருமை தருகிற நூல், இந்த நூலை முழுமையாகப்பற்றிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    கமலவேலன் : ரொம்ப அரிய செய்தி ஐயா. ஆனால் நீங்கள் அந்த இளம் வயதில் படித்த அந்த உரையை எழுதிய ஆசிரியர் யார்?

    இளங்குமரனார் : அந்த உரை கழகத்தார் வெளியிட்டது. பரிமேலழகர் உரையைத் தழுவியது. அந்த நாளிலேயே பேராசிரியர் மு.வ. அவர்கள் திருக்குறளுக்கு எளிமையான உரையை எழுதிவிட்டார்கள். அந்த உரையைக் கையடக்கப் பதிப்பாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. ஆனால் அதையே முழுமையாகத் தழுவிக்கொண்டது என்று சொல்ல முடியாது. பரிமேலழகர் உரையை சொன்னார் என்றும் சொல்ல முடியாது. கழகம் வெளியிட்ட நாட்குறிப்பில் இருந்த உரைதான் நான் முதற்கண் படித்த உரை. அது எளிய உரையாக இருந்தது. அது இன்று வரையிலும் தொடர்கிறது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    கமலவேலன் : ஐயா, விவேகானந்தர் என்று சொன்னால் அவருடைய ஆசான் இராமகிருஷ்ண பரமஹம்சர் குருவாக நம் நினைவுக்கு வருகிறார். அதுபோல ஐயா அவர்களுடைய பெயரைச் சொன்னால் நம் நினைவுக்கு வருகிறவர் பாவாணர் அவர்கள். தேவநேயப் பாவாணர் அவர்களுடைய அந்தத் தொடர்பு, அந்த உறவு உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? உங்கள் வாழ்க்கையில் எந்த வகையில் மாற்றத்தை உருவாக்கியது?

    இளங்குமரனார் : மிக அருமையான வினா. என் அடித்தளத்தில் எது இருக்கிறதோ. அதுவே முழுமையாக ஒரு வினாவாகத் தங்கள் வழி ஏற்பட்டிருக்கிறது. பாவாணர் யாருடைய உதவியும் இல்லாமல் படித்த பள்ளிக்கூடம் சீயோன் மலை முறம்பு என்று சொல்லக்கூடிய இடம். அந்த இடத்தில் அவர் ஏதிலியாக மாணவராகப் படித்தார். யங் துரை என்பார் அந்தப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர். அந்த நாளில் அவரை நான் அறியவில்லை. அதற்குப்பின் யங் துரையின் உதவியால் அவர் ஆசிரியராகி அந்தக் கடனைத் தீர்ப்பதற்காகப் பத்தாண்டுகள் பணி செய்தார் அந்த முறம்பிலேயே. அப்பொழுது என் அண்ணார் அவரிடம் படித்தார். நான் அதே பள்ளியில் படித்தவன். அதே பகுதியில் வளர்ந்தவன். என்னுடைய ஊருக்கும் அந்த ஊருக்கும் இரண்டு கிலோமீட்டர். பாவாணர் சொல்லில் சொன்னால் இரண்டு அயிரம். அந்தத் தொலைவில் இருந்து படித்தது. பாவாணருடைய மகன் மணவாளன் என்று ஒருவர் இருந்தார். அவர் என்னுடைய பதினாறு வயது முதற்கொண்டே தொடர்பானவர். பாவாணருக்கு நெருக்கமாக இருந்த நெடுஞ்செழியன் என்பார் மணவாளனுக்கு மிக வேண்டியவர். நெடுஞ்செழியனும் எனக்கு வேண்டியவர். ஆகவே அந்தத் தொடர்பு என்னுடைய பதினாறாம் வயதிலிருந்து அவருடைய கடைசி நாள் வரையிலும் இருந்தது. கடைசியாக எழுதிய அஞ்சல் எனக்கு எழுதிய அஞ்சல். கடைசியாக வாழ்ந்த வீடு நான் திருநகரில் வாழ்ந்த வீடு என்பதை நினைவுபடுத்துகிறேன். காலமெல்லாம் அவருடைய தொடர்பு இருந்தது. அதனால் அவர் மறைந்த மதுரை மாநகரிலேயே அவருக்கு நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும் என்று கருதி மொழிஞாயிறு பாவாணர் பெயரால் பாவாணர் ஆராய்ச்சி நூலகம் என்ற நினைவு நூலகத்தை உண்டாக்கினேன் அப்பொழுது 7000 நூல்கள் இருந்தன. இப்பொழுது ஏறத்தாழ 30,000 நூல்கள் அரிய நூல்கள் பாவாணர் ஆராய்ச்சி நூலகத்தில் இருக்கின்றன.

    கமலவேலன் : ஐயா, உங்களுடைய சொந்த ஊர் எது? இளமைக்காலம் பள்ளிப் பருவம் பற்றிச் சொல்லுங்கள்.

    இளங்குமரனார் : என்னுடைய சொந்த ஊர் வாழ வந்தாள்புரம். பெயரே ஒவ்வொரு பிறவியும் நினைக்க வேண்டிய பெயர். எல்லாரும் வாழத்தான் வந்தோம். ஊரின் பெயர் வாழ வந்தாள்புரம். நாங்கள் வணங்குகின்ற தெய்வத்தின் பெயர் வாழ வந்த அம்மை. என்னைப் பெற்ற தாய் வாழ வந்தாள். ஆகவே எனக்கு ஊரும் என் தெய்வமும் என்னைத் தந்த தாயாம் தந்த தெய்வமும் மூன்றும் ஒன்றே. மூன்றும் பிரிக்க முடியாதவை. அதன் பக்கத்திலே இருப்பது சோழபுரம் தொடர்வண்டி நிலையம். தொடர்வண்டி நிலையத்தைக் கடந்தால் முறம்பு இருக்கிறது. ஆகவே அந்தப் பகுதியிலே இப்பொழுது பாவாணருக்குக் கோட்டம் ஒன்றும் எழுப்பப்பட்டிருக்கிறது. அந்த முறம்புக்கும் எங்கள் ஊருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.

    கமலவேலன் : முதலில் உங்கள் பள்ளி ஆசிரியர் அனுபவத்தைச் சொல்லுங்கள் ஐயா.

    இளங்குமரனார் : நான் பிறந்த ஊரிலே ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தை நிறுவியவர், தலைமையாக இருந்தவர், அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தாமல் மூடிவிட்டார். அதே பள்ளியை நான் முயன்று விலைக்கு வாங்கி என் அண்ணார் பெயரில் ஒப்படைத்து நான் ஆசிரியனாக இருந்தேன். தொடக்கப்பள்ளி ஆசிரியனாகத்தான் வந்தேன். கோவில்பட்டியிலே ஆசிரியர் பயிற்சி 1944 முதல் 1946 வரையில் படித்தேன். படிப்பு முடித்து உடனே பள்ளிக்கு வந்தேன். அந்தப் பள்ளி என் பள்ளியாக இருந்தது. அங்கே நான் நிலைத்து இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அதற்கு அடிப்படை என் துணைவியார்தான். அவர் நீங்கள் இந்த ஊரிலேயே இருந்தால் வளர்ச்சி அடைய முடியாது. இந்தப் பள்ளியை உங்கள் பெயருக்கு வாங்கிவிட்டால் நீங்கள் இந்த ஊரைவிட்டுப் போக முடியாது. ஆகவே வேறு யார் பெயரிலாவது வாங்குங்கள். நீங்கள் மேலே செல்வதற்குப் பாருங்கள். அதனால் என் அண்ணார் பெயருக்குப் பள்ளியை வாங்கித் தந்துவிட்டு நான் பள்ளி ஆசிரியனாக இருந்து மூன்று ஆண்டுகள் பள்ளி ஆசிரியனாக இருந்தால் வித்துவான் என்னும் 2 டீ என்னும் தேர்வை சென்னைப் பல்கலைக் கழகத்தில் எழுதலாம் என்ற விதிமுறையைத் தெரிந்துகொண்டு அந்த விதிமுறைப்படி தேர்வு எழுதினேன். 1949ல் நுழைவுத் தேர்வும் 50ல் இடைநிலைத் தேர்வும் 51ல் நிறைவு நிலைத் தேர்வும் மூன்றும் முதல் நிலையிலேயே வெற்றி பெற்று இலக்கணத்தில் எனக்குப் பற்றும் இருந்தமையால் எப்பொழுதும் 80க்குக் குறைந்து நான் இலக்கணத்தில் பெற்றதில்லை. இந்த நிலையில் நான் மூன்றே ஆண்டில் முடித்ததால் கரிவலம்வந்த நல்லூர் என்ற ஊருக்கு அரசுப் பள்ளிக்குச் சென்றேன்.

    அப்பொழுதே நான் திருக்குறள் வகுப்புகள் நடத்துவேன். பொதுக்கூட்டங்களுக்குச் செல்வேன். இலக்கிய வகுப்புகள் நடத்துவேன். திருமணங்கள் நடத்துவேன். மணிவிழா நடத்துவேன். எனக்கு வயது 21 தான். ஆனால் தலைமை ஆசிரியருக்கு இது பிடிக்கவில்லை. நீங்கள் யாரைக் கேட்டு எழுதுகிறீர்கள்? யாரைக் கேட்டுப் பேசுகிறீர்கள்? அரசுப் பள்ளியிலிருந்து இந்தப் பணியைச் செய்வது தவறு என்று சுட்டிக் காட்டினார். நான் உடனே, இதில் ஒன்றும் சிக்கல் இல்லை. இதோ பெற்றுக்கொள்ளுங்கள். உண்ணச் சிறிது போதும் உறங்கப் படுக்கை தேடின் எண்ணப்பொழுது வேண்டும் எழுத உரிமை வேண்டும். நான் வருகிறேன் என்று புறப்பட்டுவிட்டேன். வேலையை விட்டேன். தளவாய்புரம் என்ற இடத்திலே 6 ஆண்டுகள் பணி செய்தேன். அதற்குப் பின்னர்தான் மதுரைக்கு வந்தேன் 1958ல். ஏனென்றால் என் எழுத்துப் பணிக்குத் தளவாய்புரம் சரியாக ஈடு தராது என்று எண்ணினேன். நான் மதுரைக்கு வந்தேன்.

    பாரதி புத்தக நிலையம் என்று ஒரு புத்தக நிலையம் இருந்தது. அந்நிலையம்

    Enjoying the preview?
    Page 1 of 1