Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arivulaga Methai Anna
Arivulaga Methai Anna
Arivulaga Methai Anna
Ebook64 pages20 minutes

Arivulaga Methai Anna

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையாளர், அந்த சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிகை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும், கையில் எடுத்து அதற்குப் புதிய தோற்றமும், உள்ளடக்கமும் தந்தவர். காங்கிரஸ் அல்லாத கட்சி ஒன்றின் சார்பில் இந்தியாவில் முதலமைச்சரான இரண்டாவது தலைவர். தமிழ்நாட்டில் இடையறாமல் நடந்துவரும் 53 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு அதன் மூலம் அடித்தளம் இட்டவர். நவீன தமிழின் மீது, மக்கள் புழங்கும் தமிழின் மீது அண்ணா செலுத்தியிருக்கும் தாக்கம் அளப்பரியது. பெரிதாக ஆவணமாக்கப்படாதது. எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நிலப்பரப்புக்கு அதன் முகவரியாக விளங்கும் 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டியவர் அண்ணா. தங்களை ஒரு தனித்த தேசிய இனமாக உணரத் தொடங்கிய தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அசைக்கமுடியாத ஓர் அங்கீகாரமாகிவிட்டது இந்தப் பெயர்.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580122808208
Arivulaga Methai Anna

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Arivulaga Methai Anna

Related ebooks

Reviews for Arivulaga Methai Anna

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arivulaga Methai Anna - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறிவுலக மேதை அண்ணா

    Arivulaga Methai Anna

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    உள்ளம் கவர் கள்வன்

    இளமை பருவம்

    குட்டித் தூக்கம்

    பேராசிரியரின் பாராட்டு

    உதவிய கல்வி முதல்வர்

    மாணவர் பருவத்தில் திருமணம்

    புத்தகத் காதலர்

    பேச்சுக்கலை

    அண்ணாவின் ஆங்கிலம்

    புத்தகம் படியுங்கள்

    மாணவர்களின் மனம் கவர்ந்தவர்

    மக்கள் தீர்ப்பு

    அமெரிக்காவில் அண்ணா

    அண்ணா என் ஹீரோ

    உள்ளத்தில் உயர்ந்து நிற்பவர்

    நீதி தேவன் மயக்கம்

    கூத்து பிரியர்

    தன்னலமில்லா தலைவர்

    காவியத்தைக் கண்டேன்

    இதோ ஒர் பெர்னாட்ஷா

    அண்ணா ஸ்டாம்பு

    சமாளித்த அண்ணா

    அண்ணா சில நினைவுகள்

    அண்ணாவும் தமிழும்

    அண்ணா ஒரு தனிப்பிறவி

    நல்லவர் வல்லவர்

    உள்ளம் கவர் கள்வன்

    மேதைகளின் அறிவையும் ஆற்றலையும் எந்த நாடும் உடனே வரவேற்று அங்கீகரித்து விடுவதில்லை. அவர்களை தாழ்த்தியும், சோதித்தும் பரிகாசித்தும் பின்னுக்கு தள்ளி விடவே செய்யும். சில மேதைகள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் உண்டு. அதையெல்லாம் கடந்து மேதையின் மேன்மை சுடர் விட்டு பிரகாசிக்க ஆரம்பித்ததும் சூரியனாய் வெளி வந்து ஒளிரும். தடுத்த கைகளே வரவேற்பையும் கொடுக்கும்.

    காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை என்கிற சி.என். அண்ணாதுரை சோதனைகளை வென்று புடம் போடப்பட்ட மாசுமருவற்ற தங்கமாய் உலகமெங்கும் ஒளிர்ந்தார். தமிழக மக்களின் உள்ளம் கொள்ளை கொண்ட நாவன்மை மிக்கவர்களில் மிகுந்த செல்வாக்குள்ள ஒருவர் ‘அண்ணா’ அவரை தமிழர்கள் உள்ளத்து அன்பால் ‘அண்ணா’ என்றழைத்தனர்.

    பரந்த நெற்றி, குள்ளமான உருவம், சட்டை அணிந்த தேகம். ஒழுங்காய் வாராத தலைமுடி. வெற்றிலை பாக்கு குதப்பிக் கொண்டிருக்கும் செவ்வாய். கேட்க கேட்கத் தெவிட்டாத தேன்குரல். மேதைக்குரிய எளிமை, பழகுவதில் இனிமை.

    அண்ணாவின் பேச்சு நடையும், எழுத்து நடையும் பிரபல அமெரிக்கச் சிந்தனையாளர் ‘ராபர்ட் கிரீன் இங்கர்சால்’ என்பவரின் நடையினை ஒட்டி அமைந்தது என்று சொல்லுவதில் தவறில்லை. தமிழ் எழுத்துத் துறையில் அண்ணா தொடாத பகுதி இல்லை. பரபரப்பூட்டும் அரசியல் விமர்சனங்கள் எழுதினார். சமூக சீர்திருத்தத்தினை வலியுறுத்த சிறுகதைகளும் நாவல்களும் எழுதினார். நாடகக் கலையை சினிமாவை மிகச் சிறந்த பிரசாரக் கருவியாகக் கையாண்டார். தமிழ் எழுத்துலகில் அண்ணா ஒரு சகாப்தம் என்கிறார் அண்ணாவுடன் பழகிய எழுத்தாளர் பி.சி. கணேசன்.

    "பூ விதழின் மென்மையிலும்

    Enjoying the preview?
    Page 1 of 1