Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irai Anbu IAS Manavargalukku Sonnathu
Irai Anbu IAS Manavargalukku Sonnathu
Irai Anbu IAS Manavargalukku Sonnathu
Ebook109 pages31 minutes

Irai Anbu IAS Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

படிப்பதில் உள்ள சுகம் சிலர் மட்டுமே அறிந்த அனுபவம். அப்படி படிக்கிற அனுபவம் பாடநூல் படித்தலோடு நின்று விடக்கூடாது. புத்தகங்கள், பத்திரிகைகள், என படித்தல் என்றும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் வாழ்க்கையில் பல புதுப்புது பொருள் அறியலாம். உள்ளம் விரிவடையும். அறிவு தெளிவு பெற்று மிளிரும். ஆனால் இங்கு கல்வி கற்பதிலேயே சரியான முறைப்படுத்தல் இல்லை. எப்படி படித்தல் படிப்பு நமக்குள் தங்கும் என்னும் புரியவைத்தல் இங்கு முதலில் அவசியம்.

படிப்பதிலுள்ள சிறப்பை அறிந்து படிப்போம் என பள்ளி செல்லும் பிள்ளைகளிலிருந்து படிப்பின் சுவையை, சுகத்தை அறியவைக்க வேண்டும் என்பது கல்விச்செல்வர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் எண்ணம், பாடநூல், புத்தகம், பத்திரிகை, என படிப்பதில் உள்ள சுகத்தை சொல்கிறார். அந்த அனுபவத்தை அறிந்து பெறலாம் மாணவர்களும் நாமும்.

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580122808724
Irai Anbu IAS Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Irai Anbu IAS Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Irai Anbu IAS Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irai Anbu IAS Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இறையன்பு ஐ.ஏ.எஸ். மாணவர்களுக்குச் சொன்னது

    Irai Anbu IAS Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கல்விச்செல்வர் காட்டும் புதிய பாதை

    கல்வி தரும் மாற்றம்

    தன்னம்பிக்கைத் தரும் புத்தகங்கள்

    நல்ல உணவு, நீர் எடுத்துக்கொள்

    முயன்றால் முடியும்

    புரிந்து கொள்ளாமை

    மொழி சார்ந்த பாடம்

    குளித்துப்படி

    படங்கள் கிராஃப்புகள், புள்ளி விவரங்கள்

    முதலில் வினாத்தாளைப் படியுங்கள்

    நிதானம் அவசியம்

    மூளைக்கு ஒரு புதிர்

    உயர்ந்த எண்ணம்கொள்

    மரம் தரும் போதனை

    சாப்பிடுவதில் நாகரிகம்

    உனக்கு நீயே சிற்பி

    சுதந்திரம் நம்மிடமே

    சுயத்தை அறி

    இன்றே இப்பொழுதே…

    வேலையின் சிறப்பு

    மனத்தில் உள்ளதுதான் வரும்

    முழு மனதுடன் படி

    கல்விச்செல்வர் காட்டும் புதிய பாதை

    C:\Users\asus\Downloads\p1-min.jpg

    "படிப்பதில் உள்ள சுகம் சிலர் மட்டுமே அறிந்த அனுபவம். அப்படி படிக்கிற அனுபவம் பாடநூல் படித்தலோடு நின்றுவிடக்கூடாது. புத்தகங்கள், பத்திரிகைகள் என படித்தல் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கவேண்டும். அதனால் வாழ்க்கையில் பல புதுப்புது பொருள் அறியலாம். உள்ளம் விரிவடையும். அறிவு தெளிவு பெற்று மிளிரும்.

    ஆனால், இங்கு கல்வி கற்பதிலேயே சரியான முறைபடுத்தல் இல்லை. எப்படிப் படித்தால் படிப்பு நமக்குள் தங்கும் என்னும் புரியவைத்தல் இங்கு முதலில் அவசியம்.

    படிப்பதிலுள்ள சிறப்பை அறிந்து படிப்போம் என பள்ளிசெல்லும் பிள்ளைகளிலிருந்து படிப்பின் சுவையை, சுகத்தை அறியவைக்கவேண்டும் என்பது கல்விச்செல்வர் இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் எண்ணம், பாடநூல், புத்தகம், பத்திரிகை, என படிப்பதில் உள்ள சுகத்தைச் சொல்கிறார். அந்த அனுபவத்தை அறிந்து பெறலாம் மாணவர்களும் நாமும்."

    ***

    இன்றைய மாணவர்கள்

    "இன்றைய மாணவர்கள் துடிப்பானவர்கள். அவர்களிடம் துணிவும், கிளர்ந்தெழும் மனப்பான்மையும் நிறைந்து கிடக்கின்றன. சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டு தீரவேண்டும் என்கிற திணிப்பு அவர்களிடம் செல்லுபடியாகாது.

    அவர்கள் சுயமாக சிந்தித்துக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுக்குத் திருப்தியான பதில் வரும்வரை அவர்கள் விடுவதாக இல்லை.

    பள்ளியில் பாடம் நடத்துவதற்கு முதல் நாளே தலைப்பில் இணையதளத்தில் உள்ள செய்திகளைப் படித்துவிட்டு குறுக்குக் கேள்வி கேட்கிறார்கள், சிலமாணவர்கள். ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை அவர்கள் உருவாக்குகிறார்கள்.

    ஓர் ஆசிரியர் கல்வியே மேம்பட்டது என்று ஒருகதை சொன்னார்.

    ஓர் ஊரில் ராமன், சோமன் என்ற இருவர் இருந்தனர். ராமன் கல்வியை விரும்பினான். சோமன் செல்வத்தை விரும்பினான். இருவரும் நண்பர்கள் ஒன்றாக வெளிநாடு சென்றார்கள். ராமன் கல்வி கற்றான். சோமன் செல்வம் சேர்த்தான், இருவரும் திரும்பி வந்தனர். வழியில் திருடர்கள் வந்து சோமனின் செல்வத்தை வழிப்பறி செய்து விட்டார்கள். இருவரும் சொந்த ஊருக்கே போனார்கள். ராமனின் அறிவை வியந்து அவனை அரசர் அமைச்சராக்கினார். வயிற்றுப்பிழைப்புக்கா சோமன் அவனிடம் பணியாளனாக சேர்ந்தான்.

    ஆசிரியர் கூற வந்த கருத்து, கல்வியை யாரும் களவாட முடியாது என்பதுதான்.

    வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது

    வேந்தராலும்கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

    நிறைவொழியக்குறைபடாது

    கள்ளர்க்கோ மிகவரிது காவலுக்கோ மிக எளிது

    கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம் பொருள் தேடி உழல்வதேனோ?

    என்கிற தமிழ்ப்பாடலை நாம் நினைவு கூறலாம்.

    இந்தக் கதையை தேர்விலும் ஆசிரியர் கேட்டிருந்தார்.

    மாணவன் ஒருவன் எழுதினான், ராமு கல்வியைக்கற்றான், சோமு செல்வம் சேர்த்தான் சேர்த்த செல்வத்தை கேட்பு வரையோலையாக (அக்கவுண்ட் பேயி டிராஃப்ட்) மாற்றித் தன்னிடம் வைத்துக்கொண்டான். வந்த கள்வர்கள் ஏதுமில்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார்கள். ஊருக்கு வந்த சோமு சொந்த ஊரிலேயே பெரிய வியாபாரம் செய்து பணக்காரனானான். ராமுவை தன்னிடம் குமாஸ்தாவாக வைத்துக்கொண்டான்.

    இன்றைய மாணவர்கள் கட்டுச்சோறு கட்டித் தந்தால் அதை சுமந்து அவர்களுக்கு யானைப் பசிக்கு நாம் காகிதச் சோளங்களைப் போட்டால் அது கட்டுப்படியாகாது. அவர்தாம் ஆற்றலுடன் தேவையான தீனியைத்தர

    Enjoying the preview?
    Page 1 of 1