Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanthai Periyar Manavargalukku Sonnathu
Thanthai Periyar Manavargalukku Sonnathu
Thanthai Periyar Manavargalukku Sonnathu
Ebook84 pages24 minutes

Thanthai Periyar Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம்முடைய மக்களுக்கு நம்முடைய நாட்டுக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பது தமது வாழ்நாள் முழுவதும் முழக்கமிட்டவர். அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை எடுத்துச் சொல்ல முடியும்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1944-லேயே இந்த உலகம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று சிந்தித்து சொன்னவர்தான் பெரியார். புதிய உலகின் சிந்தனைச் சூரியன் ஈ.வே.ரா. பெரியார் அவர்கள் மாணவர்களுக்குச் சொன்ன வழிகாட்டும் வார்த்தைகள், நூலாக உங்கள் கரங்களில்.

Languageதமிழ்
Release dateDec 27, 2022
ISBN6580122808726
Thanthai Periyar Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Thanthai Periyar Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Thanthai Periyar Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanthai Periyar Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தந்தை பெரியார் மாணவர்களுக்குச் சொன்னது

    Thanthai Periyar Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அவர் மாபெரும் சிந்தனையாளர்

    மாறுதலுக்கு தகுதியானவர் நீங்கள்தான்

    படிப்பின் தன்மை

    சரியாக சரித்திரம் தெரியுமா?

    படிப்பால் ஏற்படும் பயன்

    திராவிடர் மாணவர் ஏன்?

    எழுத்து முதல் கல்வி வரை

    எழுத்துச் சீர்திருத்தம் ஏன்?

    கல்வியில் அவர் விரும்பிய மாறுதல்

    நூலகத்தின் அருமை

    இன்றைய கல்வியின் பயன்

    நல்ல நூல்கள் பயன்பட...

    ஆரம்ப ஆசிரியர்கள்

    நல்ல புத்தகம் படித்தால்

    வளர்ச்சிக்கான கல்வி

    சமர்ப்பணம்

    சமூக நீதிக்கான தமிழக அரசின்

    ‘தந்தை பெரியார்’ விருது பெற்ற

    அண்ணன் நக்கீரன்கோபால்

    அவர்களுக்கு...

    அவர் மாபெரும் சிந்தனையாளர்

    "மறுப்பதற்காகவோ குழப்புவதற்காகவோ படிக்காதே

    நம்புவதற்காகவோ தலையாட்டுவதற்காகவோ படிக்காதே

    உரையாற்றுவதற்காகவோ உபதேசம் செய்யவோ படிக்காதே

    சீர்தூக்கிப் பார்க்கவும் சிந்திப்பதற்குமே படி, படி, படி"

    என்று மேல் நாட்டு அறிஞர் ஃப்ரான்சிஸ் பேகன் சொன்ன இந்த சிந்தனையை வாசிக்கும் போதெல்லாம் பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ரா. பெரியார்தான் நினைவுக்கு வருவார்.

    நம்முடைய மக்களுக்கு நம்முடைய நாட்டுக்கு எப்படிப்பட்ட கல்வி தேவை என்பது தமது வாழ்நாள் முழுவதும் முழக்கமிட்டவர். அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளர் என்பதற்கு எத்தனையோ விஷயங்களை எடுத்து சொல்ல முடியும்.

    இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே 1944-லேயே இந்த உலகம் எதிர்காலத்தில் எப்படியிருக்கும் என்று சிந்தித்து சொன்னவர்தான் பெரியார்.

    போக்குவரத்து எங்கும் ஆகாய விமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும் (இன்றைய நவீன போக்குவரத்து வசதிகள் பற்றி அன்றே அவர் சொன்னது).

    கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும் (இன்றைய செல்போன் பற்றி அன்றே சொல்லியிருக்கிறார்).

    ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும் (பாக்கெட் ரேடியோ, வாகனங்களில் பொருத்தப்படும் ரேடியோ, செல்போன் ரேடியோ பற்றி அன்றே சொன்னார்).

    உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் (தொலைக்காட்சி, தொலைபேசி பற்றி அன்றே சொல்விட்டார்.)

    மேற்கண்ட சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும் (ஆன் லைனில் கல்வி கற்கப்படுவதை அன்றே அவர் சொல்லியிருக்கிறார்).

    உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு, சத்துப் பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டுவிடும்.

    "பிள்ளைப்பேறுக்கு ஆண்-பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடன், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும் படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து, மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்களுக்கு கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகள் பிறக்க வழிவகை செய்யப்படும். ஆண்-பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டு விட்டு, மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்து

    Enjoying the preview?
    Page 1 of 1