Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathanayakigalin Kathai
Kathanayakigalin Kathai
Kathanayakigalin Kathai
Ebook109 pages35 minutes

Kathanayakigalin Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல; ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல மிகவும் கடினமானதொன்று.

உதாரணமாக... தமிழ்த் திரையுலகில் எல்லா நடிகைகளும் அறிமுகமான கதாநாயகி அந்தஸ்தை காணாமல் தக்க வைத்துக்கொள்வதில்லை. அறிமுகமான முதல் படத்தோடயே போனவர்கள்தான் பலருண்டு. ஒருசிலரே வெற்றிநடை போடுகின்றனர். அவ்வாறு வெற்றி நடைபோட்ட சிலரை நேரில் சந்தித்து, அவர்களது அனுபவங்களை 'கதாநாயகிகளின் கதை'யாக தொகுத்து வழங்கியிருக்கிறார் சபீதா ஜோசப்.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580122808853
Kathanayakigalin Kathai

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Kathanayakigalin Kathai

Related ebooks

Reviews for Kathanayakigalin Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathanayakigalin Kathai - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கதாநாயகிகளின் கதை

    Kathanayakigalin Kathai

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சிம்ரன்

    சுஜாதா

    டாக்டரான நடிகை ரூபிணி

    நதியா

    ரோஜா

    ஊர்வசி

    மறுபடியும் குழந்தையாக வேண்டும் மீனா

    ஹேமாமாலினி

    ஷோபனா

    ஸ்ரேயா

    கவர்ச்சி நடிகை ஜெயகுமாரி

    தேவயானி

    ஊர்வசி சாரதா

    சினேகா

    நர்கீஸ்

    சிம்ரன்

    ரிஷி பாலாவை தெரியுமா உங்களுக்கு... தமிழ்நாட்டின் இளசுகள் முதல் பெரிசுகள் வரை உறக்கத்தை கலைத்த முன்னணி நடிகை, அவரை இடுப்பழகி என்றும் தமிழர்கள் உருகுவதுண்டு. யெஸ் சிம்ரன்தான் அவர். சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாலா. அப்பா அசோக்குமார், அம்மா சாரதா, தங்கை (மோனல் தற்கொலைக்குப் பலியான அழகி) இன்னொரு தங்கை ஜோதி, தம்பி சுமித், சண்டிகரை சேர்ந்த பஞ்சாபி குடும்பம்.

    அப்பா மும்பையில் கார்மெண்ட் டிசைனர், அம்மா ஹவுஸ் வைப், கோதுமைநிற பதுமையான இந்த பஞ்சாபி கவிதை படித்தது மும்பை பிட்டிபாய் கல்லூரியில், பி.காம். படித்திருக்கிறார். சில கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறார்.

    இவருக்கும் சினிமாவுக்கும் பூர்வஜென்ம தொடர்பு ஏதேனும் உண்டா என்றால் அழகாக உதடு பிதுக்குகிறார்.

    "ஒரு காலத்தில் எங்க தாத்தா சினிமாவுக்குப் பண உதவி செய்திருக்கிறார் என்பது தவிர சினிமாவுக்கும் எங்க குடும்பத்திற்கும் எந்த ரிலேஷன்ஷிப்பும் இருந்ததில்லை. எனக்குப் பின்தான் சினிமா எங்கள் பேமிலியில் ஒன்றானது.

    பி.காம். முடிந்ததும் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து ஆக்டிங் கோர்ஸ் முடித்தேன். ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்ற விரும்பம் கொண்டிருந்த நான், மாடலிங் செய்து வருகிறேன்.

    மும்பை தொலைக்காட்சியில் ‘சூப்பர் ஹிட் முக்காபுலா’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்தபோது சீனியர் நடிகையான ஜெயாபச்சன், ரிஷிபாலா என்ற பெயரை சிம்ரன் என்று மாற்றினார்.

    சிம்ரன் என்றால் தியானம் என்று அர்த்தம். பொருத்தமான பெயர்தான். தமிழில் பல இளசுகளை தியானம் செய்ய வைத்த அழகியாயிற்றே நீங்கள் என்றதும் சிணுங்கலாய்ச் சிரிக்கிறார்.

    அமிதாப்பச்சன் இந்தியில் தயாரித்த ‘தேரேமேரே சப்னே’ படத்தின் மூலம்தான் எனது திரையுல பிரவேசம் நடந்தது. இந்திப் படமான ‘தேரே மேரே சப்னே’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்கும்போது என்னைப் பார்த்த மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி சார் ‘இந்திரபிரஸ்தம்’ என்ற மலையாளப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கூப்பிட்டார். அதுதான் எனது முதல் தென்னிந்திய மொழிப்படம்.

    ‘இந்திரபிரஸ்தம்’ படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகின் சுதவுகள் திறந்தது ‘பூச்சூடவா’வில் ஒப்பந்தமானேன் முதலில் வந்தது ‘வி.ஐ.பி.’, ‘ஒன்ஸ்மோர்’, ‘நேருக்கு நேர்’ இந்தப் படங்களில் விஜய், பிரபுதேவா, அப்பாஸ், சூர்யா, என முன்னணி நாயகர்களுடன் நடித்ததும் என் மார்க்கெட் பத்திகிச்சு. பிறகு தமிழ் ரசிகர்களின் இதயராணியாகிவிட்டேன். நான் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றதும் தமிழின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டேன். ரஜினியைத் தவிர, ‘சந்திரமுகி’யில் அவருடன் ஜோடி சேரும் சூழல் ஏற்பட்டது. அது எனது கல்யாணம், காதல் இதனால் கைமாறிப்போனது.

    அப்பாஸ் - சிம்ரன் காதல்

    ராஜுசுந்தரம் - சிம்ரன் காதல்

    கமலஹாசன் - சிம்ரன் ரகசிய கல்யாணம்

    இப்படி கிசுகிசுக்களில் புரட்டி எடுக்கப்பட்டிருக்கிறார் இவர். இதில் அப்பாஸ் எனது நல்ல நண்பர். இருவரும் பெங்களூரில் மாடலிங் செய்தவர்கள் என்கிறார். ராஜூவுடன் காதல் ஏற்பட்டதும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நண்பர்களால் பிரிந்துவிட்டோம், கமல்சார் என் மரியாதைக்குரியவர். அவருடன் நான் நடித்துக்கொண்டிருக்கும்போது அவரது குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். அதனால் என்னையும் அவரையும் இணைத்து பேசியிருக்கலாம்.

    என் காதலெல்லாம் நிஜமானது. தீபக்குடன்தான். தீபக் எனது சிறுவயது தோழன், அவன் என்னை ரிஷி என்றுதான் அழைப்பான். அவனுடன் காதலானதும் ஒரு விபத்து மாதிரிதான். நான் தீபக்கை கல்யாணம் செய்து கொள்வேன் என்று நினைத்துப் பார்த்ததுகூட கிடையாது. பெரியவர்கள் சொல்வதுபோல இது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட பந்தம்.

    அப்போது எனது சினிமா வாழ்வில் சில கசப்பான நிகழ்ச்சிகள் நடந்தன. நான் நினைத்துக்கொண்டிருந்தது ஒரு வாழ்க்கை, ஆனால் அமைந்தது வேறு வாழ்க்கை, எதுமே நம்ம கையில் இல்லை, எல்லாம் அவன் செயல் என்பது நிஜம்தான்.

    ‘நமக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதுதான் நடக்கும். இன்னார் உன் வாழ்க்கைத் துணைவர் என்று விதி உண்டோ அது நடந்தே தீரும், என்று அம்மா சொன்னார். அவர் சொன்னதுபோல் நான் நடிகையானதும் ஒரு விதிதான்’ மக்கள் மனதில் குடியேறியதும் விதிபோலதான். நாங்கள் பஞ்சாப் சண்டிகரை சேர்ந்தவர்கள், தீபக் பக்காவும் பஞ்சாபிதான், டெல்லியில் கரோல் பார்க்கில் என் சித்தி வீடு இருந்தது. சித்தியின் வீட்டிற்கு எதிர்வீடுதான் தீபக் வீடு.

    Enjoying the preview?
    Page 1 of 1