Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Rabindranath Tagore Manavargalukku Sonnathu
Rabindranath Tagore Manavargalukku Sonnathu
Rabindranath Tagore Manavargalukku Sonnathu
Ebook63 pages21 minutes

Rabindranath Tagore Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

எழுத்து நடையில் எளிமை, சொல்லும் விஷயத்தில் சமூகத்தினருக்கு ஒரு மெசேஜ், இவை மாதிரியான பல நூல்களை ஆசிரியர் நமக்குக் கொடுத்துள்ளார். ரவீந்திரநாத் தாகூரின் எளிமையான வாழ்க்கையும், அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களையும், அவர் இந்திய மக்களுக்காக வழங்கிய தேசியகீதம் பாடலையும் மிக அழகாகவும், சில சுவாரசியமான மேற்கோள்களைக் காட்டியும், மிக நேர்த்தியாகவும் இந்நூலை ஆசிரியர் கொடுத்துள்ளார். மாணவர்களாகிய நாமும் இவற்றை வாசித்து, வாழ்க்கைப் பாடங்களை கற்றுக்கொள்வோம்...

Languageதமிழ்
Release dateAug 13, 2022
ISBN6580122808723
Rabindranath Tagore Manavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Rabindranath Tagore Manavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Rabindranath Tagore Manavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Rabindranath Tagore Manavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ரவீந்தரநாத் தாகூர் மாணவர்களுக்குச் சொன்னது

    Rabindranath Tagore Manavargalukku Sonnathu

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தாகூர் குடும்பப் பின்னணி

    தாகூர் குடும்பப் பின்னணி

    ஒரு குழந்தை சிறந்த குடிமகனாக வளர்வதற்கு அவசிமானது அதன் குடும்பப் பின்னணியும், அது வளரும் சுற்றுச்சூழலும்தான். சிலர் வசதியான நல்ல குடும்பப் பின்னணியில் பிறந்திருந்தாலும் அதன் சுற்றுச்சூழல் பாதையை மாற்றிவிடும். சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்த போதும் நல்லவர்களின் தோழமை அவர்களை கைப்பிடித்து நல்ல பாதையில் அழைத்துச்செல்லும்.

    கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தது மிகச்சிறந்த பெரிய குடும்பத்தில், அவரது பாட்டனார் துவாரகநாத் தாகூர், கடல் வாணிபத்தின் மூலம் பெரும் செல்வம் திரட்டியவர். முதன்முதலாக இந்திய மூலதனத்தோடு யூனியன் வங்கி என்ற பெயரில் ஒரு நவீன வங்கியை நிறுவியவர். கல்கத்தா மாநகரில் அந்த நாளிலேயே மூன்று தளம்கொண்ட ஒரு பெரிய மாளிகையை ஜோராசாங்கோ பேட்டையில் அமைத்து ஒரு இளவரசனைப்போல ஆடம்பரமாக வாழ்ந்தவர். வெள்ளைக்காரர்களோடு நல்ல நட்போடு இருந்தவர்.

    தந்தை வழியில் வாணிபம் செய்து செல்வம் தேடியவர் தேவேந்திரநாத் தாகூர். அவருக்கும் சாரதாதேவி அம்மையாருக்கும் பிறந்தவர்தான் ரவீந்திரநாத் தாகூர், (காந்தி என்பது எப்படி ஒரு சாதிப்பெயராக இருந்ததோ அப்படியே தாகூர் என்பதும் அவரது சாதிப்பிரிவின் பெயர். எனவே அவரது குடும்பத்தார் அனைவரின் பெயரிலும் தாகூர் இருந்து வருகிறது)

    நல்ல படிப்பும், உயர்ந்த பண்புகளும் கொண்ட தேவேந்திரநாத் பிராமணர் என்றாலும் அர்த்தமற்ற மதச்சடங்குகளிலும், சாதிப் பிரிவினைகளிலும் நம்பிக்கை இல்லாதவராகவே இருந்தார். அந்த குடும்பத்தார் முஸ்லிம்களோடு நல்ல தோழமையோடு பழகி வந்தனர். இதனால் சில வைதீகக் குடும்பங்களின் ஏளனத்திற்கு உள்ளானது உண்டு. ஆனால் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.

    ***

    குட்டி நகரம்

    தேவேந்திர நாத் ஜோராசாங்கோ மாளிகையில் பெரிய குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அங்கு மருமகள்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள், நண்பர்கள், உறவினர்கள், சமையல்காரர்கள், வேலைக்காரர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகக்கலைஞர்கள் என்று எப்போதும் அந்த மாளிகை நிரம்பி இருக்கும். கலை, பாசம், தோழமை என்று மகிழ்ச்சியான சூழலில் ஜோராசாங்கோ மாளிகையே ஒரு குட்டி நகரம்போல் திகழ்ந்தது.

    தாய்மொழி இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்திய மரபு வழி கலைகள், நாடகம் முதலியவை அந்தக் குடும்பத்தினர் விரும்பிக்கற்றனர். தாகூர் குடும்பத்துக் குழந்தைகள் நாடகம், ஆடல், பாடல் என மேடையில் தோன்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இப்படி வங்கக் கலை இலக்கியத்தின் மறுமலர்ச்சியில்

    Enjoying the preview?
    Page 1 of 1