Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu
Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu
Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu
Ebook133 pages41 minutes

Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் இலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர் என்று சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவின்போது அன்றைய சென்னை அரசு மு. வரதராசனாரை பாராட்டி நடராஜர் உருவம் பொறித்த கேடயம் (15.8.1957) வழங்கிச் சிறப்பித்தது.

தமிழுக்கு இத்தகைய பெரும் தொண்டு செய்த மு.வ. 10.10.1974 ஆண்டு சென்னையில் மறைந்தார். கலைகளுள் எழுத்துக்கலைக்கு தனி ஆற்றல் உண்டு. மு.வ.வின் எழுத்து காலம் கடந்து வாழும்.

டாக்டர் மு.வ. மாணவர் சமுதாயத்திற்கு கல்வியின் சிறப்பை எடுத்துரைத்த அழகிய அரிய கருத்துக்களை இங்கே பதிவு செய்திருக்கிறோம். மாணவர்களுக்கு வழிகாட்டிச் சென்ற டாக்டர் மு.வ. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.

Languageதமிழ்
Release dateNov 1, 2022
ISBN6580122808889
Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

Related ebooks

Reviews for Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu - Kalaimamani Sabitha Joseph

    http://www.pustaka.co.in

    மு.வரதராசனார் மாணவர்களுக்கு சொன்னது

    Mu. Varatharasanar Maanavargalukku Sonnathu

    Author :

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    கல்வியின் சிறப்பைச் சொன்னவர்

    கல்விச் சிறப்புகள்

    கல்விப்பணியில் பெற்ற சிறப்புகள்

    பல துறைகளில் செய்த சிறப்புகள்

    பன்மொழிச் சிறப்பு

    தனிச் சிறப்புகள்

    சிறந்த படைப்புகள்

    சிறப்புப் பெற்ற நூல்கள்:

    பிறமொழியில் சிறப்பு

    மனித மூளையின் ஆற்றல்

    பள்ளிகளுக்கு அதிக செலவிடவேண்டும்

    வளரும் மூளை

    உங்களில் ஒரு ஐன்ஸ்டீன், காந்தி

    ஆசிரியரின் உழைப்பு

    துறைசார்ந்த அறிவு

    புத்தகப்படிப்பு தரும் அறிவு

    விலங்கையும் மனிதனையும் பிரித்துக் காட்டும் அறிவு

    மனிதனின் தேடல்

    புத்தகங்களின் நட்பு தரும் நிறைவு

    நினைவு ஆற்றல்

    கட்டளையாகச் சொல்லாதீர்கள்

    கற்கவேண்டியதை மட்டும் கற்க

    நாட்டுக்கு நல்லது

    படித்ததை மறக்க ஏன் படிக்க வேண்டும்?

    பொது அறிவு-சிறப்பு அறிவு

    படிப்பில் கவனம் தேவை

    நீங்கள் எப்படி?

    தேர்வு முறையில் மாற்றம்

    கலைய வேண்டிய மூட நம்பிக்கைகள்

    மாணவர் சங்கங்களால் கிடைப்பது...?

    ஆசிரியர்-மாணவர் உறவு

    கற்க மட்டுமே கல்விக்கூடம்

    மாணவர்களுக்கான ரோல் மாடல்கள்...

    நல்ல சமுதாயம் அமைய

    நல்லவர்கள் கூட்டே வலிமை

    நல்லவர்கள் அணிவகுத்து நில்லுங்கள்

    மாணவர்களே விழிப்புடன் இருங்கள்

    பெரிய கூட்டங்களில் கிடைப்பது என்ன?

    மாணவர்களைப் படிக்கவிடுங்கள்

    நம்பிக்கை

    பழங்கால கல்வி முறை

    தொடரும் படிப்பு

    மாணவர்களின் உழைப்புக்கு மதிப்புத்தேவை

    வழிகாட்டியாக இருங்கள்

    பயனுள்ள அறிவு வளர்ச்சி

    அறிவு வளர்ச்சியும் நினைவுத் திறனும்

    மனப்பாடம் செய்யுங்கள்

    புதிய தேர்வு முறை

    ஐன்ஸ்டீன் வாழ்வில்

    நல்ல கல்வியின் துணை வேண்டும்

    கல்வியே தெளிவு தரவேண்டும்.

    தெளிவு வேண்டும்

    கல்வியில் முடியுமா?

    விட்டுக்கொடுத்தல் நற்பண்பைத் தரும்

    ஆசிரியர் நல்லவராக இருக்கவேண்டும்

    மாணவர்கள் மத்தியில் சாதி-மதம் வேண்டாம்

    ஆசிரியர் என்பவர் மாமியார் அல்ல

    நல்ல மாணவர்களை உருவாக்குதல்

    முன்னுரை

    தமிழ் இலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர் என்று சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவின்போது அன்றைய சென்னை அரசு மு. வரதராசனாரை பாராட்டி நடராஜர் உருவம் பொறித்த கேடயம் (15.8.1957) வழங்கிச் சிறப்பித்தது.

    தமிழுக்கு இத்தகைய பெரும் தொண்டு செய்த மு.வ. 10.10.1974 ஆண்டு சென்னையில் மறைந்தார். கலைகளுள் எழுத்துக்கலைக்கு தனி ஆற்றல் உண்டு. மு.வ.வின் எழுத்து காலம் கடந்து வாழும்.

    டாக்டர் மு.வ. மாணவர் சமுதாயத்திற்கு கல்வியின் சிறப்பை எடுத்துரைத்த அழகிய அரிய கருத்துக்களை இங்கே பதிவு செய்திருக்கிறோம். மாணவர்களுக்கு வழிகாட்டிச் சென்ற டாக்டர் மு.வ. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.

    என்றும் நட்புடன்,

    சபீதாஜோசப்

    கல்வியின் சிறப்பைச் சொன்னவர்

    கடந்த நூற்றாண்டின் சிறப்புமிக்க மனிதர்களில் ஒருவர் மு.வ. அவர்கள். கல்வித்துறையிலும் தமிழ் இலக்கியத் துறையிலும் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனின் மகத்தான தமிழ்த்தொண்டு என்றும் போற்றத்தக்கது. தமிழறிஞர் மு.வ. அவர்கள் சிறந்த கல்வியாளர் மட்டுமல்ல; மிகச்சிறந்த எழுத்தாளரும்கூட தமது கதை, கட்டுரைகளால் தமிழ்ச் சமுதாயம் மேன்மையடையவும் தமிழ் இலக்கியம் மேன்மையடையவும் மாபெரும் பணியாற்றியவர்.

    அன்னை கண்ணம்மாளுக்கும் தந்தை முனுசாமி அவர்களுக்கும் செல்லப்பிள்ளையாக 24.4.1912-ம் ஆண்டு வட ஆர்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரிலே பிறந்தார். முதலில் அவருக்கு வைத்த பெயர் திருவேங்கடம். தாத்தாவின் நினைவாக குடும்ப மரபுப்படி வழங்கிய பெயரே வரதராசன்.

    1935-ம் ஆண்டு தம் மாமன் மகளான ராதாவை மணந்தார். அவருக்கு ஆண் மக்கள் மூவர். அவர்கள் முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர். அம்மூவரும் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகிறார்கள்.

    கல்விச் சிறப்புகள்

    அவர் வேலத்திலும் வாலாசாவிலும் தொடக்க கல்வியைக் கற்றார். உயர்நிலைப்படிப்பை திருப்பத்தூரில் பயின்றார். முருகைய்யா முதலியாரிடம் தமிழ் கற்றுப் புலவருக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் அவர் 1935-ம் ஆண்டு தமிழ்ப்புலவர் தேர்வு எழுதிச் சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்து திருப்பானந்தாள் பரிசு (ரூ.1000) பெற்றார்.

    1939-ல் பி.ஓ.எல். பட்டமும் 1944-ல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார். 1948-ல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலாகத் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றவர் அவரே. 1972-ம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் கல்லூரி அவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிலிட்) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிலிட் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ.தான்.

    கல்விப்பணியில் பெற்ற சிறப்புகள்

    அவர் 1928-ல் முதன்முதலாக தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். 1935-ம் ஆண்டு முதல் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939 முதல் 1944-ம் ஆண்டுவரை டாக்டர் அ. லட்சுமணசாமி முதலியாரின் உதவியுடன் தமிழ் விரிவுரையாளராகப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றினார். 1945-ல் அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார்.

    இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறைவுக்குப் பிறகு 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1971 முதல் 1973 வரை மதுரைப் காமராசர் பல்கலைகழகத்தின் புகழ்மிக்க இணையற்ற துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.

    பல துறைகளில் செய்த சிறப்புகள்

    மு.வ. பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் சென்னை, அண்ணாமலை ஆகிய பல்கலைக்கழகங்களின் பேரவை (செனட்) அங்கத்தினராக இருந்தார்.

    Enjoying the preview?
    Page 1 of 1