Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamilarin Sangakala Perumai Keezhadi
Tamilarin Sangakala Perumai Keezhadi
Tamilarin Sangakala Perumai Keezhadi
Ebook111 pages29 minutes

Tamilarin Sangakala Perumai Keezhadi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

முதல், இடை, கடைச்சங்கம் நிறுவி தமிழை வளர்த்தவர்கள் பாண்டிய மன்னர்கள். இவர்களின் மூன்றாம் தமிழ்ச்சங்கம் இருந்தது தற்போதுள்ள மதுரையாகும். இம்மதுரை சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற நகரமாகும். மதுரையின் அருகே கீழடியில் சங்ககாலத் தமிழரின் வாழ்வில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ளன. இவற்றின் மூலம் சங்ககாலத் தமிழரின் நாகரிகம் பண்பாட்டினை நாம் அறிய முடிகின்றது. பலநூறு பொருட்கள் அகழாய்வில் கிடைக்கப்பெற்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதனைப்பற்றி நண்பர் கவிஞர். இளங்கவின் தமிழரின் சங்ககாலப் பெருமை கீழடி என்ற நூலை தற்போது எழுதியுள்ளார். இவர் கீழடி அருகே கொந்தகையில் தலைமையாசிரியராய் பணிபுரிந்ததன் மூலம் இப்பகுதியை நன்கு அறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் படைத்துள்ள இந்நூல் பல அரிய செய்திகளை நமக்குத் தொகுத்தளிக்கின்றது.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580158309055
Tamilarin Sangakala Perumai Keezhadi

Read more from Madurai Ilankavin

Related to Tamilarin Sangakala Perumai Keezhadi

Related ebooks

Reviews for Tamilarin Sangakala Perumai Keezhadi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamilarin Sangakala Perumai Keezhadi - Madurai Ilankavin

    http://www.pustaka.co.in

    தமிழரின் சங்ககாலப் பெருமை கீழடி

    Tamilarin Sangakala Perumai Keezhadi

    Author :

    மதுரை இளங்கவின்

    Madurai Ilankavin

    For more books

    https://www.pustaka.co.in/home/author/madurai-ilankavin

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர் உரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    அணிந்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    பாராட்டுரை

    பாராட்டுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    1. தமிழக இயற்கை அமைப்பு

    2. மூத்தகுடி தமிழ்க்குடி

    3. சங்ககாலத் தமிழகம்

    4. தமிழரின் நாகரிகமும் பண்பாடும்

    5. தமிழரின் வீரமும் போரும்

    6. தமிழரின் கடல் வாணிகம்

    7. தமிழரின் தாய்மொழிப் பற்று

    8. சிந்துவெளி நாகரிகம்

    9. உலகெலாம் தமிழர்

    10. தமிழகத்தில் ஆழ்கடலாய்வு

    11. கீழடி இயற்கை வளம்

    12. கீழடி அகழ்வராய்ச்சி

    13. கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவை

    14. மேலும் அகழ்வாராய்ச்சி

    15. கொந்தகை வளம்

    16. கீழடி அகழ்வாய்வுக்காக 1974 முதல் முனைப்போடு பணியாற்றிய நண்பர் ஆசிரியர் திரு. வை. பாலசுப்பிரமணியன் ஆய்வாளருடன் பேட்டி

    17. கீழடி சொல்லும் பெருமை

    ஆசிரியர் உரை

    நான் கீழடி அருகே 1 கி.மீ தூரத்தில் உள்ள கொந்தகையில் 1988 முதல் 1998 வரை தலைமையாசிரியனாய் பணிபுரிந்தேன். அப்போது கீழடி பற்றி நான் நன்கு அறிவேன். நான் 1963இல் தியாகராசர் கல்லூரியில் படித்த காலம் முதல் தமிழ்நாடு, கல்கி, குமுதம், விகடன், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் அனைத்து கிறிஸ்தவ இதழ்களிலும் கவிதைகள். சிறுகதைகள் எழுதி வந்தேன். பல பத்திரிக்கையாளர்களின் நட்பும் தொடர்பும் இருந்ததால் எனது எழுத்துக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. நான் மதுரை போர்வாள் இதழில் இருந்தபோது தென்றல் தொடாத திராவிடம் என்ற முதற்கவிதைத் தொகுதி வெளிவந்தது.

    1967 முதல் ஆண்டுதோறும் ஆறு ஏழு நூல்கள் எழுதி சில பதிப்பகங்கள் மூலம் இவற்றை தொடர்ந்து வெளியிட்டு வந்தேன். இவ்வாறு வெளியான எனது கவிதை, சிறுகதை, சமூக, சரித்திர நாவல்கள், மாணவர் நூல்கள். ஆய்வு நூல்கள் இன்று நூறுக்குமேல் இருக்கும். இச்சமயத்தில் நான் பத்தாண்டு காலமாக தினமும் பார்த்து வந்த இந்த கீழடி புதையுண்ட நாகரிகம் பண்பாடு பற்றி இந்த தமிழரின் சங்ககால பெருமை கீழடி என்ற நூலில் எழுதி வெளியிட்டுள்ளேன். சிறிய நூலாயினும் இதில் பயனுள்ள தகவல்கள் தங்கட்குக் கிடைக்கும். இதனைப் படித்துப் பயனடைய அன்புடன் வேண்டுகிறேன். நன்றி.

    சென்னை – 24

    01.12.2019

    மதுரை இளங்கவின்

    (எம். ஆரோக்கியசாமி, எம்.ஏ., எம்.எட்.)

    (C) 9894482497

    வாழ்த்துரை

    முனைவர் கோ. விசயராகவன், M.A., M.B.A., Ph.D.

    இயக்குநர்,

    தமிழ் வளர்ச்சித் துறை.

    தமிழ்ச்சாலை சென்னை - 600008.

    இன்று தமிழ்மொழியின் வரலாறு நன்கு ஆய்வு செய்யப்பட்டு உலகெங்கிலும் அதன் தொன்மை, வளமை, இனிமை, இலக்கணக் கட்டமைப்பு ஆகிய பல்வேறு கூறுகளும் மொழி வரலாற்று ஆசிரியர்களால் எடுத்தியம்பப்பட்டுள்ளது.

    உலக மக்கள் இனம் முழுமைக்கும் வழிகாட்டும் விதமாகவும் உரமூட்டும் விதமாகவும் வியப்பில் ஆழ்த்தும் விதமாகவும் அமைந்துள்ள தமிழர் பண்பாடு, இன்று, ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பளிப்பைப் பெற்று பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் திகழ்ந்து வருகிறது.

    நூலாசிரியரும், ஆய்வறிஞருமான திரு.எம். ஆரோக்கியசாமி அவர்கள், மதுரை இளங்கவின் என்ற பெயரில், கடந்த 1963ஆம் ஆண்டு முதல், பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகள் எழுதி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சமூக சீர்திருத்த நாவல்கள் மற்றும் ஆய்வு நூல்கள் என்ற அளவிற்கு இலக்கியத்தளத்தை விரிவாக்கிக்கொண்டு, ஏறத்தாழ 120 நூல்கள் எழுதிக் குவித்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். இவர் நாடறிந்த நல்லறிஞர், கடல்கடந்தும் தமிழ் மணம் பரப்பி வருபவர். இவர் கொந்தகையில் தலைமையாசிரியராய் பணிபுரிந்துள்ளார். இது கீழடி அருகே உள்ள ஊர்.

    இந்நிலையில், நூலாசிரியருக்கு அகழாய்வுப் பகுதியான கீழடியின் மீது தணியாத ஆர்வமும் குன்றாத வியப்பும் தோன்றியுள்ளது. அதனால் தமிழரின்

    Enjoying the preview?
    Page 1 of 1