Sanga Tamil Noolgalil Kalidasan Uvamaigal
()
About this ebook
உலகப் புகழ் பெற்ற கவிஞனும், நாடகாசிரியனுமான காளிதாசன் ஒரு உவமை மன்னன். அவனது ஏழு படைப்புகளில் 1500 உவமைகள், உருவகங்கள் முதலியன உள்ளன. அவற்றில் 200 உவமைகள் சங்கத் தமிழ் நூல்களிலும், அதே காலத்தில் எழுந்தவை என்று கூறப்படும் பிறநூல்களிலும் கிடைக்கின்றன. அவை அனைத்தும் வட நாட்டிலுள்ள ஆறு, மலை, முனிவர்கள், பெரியோர்கள் பற்றிப் பேசுகின்றன. ஆகவே தமிழர்கள் அவற்றை காளிதாசனிடமே எடுத்திருக்க வேண்டும் இதன் அடிப்படையில் நான் காளிதாசனை கி.மு.வில் அல்லது அதற்கும் முன்னதான காலத்தில் வைத்துள்ளேன். காளிதாசன் எழுதிய குமார சமபவத்தில் முதல் பத்துப் பாடல்களில் வந்த இயற்கை வருணனை புற நானூறு முதலிய நூல்களில் அப்படியே வருகின்றன.
சங்க இலக்கிய உவமைகளை அறியாத பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞர்களும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்து அதற்கான காரணங்களை 100 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நான் சங்க இலக்கியமும் அதை ஆதரிக்கின்றன என்று காட்டுவதற்கு, பல தலைப்புகளில் ஏராளமான சங்க காலச் செய்யுட்களை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். குறிஞ்சிப் பாட்டினைப் படித்த ஜி.யு.போப், உடனே அது காளிதாசனைப் பார்த்து எழுதியது என்று விமர்சித்துள்ளார். இரு மொழிகளையும் அறிந்த அறிஞர்களுக்கு இது நன்கு புலப்படும். எனது கருத்தினை ஏற்காதவர்களும் கூட, காளிதாச மஹாகவியின் உவமை நயங்களை அறிய இந்த நூல் உதவும் என்று எண்ணுகிறேன்.
Read more from London Swaminathan
Manaivi Oru Marunthu Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsTamil - English Bilingual Hindu 'Quiz' Rating: 0 out of 5 stars0 ratingsDravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Thiruvasaga Thean! Thirumanthira Juice!! Rating: 0 out of 5 stars0 ratingsTamilnattai Ulukkiya Pei Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5Singapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Sanga Tamil Noolgalil Kalidasan Uvamaigal
Related ebooks
Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal! Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Ilakkiyathil Pengal Rating: 0 out of 5 stars0 ratingsTajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara? Rating: 0 out of 5 stars0 ratingsManimudiyum Udaivaalum Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsKamba Ramayanathil Naam Ethir Parkkatha Athisaya Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsMenaka Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsIndraiya Thennaga Ilakkiya Pokku Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Selvam Rating: 0 out of 5 stars0 ratingsMahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsColin Mackenzie Varalaarum Suvadikalum Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Moolam India Inaippu - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsVazhum Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSingapore-il Siva Peruman! Sindhu Samaveliyil Sivalingam!! Rating: 0 out of 5 stars0 ratingsPuththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsSumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratingsTolkappiya Athisayangal Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5Christhava Ilakkiya Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Mallika Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sanga Tamil Noolgalil Kalidasan Uvamaigal
0 ratings0 reviews
Book preview
Sanga Tamil Noolgalil Kalidasan Uvamaigal - London Swaminathan
http://www.pustaka.co.in
சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
Sanga Tamil Noolgalil Kalidasan Uvamaigal
Author :
லண்டன் சுவாமிநாதன்
London Swaminathan
For more books
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியரைப் பற்றி
முன்னுரை
1. சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள்
2. காளிதாசன் புள்ளிவிவரம்
3. கண்ணே! கண்மணியே! உவமைகள்
4. அப்பா போல பிள்ளை! உவமைகள்!
5. பேடி/அலி: வள்ளுவனும் காளிதாசனும் சொல்லும் உவமை
6. தமிழில் விநோத உவமைகள்: பெண்ணே! நீ லண்டன் போல அழகி!!
7. அனிச்சம் பூவும் சீரிஷம் பூவும் ஒன்றா?
8. ஒரே துறையில் மானும் புலியும்: கம்பன் தரும் அதிசயத் தகவல்
9. ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை!
10. ஜம்புத்வீபம் = நாவலந்தீவு
11. ராமனும் லெட்சுமணனும் உத்ய, பித்ய நதிகள்
13. காளிதாசன் கண்ட பறக்கும் பாம்பு
14. காளிதாசன் காட்டும் அறுவகைப் படை வீரர்கள்!
15. தமிழ்ப் புதிருக்கு கிரேக்க நாட்டில் விடை கிடைத்தது!
16.கைதிகள் விடுதலை: காளிதாசன் சொன்னதை ஒபாமா செய்தார்!
17.‘வடதிசையதுவே வான் தோய் இமயம்’: புறநானூறு’
18. மாரி, பாரி, வாரி: காளி.,கம்பன் கபிலன்!!!
19. இமயமலையில் அதிசய ஏரி: கம்பனும் பாடிய புகழ்மிகு ஏரி
20. காளிதாசன் காவியங்களில் பெண் கல்வி
21. காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா?
22. பரிபாடலில் காளிதாசன் உவமை –‘சொல்லும் பொருளும்’
23. காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம்!!
24. காளிதாசரின் நூதன உத்திகள்: தமிழிலும் உண்டு
25. தமிழ் சினிமா பாடலில் ரிக் வேதம், காளிதாசன் தாக்கம்
26. பாம்பு மந்திரம்: அதர்வண வேதமும், கம்பனும் காளிதாசனும்
27. கம்பனும் காளிதாசனும் கடலில் கண்ட திமிங்கிலம்!
28. திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல்
29. போர்க்கள உருவகம்: பரணரும் காளிதாசனும்!
30. புகழ்ந்தால் வெட்கம் வரும்! வள்ளுவனும் காளிதாசனும் சொன்ன கருத்து
31. வைரத்தில் இட்ட துளை! கம்பனும் காளிதாசனும் ஒப்பீடு
32. புத்தகம் எழுதுவது எப்படி? கம்பனும் காளிதாசனும் காட்டும் வழி
33. நூற்று இதழ் அலர் - சத பத்ர யோனிம்: தாமரை உவமைகள்
ஆசிரியரைப் பற்றி
லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.
தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ.சந்தானம் (V.SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.
லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
LONDON MOBILE NUMBER – 07951 370697
Two Blogs:-
tamilandvedas.com
swamiindology.blogspot.com
முன்னுரை
உலகப் புகழ் பெற்ற கவிஞனும், நாடகாசிரியனுமான காளிதாசன் ஒரு உவமை மன்னன். அவனது ஏழு படைப்புகளில் 1500 உவமைகள், உருவகங்கள் முதலியன உள்ளன. அவற்றில் 200 உவமைகள் சங்கத் தமிழ் நூல்களிலும், அதே காலத்தில் எழுந்தவை என்று கூறப்படும் பிறநூல்களிலும் கிடைக்கின்றன. அவை அனைத்தும் வட நாட்டிலுள்ள ஆறு, மலை, முனிவர்கள், பெரியோர்கள் பற்றிப் பேசுகின்றன. ஆகவே தமிழர்கள் அவற்றை காளிதாசனிடமே எடுத்திருக்க வேண்டும் இதன் அடிப்படையில் நான் காளிதாசனை கி.மு.வில் அல்லது அதற்கும் முன்னதான காலத்தில் வைத்துள்ளேன். காளிதாசன் எழுதிய குமார சமபவத்தில் முதல் பத்துப் பாடல்களில் வந்த இயற்கை வருணனை புற நானூறு முதலிய நூல்களில் அப்படியே வருகின்றன. சங்க இலக்கிய உவமைகளை அறியாத பெரிய ஸம்ஸ்க்ருத அறிஞர்களும் காளிதாசனை 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்து அதற்கான காரணங்களை 100 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நான் சங்க இலக்கியமும் அதை ஆதரிக்கின்றன என்று காட்டுவதற்கு, பல தலைப்புகளில் ஏராளமான சங்க காலச் செய்யுட்களை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். குறிஞ்சிப் பாட்டினைப் படித்த ஜி.யு.போப், உடனே அது காளிதாசனைப் பார்த்து எழுதியது என்று விமர்சித்துள்ளார். இரு மொழிகளையும் அறிந்த அறிஞர்களுக்கு இது நன்கு புலப்படும். எனது கருத்தினை ஏற்காதவர்களும் கூட, காளிதாச மஹாகவியின் உவமை நயங்களை அறிய இந்த நூல் உதவும் என்று எண்ணுகிறேன். தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தவர்கள் மட்டுமே இந்திய இலக்கியத்தையும், இந்திய வரலாற்றையும் சரியாக எடை போட முடியும் என்பது என் கருத்து. அது மட்டுமல்ல; காளி தாசனின் ஏழு நூல்களைப் படிக்காதவர்கள் ஏனைய இலக்கியங்களைப் படித்தாலும் ‘படிக்காதவர்களே’ ஆவர்.
11 ஆண்டுக் காலத்தில் பல்வேறு தருணங்களில் கட்டுரைகள் எழுதப்பட்டதால் சில விஷயங்கள் மீண்டும் மீண்டும் வரக்கூடும். இதிலுள்ள ஓரிரு கட்டுரைகள் என்னுடைய பிற நூல்களில் காணப்படலாம். காளிதாசன் தொடர்புள்ள கட்டுரைகள் என்பதால் அவற்றையும் இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்,
லண்டன், ஆகஸ்ட் 2022
1. சங்கத் தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள்
காளிதாசனின் காலம் குறித்து நீண்ட காலமாக பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. கி. மு முதல் நூற்றாண்டு முதல் குப்தர்களின் காலமான நான்காம் நுற்றாண்டு வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் பல தேதிகளைக் குறிப்பிட்டார்கள். ஆனால் அவைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நல்ல சான்றுகள் சங்கத் தமிழ் இலக்கியத்தில் கிடைத்துள்ளன. இதன் மூலம் காளிதாசனின் காலம் சங்க காலத்துக்கு முன் என்பது தெள்ளத் தெளிவாகிறது. புகழ்பெற்ற வரலாற்று நிபுணரும் கலைத்துறை வல்லுனருமான சிவராம மூர்த்தி போன்றோர் காளிதாசனை விக்ரமாதிதன் காலத்தில் வைத்தனர். சங்க இலக்கியமும் அவர் காலம் கி.மு முதல் நூற்றாண்டு என்பதை உறுதி செய்கிறது.
காளிதாசன் உலக மகா கவிஞர்களில் ஒருவன். மிகப் பெரிய நாடகாசிரியன். அவனுடைய ஏழு நூல்கள் அவனுக்கு உலகப் உகழை ஈட்டித் தந்துள்ளன. காளிதாசன் உவமை மன்னன். ஆயிரத்துக்கும் அதிகமான உவமைகளை ரத்தினக் கற்கள் போல ஆங்காங்கு பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளான். சங்க இலக்கிய நூல்களில் இவனுடைய ஆயிரம் உவமைகளில் அல்லது சொற்றொடர்களில் 225 வரை அப்படியே கையாளப்பட்டுள்ளன.
ஜி யு போப் கண்டுபிடிப்பு
இந்திய பண்பாடு பற்றிப் பேசும் யாவரும் காளிதாசனின் காவியங்களைப் படித்திருக்க வேண்டும். அல்லது அவர்களுடைய அறிவு முழுமை பெற்றதாகாது. ஆங்கில இலக்கியத்துக்கு ஷேக்ஸ்பியர் எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு இந்தியப் பண்பாட்டுப் படிப்புக்கு காளிதாசன் முக்கியம். அவனது காவியங்களும் நாடகங்களும் சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் ஆங்கிலம் போன்ற முக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. கபிலரின் குறிஞ்சிப் பாட்டைப் படித்த பிரபல தமிழ் அறிஞர் ஜி யு போப் அது காளிதாசன் காவியத்தின் தழுவலே என்று கூறிவிட்டார். இரண்டு நூல்களையும் படிக்கும் எவருக்கும் இது எளிதில் புலப்படும். கபிலரும் குறிஞ்சிப் பாட்டை தமிழை இகழ்ந்த பிரமதத்தனுக்குப் பாடம் புகட்டவே செய்ததால் காளிதாசன் போலவே எழுதி அவனை ஒரு வழிக்குக் கொண்டுவந்தார் என்றால் அது மிகையாகாது. பிரகதத்தனை மனம் மாற்றியதோடு அவனையும்