Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal
Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal
Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal
Ebook170 pages1 hour

Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இது ஒரு வரலாற்று நூல். மகாவம்சம் என்னும் நூல் இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூல். அதிலுள்ள கஜபாகு என்ற மன்னனின் பெயர் சிலப்பதிகாரத்தில் வருவதை வைத்துத்தான் நாம் சிலப்பதிகாரத்துக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் காலம் கற்பித்தோம். இது போன்ற நிறைய தமிழ் அதிசயங்களை இந்த நூல் பகர்கிறது. விஜயன் என்னும் 2500 ஆண்டுக்கு முந்தைய மன்னனுக்கு பாண்டியர்கள்தான் பெண் கொடுத்தனர் என்ற செய்தி சிங்களவர்களும் தமிழர்களும் நெருங்கிய உறவினர் என்பதைக் காட்டுகிறது.

இராவணன் உள்பட இலங்கையர்கள் எப்படி பருவக் காற்றைப் பயன்படுத்தி, செலவே இல்லாமல், பாய்மாரக் கப்பலில் இந்தியாவுக்கு வந்து சென்றனர் என்பதை அறிய உதவும் குறிப்புகளும், அசோகன் பற்றி நாம் அறியாத செய்திகளும், மகாவம்ச நூலில் இருக்கின்றன.

Languageதமிழ்
Release dateOct 1, 2022
ISBN6580153509098
Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal

Read more from London Swaminathan

Related to Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal

Related ebooks

Related categories

Reviews for Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal - London Swaminathan

    http://www.pustaka.co.in

    மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

    Mahavamsa Noolil Tamilargal Patri Viyappoottum Seithigal

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. மகாவம்சத்தில் 27 அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

    2. மகாவம்சத்தில் 27 அதிசயத் தமிழ்க் காட்சிகள்! – பகுதி-2

    3. மகாவம்சத்தில் 27 அதிசயத் தமிழ்க் காட்சிகள்!!-3

    4. மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள்

    5. மேலும் 10 அற்புதச் செய்திகள்

    6. பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள்

    7. யோகிகள் தீப்பிழம்பாக மாறும் அதிசயம்!

    8. மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்?

    9. அசோகனுக்கு ஒரே நாளில் 84,000 கடிதங்கள்!!

    10. இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்? கப்பலா? விமானமா?

    11. அசோக சக்ரவர்த்தி 50% பிராமணன்!

    12. சக்ரவர்த்தி கதறி அழுதது ஏன்?

    13. இனி 2 மயில் மட்டுமே  சமைக்கலாம்- அசோகன் உத்தரவு

    14.அசோகன் மனைவி செய்த அக்கிரமம்! மகாவம்சம் தரும் தகவல்

    15. போலி சந்யாசிகளின் முகத்திரையைக் கிழித்த அசோகன்

    16. மாமன்னன் அமைத்த மருந்துத் தொட்டிகள்!

    17. அசோகனை அசத்திய விலை மாது!

    18. இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்?

    19. மகாவம்ச பொன்மொழிகள்

    20. காசி முதல் காரைத் தீவு வரை அகஸ்தியர் பயணம், மிகப்பழைய நூல் தகவல்

    21. புத்த மத அதிசயம்! தண்ணீர் மீது நடந்தான் அரசன்!!

    22. வியாபாரிகளின் பேராசை- பழைய கதை புதிய வியாக்கியானம்

    23. புத்தரின் ரஹஸிய ஹிந்து வழிபாடு

    24. கிளியாகப் பிறந்த புத்தர் சொன்ன நீதி

    25. மனைவி கிடைப்பாள் ; நண்பன் கிடைப்பான்; தம்பி கிடைக்காது!

    26. உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை

    27. முஸ்லீம் படைகளை விரட்டிய அர்கால் தேச ராணி!

    28. மூன்று நாழிகை சிம்மாசன யோகம்!

    29. பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!!

    30. எங்க அப்பன் ஒரு கைநாட்டு, ஆனால் அவர் சிங்கம்டா! - மொகலாய மன்னன் ஜஹாங்கீர்

    முன்னுரை

    இது ஒரு வரலாற்று நூல். மகாவம்சம் என்னும் நூல் இலங்கையின் வரலாற்றைக் கூறும் பாலி மொழி நூல். அதிலுள்ள கஜபாகு என்ற மன்னனின் பெயர் சிலப்பதிகாரத்தில் வருவதை வைத்துத்தான் நாம் சிலப்பதிகாரத்துக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் காலம் கற்பித்தோம். இது போன்ற நிறைய தமிழ் அதிசயங்களை இந்த நூல் பகர்கிறது. விஜயன் என்னும் 2500 ஆண்டுக்கு முந்தைய மன்னனுக்கு பாண்டியர்கள்தான் பெண் கொடுத்தனர் என்ற செய்தி சிங்களவர்களும் தமிழர்களும் நெருங்கிய உறவினர் என்பதைக் காட்டுகிறது. இராவணன் உள்பட இலங்கையர்கள் எப்படி பருவக் காற்றைப் பயன்படுத்தி, செலவே இல்லாமல், பாய்மாரக் கப்பலில் இந்தியாவுக்கு வந்து சென்றனர் என்பதை அறிய உதவும் குறிப்புகளும், அசோகன் பற்றி நாம் அறியாத செய்திகளும், மகாவம்ச நூலில் இருக்கின்றன. அசோகனின் மனைவி செய்த அட்டூழியம், ஆரம்ப காலத்தில் அசோக மாமன்னன் சகோதரர் அனைவரையும் கொன்று குவித்தது, இறுதிக் காலத்தில் மூளை குழம்பி உளறியது ஆகியன அனைத்தையும் மகா வம்சம் நூலின் வாயிலாக அறிகிறோம். நூலின் இறுதியில் முஸ்லீம் ஆட்சியில் நடந்த சில சுவையான கதைகளையும் சேர்த்துள்ளேன்.

    இந்த நூல்.பத்தாண்டுகளுக்கும் மேலாக எனது பிளாக்கில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு ஆகும் ; தனித்தனியே வெவ்வேறு காலத்தில் எழுதியதால் சில விஷயங்கள் திரும்பத் திரும்பவரக்கூடும்; வாசகர்கள் அதைப் பொறுத்தருள வேண்டும். எனது பிளாக்கில், முதல் முதலில் கட்டுரைகள் வெளியான தேதியும், அந்த வரிசை எண்ணும் ஆங்காங்கே இருக்கும். கட்டுரைகளைப் படித்துவிட்டு கருத்துக்களைச் சொல்லவோ, என்னைக் கேள்வி கேட்கவோ மறந்து விடாதீர்கள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    செப்டம்பர் 2022

    1. மகாவம்சத்தில் 27 அதிசயத் தமிழ்க் காட்சிகள்!– பகுதி-1

    ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1291;

    தேதி: 16 செப்டம்பர் 2014

    மகாவம்சம் என்றால் என்ன?

    இது பாலி மொழியில் எழுதப்பட்ட இலங்கையின் வரலாறு. இலங்கையின் வரலாறு என்பதைவிட இலங்கையில் புத்தமதம் பரவிய வரலாறு என்பது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இலங்கை என்னும் நாடு இராமாயண காலத்தில் இருந்தே வாழும் நாடு. இந்தியாவின் வங்காளப் பகுதியில் இருந்து நாடுகடத்தப்பட்ட விஜயன் என்னும் மன்னன் இலங்கையில் வந்து இறங்கிய நாள் முதல் மஹாசேனன் (கி.மு. 543 முதல் கி.பி. 361 முடிய) என்ற மன்னனின் ஆட்சி முடியும் வரையுள்ள இலங்கையின் வரலாற்றை இன்னூல் இயம்புகிறது.

    காளிதாசன் எழுதிய புகழ்பெற்ற ரகுவம்சம் என்னும் காவியம் சூரியவம்ச அரசர்களின் அருமை பெருமைகளைப் போற்றிப் பாடுகிறது. அதை மனதிற்கொண்டு மஹாவம்சம் என்று பெயரிட்டனர் போலும்.

    மகாவம்சத்தில் தமிழர் பற்றி நிறைய அதிசயச் செய்திகள் உள்ளன. சங்க காலப் பெயர்கள் இதில் அதிகம் பயிலப்படுவதால் இது அக்காலத்தை ஒட்டியது என்பதும், இதை எழுதியவர் தமிழராகவோ அல்லது தமிழர்களை நன்கு அறிந்தவராகவோ இருத்தல் வேண்டும் என்றும் கருத இடம் உண்டு. நான் இப்படிக் கூறுவதற்கு கீழ்கண்ட 27 (27 reasons) விஷயங்களே காரணங்கள்:

    சங்க இலக்கியத்தில் உள்ள பெயர்களும் சொற்களும் கதைகளும் மகாவம்சத்தில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் பெயர் அளவு அல்லது கதை அளவு ஒற்றுமைதான். சங்க இலக்கியப் புலவர்களோ நிகழ்ச்சிகளோ அல்ல:–

    1. கபிலன்

    சங்க காலத்தில் கபிலன் என்ற பிராமணப் புலவர் தான் அதிக செய்யுட்களைச் செய்தார். புலனழுக்கற்ற அந்தணாளன் என்று புலவர் பெருமக்களால் போற்றப்பட்டார். பாரி என்ற ஒரு சிற்றரசனுக்காக மூவேந்தரையும் பகைத்து நின்றார். மூவேந்தர்களும் பாரியை வஞ்சனையால் கொன்றனர். ஜாதி மதங்களை உதறிவிட்டு பாரியின் இரண்டு மகள்களையும் தன் சொந்த மகளாகக் கருதி ஊர் ஊராக அழைத்துச் சென்று கெஞ்சிக் கதறி திருமணம் செய்துவிட்டார். மூவந்தருக்கு அஞ்சிய பயங்கொள்ளிகள் அந்தப் பெண்களைத் திருமணம் செய்ய பயந்து நடுங்கினர்.

    தமிழ் மொழியைக் கிண்டல் செய்த யாழ் பிரம்மத்தன் என்ற வடக்கத்தியானுக்குத் தமிழ் கற்பித்து அவனையும் சங்கப் பாடலை பாடச் செய்து அதையும் சங்க இலக்கியத்தில் சேர்த்தார். பிறகு தீயில் பாய்ந்து உயிர் நீத்தார். வாழ்க்கையில் தாம் செய்யவேண்டியதை செய்தாயிற்று என்ற நிறைவு கண்டவுடன் இந்துக்கள் இப்படி உயிர்துறப்பது வழக்கம். (( கீழே காண்க எண் 11: கோப்பெருஞ் சோழன் கதை))

    கபிலருக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரில் கபிலதேவ நாயனார் என்பவர் தோன்றி பாடினார். அவர்தம் பாடல்கள் சைவத் திருமுறையில் சேர்க்கப்பட்டன. இவ்வளவு புகழுடைய கபிலன் என்ற பெயர் மக வம்சத்திலும் வருகிறது. ஆயினும் இவர் சங்க கால கபிலர் அல்ல. பெயரளவு ஒற்றுமைதான்.

    2. பரணன்

    கபில-பரணன் என்று இணைத்தே சொல்லும் அளவுக்குச் சங்க காலத்தில் கொடிகட்டப் பறந்த பரணரும் ஒரு பிராமணர். அவர் ஒரு பெரிய வரலாற்று அறிஞர். வரலாறு எழுதிய முதல் தமிழன் — (First Tamil Historian) என்ற எனது கட்டுரையில் அவரது சாதனைப் பட்டியலைக் கொடுத்திருக்கிறேன். அவர் ஒவ்வொரு பாடலிலும் ஒரு வரலாற்றுச் செய்தியை உவமையாகப் பயன்படுத்துவார். இவரைப்போல ஒவ்வொரு இந்தியக் கவிஞரும் செய்திருந்தால் இன்று நம் வரலாறு இமயமலை அளவுக்கு உயர்ந்திருக்கும். வன்பரணர் என்ற ஒருவரைத் தவிர பிள்ளையார்பட்டி பாண்டியர்காலக் கல்வெட்டில் ஒரு பரணரைக் கண்டுள்ளேன்.

    இந்தப் பெயரும் மஹாவம்சத்தில் வருவது சிறப்புடைத்து. அத்தியாயம் 23-ல் வரும் பரணன் துட்டகாமினியின் பத்து உதவியாளர்களில் ஒருவன். பெரும் வீரன். கி.மு.வில் இலங்கையை ஆண்ட ஏலாரா காலத்தவன் இவன். அதாவது சங்க காலத்தை ஒட்டியவன்.

    3. உதியன்

    இலங்கைத் தீவுக்கு அனுப்பப்பட்ட ஐந்து தேரர்களில் ஒருவர் பெயர் உதியர். சங்க காலத்தில் சிறப்பாக ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவன் உதியஞ் சேரலாதன் அதே பெயருடைய வேறு ஒருவர் மகாவம்சத்தில் வருவது வியப்புக்குரியது. வேறு எங்கும் காணப்படாதது. 20-ஆவது அத்தியாயத்தில் உதியன் என்ற பெயரில் அரசாண்ட மன்னரின் பெயரும் வருகிறது!!!

    4. கல்லாடன்

    கல்லாடம் என்பது ஒரு தமிழ் இலக்கண நூல். இதை எழுதியவர் கல்லாடர். இதே போல சைவத் திருமுறைகளில் எழுதிய கல்லாடரும் உண்டு. அந்தப் பெயரில் மகாவம்சத்தில் கல்லாட நாகன் என்ற மன்னன் இருப்பது வியப்புக்குரியது. சங்கத் தமிழ் நூல்களில் 20 பெயர் நாகன் என்ற பெயரில் பாடி தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர்.

    5. நாகன்

    நாகன் (Naga, Nagan) என்ற பெயர் ஒரு மர்மமான பெயர். காஷ்மீர் முதல் கண்டிவரை காணப்படும் இவர்கள் யார் என்றே தெரியவில்லை. குப்தர்கால கல்வெட்டுகளில் பல நாகர்கள் பெயர்கள் வருகின்றன. பலர் படைத் தலைவர்கள். இலங்கையில் பல நாகன் பெயர் மன்னர்களின் பெயரில் வருகிறது. இதுபற்றிப் பல ஆராய்ய்சிக் கட்டுரைகள் வந்த போதிலும் நிச்சயமாக

    Enjoying the preview?
    Page 1 of 1