Tamilnattai Ulukkiya Pei
()
About this ebook
பேய்கள், ஆவிகள், பூதங்கள் பற்றி ரிக் வேதத்திலும், சுமேரிய புராணக் கதைகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. மஹாபாரதத்தில் பேயின் கேள்விகள் எனப்படும் ‘ரக்ஷப் ப்ரச்னம்’ பகுதி மிகவும் அருமையான பகுதி. சங்க இலக்கியத்தில் பேய்கள், பேய்களை விரட்டும் வெண்கடுகு முதலிய செய்திகள் வருகின்றன. கலிங்கத்துப் பரணி போன்ற பரணி இலக்கியங்களில் பேய்கள் பற்றிப் பாடுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அவ்வையார் திரைப்படத்தில் வரும் பேய்க் காட்சிகள் எல்லோரையும் அஞ்ச வைத்த காலமும் உண்டு. அதே போல ஆங்கிலத்தில் 13 GHOSTS போன்ற படங்களைச் சொல்லலாம். வெளிநாட்டில் பேய்க்கதைகளை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உண்டு.
வெளிநாட்டில் பேய்க்கதைகளை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உண்டு. சுவாமி விவேகானந்தர், தனது சீடர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தது ‘சம்பாஷணைகள்’ என்ற ராமகிருஷ்ண மடத்தின் நூலில் உள்ளது. அவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஆவிகளை எப்படிப் பிரார்த்தனையின் வாயிலாக கரை ஏற்றினாரென்றும் கூறப்பட்டுள்ளது.
மேலைநாடுகளில் தீபாவளி நேரத்தில் வரும் ஹாலோவீன் பண்டிகை பேய்களுக்காவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க ஐம்புலன்களை வென்ற ஆன்மீக வாதிகளும் கவிஞர்களும் 'பயம்'தான் பேய் என்கின்றனர். எது எப்படியாகிலும் தீயதைப் பற்றி அச்சம் இருப்பது நல்லதே.
Read more from London Swaminathan
Manaivi Oru Marunthu Rating: 0 out of 5 stars0 ratingsTamilargal Marangalai Vazhipaduvathu Yen? Rating: 0 out of 5 stars0 ratingsTamil - English Bilingual Hindu 'Quiz' Rating: 0 out of 5 stars0 ratingsTheeyorai Azhikka Kalki Varugiraar! Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsTheninum Iniya Kamba Ramayana Paadalgal Rating: 0 out of 5 stars0 ratingsRig Vedhathil Tamil Sorkalum Athisaya Seithigalum Rating: 5 out of 5 stars5/5
Related to Tamilnattai Ulukkiya Pei
Related ebooks
Sanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsAzhwargal Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Yasothara Kaaviyam Rating: 1 out of 5 stars1/5Aayiram Hindu Madha Ponmozhigal Rating: 0 out of 5 stars0 ratingsDravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Karunaikku Marupeyar Kasaap Rating: 0 out of 5 stars0 ratingsSumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kadhambam Rating: 0 out of 5 stars0 ratingsParavaigal Sagunam Unmaiyaa? Kadavulukku Vaganam Etharkkaga? Rating: 0 out of 5 stars0 ratingsValmiki Mudhal Valluvar Varai! Rating: 0 out of 5 stars0 ratingsKural Selvam Rating: 0 out of 5 stars0 ratingsAdharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Nanmanikkatigai Rating: 0 out of 5 stars0 ratingsGeethodhayam Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsInnilai Rating: 5 out of 5 stars5/5Aali Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsSirappuyar Seevagasinthamani Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsThirumurugatrupadai Rating: 0 out of 5 stars0 ratingsSilambu Olikkum Sinthanaigal Rating: 2 out of 5 stars2/5Kamba Ramayanathil Naam Ethir Parkkatha Athisaya Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsAadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratingsVendiyana Arulum Thiruthalangal Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Tamilnattai Ulukkiya Pei
0 ratings0 reviews
Book preview
Tamilnattai Ulukkiya Pei - London Swaminathan
https://www.pustaka.co.in
தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
Tamilnattai Ulukkiya Pei
Author:
லண்டன் சுவாமிநாதன்
London Swaminathan
For more books
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியரைப் பற்றி
முன்னுரை
1.பேய்களை விரட்ட வெண் கடுகு!!
2.திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்!
3.சங்கத் தமிழ் இலக்கியத்தில் யக்ஷிணி, அணங்குகள்
4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!
5.புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய்!
6.ஔவையாரை மிரட்டிய பேய்!
7.தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!
8.அதர்வண வேதத்தில் பேய்கள் பட்டியல்
9.சிந்து சமவெளியில் பேய் முத்திரை
10.ராக்பெல்லரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும்
11.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி
12.பிரிட்டனின் பேய்க்கதை மன்னன் எம்.ஆர். ஜேம்ஸ்
13.யக்ஷப் ப்ரஸ்னம்:123 கேள்விகள்- பகுதி-1
14.யக்ஷப் ப்ரஸ்னம்--பகுதி-2
15.யக்ஷப் ப்ரஸ்னம் பகுதி- 3
16.யார் இந்த மர்ம தூதர்கள்?
17..யோகிகள் தீப் பிழம்பாக மாறும் அதிசயம்!
18.பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்
19.புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை
ஆசிரியரைப் பற்றி
லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் (6-11-1948) பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.
தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது , லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM) , மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார் .
லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் BLOG விவரங்களும் பின் வருமாறு:-
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
LONDON MOBILE NUMBER – 07951 370697
Two Blogs:-
tamilandvedas.com
swamiindology.blogspot.com
முன்னுரை
பேய்கள், ஆவிகள், பூதங்கள் பற்றி ரிக் வேதத்திலும், சுமேரிய புராணக் கதைகளிலும் பல செய்திகள் கிடைக்கின்றன. மஹாபாரதத்தில் பேயின் கேள்விகள் எனப்படும் ‘ரக்ஷப் ப்ரச்னம்’ பகுதி மிகவும் அருமையான பகுதி. சங்க இலக்கியத்தில் பேய்கள், பேய்களை விரட்டும் வெண்கடுகு முதலிய செய்திகள் வருகின்றன. கலிங்கத்துப் பரணி போன்ற பரணி இலக்கியங்களில் பேய்கள் பற்றிப் பாடுவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. அவ்வையார் திரைப்படத்தில் வரும் பேய்க் காட்சிகள் எல்லோரையும் அஞ்ச வைத்த காலமும் உண்டு. அதே போல ஆங்கிலத்தில் 13 கோஸ்டஸ் 13 GHOSTS போன்ற படங்களைச் சொல்லலாம். வெளிநாட்டில் பேய்க்கதைகளை எழுதி புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உண்டு. சுவாமி விவேகானந்தர், தனது சீடர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தது ‘சம்பாஷணைகள்’ என்ற ராமகிருஷ்ண மடத்தின் நூலில் உள்ளது. அவர் தன்னைப் பின் தொடர்ந்து வந்த ஆவிகளை எப்படிப் பிரார்த்தனையின் வாயிலாக கரை ஏற்றினாரென்றும் கூறப்பட்டுள்ளது. விக்ரமாதித்தன்-- வேதாளம் கதைகள் இந்தியா முழுதும் புகழ் பெற்றவை. தமிழ் நாட்டை உலுக்கிய நீலியின் கதை இலக்கியத்திலும், பழமொழிகளிலும், தேவாரத்திலும் பேசப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம் முதலியன கிரேக்க நாட்டின் பூதங்களுடன் ஒப்பிடற்பாலது. இதுபற்றிய சில கட்டுரைகள் என்னுடைய கிரேக்க மொழியில் தமிழ்ச்சொற்கள் என்ற புஸ்தகத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக சிந்து சமவெளி முத்திரைகளிலும் பேய்கள் படங்கள் உள்ளன. மேலைநாடுகளில் தீபாவளி நேரத்தில் வரும் ஹாலோவீன் பண்டிகை பேய்களுக்காவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க ஐம்புலன்களை வென்ற ஆன்மீக வாதிகளும் கவிஞர்களும் 'பயம்'தான் பேய் என்கின்றனர். எது எப்படியாகிலும் தீயதைப் பற்றி அச்சம் இருப்பது நல்லதே.
வாசகர்களின் கருத்தை அறியவும் ஆவல். இதற்காக எனது தொடர்பு முகவரியையும் கொடுத்திருக்கிறேன். பலரும் எனது கட்டுரைகளை, என்னுடைய பெயரில்லாமல் , அவர்கள் எழுதியது போல, பல இடங்களில் வெளியிட்டுள்ளதால், நான் எழுதிய தேதியையும், கட்டுரைகளின் வரிசை எண்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் தந்திருக்கிறேன் . படித்து மகிழுங்கள் .உங்கள் கருத்துக்களை எழுத மறவாதீர்கள்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஆகஸ்ட் 2022, லண்டன்
1.பேய்களை விரட்ட வெண் கடுகு!!
Research Article No.1745; Date: - 24 March, 2015
(வெண்கடுகு = ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)
ஆ சேது ஹிமாசல பர்யந்தம்
– என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?
பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.
வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.
ஆரிய-திராவிடப்