Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Silambu Olikkum Sinthanaigal
Silambu Olikkum Sinthanaigal
Silambu Olikkum Sinthanaigal
Ebook242 pages1 hour

Silambu Olikkum Sinthanaigal

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Thavathiru Dhayananda Chandrasekaran is the head of Thilagavathiar Thiruvarul Adheenam. He was born in 11.01.1966. He is the grandson of Thirumathi Muthulakshmi Muthusamy who is the elder sister of Annai Sivabrinda Devi. Annai Siva Brindadevi adopted him in 1970 before her Sanyasam (priesthood). Earlier he was known as Chandrasekaran.

After adoption, he was taken to Ilayathankudi (Tamilnadu) where Sri Mahaswami Sri Chandrasekarendra Saraswathi Swamigal visited the Gurusamathi, Head of Kanchi mutt for his blessings. After giving the blessings, swamigal, also prefixed "Dhayananda" to his name.

In June 7, 1970, his "ear piercing" ceremony (kathani vizha) was celebrated in the presence of Kunrakudi Adigalar, Thiru. Ukkadai Appavu Devar M.L.A and Pudukkottai Municipal Chairman Dharamaraj Pillai at Kumaranmalai, Near Pudukkottai.

He received his primary education at Thirukokaranam Government School, & High school studies at Govt Model School and Sri Brahathambal Higher Secondary School, Pudukkottai.

In 1988, he got his under graduate (BBA) degree from APSA College at Thiruppattur, Sivagangai District, Tamil nadu. After acquiring his degree, he worked for Sakthi finance Ltd, Coimbatore for few months. Then, he did his PG Diploma Course in Computer Science at Trichy. (Urumu Dhanalakshmi College, Kattur, Trichy). After completion of his PG Diploma, he was appointed as computer operator in the university computer center, Bharathidhasan University. Trichy (1992 - 1994) for 2 years.

In 1998, when he was planning to go abroad for employment, unfortunately, on 27, Nov 1998 Annai Sayi Matha suddenly attained God's feet. After Annai's demise, he inherited the holy seat of the Adheenam and took charge at the age of 32.

All well-wishers and devotees of the Adhenam were very happy about his succession. Many social organizations also felt that he was the appropriate person to be the successor of the Adheenam.

After assuming the charge, he arranged for the opening ceremony of Annai's potrait on December 13th , 1998 in a very grand manner. The main dignitaries of the functions were - TMC president and well-known Congress Leader, Thiru.GK. Moopanar, M.P. Minister Pulavar Chenguttuvan, Former Minister RM Veerappan, Dist. Collector Harmandhar Singh, and Rani Charu Bala Thondaiman.

After opening Annai's portrait, he also inaugurated and opened a library in Annai's name on July 12th , 1999 at Adheenam premises. The Karaikudi Adheenam Thava Thiru Ponnambala Adhigalar, Dr.M.S.Udhayamoorthy, former Vice Chancellor and Dr. S. Muthukumaran attended the function.

He has arranged for various awards to be given away every year under the following categories:

In memory of Annai's services to society cash award and silver medalsare given to those who work towards the development of Tamil culture & literature. Every year on the occasion of Gurupooja, 'Annathanam' is given for all the people at annai's samathi.

Dr.Muthulaksmi Reddi award (first woman doctor in India and a social reformer) to social organizations that are doing services for the upliftment of the poor people and women's development. On the occasion of her birthday anniversary, sewing machines are donated to poor women and aged social workers are felicitated for his/her services to the society. In memory of her he founded a primary school in 2003. Thirumuraigal Recitation competitions are held for school students once in every quarter. Silver medals and certificates are awarded to winner and all the participants.

'Thilagavathiar Thiruvarul Adheena Cheithi Madal' – which is the periodical of the Adheenam has been published and Edited by him since Jan 2006.

He also organizes a function every year on the eve of pongal at Adheenam premises to acknowledge & felicitate the farmers who are the backbone of the society. During that occasion, group of farmers are selected from the field and a

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119402161
Silambu Olikkum Sinthanaigal

Read more from Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

Related to Silambu Olikkum Sinthanaigal

Related ebooks

Reviews for Silambu Olikkum Sinthanaigal

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Silambu Olikkum Sinthanaigal - Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

    http://www.pustaka.co.in

    சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள்

    Silambu Olikkum Sinthanaigal

    Author:

    தவத்திரு தயானந்த சந்திரசேகரன் சுவாமிகள்

    Thavathiru Dhayanandha Chandrasekara Swamigal

    For more books
    http://www.pustaka.co.in/home/author/thavathiru-dhayananda-chandrasekara-swamigal

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள்

    கட்டுரைத் தொகுப்பு

    அணிந்துரை

    அருட்செல்வர்.பத்மபூஷண் டாக்டர். நா. மகாலிங்கம்

    தலைவர், சக்திகுழுமம், சென்னை.

    மணியாரத்தின் மாட்சி

    திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் தவத்திரு தயானந்த சந்திரசேகரன், ஆதீனப் பெருமைக்குப்புகழ் சேர்க்கும் வகையில் அவ்வப்போது கருத்தரங்குகளை நடத்தி, அறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுகின்ற நற்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

    சமய ஆதீனங்கள், இலக்கியப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அரிய நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடுவதை, நான் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

    திருவாவடுதுறை,தருமபுரம்,திருப்பனந்தாள் ஆதீனங்கள் தமிழ்ப் பயிற்சிக்கும், சமய சாத்திரங்களின் நுட்பங்களைப் பரப்புவதற்கும், பேருதவி செய்ததையும், டாக்டர் உ.வே.சா. இலங்கை ஆறுமுக நாவலர், மகாவித்வான் தண்டபாணி தேசிகர் முதலியோர் நன்றியோடு போற்றினர்.

    சமய வளர்ச்சிக்கும்,தமிழ் மொழி வளர்ச்சிக்கும், புலவர் பெருமக்கள் தொண்டு செய்யத்தூண்டும் முயற்சியின் விளைவாகவே நல்ல நூல்கள் வெளிவந்துள்ளன.

    இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் அமைந்த சிலப்பதிகாரம், செந்தமிழுக்கு அமைந்த தனிப் பெருங்காப்பியமாகும். தமிழகத்தின் வரலாற்றுக்கும், வாழ்வியலுக்கும், கலை, பண்பாட்டுச் செறிவிற்கும் களஞ்சியமாகச் சிலப்பதிகாரம் அமைகிறது.

    சேர நாட்டு அரசராகிய இளங்கோவடிகள், இசை, ஆடல் நுட்பங்களையும், கற்றறிந்ததோடுஅரசியலையும் ஒருபால் சாராமல் ஆழமாக வரைந்திருப்பதை அனைவரும் அறிவர். சிலப்பதிகாரத்தில் சமுதாயம், அரசியல், பண்பாடு, சமயப்பொதுமை,பெண்ணியம் என்ற ஐந்து பெரும் பிரிவுகளில் 14 கட்டுரைகளைக் கொண்ட இந்த தொகுப்புநூலை, சிலம்பு ஒலிக்கும் சிந்தனைகள் என்ற பெயரில் திலகவதியார் திருவருள் ஆதீனம் வெளியிடுவதைப் பாராட்டி மகிழ்கிறேன்.

    'நெஞ்சைஅள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்ற மகாகவி பாராதியாரின் பாராட்டுரைக்கேற்ப, மணியாரத்தில் ஒலிக்கும் சிந்தனைகளைப் பேராசிரியர்கள் கட்டுரைகளாக் எழுதியுள்ளனர்.

    திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் தொண்டும், தமிழ்ப் பணியும் தொடர்ந்து சிறந்தோங்கி வளர, எல்லாம்      வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளை நினைந்து வாழ்த்துகிறேன்.

    நா. மகாலிங்கம்

    பொருளடக்கம்

    அ. சிலப்பதிகாரத்தில் சமுதாயம்

    1. சிலப்பதிகாரத்தில் தமிழ்ச் சமுதாயம் - முனைவர். ச.வே. சுப்பிரமணியன்,

    2. சிலப்பதிகாரம் காட்டும்நாடு, நகர வளங்கள் - முனைவர். மு. பழனியப்பன்

    ஆ. சிலப்பதிகாரத்தில் அரசியல்

    3. சிலப்பதிகாரத்தில் அரசியல் – அரசன் பேராசிரியர் - முனைவர். அய்க்கண்

    4. சிலப்பதிகாரத்தில் குடி - முனைவர் மறைமலை இலக்குவனார்

    5. சிலப்பதிகாரத்தில் சுற்றம் - பேராசிரியர் கு. தயாநிதி

    இ. சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக் கூறுகள்

    6. சிலப்பதிகாரத்தில் கல்வி - தமிழாகரர். தெ. முருகசாமி

    7. சிலப்பதிகாரத்தில் சான்றாண்மை - புலவர். சீனு. இராமச்சந்திரன்

    8. சிலப்பதிகாரத்தில் கலைகள் - பேராசிரியர் மா.வைத்தியலிங்கன்

    உ. சிலப்பதிகாரத்தில் சமயப் பொதுமை

    9. சிலப்பதிகாரத்தில் சைவம் - முனைவர். சி. சேதுராமன்

    10. சிலப்பதிகாரத்தில் சமணம் - முனைவர். மு. பழனியப்பன்

    ஊ. சிலப்பதிகாரத்தில் பெண்ணியம்

    11. சிலப்பதிகாரத்தில் கண்ணகி - முனைவர் ந.விஜயசுந்தரி

    12. சிலம்பில் கவுந்தியடிகள்-ஒருபார்வை - முனைவர்.கு.ப. அழகம்மை

    13. சிலம்பில் கோப்பெருந்தேவி - முனைவர். சி. சேதுராமன்

    14. சிலப்பதிகாரத்தில் மாதவி தமிழாகரர் தெ. முருகசாமி

    சிலப்பதிகாரத்தில் தமிழ்ச் சமுதாயம் முனைவர். ச.வே. சுப்பிரமணியன்,

    நிறுவனர்-மதிப்புறு இயக்குநர், உலகத் தமிழ் இயக்ககம், தமிழுர்,

    சிலம்பின் நோக்கம்

    சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியம். முதன்மையான காப்பியம். முத்தமிழ்க்காப்பியம். முத்தமிழ் நாட்டை முழுத்தமிழ் நாடாக்க முயன்ற காப்பியம்.

    சிலப்பதிகாரம் போன்ற ஒரு காப்பியம், அது தோன்றிய காலத்தில் கி.பி.2-ஆம் நூற்றாண்டில் இந்திய மொழிகளிலோ, ஏன்-உலக மொழிகளிலோ தோன்றியதாகத் தெரியவில்லை.

    உலகம் முழுவதும் தெய்வங்களையும், தெய்வத் தொடர் உடைய இராமன் போன்ற பாத்திரங்களையும், அரசர்களையும், தலைவர்களாகக் கொண்டு, காப்பியங்கள் பாடப்பெற்ற காலத்தில், மனிதரைப் பற்றி, மனிதரின் வளர்ச்சி பற்றி, மனிதரின் முழுநிலை பற்றி, மனிதரின் வாழ்க்கையின் குறிக்கோள் பற்றிச் சிந்தித்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதனால் அதைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறினர்.

    ஒரு சாதாரணக்குடியில் தோன்றிய கண்ணகி, முழுநிலை அடைந்ததை, தெய்வநிலை எய்தியதைக் கூறும் காப்பியம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப் பெற்றதை விளக்கும் காப்பியம்.

    காப்பியம் என்ற சொல் காவியத்திலிருந்து வந்ததாகக் கூறுவதைக் காட்டிலும், காப்பு + இயம் என்று பிரித்து, மரபைக் காத்து, இயம்புவது, வெளிப்படுத்துவது என்ற நிலையில் பார்த்தால் இன்னும் தெளிவாகும்.

    தமிழ் மரபையும், பண்பாட்டையும் வாழ்க்கை முறையையும், தமிழ் இசை,தமிழ்க்கூத்துப் போன்றவற்றையும் காப்பாற்றி, நமக்கு அன்றும், இன்றும், என்றும் இருக்குமாறு, உணருமாறு செய்ததுதான் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு தமிழில் தோன்றவில்லை.

    ஏனைய காப்பியங்கள், மொழியால் தமிழ்க் காப்பியங்கள், மணிமேகலை பெளத்தம் பற்றியும், சிந்தாமணிஜைனம் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி போன்றவை சமய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் காப்பியங்களாகவும் அமைந்துள்ளது.

    இராமாயணம், பாரதம், வடமொழி இதிகாசங்கள் அவற்றைத் தழுவி எழுதப்பெற்ற காப்பியங்கள் சில. பெரியபுராணம் சைவசமயக் கொள்கைகளைக் கருத்துக்களை வெளிப்படுத்தும் காப்பியம்.

    தமிழுக்குரிய தனித்தன்மையுடைய காப்பியமாகச் சிலம்பு மட்டுமே உள்ளது. அதனால்தான் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றொரு மணிஆரம்படைத்த தமிழ்நாடு என்று பாடினான் பாரதி.

    சிலப்பதிகாரம் தமிழகத்தில் நடந்த பழங்கதை ஒன்றை எடுத்துக் கொண்டு எழுதப்பெற்ற காப்பியம். நடந்தது போன்று உணர்வைப் படிப்போருக்குத் தோற்றுவித்தால்தான் காப்பியம் மனதில் நிற்கும். ஈடுபாடு ஏற்படும். அதனால் அந்நிலையைத் தோற்றுவித்தார் அடிகள். சில செய்திகள் நடந்தும் இருக்கலாம். எல்லாச் செய்திகளும் வரிக்கு வரி நடந்தன என்று கூற இயலாது. சிலப்பதிகாரத்தின் படி,

    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்

    உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூ உம்

    என்ற மூன்று கூறப்பெற்றாலும் அவை நடப்பதாகக் காப்பியத்தில் காட்டப் பெற்றாலும், அவை மட்டுமே அடிகளின் நோக்கமன்று. சிலம்பு முழுவதும் உள்ளுறைப் பொருள் மிக்கது.

    1. சிலம்பின் முதல்நோக்கம் மனிதத்தை முழுநிலைப்பெறச் செய்வது தான். மனிதம் தெய்வநிலை அடைதல் வேண்டும். கண்ணகியைத் தெய்வமாக்கித் தன் எண்ணத்தை நிறைவேற்றுகிறார்.

    2.தமிழகத்தின் ஒற்றுமை இன்மைமிகுதியாக இருந்தது. மூவேந்தர்கள் தம்முள் பகைத்துக் கொண்டு மனவேறுபாடுகளுடன் போரிட்ட கதைகளைட் புறநானூற்றுப் பாடல்கள் பல நமக்குக் கூறுகின்றன. முதலில் தமிழ்வேந்தரைச் சேர்க்க வேண்டும். ஒற்றுமைப் படுத்தவேண்டும் என்று நினைத்தார் அடிகள். அதனால்தான் மூன்று காண்டங்களுக்கும் மூவேந்தர்களின் தலைநகர்களின் பெயரைத்தந்தார். சோழ அரசன் தலைநகரம் புகார், புகார்க்காண்டம், பாண்டிய அரசன் தலைநகரம் மதுரை. மதுரைக்காண்டம். சேர அரசன் வஞ்சி, வஞ்சிக்காண்டம் என.

    அடுத்து, மூவேந்தர் ஆளும் பகுதிகளில் கதை நடந்ததாகக் காட்ட விரும்பினார். அதனால் சோழ நாட்டில் பிறந்த கண்ணகி, பாண்டிய நாட்டில் கணவனை இழந்து, சேரநாட்டில் தெய்வநிலை அடைகிறாள்.

    3. தமிழ்நாட்டில் பக்தி இலக்கியம் தோன்றுவதற்கு முன்பு சமயப் பூசல்கள் இருந்தன. அதனால்தான், மெய் அறியா அமண்குண்டர். ஊத்தைவாயள்ச் சமணர் என்றெல்லாம் நாயன்மார் பாடினார்.

    இளங்கோ, சமய இணைப்பையும் எண்ணினார். அதனால் இந்து சமயத்தைச் சார்ந்த கண்ணகிக்கும், சைன சமயத்தைச் சார்ந்த கோவலனுக்கும் திருமணம் செய்து வைத்தார். மாதவியையும், மணிமேகலையையும் பெளத்தத் துறவிகளாக்கினார். இந்து, சைன, பெளத்த சமயங்கள் இணையவேண்டும் என்பதே நோக்கம். சைன சமயத்தைச் சேர்ந்த பெண்டிர், ஆண்பிறவி எடுக்காமல் மேலுலகம் செல்லமுடியாது என்பதை ஸ்ரீபுராணம் தெளிவாக உணர்த்தும். அந்நிலையில் கண்ணகியை மேலுலகம் அடைவதாகக் கூறுவதாலே அடிகள் சைனர் அல்லர் என்பது வெளிப்படும். இல்லையெனில் கவுந்தியடிகளைத் தெய்வநிலை எய்தியதாகக் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கவுந்தியடிகள் வாயாலேயே,

    கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

    பொற்புடை தெய்வம் யாம் கண்டிலமால் (15, 143-144)

    என்று பேச வைக்கின்றார்.

    இந்துசமயத்திலும், வைணவம், சாக்தம், கெளமாரம் என்ற மூன்றையும் இணைக்கிறார். ஆய்ச்சியர் குரவையில் திருமாலையும், வேட்டுவவரியில் கொற்றவையையும், குன்றக்குரவையில் முருகனையும் பாடி அவர்கள் வாயாலும் கண்ணகியைப் புகழச் செய்கிறார்.

    பக்திப் பாடல்களுக்கு வித்திட்டவர் இளங்கோவடிகள்தான். மேற்கூறிய மூன்று காதைகளிலும் அவர் பாடியுள்ள பாடல்கள் அதைத் தெளிவுபடுத்தும்.

    4. சமுதாயத்தில் சில புரட்சிகளையும் செய்தார். அவற்றுள் ஒன்று கணிகையாகிய மாதவியை உயர்குலத்தோனாகிய கோவலனுக்கு மணம் செய்து வைத்தது. 'மணமனைபுக்கு மாதவி தன்னொடு' என்று எழுதுவார். மாதவி, கோவலன் ஒருவனுடன்தான் வாழ்ந்தாள். ஒருவனுக்கு ஒருத்தியாகவே வாழ்ந்தாள். மணிமேகலையைப் பெற்றாள். கணிகையர் குலத்தை உயர்த்தியதோடு கணிகையர் குலத்தை அழிக்க வேண்டுமென்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. அதனால் கோவலன் இறந்த பின்பு, மாதவியையும், மணிமேகலையையும் பெளத்தத் துறவிகளாக்கி அவரைப் பொறுத்தவரையில் கணிகையர் குலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார்.

    5. மணம், புதுமணம், பிழைமணம்,நன்மணம் எனநான்கு வகையாகக் கூறுகிறார். பொதுநிலைத் திருமணத்தை மணம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். கண்ணகி, கோவலன் திருமணத்தைக் குறிப்பிடலாம். புதுமணம் என்ற தொடர் கணிகையோடு இணைவதை மட்டுமே குறிக்கிறது.

    'பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து' என்பதைச் சான்றாக்கலாம். இது போன்று கோவலன் மாதவி இணைவைக் கூறவில்லை. உடல்மணம், பிழை மணமாகலாம். உயிர் இணைவு பிழை மணமாவதில்லை. நன்மணமாகின்றது. இதனைப் பெறுக நன்மணம் வீடு பிழைமணம் எனவே என்ற தொடரால் குறிப்பிடுகிறார். கோவலன், கண்ணகியரின் உடல் திருமணம் மங்கல வாழ்த்துப் பாடலில் நடைபெறுகிறது. குன்றக் குரவையில் இருவரும் தெய்வநிலையில் உயிர் இணைதலைக் குறிப்பிடுகிறார்.

    பொற்றொடி மாதர் கணவன் மணம் காணப்

    பெற்றியுடையது இவ்வூர்

    (சிலம்பு. 24, 25, 4-5)

    என்று குன்றக்குரவர் பாடுகின்றனர். இதைத்தான் நன்மணம் என்கிறார்.

    6. காதைத் தலைப்புகள் மிகச் சிறப்பாக அமைக்கப் பெற்றுள்ளன. அன்று முதல் இன்றுவரை சிலம்பு நின்று நிலவுகிறது. அதுவே மங்கலம் தான். மங்கல வாழ்த்துப் பாடல் கோவலன் கண்ணகி திருமணம். மனையறம் படுத்த காதை கோவலன் கண்ணகியர் எட்டாண்டு இல்லற வாழ்க்கை, மாதவி அரங்கு ஏறியது அரங்கு ஏற்று காதை, அந்திமாலைச் சிறப்புச் செய்காதை, சேர்ந்தவர் இன்பம், பிரிந்தவர் துன்பம், சிறு பொழுதிற்கு ஒரு காதை, பெரும் பொழுதிற்கு வேனில் காதை, மருதநிலமக்களின் வாழ்வையும், இந்திரவிழாவையும் காட்டுவது இந்திர விழவு ஊர் எடுத்த காதை. மாதவி கோவலன் கடல் ஆடிய காதை கடலாடு காதை. நெய்தல் நிலமக்களின் வாழ்க்கை, ஒழுகலாறுகள் பற்றி கூறுவது கானல்வரி. முழுவதும் நாட்டார் பாடல்கள். இன்றும் கடற்கரையில் அந்தப் பாடல்களை வேற்று வடிவங்களில் கேட்கலாம். மாதவியின் பிரிவுத் துன்பத்தைக் கூறுவதுவேனில் காதை, கண்ணகி கனவு காப்பியத்தில் முக்கிய இடம் பெறுகிறது. அதனால் கண்ணகி கண்ட கனவை உரைத்தது கனாத்திறம் உரைத்த காதை.

    உலகக் காப்பியங்களில் எல்லாம் கனவு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை, மேல்நாட்டுத்திறனாய்வாளர் C.M. Bowra தெளிவாக எடுத்தியம்புகிறார். அதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உரைத்தார் இளங்கோவடிகள். கண்ணகி வீட்டைவிட்டு மிகுதியாக வெளியில் சென்றதில்லை. மதுரை செல்லும் போதுதான் சோழநாட்டைப் பார்க்கிறாள். அதனால்தான் பத்தாவது காதை நாடுகாண் காதை.

    மதுரை சுடுகாடாக அவளுக்கும், மக்களுக்கும் அமையப் போவதென்பதை, மதுரைக்காண்ட முதல் காதைகயாகிய காடு காண் காதைத் தலைப்பாலேயே உணர்த்துகிறார். பாலை நில மக்களின் வாழ்க்கையும் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் கூறுவது வேட்டுவ வரி. கொற்றவையை வழிபடும் சாலினி வாய்மொழியாகக் கண்ணகியை,

    இவளோ கொங்கச் செல்வி, குடமலை ஆட்டி

    தென்தமிழ்பாவை, செய்ததவக் கொழுந்து

    ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

    திருமா மணி

    (சிலம்பு 12, 47-50)

    எனப் பாராட்டி, உலகம் இருக்கும் வரை கண்ணகியின் பெயர் இருக்கும். கலங்கரை விளக்குப் போன்று கற்பின் ஒளியாக வாழ்வாள் என்பதை, தென்தமிழ்ப்பாவை உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்ற சொற்றொடர்களால் குறிப்பிடுகிறார். பின்பு மதுரைக்குப் புறப் பகுதியில் தங்குகின்றனர். புறஞ்சேரி இறுத்த காதை, கோவலன் முதலில் சென்று மதுரையைப் பார்த்து வருகிறான். முக்கியமாகச் சிலம்புநவமணிகளாலும், சிறந்தபொன்னாலும் செய்யப்பெற்றது. அதனால் நவமணிகளின் கடைத் தெருவையும், பொன் விற்பனை செய்யும் வீதியையும், பொது நிலையில் பெரும் பொழுதுகள், கார், கூதிர், முன்பணி, பின்பனி, இளவேனில், முதுவேனில், இக்காலங்களில் மதுரை மக்கள் வாழும் வாழ்க்கையையும் படம் பிடித்துக் காட்டுகிறார் ஊர்காண் காதையில். கவுந்தியடிகள் கண்ணகியையும், கோவலனையும் மாதவியிடம் அடைக்கலம் தருகிறாள் அடைக்கலக்காதையில். ஆயர் சேரியிலிருந்து மதுரைநகர் சென்று. சிலம்பை விற்க முயன்றபோது, பொற்கொல்லன் சூழ்ச்சியால் கொலைப்படுகிறான் கோவலன். கொலைக்களக்காதை. மனிதம் பொதுநிலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1