Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maathar Kula Manikkam
Maathar Kula Manikkam
Maathar Kula Manikkam
Ebook190 pages1 hour

Maathar Kula Manikkam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Thavathiru Dhayananda Chandrasekaran is the head of Thilagavathiar Thiruvarul Adheenam. He was born in 11.01.1966. He is the grandson of Thirumathi Muthulakshmi Muthusamy who is the elder sister of Annai Sivabrinda Devi. Annai Siva Brindadevi adopted him in 1970 before her Sanyasam (priesthood). Earlier he was known as Chandrasekaran.

After adoption, he was taken to Ilayathankudi (Tamilnadu) where Sri Mahaswami Sri Chandrasekarendra Saraswathi Swamigal visited the Gurusamathi, Head of Kanchi mutt for his blessings. After giving the blessings, swamigal, also prefixed "Dhayananda" to his name.

In June 7, 1970, his "ear piercing" ceremony (kathani vizha) was celebrated in the presence of Kunrakudi Adigalar, Thiru. Ukkadai Appavu Devar M.L.A and Pudukkottai Municipal Chairman Dharamaraj Pillai at Kumaranmalai, Near Pudukkottai.

He received his primary education at Thirukokaranam Government School, & High school studies at Govt Model School and Sri Brahathambal Higher Secondary School, Pudukkottai.

In 1988, he got his under graduate (BBA) degree from APSA College at Thiruppattur, Sivagangai District, Tamil nadu. After acquiring his degree, he worked for Sakthi finance Ltd, Coimbatore for few months. Then, he did his PG Diploma Course in Computer Science at Trichy. (Urumu Dhanalakshmi College, Kattur, Trichy). After completion of his PG Diploma, he was appointed as computer operator in the university computer center, Bharathidhasan University. Trichy (1992 - 1994) for 2 years.

In 1998, when he was planning to go abroad for employment, unfortunately, on 27, Nov 1998 Annai Sayi Matha suddenly attained God's feet. After Annai's demise, he inherited the holy seat of the Adheenam and took charge at the age of 32.

All well-wishers and devotees of the Adhenam were very happy about his succession. Many social organizations also felt that he was the appropriate person to be the successor of the Adheenam.

After assuming the charge, he arranged for the opening ceremony of Annai's potrait on December 13th , 1998 in a very grand manner. The main dignitaries of the functions were - TMC president and well-known Congress Leader, Thiru.GK. Moopanar, M.P. Minister Pulavar Chenguttuvan, Former Minister RM Veerappan, Dist. Collector Harmandhar Singh, and Rani Charu Bala Thondaiman.

After opening Annai's portrait, he also inaugurated and opened a library in Annai's name on July 12th , 1999 at Adheenam premises. The Karaikudi Adheenam Thava Thiru Ponnambala Adhigalar, Dr.M.S.Udhayamoorthy, former Vice Chancellor and Dr. S. Muthukumaran attended the function.

He has arranged for various awards to be given away every year under the following categories:

In memory of Annai's services to society cash award and silver medalsare given to those who work towards the development of Tamil culture & literature. Every year on the occasion of Gurupooja, 'Annathanam' is given for all the people at annai's samathi.

Dr.Muthulaksmi Reddi award (first woman doctor in India and a social reformer) to social organizations that are doing services for the upliftment of the poor people and women's development. On the occasion of her birthday anniversary, sewing machines are donated to poor women and aged social workers are felicitated for his/her services to the society. In memory of her he founded a primary school in 2003. Thirumuraigal Recitation competitions are held for school students once in every quarter. Silver medals and certificates are awarded to winner and all the participants.

'Thilagavathiar Thiruvarul Adheena Cheithi Madal' – which is the periodical of the Adheenam has been published and Edited by him since Jan 2006.

He also organizes a function every year on the eve of pongal at Adheenam premises to acknowledge & felicitate the farmers who are the backbone of the society. During that occasion, group of farmers are selected from the field and a

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580119402606
Maathar Kula Manikkam

Read more from Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

Related to Maathar Kula Manikkam

Related ebooks

Reviews for Maathar Kula Manikkam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    AN excellent book with some rare pictures of dr.muththulakashmi Reddi ,

    பெண்களை இழிவுப்படுத்தும் அமைப்பாக
    இருந்து வந்த தேவதாசி முறையை ஒழிக்க
    வேண்டும், அதற்குச் சட்டம் வேண்டும் என்ற டாக்டர்
    அம்மையாரின் திட்டத்திற்கு, சட்டமன்றத்தில் தீரர்
    சத்தியமூர்த்தி அவர்கள், எதிர் வழக்கிட்டுக் கடும்
    ஆட்சேபம் செய்து, அந்த முறை சமூகத்தில் இருக்க
    வேண்டும் என்று வாதிட்டமைக்கு அம்மையார்
    கடும் பதிலடிகொடுத்ததை யாவரும் அறிவர். அதே
    சமயத்தில் தீரர் சத்தியமூர்த்தி தியாகத்திற்கும்,
    தொண்டிற்கும் பெரும் மதிப்பும், மரியாதையும்
    கொடுத்தார்கள்.
    "நான் பிறந்த ஊராகிய புதுக்கோட்டையைப் பற்றி
    நினைப்பதென்றாலே, எனக்கு ஓர் பெருமிதம்
    உண்டாகிறது. தாய் நாட்டின் சேவைக்காகவும்,
    சமூக நலச் சேவைக்காகவும், என்
    போன்றவரையும், காலஞ்சென்ற ஸ்ரீ
    சத்தியமூர்த்தி போன்றவரையும், டாக்டர்
    ராமகிருஷ்ணன், டாக்டர் ஸ்ரீனிவாஸராவ், ஸ்ரீமதி
    நல்லமுத்து ராமமூர்த்தி, புரொபசர் சாமிநாதன்
    அவர்கள், தகப்பனார் போன்றவர்களையும்,
    பெற்றெடுத்தது புதுக்கோட்டைதான் என்று
    கூறுவது மிகையாது. நாங்கள்,
    புதுக்கோட்டையில் ஆரம்ப, உயர்தரக்கல்வி
    பயின்று, வெளியூர்க்கு மேற்படிப்புக்காகச்
    சென்று, பல அரசியல்வதிகளாகவும், சமூக
    சேவர்களாகவும், வைத்திய நிபுணர்களாகவும்,
    சட்ட நிபுணர்களாகவும் இன்றைய நிலையில்
    இருந்திருக்கிறோமென்றால் இந்த மங்காத புகழ்
    புதுக்கோட்டையைச் சாரும். அந்த நாளிலே
    ஸ்திரீகள் கல்வி பயிலுவது என்பது அசாத்யமான
    காரியம். எத்தனையோ இடையூறுகளுக்கு
    இடையே கல்வி பயின்று முன்னுக்கு வர
    நேர்ந்தது. சமூக சேவை, மாதர் நலம், குழந்தை
    பராமரிப்பு, பெண்கள் கல்வி, ஓட்டுரிமை,
    அனாதை விடுதிகள், தாய் சேய் விடுதிகள், கிராம
    வைத்தியசாலை போன்ற பணிகள் இன்றைய
    நாட்டின் முக்கியப் பிரச்சனையாக ஒளி பெற்று
    நிற்கின்றனவென்றால், இவ்வெண்ணங்கள் என்
    மனத்திலே எழுச்சியுறச் செய்ததும்,
    அடிகோலியதும் புதுக்கோட்டை ஸ்தலமேயாகும்.
    புதுக்கோட்டையிலே கல்வி பயின்று, மேல்
    வகுப்பு பரீட்சைகளில் தேறி அநேகர் வெளி
    வந்திருக்கின்றனர்.........”
    - அன்னை சாயிமாதா சிவபிருந்தாதேவி
    அவர்களுக்கு, ஏப்ரல் 4, 1957 ஆம் ஆண்டு, டாக்டர்
    அம்மையார் அவர்கள் எழுதிய கடிதத்தின் மூலம்,
    மண்ணின் பெருமையையும், தியாகி
    சத்தியமூர்த்தி அவர்கள் போன்ற
    அரும்பணியாற்றியவர்களை மதிக்கின்ற
    பண்பாட்டினையும் உணர முடிகிறது.
    ***

Book preview

Maathar Kula Manikkam - Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

http://www.pustaka.co.in

மாதர் குல மாணிக்கம்

Maathar Kula Manikkam

Author:

தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

Thavathiru Dhayananda Chandrasekara Swamigal

For more books

http://www.pustaka.co.in/home/author/thavathiru-dhayananda-chandrasekara-swamigal

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

வாழ்த்துரை

பாராட்டுரை

வாழ்த்துரை

பெண்ணினத்தின் விடிவெள்ளி

நூலாசிரியர் உரை

1. பிறப்பும்-வளர்ப்பும்

2. அம்மையாரின் கல்வி

3 திருமணம் – இல்லற வாழ்வு

4. மக்கட்பேறு

5. பிரிட்டன் பயணம்

6. இந்திய மாதர் சங்கத்தில் அம்மையார்

7. வட்டமேசை மாநாட்டில் அம்மையார்

8. இலங்கையில் டாக்டர் அம்மையார்

9. காந்தியடிகளும் - அம்மையாரும்

10. அவ்வை இல்லம்

11. புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை

12. அம்மையாரின் இயல்புகள்

13. டாக்டர் அம்மையார் எழுதிய நூல்கள்

14. மாதர் சங்கங்களின் பாராட்டு

15. டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் பெருமைப்படுத்திய முதல்வர்கள்

16. அம்மையாரின் நினைவுகளைப் போற்றும் இடங்களும், நிகழ்ச்சிகளும்

17. அம்மையாரின் உயர்பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு

18. பாரதம் பெற்ற பத்மபூஷணம் சகோதரி சிவ பிருந்தாதேவி

***

வாழ்த்துரை

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் 125வது பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீன வளாக முகப்பில் 30.7.2010 அன்று அவரது திருவுருவச் சிலை திறப்புவிழா நடைபெறுவதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை மாதர்குல மாணிக்கம் பத்மபூசண் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி எனும் பெயரில் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள் படைத்துள்ள நூல் வெளியிடப்படுவது அறிந்து பெரிதும் மகிழ்கிறேன்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்த முதல் பெண்மணி, சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, ஆசியாவின் முதல் பெண்மணியாக மருத்துவக் கல்வி பயின்ற மாமணி, சட்டமன்ற மேலவை துணைத் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண்மணி எனும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர். இவர், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், குழந்தைத் திருமண முறை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றியதில் முக்கிய பங்காற்றி; மகளிர் நலம், குழந்தைகள் நலம் ஆகியவற்றுடன் சமூக நலனும் மேம்படப் பாடுபட்ட சிறந்த சமூகச் சீர்திருத்தவாதி; ஆதரவற்ற குழந்தைகளுக்காக, அவ்வை இல்லம், நாடெங்கும் புகழ் பதித்துள்ள அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் போன்ற பல்வேறு அமைப்புகளை நிறுவி ஆயிரக்கணக்கானோர் பயன்பெற வழிவகுத்த அருளாளர். அவரது சிறப்பையும், சீர்மையையும் போற்றி அவர் தொடங்கிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலைய விரிவாக்கத்திற்குத் தமிழக அரசின் சார்பில் நிலம் வழங்கிய நிகழ்வையும், அவர் புகழ் போற்றும் அரும்பணியாக ஏழை கர்ப்பிணிப் பெண்களின் நலனோம்பிட 1989 ஆம் ஆண்டில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம் தொடங்கி, 2006ல் அத்திட்ட நிதியுதவியை 6,000 ரூபாய் என உயர்த்தி, இலட்சக்கணக்கான ஏழைமகளிர் தொடர்ந்து பயன்பெற வழி வகுத்துள்ளதையும் நினைவுகூர்கிறேன்.

எளிய குடும்பத்தில் பிறந்தாலும் உழைப்பால், அறிவாற்றலால், ஆற்றிய அருந்தொண்டுகளால் உன்னதமான புகழ் குவித்துள்ள மாதர்குல மாதரசி டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்களின் வரலாறு கூறும் அரிய இந்நூலைப் படைத்துள்ள தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும், நல்வாழ்த்துகளும் உரித்தாகுக!

பெறுநர்

தவத்திரு தயானந்த சந்திரசேகரன்,

திலகவதியார் திருவருள் ஆதீனம்,

புதுக்கோட்டை- 622 001.

***

தலைமைச் செயலகம்

சென்னை - 600 009

மு.க. ஸ்டாலின்

துணை முதலமைச்சர்

நாள் 14/7/2010

வாழ்த்துரை

சமயப் பணிகளையும், சமுதாயப் பணிகளையும் மக்கள் பயன்பெறும் வகையில் ஆற்றி வருகின்ற தவத்திரு தயானந்த சந்திரசேகரன் அவர்கள், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலினை மாதர்குல மாணிக்கம் என்ற தலைப்பில் எழுதி, அந்நூலினை வெளியிடுகின்றார். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுக்கோட்டையில் நடுத்தர குடும்பத்தில் தோன்றி கல்வியாலும், உழைப்பாலும் உயர்ந்து பெரும் பட்டங்களையும், பதவிகளையும் பெற்று, மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஆவார்.

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பெண்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்தவர். நாட்டுப்பற்று மிக்கவர். பரந்த நோக்கம் கொண்டவர். தேவதாசி முறை ஒழிப்புக்குப் பெரும்பாடுபட்டவர்.

இந்தியாவில் மருத்துவப்பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் ஆவார். அவ்வை இல்லத்தை நிறுவி ஆதரவற்ற பெண்களுக்கு காப்பகம் அமைத்துள்ளார். அவரது முயற்சியின் விளைவாக உலகப் புகழ்பெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்டது. குழந்தை திருமணத்தை எதிர்த்தார். பெண்களுக்கு வாக்குரிமை கோரியும், அவர்களின் சொத்துரிமைக்காகவும் போராடியவர்.

உலகிலேயே முதன்முதல் சட்டமன்றத்தில் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார். இவரது முயற்சியில் தேவதாசி ஒழிப்புச் சட்டம், பெண்கள் திருமண வயது உயர்த்தும் சட்டம் போன்ற பல சமூக சீர்திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ் மகளின் பெருமையினை பாருக்கே உணர்த்தும் வண்ணம் திகழ்ந்த முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்நூல், இளம் தலைமுறையினர் படித்துப் பயன்பெறவும், பாதுகாத்திடவும், இல்லந்தோறும் இருந்திடவும் தகுதிவாய்ந்த நூல் என வாழ்த்துகிறேன்.

பெறுநர்

தவத்திரு தயானந்த சந்திரசேகரன்,

1120, தஞ்சைச் சாலை, மச்சுவாடி,

புதுக்கோட்டை - 622 001.

***

வாழ்த்துரை

அருட்செல்வர். டாக்டர். நா. மகாலிங்கம்

மகாகவி பாரதியார் பாடியுள்ள பாஞ்சாலி சபதத்தில் ஒரு அற்புதமாக உவமை வரும், துரோபதையின் துகிலை உரிகிறான் துச்சாதனன். துரோபதை செயலற்றுக் கண்ணபிரானை அபயமாகப் புகுந்தாள். அவள் மேனியில் சுற்றிய துகில் துச்சாதனன் உரிய உரிய வளர்ந்தது. துச்சாதனன் கை சோர்ந்தது.

துகில் எப்படி வளர்ந்தது என்றால் பொய்யைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குத் துன்பம் வளர்வதுபோல் வளர்ந்தது. நல்ல புண்ணியசாலிகளின் புகழ் வளர்வதுபோல் வளர்ந்தது. பெண்மக்கள் ஆகிய தாய்க்குலத்தின் கருணைப் பெருக்கத்தைப்போல் வளர்ந்தது. கடல் அலைகள் சலசலத்து மேன்மேல் பெருகுவதுபோல் பெருகி வளர்ந்தது. பெண் மக்களுடைய பெருமையைப் போற்றிப் பாதுகாக்கும் பெரியோர்களிடம் செல்வம் பெருகுவதுபோல் பெருகிற்று.

மாதர் குலத்தைச் சற்று இறக்கிப் பேசுவது தொன்றுதொட்டு வரும் வழக்கம். ஆண்பிறப்பை உயர்த்திப் பேசுவதும், பெண்களுக்கு மோட்சமில்லை என்று சொல்வதும் பல உரிமைகளை மறுப்பதும் சாஸ்திரங்கள் என்று நாம் கொண்டாடும் நூல்களிலேயே உண்டு.

அதன் விளைவு: குடும்பத்தில் ஆடவனுக்குப் பெண் அடிமை நிலை. பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதில் சிக்கல்கள். வரதட்சிணைக் கொடுமை, அதன் விளைவால் மருமகள் கொலை. பெண் சிசுக்களை அழித்தல், பெண் பிறந்தால் அநாதரவாக விடுதல், பாலியல் வன்முறைக்குப் பெண்களே ஆளாதல், பெண்கள் விற்பனை செய்யப்படுதல், சொல்ல ஒண்ணாத கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்படுதல் இவைபோன்ற ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகின்றது பெண்குலம்.

பெண் குழந்தைகள் நல்ல உணவு உடை கொடுத்து வளர்க்கப்படுவதில்லை. இரண்டாம் பட்சமாக நடத்தப்படுகின்றனர். கல்வி தரப்படுவது இல்லை. குழந்தைத் தொழிலாளர்களில் பெண் குழந்தைகள் மிகுதி. கூலியிலும் அவர்களுக்கு ஏற்றத்தாழ்வான நிலை.

இந்த அவலநிலை சென்ற சில நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இடையிடையே சில பெரியோர்கள் மாதர் சுதந்திரத்துக்காகப் போரிட்டனர்.

இப்படிப்பட்ட சூழ்நலையில்தான் சகோதரி முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் தோன்றினார்.

கல்வி கற்பதற்கே போராட வேண்டியிருந்தது.

பெண்ணுக்கு அறிவைக் கொடுத்தான்-புவி

பேணி யளித்திடும் ஈசன்

மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல

மாதர்அறிவைக் கெடுத்தார்

என்று பாரதியார் கூறி வருந்துகிறார்.

புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று ஒரு பெண் கல்லூரியில் படிக்க வேண்டியிருந்தது. ஆடவர்கள் கண்ணில் படாதவாறு தனியிருக்கையில் அமர்ந்து படிக்க வேண்டியிருந்தது. பொருளாதாரப் பற்றாக்குறை. ஊரார் உறவினரின் இகழ்ச்சிக்கு மத்தியில் படித்து இந்திய நாட்டிலேயே முதல் மருத்துவராகப் பட்டம் பெற்று ஒளிர்ந்த முத்துலெட்சுமியால் பெண்குலம் பெருமையடைந்தது.

முத்துலெட்சு ரெட்டி அவர்கள் தாம் உயர்ந்து நின்றதில் நிறைவு அடையாமல் தம்மைப்போல் மற்ற மாதரும் உயர விரும்பியப் பணியாற்றினார்கள். அன்னிசென்ட் அம்மையார் தொடங்கிய மாதர் சங்கத்தைப் பக்கத்துணையாக இருந்து பணி செய்தார்கள்.

உலக மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். திருமணக் கொடுமைகள், பர்தா முறையை எதிர்த்தார்கள். இளம் விதவைகள் மறுமணம் செய்யும் உரிமையை வற்புறுத்தினார்கள். சிசு மரணத்தைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வற்புறுத்தினார்கள். தமிழகத்தில் காந்தி கிராமம் அமைய சவுந்தரம் அம்மையாருக்குப் பெரிதும் துணை நின்றார்கள்.

மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம்மையார் அதன் துணைத்தலைவராகவே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

கல்விப் பணிகளில் ஈடுபாடு கொண்டு பல திருத்தங்களைக் கொண்டு வந்தார்கள் அம்மையார்.

முத்துலெட்சுமி ரெட்டியவர்களின் தலையாய பணியாகப் பேசப்படுவது தேவதாசி ஒழிப்புச் சட்டம். சநாதனிகளின் வாயை அடைத்து வெற்றிகரமாக இச்சட்டம்

Enjoying the preview?
Page 1 of 1