Mayangoli Manithargal
By Dr. Devi
()
About this ebook
இந்த பிரபஞ்சத்தில் நடந்த ஒன்றை, இந்த உலகம் வேறு கோணத்தில் பார்த்த ஒன்றை, என் கற்பனையில் கோணம் மாற்றி இப்படித்தான் இருந்திருக்கும் என்பதுவாய் எழுதப்பட்டது தான் இந்த ‘மயங்கொலி மனிதர்கள்’. இந்தக் கவிதைச் சுற்றுலாவிற்கு நாமும் செல்வோமா? வாருங்கள் வாசிப்போம்...!
Related to Mayangoli Manithargal
Related ebooks
Engey En Mazhai Kaadugal? Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Urimai Thareer! Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Mudiyatha Mugavarigal Rating: 0 out of 5 stars0 ratingsMaanidar Padhitha Kaaladi Suvadugal Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsAlaiyadum Ninaivugal Rating: 0 out of 5 stars0 ratingsOoradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Vizhigalai Thira... Rating: 0 out of 5 stars0 ratingsEnnattavarkkum Iraiva Pottri! Rating: 0 out of 5 stars0 ratingsTamizhiyal Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsMundhirikaattu Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsOrayiram Meengalum Ottrai Kokkum Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Varudum Vizhuthu... Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Poove Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Paandimaadevi - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsOru Muraithan Varum Rating: 0 out of 5 stars0 ratingsEn Kanavugal... Un Kaaladiyil... Rating: 0 out of 5 stars0 ratingsPanaiyolai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mayangoli Manithargal
0 ratings0 reviews
Book preview
Mayangoli Manithargal - Dr. Devi
https://www.pustaka.co.in
மயங்கொலி மனிதர்கள்
Mayangoli Manithargal
Author:
மருத்துவர் தேவி
Dr. Devi
For more books
https://www.pustaka.co.in/home/author/dr-devi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
மன விசாலமும் மன விலாசமும்
பாரதியின் பாட்டு மகள்
என்னுரை
ஆதி மனிதன்
மனிதம் மறந்த நேரத்தில்
மனிதப் பண்புகளில் முறைபாடு
நாகரீக வளர்ச்சியின் ஆரம்பம்
நாகரீக வளர்ச்சியின் நன்மைகளைச் சொல்லி...
கிராமம் உருவான விதம்
வளர்ச்சிகள்
வளர்ச்சி தந்த விபரீதம்
விடையறியும் வினாக்கள்
ராசா ராணி தோற்றமும் வாழ்க்கை முறையும்
அரசவையின் நீதி வழுவா நிலையும் அரசர்களின் சிறப்பும்
பிறன்மனை நோக்கா கட்டளைகள் பிறப்பித்தான்...
அரசகால அருந்தவங்களால் விளைந்த நன்மைகள்
காதல் கதை அன்று
அரசகாலக் காதல்
கப்பம் கட்ட காரணம் அதனால் சந்தித்த இன்னல்கள்...
சந்தை பல வளங்களால் அபகரிக்கும் ஆசை
மக்களாட்சி காலம்
மக்களாட்சி அரசியல்
மக்களாட்சி கல்வி முறை
நவீன கால விழாக்கள்
நவீனகால பக்திநிலை
மக்களாட்சி பொழுது போக்குகள்
மக்களாட்சி விளையாட்டுகள்
நவீனகால அறிவியல் வளர்ச்சி
மக்களாட்சி போக்குவரத்து
நவீனகால தொழில்கள்
நவீனகால உணவுமுறை
நவீன கால கட்டிடங்கள்
நவீனக் கால காதல்
நவீன கால சமூக நிலை
வளரும் காலம்
மன விசாலமும் மன விலாசமும்
11தற்கால மனிதனாகக் கற்கால மனிதன் இருந்த ஆதிநாளில் துவங்குகிறது, மயங்கொலி மனிதர்கள்
கற்கால ஆட்சிக் காலத்திலிருந்து மக்களாட்சிக் காலம் வரைக்கும் ஒரு கவிதைச் சுற்றுலா செல்கிறார் மருத்துவர் தேவி. அவரின் மன ஓட்டத்தின் அழகியல் படைப்பு தான் மயங்கொலி மனிதர்கள்.
மானுடவியல் வாசிப்பதற்குப் பல நூலகங்கள் சென்று வரலாம், பல நூறு புத்தகங்கள் வாசித்து வரலாம் அல்லது அவையெல்லாம் தவிர்த்து மயங்கொலி மனிதர்கள் வாசிக்கலாம். நாம் இன்றைக்கு வந்து நிற்கும் இந்தக் காலடித்தடத்தின் முதல் துவக்கம் எங்கே? எப்போது? எப்படி? இதெல்லாம் நமக்குக் கவித்துவமான அழகியலோடு புரிந்துவிடும்.
ஆதிமனிதனாக மனிதகுலம் இருந்த துவக்கப்பொழுது, அங்கே சூது இல்லை, வாது இல்லை, போட்டி இல்லை. பொறாமை இல்லை. எல்லா உயிரும் ஆருயிரான பொழுது அது எல்லா நிலமும் ஒருவருக்கான பொழுது, அது இயற்கையோடு இயைந்த பொழுது, இயற்கை நயந்து ஆசிர்வதித்தபொழுது.
மயங்கொலி மனிதனாக மாறுவற்கு முன்பு மனிதன் எப்படி இருந்தான்? மருத்துவர் தேவியின் கூர்த்த மதி இப்படி சொல்கிறது.
"காலுக்குச் செருப்பு போட்டதில்லை
தலைக்குக் கவசம் அணிந்ததில்லை
மலையேறி மூச்சு வாங்கவில்லை
மதிலேதும் கட்டியிருந்ததில்லை"
இதை வாசிக்கும் போது நதியின் சிலுசிலுப்பை நதியின் ஜில்லிப்பில் கால் நனைத்த சுகானுபவமாக மொழி செழித்துப் பாய்கிறது.
கொங்கு தேசத்திற்கே உரித்தான மெல்லின மொழி மருத்துவர் தேவியின் கண்ணிகளும் அந்தாதிகளுமான தோற்றம் கொண்ட கவிதை.
"மானுடவியலின் ஒவ்வொரு பக்கமாக,
மானுட சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமாக
கைவிரல் பிடித்து அழைத்துச்செல்கிறது.
மனிதகுலம் மையல் கண்டது, சமையல் கண்டது, நீதிமுறை கண்டது, காவல் துறை கண்டது, ஐம்பூதங்கள் கண்டது, ஆடை, வாகனம், இரும்பு, தங்கம் கண்டது. உலோகம் கண்டது, சாதி கண்டது அதனால் சறுக்கல் கண்டது என்று துவக்கத்தைச் சொல்கிறார். வளர்ச்சியைச் சொல்கிறார், சறுக்கலைச் சொல்கிறார் எல்லாமே சத்திய வார்த்தையில் சொல்கிறார்.
சறுக்கல் துவங்கிய புள்ளி எது என்பதை நான்கே வரிகளில்