Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vijayalakshmi Pandit
Vijayalakshmi Pandit
Vijayalakshmi Pandit
Ebook106 pages39 minutes

Vijayalakshmi Pandit

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகத்தில் பெண்களில் முன்னணியில் நிற்கும் மாதரசிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி ஒன்று அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. பணமோகமும், விளம்பரப்பித்தும், ஆடம்பர விருப்பமும் நிறைந்து விளங்கும் உல்லாசிகள் மேனா மினுக்கிகளுக்கு முதலிடம் கொடுக்கவில்லை; ஆடைகளை உதிர்த்துவிட்டு உடல் வெளிச்சம் போட்டு ஆடிமயக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை; சிங்காரச் சீமாட்டிகளின் பட்டியல் தயாரிக்கவில்லை. ஸ்ரீமதி எலினார் ரூஸ்வெல்டுக்கு முதல் ஸ்தானமும், ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இண்டாவது இடமும் அளிக்கப்பட்டிருந்தது அவர்கள் தேர்ந்து கொடுத்த பெயர்ப் பட்டியலிலே.

இதிலிருந்தே விஜயலக்ஷ்மி பெற்றுள்ள செல்வாக்கின், கெளரவத்தின், தன்மை நன்கு புரியும். மனிதரில் மாணிக்கம் எனப் புகழப்படும் ஜவாஹர்லால் நேருவின் தங்கை மாதர்களில் மணி என்பதில் சந்தேகமில்லை. அவளது வாழ்க்கை வரலாறு நேருவின் குடும்பக் கதையோடு இழைந்து கிடப்பது. நேரு குடும்பக் கதையோ இந்திய சரித்திரத்தோடு பின்னி வளர்ந்தது.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580146907332
Vijayalakshmi Pandit

Related to Vijayalakshmi Pandit

Related ebooks

Reviews for Vijayalakshmi Pandit

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vijayalakshmi Pandit - Vallikannan

    https://www.pustaka.co.in

    விஜயலக்ஷ்மி பண்டிட்

    Vijayalakshmi Pandit

    Author:

    வல்லிக்கண்ணன்

    Vallikannan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vallikannan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

    இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.

    பதிப்புரிமை அற்றது

    இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

    நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

    ***

    இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.

    CC-Zero-badge.svgCC-logo.svg
    Universal (CC0 1.0) Public Domain Dedication

    This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode

    No Copyright

    The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

    You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.

    ***

    This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

    ( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

    உள்ளடக்கம்

    அத்தியாயம்-1

    அத்தியாயம்-2.

    அத்தியாயம்-3

    அத்தியாயம்-4.

    அத்தியாயம்-5

    அத்தியாயம்-6.

    அத்தியாயம்-7

    அத்தியாயம்-8.

    அத்தியாயம்-9.

    அத்தியாயம்-10

    அத்தியாயம்-11.

    அத்தியாயம்-12

    அத்தியாயம்-13.

    அத்தியாயம்-14

    அத்தியாயம்-15.

    முன்னுரை

    உலகத்தில் பெண்களில் முன்னணியில் நிற்கும் மாதரசிகளின் பெயர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி ஒன்று அண்மையில் அமெரிக்காவில் நிகழ்ந்தது. பணமோகமும். விளம்பரப்பித்தும், ஆடம்பர விருப்பமும் நிறைந்து விளங்கும் உல்லாசிகள் மேனா மினுக்கிகளுக்கு முதலிடம் கொடுக்கவில்லை; ஆடைகளை உதிர்த்துவிட்டு உடல் வெளிச்சம் போட்டு ஆடிமயக்கும் சினிமா நட்சத்திரங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை; சிங்காரச் சீமாட்டிகளின் பட்டியல் தயாரிக்கவில்லை. ஸ்ரீமதி எலினார் ரூஸ்வெல்டுக்கு முதல் ஸ்தானமும், ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட்டுக்கு இண்டாவது இடமும் அளிக்கப்பட்டிருந்தது அவர்கள் தேர்ந்து கொடுத்த பெயர்ப் பட்டியலிலே.

    இதிலிருந்தே விஜயலக்ஷ்மி பெற்றுள்ள செல்வாக்கின், கெளரவத்தின், தன்மை நன்கு புரியும். 'மனிதரில் மாணிக்கம்' எனப் புகழப்படும் ஜவாஹர்லால் நேருவின் தங்கை மாதர்களில் மணி என்பதில் சந்தேகமில்லை. அவளது வாழ்க்கை வரலாறு நேருவின் குடும்பக் கதையோடு இழைந்து கிடப்பது. நேரு குடும்பக் கதையோ இந்திய சரித்திரத்தோடு பின்னி வளர்ந்தது. 'நம் நேரு' வாழ்க்கை வரலாற்றை அழகிய முறையில் வெளியிட்ட 'கலா மன்ற'த்தார் விஜயலக்ஷ்மியின் வரலாற்று நூலேயும் வசிகரமாகப் பிரசுரிக்க முன் வந்தது பொருத்தமான செயல் மட்டுமல்ல போற்றத் தகுந்த காரியமும் ஆகும். அவர்களுக்கு என் வாழ்த்தும் வணக்கமும் உரியன.

    இப்புத்தகத்தில் விஜயலக்ஷ்மி முதலியவர்களை 'அள்' விகுதியிட்டே குறித்திருக்கிறேன். பெண்ணை 'அவள்' என்பது கௌரவ குறையாகாது. 'அர்' விகுதி போட்டு பேசிவிடுவதால் மட்டுமே பெண்களை கௌரவித்தது ஆகிவிடாது. கவி பாரதியார் கருத்தும் இதுதான். அன்னிபெசன்டை 'அவள்' என்று குறிப்பிட்டு வந்தார் அவர். ஒருசமயம் யாரோ அதை ஆட்சேபித்து 'அவள்- இவள்' என்று சொல்லக்கூடாது என்று குறிப்பிடவும், பாரதியார் வெகுண்டார். உணர்ச்சியோடு 'அன்னிபெசன்ட்- அவள், அவள், அவள்தான். பெண்ணை அவள் என்று சொல்வோம் என்றார்'.

    பாரதி வரலாற்றில் காணப்படும் இந்த சம்பவத்தையே, இப்புத்தகத்தில் காணும் பிரயோகத்தை ஆட்சேபிக்கக் கூடியவர்களுக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

    சென்னை

    16, மார்ச் 1954

    வல்லிக்கண்ணன்

    அத்தியாயம்-1

    ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் எனும் உண்மை உலகெலாம் ஒளிவீசி ஓங்கி நிற்கும் காலம் இது. ஆண்களைப் போல் பெண்களும் அரும் பெரும் செயல்கள் புரிந்து இணையற்று விளங்கினர்கள் அந்தக் காலத்திலே. இதற்குச் சரித்திரத்தில் எவ்வளவோ சான்றுகள் உண்டு. இலக்கியத்திலே எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள.

    ஆனால், இடைக்காலத்தில் பெண்கள் தன்மான உணர்வு இழந்து, உரிமை இழந்து, ஆணினத்தின் அடிமையராய், அடுப்பங்கரைப் பூச்சிகளாய், படுக்கை அறைப் பாவைகளாய், மந்தமதியினராய், கண்ணிர் சிந்தும் சிலைகளாய், பிள்ளை உற்பத்தி இயந்திரங்களாய் ஒடுங்கிக் கிடந்தார்கள். ஒடுக்கப்பட்டுக் கிடந்தார்கள்.

    கால தேவனின் கையசைப்பினால் உலகம் எவ்வளவோ மாற்றங்களேப் பெற்றது. காடுகள் தோறும் மக்கள் உரிமை உணர்வு பெற்று உரிய போராட்டங்களிலே ஈடுபட்டார்கள். பெண் உலகமும் விழிப்புற்றது.

    பொங்கி எழுந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1