Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maamannan Rajarajan
Maamannan Rajarajan
Maamannan Rajarajan
Ebook129 pages49 minutes

Maamannan Rajarajan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சோழ மன்னர்களில் இன்றும் குறிப்பிட்டுச் சொல்கிற மன்னராகத் திகழ்பவர் ராஜராஜ சோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து நிரந்தரமாக வாழும் மன்னர். நிர்வாகத்திலும், நீதியிலும், பக்தியிலும் சிறந்து செழித்த மாமன்னர்.

கோயில்களில் கலையம் சங்களைப் புகுத்தி இந்திய தேசம் மட்டுமல்லாமல் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து என்று கிழக்காசியா வரை இன்றும் தன் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கும் ஒரே சோழ மன்னர். இறைவன் பசியால் வாடுவதை எவ்வாறு பொறுக்க மாட்டாரோ, அவ்வாறே அவரது குடிமக்களும் பட்டினியால் தவிப்பதை விரும்பவே மாட்டாதவராக வாழ்ந்த மனிதநேயத்தின் மொத்த உருவம் ராஜராஜன். இதனைப் பற்றியும் இன்னும் அதிகமான இவரது வீர தீரத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகம் பெரிதும் உதவும் என்று நம்புகிறேன்.

Languageதமிழ்
Release dateJul 9, 2022
ISBN6580156708666
Maamannan Rajarajan

Read more from Kundril Kumar

Related to Maamannan Rajarajan

Related ebooks

Related categories

Reviews for Maamannan Rajarajan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maamannan Rajarajan - Kundril Kumar

    http://www.pustaka.co.in

    தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா-வில் தமிழ் முழக்கம்

    Thailand, Vietnam, Cambodia-vil Tamil Muzhakkam

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1.வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

    2. வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை!

    3 வியட்நாமில் அகஸ்தியர், சிவன் சிலைகள் கண்டுபிடிப்பு

    4. கம்போடியாவில் சிவன், விஷ்ணு பாதங்கள்

    5. கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 1

    6. கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள்- பகுதி 2

    7. கம்போடியக் கல்வெட்டுகளில் அழகிய கவிதைகள் - பகுதி 3

    8. கம்போடியாவில் கந்தன், காமராஜ்!

    9. கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்!

    10. கம்போடியா – காஞ்சீபுரம் தொடர்பு

    11. சஹஸ்ரலிங்கம்: கர்நாடகா-கம்போடியா அதிசய தொடர்பு

    12. கம்போடிய மொழியில் தமிழ், சம்ஸ்கிருதச் சொற்கள்

    13. தாய்லாந்தில் தமிழ் பொங்கல் பண்டிகை

    14. தாய்லாந்தில் வேஷ்டி கட்டும் தமிழ் பிராஹ்மணர்கள்!

    15. அனுமார் பற்றிய விநோதக் கதை

    16. இரண்டே கோவில்களில் 304 ராமர் சிலைகள்!

    17. டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள்

    18. தாய்லாந்தில் 44 ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள்!

    19. தாய்லாந்தில் ஒரு அதிசயக் கோவில்

    20.‘சீதைக்கு ராமன் சித்தப்பா’! தாய்லாந்து ராமாயணம்-1

    21. கடலுக்கு அடியில் ராவணன் உயிர்!! தாய்லாந்து ராமாயணம்-2

    22. இலங்கையில் பயங்கரக் கலகம் – சுவையான கதை! தாய்லாந்து ராமாயணம்-3

    23. சீதையைப் பார்த்து சிரித்த குரங்குகள்!

    24. ராமனின் கலர் என்ன? அனுமனின் கலர் என்ன?

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார் . 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் இணைந்து செயல்பட்டார். 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். 19 தமிழ் புஸ்தகங்களையும் 6000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார் . லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ .சந்தானம் (V.SANTANAM) , மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார் .

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    ***

    லண்டன் சுவாமிநாதன் எழுதிய நூல்கள்

    1.இதழியல்

    2. வினவுங்கள் விடைதருவோம் (பி.பி.சி.தமிழோசை கேள்வி பதில் நிகழ்ச்சி)

    3.தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

    4.வால்மீகி முதல் வள்ளுவர் வரை

    5.தொல்காப்பியர் முதல் பாரதி வரை

    6.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

    7.முப்பது கட்டுரைகளில் இந்து மத அதிசயங்கள்

    8.கம்ப ராமாயணத்தில் நாம் எதிர்பார்க்காத அதிசய தகவல்கள்

    9.யுரேனியம், வெள்ளி, அலுமினியம் பற்றிய சுவையான கதைகள்

    10.ரிக் வேதத்தில் தமிழ் சொற்களும் அதிசயச் செய்திகளும்

    11.பெண்கள் வாழ்க

    12.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

    13.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? ( 28 ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

    14. உலகெங்கிலும் பாம்பு வழிபாடு வரலாற்று விநோதங்கள்: 27 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

    15. எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

    16. தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

    17. தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

    18. ‘சுமேரியர்- இந்தியர் தொடர்பு’ (ஆராய்ச்சிக் கட்டுரைகள் )

    19. 'தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்'(current book)

    முன்னுரை

    'தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்' -என்ற தலைப்பிலுள்ள இந்த புஸ்தகத்தில் மூன்று தென் கிழக்காசிய நாடுகளில் இந்து மன்னர்கள் நடத்திய ஆட்சி பற்றிய சுவையான செய்திகள் உள்ளன. முதல் நூற்றாண்டிலிருந்து 1500 ஆண்டுகளுக்கு இந்துக்கள் கொடிகட்டிப் பறந்தனர். அவர்கள் கட்டிய கோவில்களும், எழுப்பிய கல்வெட்டுகளும் இன்றும் அதற்குச் சான்று பகர்கின்றன. தென் கிழக்காசிய நாடுகளின் பண்பாட்டிலும் மொழியிலும் இந்துக்கள் ஏற்படுத்திய தாக்கம், அழிக்க முடியாத சான்றுகளாகத் திகழ்கின்றன. ராமாயணமும் மஹாபாரதமும் எல்லா இடங்களிலும் உள்ளன. அகஸ்தியரின் சிலைகளையும், கவுண்டின்யனின் பெயரையும் எல்லா இடங்களிலும் காணமுடிகிறது.

    இந்த நூல் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, நான் எனது இரண்டு 'பிளாக்'குகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும் .2011-ம் ஆண்டு முதல் 2021 வரை எழுதிய கட்டுரைகளின் முதல் பகுதிதான் இது. கட்டுரைகளாக எழுதியதால் சொன்ன விஷயங்களே மீண்டும் வரக்கூடிய ஒரு குறைபாடு இருக்கும். இதன் மூலம் தமிழ் மக்கள் அறியாத பல புதிய விஷயங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன் .

    இந்துப் பண்பாட்டின் பெருமையை எடுத்துக்காட்ட தொடர்ந்து எழுதிய 24 கட்டுரைகள் தேதிகளுடனும், எனது பிளாக்கில் வெளியான எண்களுடனும் தரப்பட்டுள்ளன. படித்துப் பயனுறுமாறும் நம்முடைய மதத்தின், பண்பாட்டின் பெருமையை ஏனையோருக்கு எடுத்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.

    உங்கள் கருத்துக்களை எழுதுவதற்காக எனது ஈ மெயில் முகவரிகளையும் கொடுத்து இருக்கிறேன். அச்சடித்த புஸ்தகம் வேண்டுமாயின் எனக்கு எழுதவும் .

    அன்புடன்

    ச.சுவாமிநாதன், லண்டன் ஜூலை 2022

    தாய்லாந்து, வியட்நாம்,

    கம்போடியாவில் தமிழ் முழக்கம்

    1. வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய

    Enjoying the preview?
    Page 1 of 1