Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Illuminati
Illuminati
Illuminati
Ebook174 pages1 hour

Illuminati

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித சமூகத்தை வளப்படுத்துவதற்காக இரகசியமாகச் செயல்படுவதாக யாரேனும் கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? நல்லது செய்வதை நாடறியச் செய்ய வேண்டியதுதானே! அதை ஏன் ரொம்ப இரகசியமாகச் செய்ய வேண்டும்? இப்படித்தான் எண்ணம் பிறக்கும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த ஒரு குழு இன்று ஒளிந்து மறைந்து தனது நடவடிக்கைகளை இரகசியமாகச் செய்து வருகிறது.

இயற்கைப் பேரழிவுகளைக்கூட நடத்திடும் வீரியமும், சக்தியும் இவர்களிடம் உள்ளது என்பது நம்பமுடியாத உண்மை. இவர்களை ‘இல்லுமினாட்டி’ என்று அழைக்கிறார்கள். இவர்கள் செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகக் காணப்படுகிறது. எனவே உலக மக்களின் கண்கள் அனைத்தும் இந்த ஒற்றைக் கண் மீது பதிந்து கிடப்பதில் தவறு கிடையாது.

Languageதமிழ்
Release dateJul 23, 2022
ISBN6580156708911
Illuminati

Read more from Kundril Kumar

Related to Illuminati

Related ebooks

Reviews for Illuminati

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Illuminati - Kundril Kumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இல்லுமினாட்டி

    (இரகசிய அமைப்பு)

    Illuminati

    (Ragasiya Amaippu)

    Author:

    குன்றில் குமார்

    Kundril Kumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kundril-kumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. 77 பேர் படுகொலை

    2 புனித வீரர்கள் (நைட்ஸ் டெம்ப்ளார்)

    3 ஃப்ரீமேசன்

    4 இல்லுமினாட்டி

    5 அதிர்ச்சி சம்பவங்கள்

    6 பயங்கரச் செயல்கள்

    7 அசோகரின் இரகசிய அமைப்பு

    8 இறுதியாக

    என்னுரை

    மனித சமூகத்தை வளப்படுத்துவதற்காக இரகசியமாகச் செயல்படுவதாக யாரேனும் கூறினால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

    நல்லது செய்வதை நாடறியச் செய்ய வேண்டியதுதானே! அதை ஏன் ரொம்ப இரகசியமாகச் செய்ய வேண்டும்?

    இப்படித்தான் எண்ணம் பிறக்கும்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்படி வெளிப்படையாகச் செயல்பட்டு வந்த ஒரு குழு இன்று ஒளிந்து மறைந்து தனது நடவடிக்கைகளை இரகசியமாகச் செய்து வருகிறது.

    இயற்கைப் பேரழிவுகளைக்கூட நடத்திடும் வீரியமும், சக்தியும் இவர்களிடம் உள்ளது என்பது நம்பமுடியாத உண்மை.

    இவர்களை ‘இல்லுமினாட்டி’ என்று அழைக்கிறார்கள்.

    இவர்கள் செய்த நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகக் காணப்படுகிறது. எனவே உலக மக்களின் கண்கள் அனைத்தும் இந்த ஒற்றைக் கண் மீது பதிந்து கிடப்பதில் தவறு கிடையாது.

    ப்ரியங்களுடன்,

    குன்றில்குமார்

    1. 77 பேர் படுகொலை

    2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி.

    ஐரோப்பாவின் நார்வே நாட்டில் உட்டோயா என்னும் தீவு. இது அந்நாட்டுத் தலைநகர் ஆஸ்லோவில் இருந்தும் சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

    நார்வே நாட்டை ஆளும் லேபர் கட்சியின் இளைஞரணிப் பிரிவின் கோடை காலப் பயிற்சி ஒன்று வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

    பெருவாரியான கட்சி இளைஞர்கள் பங்கேற்ற அந்தப் பயிற்சி முகாமில் பாதுகாப்பும் பலமாகத்தான் இருந்தது. மாலை நேர வாக்கில் திடீரென்று துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.

    அனைவரும் மிரண்டு போய் ‘என்ன நடக்கிறது?’ என்று புரியாமல் குழப்பத்துடன் பரிதவித்தபோது...

    பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த காவலர் ஒருவர் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருந்தார்.

    சுதாரித்துக் கொண்ட இதர போலீசார் சடுதியில் அந்தக் காவலரைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க வழியின்றி அந்தச் சதிகாரனும் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

    ஆனால் அதற்குள் அவனது துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையானவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

    69!

    துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழக்காமல், அதே நேரத்தில் வலியால் துடித்துக் கொண்டிருந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 110. அவர்களை அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

    அதேநேரத்தில் திடீரென்று வெறி பிடித்தவர்போல கண்மூடித்தனமாகத் தாக்குதலை நடத்திய அந்தக் காவலரிடம் போலீஸ் பாணியில் விசாரணை நடத்தியபோது, இன்னுமொரு அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

    அதாவது

    அவன் போலீஸ் கிடையாது. போலீஸ் உடையை அணிந்து வந்த ஒரு தீவிரவாதி.

    அடுத்து இன்னுமொரு அதிர்ச்சித் தகவலையும் அவன் கூறினான். அதாவது _

    இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகத் தலைநகர் ஆஸ்லோவில் கார் ஒன்றை வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளான்.

    அதுவும் எங்கே தெரியுமா?

    நார்வே நாட்டின் பிரதமர் அலுவலகத்திற்கு வெகு அருகாமையில்!

    அந்தச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். 209 பேர் படுகாயமடைந்தனர்.

    யார் இவன்?

    எதற்காக இதுபோன்ற நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான்? இவனது நோக்கம் என்ன? ஏதாவது சித்த பிரமை பிடித்திருக்கிறதா?

    போலீசாருக்கு ஏகப்பட்ட குழப்பமான சந்தேகங்கள்.

    அவனைப் பிழிந்தெடுத்தார்கள்.

    அப்போது இன்னும் பயங்கரமான தகவலையும் அவன் வெளிப்படுத்தினான்.

    அவன் பெயர் ஆண்டர்ஸ் பெரிங் பிரேவிக். அவன் ஒரு பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவன். இந்தக் கொலைகளை மேலும் தொடர பயங்கரத் திட்டங்களும் உள்ளன. அதற்காக பிரத்யேகமாக கொலை செய்யப்பட வேண்டிய நபர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதில் ஹாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் இருந்தது கண்டு போலீசார் திடுக்கிட்டுப் போயினர்.

    அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள்....

    நடிகை ஏஞ்சலினா ஜூலி, மடோனா, பாடகி லேடி காகா, நடிகை ஹெய்தி கிளம், ஸ்கார்லட் ஜான்சன், ஜினத் பால்ட்ரோ... இவர்கள் அனைவருமே மேலை நாடுகளின் பிரபலங்கள்.

    இவர்களை ஏன் அவன் கொலை செய்ய வேண்டும்?

    அதற்கான காரணங்களையும் தனது ஆயிரத்து ஐநூறு பக்க இணைய தளக் குறிப்பில் பதிவு செய்திருந்தான்.

    நடிகை ஏஞ்சலினா மூன்று குழந்தைகளைத் தத்து எடுத்திருந்தார். அவர்கள் எத்தியோப்பியா, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு வேறு தேசத்து, இனக் குழந்தைகளைத் தத்தெடுத்தது அவர்களது அமைப்பின் கொள்கைப்படி மிகப் பெரிய குற்றம் என்று அவன் உறுதியாக உறுமினான்.

    அதேபோல பிரபல பாப் இசைப் பாடகி மடோனா இரண்டு குழந்தைகளை மலாவி நாட்டில் இருந்து தத்தெடுத்து இருந்தார். பாடகி லேடி காகாவோ, அமெரிக்கக் குடியுரிமை விதிகளை விமர்சனம் செய்கிற மாதிரியான பாடலை மேடைகளில் பாடிவந்ததைக் குற்றம் என்று சாடினான் அந்தப் பயங்கரவாதி பிரேவிக்.

    இதனிடையே பிரெவிக் சித்த சுவாதீனம் உள்ளவன் என மனோதத்துவ மருத்துவர்கள் தெரிவித்தனர். இவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், ‘கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் கற்பனையான எண்ணங்களைக் கொண்ட ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் இருந்தான்.

    அதேபோல யதார்த்தமான சூழல்களுடன் தொடர்பில்லாத அபத்தமான எண்ணங்களின் உலகில் அவன் வாழ்கிறான்’ என்று 243 பக்க அறிக்கையில் மருத்துவர்கள் விவரித்தனர்.

    ஒரே குழப்பம்!

    உண்மையிலேயே பிரெவிக் யார்?

    அவன் எந்த இயக்கத்தைச் சார்ந்தவன்?

    உண்மையாகவே மனநிலை பாதிக்கப்பட்டவனா?

    அவன் தனித்து இயங்கி வருகிறானா, அல்லது அந்த இயக்கத்தில் இன்னும் யாராவது இருக்கிறார்களா?

    குழப்பங்கள் இவ்வாறு நீடிக்க அவன் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் சுறுசுறுப்பாக நடந்து வந்தது.

    விசாரணையின்போது இன்னுமொரு திடுக்கிடும் தகவலும் வெளியானது. அதாவது, நார்வே நாட்டு குடிமகன் என்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக பிரெவிக் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அவனது முகத்தை மாற்றம் செய்து கொண்டிருக்கிறான்.

    ஆக, அவன் சித்த பிரமை பிடித்தவன் கிடையாது என்பது ஓரளவுக்கு விளங்கிப்போனது.

    நார்வே மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் பன்முக, பலஇனக் கலப்புக் கலாச்சாரத்தைத் தழுவி வருவது மிகப் பெரிய குற்றம் என்று சாதித்தான்.

    இதற்காக 77 பேரைப் படுகொலை செய்தது எந்த வகையிலும் குற்றச் செயலே கிடையாது என்று திமிராகவும், மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது என்பது போலவும் நடந்து கொண்டான்.

    தன்னால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலைகள் இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற காட்சிகளுக்குப் பிறகு அனைவரையும் கவர்ந்திழுக்கிற காட்சி’ என்று அகங்காரமாக நீதிமன்றத்தில் பேசினான்.

    லேபர் கட்சியினர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதால், அவர்களைச் சுட்டுக் கொன்றேன் என்றான்.

    அப்போது அவன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதையும் குறிப்பிட்டான். நைட்ஸ் டெம்ப்ளார்’ என்னும் இரகசிய இயக்கத்தைச் சேர்ந்தவன் நான். இந்த இயக்கத்திற்காக சீருடைகளும், ஆயுதங்களும் வாங்கி வைத்திருக்கிறேன் என்பதையும் அப்பட்டமாகவே தெரிவித்தான்.

    நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது தனது முஷ்டியை உயர்த்தி வெற்றிப் பெருமித சைகையைக் காண்பித்தான்.

    இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதுபற்றி விசாரணையின்போது நீதிபதி அவனிடம் கோபமாகக் கேட்டபோது, நீதிபதிகளை மதிக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பிரெவிக்.

    இவனது பேச்சுக்களும், செயல்பாடுகளும் நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் அச்சுறுத்துவதாக அமைந்தது. அத்துடன் இன்னும் அதிகமாக அவனிடம் விசாரணை நடத்தினால், இந்த நீதிமன்றத்தை, தனது இயக்கத்திற்கான பிரச்சார மேடையாகவே அவன் மாற்றிவிடக் கூடும் என்ற அச்சமும் அவர்களிடம் எழுந்தது.

    அத்துடன், இவனது செயல்பாடு இளைஞர்கள் சிலரைக் கவர்ந்திழுத்து, அவர்களையும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டிவிட்டால், அது பேராபத்தாகிவிடும் என்றும் நினைத்தனர்.

    எனவே அவனது விசாரணை பதின்மூன்று மாதக் காலத்திற்குள் முடிக்கப்பட்டது. பிரெவிக்கிற்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

    ஆஸ்லோவில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள இடம் ஒன்றில் பண்ணை வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கு உரம், டீசல் மற்றும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளை பிரெவிக் தயாரித்ததும் பின்னர் தெரியவந்தது.

    அமெரிக்க எழுத்தாளர் டான் பிரவுன் என்பவரால் 2003ஆம் ஆண்டு எழுதப்பட்டு பிரபலமான ‘டாவின்சி கோட்’ புத்தகம் _ பின்னர் இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு சக்கைப்போடு போட்டது _ மூலமாக நைட்ஸ் டெம்ப்ளார் என்னும் இயக்கத்தைப் பற்றி அரசல் புரசலாக உலகெங்கும் தெரியவந்தது.

    பின்னர் 2011ஆம் ஆண்டு பிரெவிக் மூலமாக அதே இயக்கத்தின் பெயர் வெளியே வந்ததும் சிலர் விழித்துக் கொண்டனர்.

    அது என்ன ‘நைட்ஸ் டெம்ப்ளார்?’

    இப்படியொரு இயக்கம் இருக்கிறதா-

    கி.பி. 11ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்ததாக டாவின்சி கோட் தெரிவிக்கிறது. அதே இயக்கத்தைப் பின்பற்றுவதாக 77 பேரைப் படுகொலை செய்த பிரெவிக் கூறியுள்ளான்.

    அப்படியானால் அது என்ன இயக்கம்?

    இப்போதும் அது உயிர்த்துக் கொண்டிருக்கிறதா?

    அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இப்போதும் இருந்து கொண்டிருக்கிறார்களா?

    Enjoying the preview?
    Page 1 of 1