Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!
Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!
Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!
Ebook195 pages1 hour

Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் ஒரு கடல் என்பதை, என்னுடைய நூல்களை வாசிப்போர் நன்கு அறிவார்கள். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்னும் 18 சங்க நூல்களில் உள்ள சுமார் 30,000 வரிகளையும் பல ஆண்டுகளுக்கு ஊன்றிப் படித்து அவற்றின் சுவையை ரசித்ததாலும், ருசித்ததாலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் 11 ஆண்டுகளாக எழுதி வந்தேன். அவற்றை நூலாக வெளியிட பலரும் வேண்டியதால் இன்னும் ஒரு நூலைத் தொகுத்தேன். இவை பல ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் சில விஷயங்களை மட்டும் நீங்கள் ஒரு முறைக்கும் மேலாக படிக்க நேரிடலாம்.

நூலின் தலைப்பு முழு விஷயங்களையும் உங்களுக்குத் தராமல் போகலாம். ஆகையால் சிறிய குறிப்பு - இந்த நூலில் தமிழின் விரிவு காட்டப்படுவதோடு தமிழர்கள் இழந்த நாடுகள், பாண்டிய மன்னன் 1000 பொற்கொல்லர்களைத் தீக்கிரையாக்கியது, வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள், எலி மயிரில் தமிழன் ஆடை நெய்தது, தமிழ்ப் பெண்களின் தழை உடை, அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார், புற நானூற்றில் உள்ள யாகம் பற்றிய விஷயங்கள், தமிழர்கள் மீது பிஷப் கால்டு வெல்லும், ஈ.வெ.ரா.வும் பாடிய வசைமாரி முதலிய விஷயங்களும் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளன.

Languageதமிழ்
Release dateAug 20, 2022
ISBN6580153508970
Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!

Read more from London Swaminathan

Related to Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!

Related ebooks

Reviews for Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal! - London Swaminathan

    http://www.pustaka.co.in

    தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

    Tamil Oru Kadal! Muthu Kulippom Varungal!

    Author :

    லண்டன் சுவாமிநாதன்

    London Swaminathan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியரைப் பற்றி

    முன்னுரை

    1. தமிழ் ஒரு கடல்!!

    2. இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

    3. வரலாறு எழுதிய முதல் தமிழன்

    4. வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள்.; 3000 ஆண்டு தமிழ் வரலாறு

    5.சோழர்கள் தமிழர்களா?

    6. ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

    7. அதிசயப் பறவைத் தமிழன்!!!

    8. தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

    9. ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டிய மன்னன் கொன்றது ஏன்?

    10. தமிழர்களின் தழை உடை-1

    11. தமிழர்களின் தழை உடை - 2

    12. நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’

    13. எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!!

    14. தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து!!

    15. டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள்

    16. வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி

    17. இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை!

    18. தமிழன் கண்ட 3 அற்புத மை

    19. ஒன்றரைக் கண்ணன்! அப்பர் கிண்டல்!

    20. ‘பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும்

    21. வீரத் தாயும் வீர மாதாவும்

    22. அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் - பகுதி 1

    23. அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2

    24. அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார் - பகுதி 3

    25. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

    26. தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே!

    27.புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றி அதிசயச் செய்திகள்

    28. அக்கரைக்கனி அளித்த சக்கரைக்கட்டி

    29. சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா?

    30. சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண்

    31. ‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல்

    32. சங்க இலக்கியத்தில் வேளாப் பார்ப்பான்

    33. வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!!

    34. பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்!

    35. இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!!

    36. வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?

    37.முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை பாட்டு

    ஆசிரியரைப் பற்றி

    லண்டன் சுவாமிநாதன், தமிழ்நாட்டில் கீழ்வளூரில் பிறந்தார். மதுரையில் பல்கலைக் கழகத்தில் பயின்று இரண்டு முதுகலைப் பட்டங்களைப் பெற்றார் (வரலாறு, இலக்கியம் ஆகியவற்றில் எம்.ஏ.பட்டங்கள்); அதற்கு முன்னர் பி.எஸ்சி. படித்ததால் அறிவியல் விஷயங்களிலும் ஆர்வம் உண்டு.

    தினமணிப் பத்திரிகையில் 16 ஆண்டுகள் பணியாற்றி சீனியர் சப் எடிட்டராக (SENIOR SUB EDITOR) உயர்ந்தபோது, லண்டன் பி.பி.சி அழைப்பை ஏற்று 1987 ஜனவரியில் லண்டனுக்குச் சென்று தமிழோசை ஒலிபரப்பில் (PRODUCER, BBC WORLD SERVICE, TAMIZOSAI ) பணியாற்றினார். 1992 முதல் லண்டன் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிய (TAMIL TUTOR, SOAS, UNIVERSITY OF LONDON) காலத்தில் வேறு பல பணிகளையும் மேற்கொண்டார். லண்டனில் பல்கலைக் கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை (1993) நிறுவுவதில் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுடன் (Dr Stuart Blackburn) இணைந்து செயல்பட்டார் 2014 முதல் ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளர் ஆனார். லண்டன் மாநகரில் 4 சங்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 30 புஸ்தகங்களையும் 7000 கட்டுரைகளையும் எழுதியள்ளார் 3 நாடகங்களில் நடித்து சங்கங்களுக்கு நிதி எழுப்பினார். CHARITY சாரிட்டி அமைப்புகள், நேஷனல் லாட்டரி மூலம் இரண்டு லட்சம் பவுன்களை ஐந்து அமைப்புகளுக்கு வாங்கித் தந்தார். லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய தந்தை வெ.சந்தானம் (V.SANTANAM), மதுரை தினமணிப் பத்திரிக்கையின் மதுரை பொறுப்பு ஆசிரியராகப் பணியாற்றினார். சுதந்திர போராட்ட காலத்தில் காமராஜுடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், தாமிர பட்டயம் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார்.

    லண்டன் சுவாமிநாதன் தொடர்பு முகவரியும் பிளாக் BLOG விவரங்களும் பின் வருமாறு:-

    swami_48@yahoo.com

    swaminathan.santanam@gmail.com

    LONDON MOBILE NUMBER – 07951 370697

    Two Blogs:-

    tamilandvedas.com

    swamiindology.blogspot.com

    முன்னுரை

    தமிழ் ஒரு கடல் என்பதை, என்னுடைய நூல்களை வாசிப்போர் நன்கு அறிவார்கள்.. பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என்னும் 18 சங்க நூல்களில் உள்ள சுமார் 30, 000 வரிகளையும் பல ஆண்டுகளுக்கு ஊன்றிப் படித்து அவற்றின் சுவையை ரசித்ததாலும், ருசித்ததாலும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற முறையில் 11 ஆண்டுகளாக எழுதி வந்தேன். அவற்றை நூலாக வெளியிட பலரும் வேண்டியதால் இன்னும் ஒரு நூலைத் தொகுத்தேன். இவை பல ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் சில விஷயங்களை மட்டும் நீங்கள் ஒரு முறைக்கும் மேலாக படிக்க நேரிடலாம். நூலின் தலைப்பு முழு விஷயங்களையும் உங்களுக்குத் தராமல் போகலாம். ஆகையால் சிறிய குறிப்பு- இந்த நூலில் தமிழின் விரிவு காட்டப்படுவதோடு தமிழர்கள் இழந்த நாடுகள், பாண்டிய மன்னன் 1000 பொற்கொல்லர்களைத் தீக்கிரையாக்கியது, வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள், எலி மயிரில் தமிழன் ஆடை நெய்தது, தமிழ்ப் பெண்களின் தழை உடை, அஷ்டாவதானம் செய்த அதிசய முதலியார், புற நானூற்றில் உள்ள யாகம் பற்றிய விஷயங்கள், தமிழர்கள் மீது பிஷப் கால்டு வெல்லும், ஈ.வெ.ரா.வும் பாடிய வசைமாரி முதலிய விஷயங்களும் ஆதாரங்களோடு தரப்பட்டுள்ளன. வாசகர்களின் கருத்தை அறியவும் ஆவல். இதற்காக எனது தொடர்பு முகவரியையும் கொடுத்திருக்கிறேன்.

    பலரும் எனது கட்டுரைகளை, என்னுடைய பெயரில்லாமல், அவர்கள் எழுதியது போல, பல இடங்களில் வெளியிட்டுள்ளதால், நான் எழுதிய தேதியையும், கட்டுரைகளின் வரிசை எண்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் தந்திருக்கிறேன். படித்து மகிழுங்கள்.உங்கள் கருத்துக்களை எழுத மறவாதீர்கள்.

    அன்புடன்

    லண்டன் சுவாமிநாதன்

    ஆகஸ்ட் 2022, லண்டன்

    1. தமிழ் ஒரு கடல்!!

    கல்வி கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று கூறினார். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.

    உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

    இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

    புள்ளிவிபரம்

    தொல்காப்பியம் 3,999 அடிகள்

    எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்

    சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

    மணிமேகலை 4,759 அடிகள்

    பெருங்கதை 16,230 அடிகள்

    பாடல் கணக்கு

    பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

    கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

    சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

    திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

    பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

    தாயுமானவர் 1,454 பாடல்கள்

    அருணகிரி 1,361 பாடல்கள்

    இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

    ***

    20,000 பழமொழிகள்

    தமிழில் 20,000க்கும் மேலாக பழமொழிகள் இருக்கின்றன. மூன்று வெள்ளைக்காரர்கள் இவைகளைத் தொகுத்து தனித்தனி புத்த்கங்களாக வெளியிட்டனர். அவைகளுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புகள் அல்லது ஆங்கிலத்திலுள்ள இணையான பழமொழிகளைக் கொடுத்தனர். பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம்!!

    முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!

    Posted on 13 May 2012 (earlier Published in London Tamil Sangam Souvenir)

    2. இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

    தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1