Thayillamal Nanillai
()
About this ebook
செல்வமும் செல்வாக்கும் மிக்க ஓர் சாப்ட்வேரில் பணிபுரியும் இளம்பெண் தன்னுடன் பணிபுரியும் ஒருவரை வேண்டி விரும்பிக் கல்யாணம் செய்கின்றாள். அந்த இளைஞனோ சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்தவன். இந்த இளைஞனின் தாய்க்கு இவன் மட்டுமே ஒரே மகன். அதனால் தாயைத் தன்னுடன் வைத்து, வயதான காலத்திலே பார்த்திட அவன் மிகவும் விரும்புகின்றான். இது பிடிக்காத அந்தக் காதலியாக வந்த மனைவி அவனை விட்டுப் பிரிகிறாள். பிறகு வழக்கு, கவுன்சிலிங் முடிவு என்ன என்று படித்து சுவையுங்கள்.
Read more from Madurai Ilankavin
Chapparam Thokki Rating: 0 out of 5 stars0 ratingsInthiya Christhuva Arulalarkal Rating: 0 out of 5 stars0 ratingsTamilarin Sangakala Perumai Keezhadi Rating: 0 out of 5 stars0 ratingsChristhava Ilakkiya Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsKadarkarai Kaaviyam Rating: 0 out of 5 stars0 ratingsMarava Mannin Meetpar Punithar Arulanandar Rating: 0 out of 5 stars0 ratingsTamil Christhavam Rating: 0 out of 5 stars0 ratingsMaaveeran Maruthanayagam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thayillamal Nanillai
Related ebooks
Mannil Vizhuntha Mazhaithuligal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsNaanum Ange Unnodu Rating: 5 out of 5 stars5/5Engey Enathu Kavithai Rating: 5 out of 5 stars5/5Sorna Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsSarvam Brumma Mayam Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Vizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsOru Nimisam Please Rating: 5 out of 5 stars5/5Oru Nimisham Please Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Devathai Rating: 1 out of 5 stars1/5Mama Endraal Appavakkum Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsVazhithunai Rating: 0 out of 5 stars0 ratingsAnbe! Unthan Nenjorame... Rating: 0 out of 5 stars0 ratingsVandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsNerungi Vaa Nilave Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Marakkumo Anbu Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsGnanakulam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5மஞ்சள் மத்தாப்பு! Rating: 0 out of 5 stars0 ratingsManjal Maththaappu Rating: 0 out of 5 stars0 ratingsOomai Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Appa Rating: 0 out of 5 stars0 ratingsKannaththil Muththamittaal Rating: 0 out of 5 stars0 ratingsAanantham Vilaiyaadum Veedu Rating: 5 out of 5 stars5/5Uttra Thozhi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thayillamal Nanillai
0 ratings0 reviews
Book preview
Thayillamal Nanillai - Madurai Ilankavin
https://www.pustaka.co.in
தாயில்லாமல் நானில்லை
Thayillamal Nanillai
Author:
மதுரை இளங்கவின்
Madurai Ilankavin
For more books
https://www.pustaka.co.in/home/author/madurai-ilankavin
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
ஆசிரியர் பேசுகிறார்
இன்றைய சமுதாயத்தில் படித்தோர் மத்தியில் டைவர்ஸ் கோரி வழக்குமன்றம் செல்வது சாதாரணமாகி விட்டது. வருமானமும் பழக்கவழக்கமுமே இதற்குக் காரணமாகி விடுகின்றது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போகாததாலுமே இந்த பிரிவினைகள் ஏற்பட ஏதுவாகின்றது.
செல்வமும் செல்வாக்கும் மிக்க ஓர் சாப்ட்வேர் பணிபுரியும் இளம்பெண் தன்னுடன் பணிபுரியும் ஒருவரை வேண்டி விரும்பிக் கல்யாணம் செய்கின்றாள். அந்த இளைஞனோ சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து படித்தவன்.
இந்த இளைஞனின் தாய்க்கு இவன் மட்டுமே ஒரே மகன். அதனால் தாயைத் தன்னுடன் வைத்து, வயதான காலத்திலே பார்த்திட அவன் மிகவும் விரும்புகின்றான். இது பிடிக்காத அந்தக் காதலியாகி வந்த மனைவி அவனை விட்டுப் பிரிகிறாள். பிறகு வழக்கு, கவுன்சிலிங் முடிவு என்ன என்று படித்து சுவையுங்கள்.
அன்புடன்
மதுரை இளங்கவின்
(c) 9894482497
சென்னை
25.9.2021
1
ஏப்பா சேவியவர், எப்பத்தான் உனக்கு வேலை கிடக்கும்?
என்று கவலையோடு கேட்டாள் தாய் அமிர்தம்மாள்.
அநேகமாய் இப்ப போயிருக்கிற மில்டன் கம்பெனியிலே எனக்கு வேலை கிடைச்சிரும்மா
என்றான் மகன் சேவியர்.
ஆமாம்மா, இந்தத் தடவை சேவியருக்க கட்டாயம் சாப்ட்வேர் கம்பெனியிலே வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு. இன்டர்வியூவை நல்லா அட்டெண்ட் பண்ணிருக்கான்
என்றான் நண்பன் ஜெரால்டு ரவி.
நீ எங்கேயிருந்து வந்திருக்கேப்பா?
என்று அன்போடு கேட்டாள் தாய் அவனிடம்.
எனக்குச் சொந்த ஊர் சந்தையூரும்மா
என்றான் ரவி.
சந்தையூர் எங்கே இருக்குப்பா?
என்றாள் தாய்.
"கல்லுப்பட்டியிலேயிருந்து பேரையூர் போகணும்மா. அங்கேயிருந்து ஆறு கிலோமீட்டர்லே எங்க ஊர் இருக்கு’’ என்றான் ரவி.
அப்பா, அம்மா என்ன பண்றாங்க?
என்றாள் தாய்.
எங்க ஊர்லே நல்ல விவசாயம் நடக்கும். சேனை, கருணை, பூசணி, மிளகாய், பருத்தி, வெள்ளரி, கடலைன்னு எல்லாம் விளையிற பூமிம்மா. எங்க அப்பா, அம்மா விவசாயம் பண்றாங்க
என்றான் ரவி விளக்கமாக.
அவ்வளவு செழிப்பான இடம் அது?
என்று கேட்டாள் தாய்.
ஆமாம்மா, எங்கவூர் மலை அடிவாரத்திலே இருக்கு. தண்ணீர் பாறையிலேயிருந்து கொட்டும். அங்கேயிருந்து கொட்டும். அங்கேயிருந்து வத்திராயிருப்பு போகலாம்
என்றான் ரவி.
ஆமாப்பா, அந்தப் பகுதியிலே சிறுமலை மாதா கோவில் இருக்கு. நான் ஒரு தடவை தபசுகாலத்திலே பஸ்ஸிலே அங்கே பலரோட போயிருக்கேன்
என்றாள் அமிர்தம்மாள்.
அதேதானம்மா, நாங்க அடிக்கடி சிறுமலை மாதா கோவில் போவோம். எங்கம்மா அங்கே பொங்கல் வைப்பாங்க
என்றான் ரவி.
பரவாயில்லே, நல்ல விசவாசக் குடும்பத்திலே இருந்துதான் வந்திருக்கே
என்றாள் தாய்.
இவனோட ஊர் சிங்கம்புணரிம்மா. அங்கே இருந்து வந்து இங்கே எங்களோட தங்கி வேலை தேட்றான்
என்ற இன்னொருவனை அம்மாவிடம் அறிமுகப்படுத்தினான் சேவியர்.
அது எங்கே இருக்குப்பா?
என்று கேட்டாள் தாய்.
அது மதுரையிலிருந்து பொன்னமராவதி போற பாதையிலேதான் இருக்கு. பாரியோட பறம்பு மலைக்கு முன்னாடி உள்ள பெரிய ஊர்
என்றான் நண்பன் ஸ்டீபன்.
உங்க ஊர்லே சர்ச் இருக்கா?
என்றாள் தாய்.
சர்ச் இருக்கு. சிஸ்டர்களோட ஸ்கூலெல்லாம் இருக்கு. இப்ப காலேஜ்கூட தொடங்கியிருக்காங்க
என்றான் அவன்.
"உங்க அப்பா அம்மா என்ன வேலை பார்க்கிறாங்கப்பா?’’ என்று கேட்டாள் அமிர்தம்.
ரெண்டு பேரும் ஏரியூர்லே டீச்சராய் இருக்காங்க. இடம் மலைப்பகுதி உள்ள கிராமம்தான். நான் படிச்சதெல்லாம் மதுரையிலேதான்
என்றான் ஸ்டீபன்.
பரவாயில்லேப்பா, மூன்று பேரும் நல்ல பையனாய் சேர்ந்து இருக்கீங்க. எப்படியொ மாதா தயவாலே உங்களுக்கு காலாகாலத்திலே நல்ல வேலை கிடைக்கணும். அதுக்காகத்தான் நான் தினமும் மாதாட்ட வேண்டி செபமாலை ஒப்புக்கொடுக்கிறேன்
என்றாள் அமிர்தம்பாள்.
ஆமாம்மா. சேவியர் எப்பவும் உங்களைப் பத்தித்தான் சொல்லிக்கிட்டிருப்பான். அம்மா தன்னந்தனியா அக்காளோட இருந்து காட்டு வேலை பார்க்கிறாங்க. ரொம்பவும் காட்டுலே கஷ்டபட்றாங்க. மிளகாய் பிடுங்கி, பருத்தியெடுத்து, சேனை பயிரிட்டு, மஞ்சள் போட்டு, வெங்காயம் விளைவிச்சு அதை வித்துதான் என்னை படிக்க வெச்சாங்கன்னு ரொம்பவும் கவலைப்படுவான் சேவியர்
என்றான் ஜெரால்டு.
என்னப்பா செய்றது? இவன் சின்னப் பள்ளிக்கூடத்திலே படிச்சபோதே அப்பா போயிட்டார். எப்படியோ நான்தான் மழை வெயிலிலே வேலை செஞ்சு காட்டுலே விளைஞ்சதை வித்து படிக்க வெச்சேன். சின்ன இடம் தான் காடு, ரொம்பப் போனால் ஒரு ஏக்கர்தான் இருக்கும்
என்றாள் தாய்.
இந்த ஆறுமாதமாய் வேலை தேடி அலைஞ்சதிலே ஒரே சலிப்புத்தான் எங்களுக்கு. என்ன செய்யறதும்மா? அலைஞ்சு தான் வேலை தேடணும். புதுசா இப்ப ஒரு கம்பெனியிலே மூணு பேரையும் கூப்பிட்டிருக்காங்க, நிச்சயம் வேலை கிடைக்க சான்ஸ் இருக்கு
என்றான் ஜெரால்டு.
எல்லாம் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதாதான் துணை செய்யணும். நல்லா வேண்டிக்கங்க. நிச்சயம் வேலை கிடைக்கும்
என்றாள் அமிர்தம்.
2
மறுநாள் சேவியர் தனது நண்பர்களோடு தாயையும் அழைத்துக்கொண்டு பெசன்ட் நகர் திருத்தலம் நோக்கி நடந்தான்.
என்னப்பா சேவியர், எங்கே பார்த்தாலும் மக்கள் தலைகளாய் இருக்கே? இவ்வளவு கூட்டமா? கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் மக்களாய் தெரியுதே?
என்று வியப்போடு கூறினாள் தாய் அமிர்தம்மாள்.
ஆமாம்மா.... இன்னைக்கு பேராயரோடு கூட்டுத் திருப்பலி நடக்குது. அதுதான் இத்தனை மக்கள் வெள்ளம்.
இப்படி மக்கள் வெள்ளம் கூடும் திருப்பலியிலே கலந்துக்கிறதே நான் செஞ்ச பாக்கியம்டா சேவியர்
என்றாள் தாய் கலங்கிய கண்களோடு.
திருப்பலியில் இவர்கள் பங்குகொண்டு பக்தியோடு நற்கருணை வாங்கியபின் ஆசீர்வாதம் வழங்கப்பட்டது. அதன்பின் சப்பரப் பவனி தொடங்கியது. மலர் அலங்காரத்தோடு அன்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதாவின் சுரூபம் ஒளி வெள்ளத்தில் சப்பரத்தில் வீற்றிருக்க பவனி தொடங்கியது. கடற்கரையோரச் சாலை முழுவதும் மக்கள் சாரைசாரையாக கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பை மீறி செபம் சொல்லியும், பாடல் பாடியும் வர, சப்பரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்தது. அமிர்தம்மாளின் கண்கள் வியப்பால் விரிந்திட, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதாவிடம் கண்ணீர் மல்க மன்றாடினாள்.
‘‘தாயே, இந்தப் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடு.