Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalvi Selvar Kamarajar
Kalvi Selvar Kamarajar
Kalvi Selvar Kamarajar
Ebook69 pages30 minutes

Kalvi Selvar Kamarajar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நமது முதலமைச்சர் காமராஜர் காங்கிரஸ்காரராக இருந்தாலும், ஏழைகளின் வாழ்விற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய தூய தொண்டுள்ளத்தை நான் மதிக்கிறேன்” அன்றைய எதிர்கட்சி தலைவர் அறிஞர் அண்ணா, காமராஜரின் மக்கள் நேசத்தை இவ்வாறு சொல்கிறார்.

“பதவிகளில் இருந்துகொண்டு மேல் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள் இல்லை. ஆனால் காமராஜரைப் பதவி தேடி வந்தது. எத்தனை பேர் எதிர்த்தாலும் அவர்களையெல்லாம் சாமர்த்தியமாகச் சமாளித்து காரியத்தைச் சாதிப்பதில் கெட்டிக்காரர். அவருடைய ஆட்சியில் தமிழர்கள் பெரிதும் நன்மை அடைந்துள்ளார்கள். இனிமேலும் அவருடைய ஆட்சியே நீடிக்க வேண்டும்” காமராஜரின் ஆட்சியில் மக்கள் பெற்ற நன்மையை எண்ணி அரசியல் பேசியிருக்கிறார் ஆன்மீகச் செம்மல் திருமுருக கிருபானந்தவாரியார், இவ்வளவு சிறப்பு கொண்ட கர்மவீரர் காமராஜர் பற்றிய சுவையான் தகவல்களை அறியலாமா.

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580122808204
Kalvi Selvar Kamarajar

Read more from Kalaimamani Sabitha Joseph

Related to Kalvi Selvar Kamarajar

Related ebooks

Reviews for Kalvi Selvar Kamarajar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalvi Selvar Kamarajar - Kalaimamani Sabitha Joseph

    https://www.pustaka.co.in

    கல்விச் செல்வர் காமராஜர்

    Kalvi Selvar Kamarajar

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நாட்டுக்காக வந்தவனே

    மக்களுக்காக வாழ்ந்தவர்

    ஏழை கல்விக்காக உழைத்தவர்

    ஏழை வீட்டு ராஜகுமாரன்

    காமராஜர் படிப்பு

    காப்பி அடித்தார்...?

    காமராஜர் செய்த மேஜிக்

    அறிவியல் பார்வை

    தீண்டாமையின் எதிரி

    படிப்பை நிறுத்தியது ஏன்?

    போர்குணம்

    போராட்டங்கள்

    சிறைக்கு அஞ்சா செம்மல்

    தேடி வந்த பதவிகள்

    முதல்வர் பதவி

    அமைச்சரவை

    துணிச்சல்காரர்

    மதிய உணவு

    வேண்டுகோள்

    காமராஜர் ஓவியம்

    பாரதி நேசம்

    ஏழ்மையை அறிந்தவர்

    பதவி ஆசையில்லாதவர்

    காமராஜரும் சினிமாவும்

    வெள்ளைமனத் தமிழன்

    காமராஜர் கருத்து மலர்கள்

    நினைவு நாள்

    காமராஜரின் சொத்துக்கணக்கு

    நாட்டுக்காக வந்தவனே

    தங்கமணி மாளிகையில் தனிவயிரப் பந்தலிட்டு

    மங்கையர்கள் சுற்றி வந்து மங்களமாய்க் கோலமிட்டு

    திங்களென்றும் சிங்கமென்றும் சீராட்டிப் பேருரைத்து

    திருநாள் அலங்காரச் சிலைபோலலங்கரித்து

    வாழ்த்தொலிக்கப் பெற்றெடுக்கும் மகனாக வந்ததில்லை!

    வண்ணமலர்த் தொட்டிலிலே வடிவம் அசைந்ததில்லை!

    வாழையடி வாழையென வந்த தமிழ்ப் பெருமரபில்

    ஏழைமகன் ஏழையென இன்னமுதே நீ பிறந்தாய்!

    நிமிர்ந்தால் தலையிடிக்கும், நிற்பதற்கே இடமிருந்தும்

    அமைவான ஓர்குடிலில் ஐயாநீ வந்துதித்தாய்!

    "தங்கமே தண்பொதிகைச் சாரலே! தண்ணிலவே!

    சிங்கமே! என்றழைத்துச் சீராட்டுந் தாய் தவிரச்

    சொந்தமென்று ஏதுமில்லை; துணையிருக்க மங்கையில்லை!

    ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே!"

    நாட்டுக்குப் பாடுபட நாடிவந்த வீரர்பலர்

    வீட்டுக்கே பாடுபட்டார்! வீணுக்கே கோஷமிட்டார்!

    அந்திபகல் நாடு, அரசாங்கம், பொதுப்பணிகள்

    என்றுலவ நீயும் இந்நாட்டில் வந்துதித்தாய்!

    நாட்டுக்காக உழைப்பதற்காக, ஏழை எளிய மக்களுக்கு கல்விச் செல்வம் கிடைக்க உழைக்க வந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறப்பை, அவர் பிறந்ததின் சிறப்பை கவியரசு கண்ணதாசனைவிட வேறு யாரால் சொல்ல முடியும்? காமராஜரின் மனம் கவர்ந்த கவிஞர் அல்லவா? அதுதான் அந்த ஏழைத் தலைவனின் பிறப்பின் சிறப்பை மேற்படி கவிதையாக வடித்திருக்கிறார்.

    மக்களுக்காக வாழ்ந்தவர்

    நமது முதலமைச்சர் காமராஜர் காங்கிரஸ்காரராக இருந்தாலும், ஏழைகளின் வாழ்விற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவருடைய தூய தொண்டுள்ளத்தை நான் மதிக்கிறேன் அன்றைய எதிர்கட்சி தலைவர் அறிஞர் அண்ணா, காமராஜரின் மக்கள் நேசத்தை இவ்வாறு சொல்கிறார்.

    "பதவிகளில் இருந்துகொண்டு மேல் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள் இல்லை. ஆனால் காமராஜரைப் பதவி தேடி வந்தது. எத்தனை பேர் எதிர்த்தாலும் அவர்களையெல்லாம் சாமர்த்தியமாகச் சமாளித்து காரியத்தைச் சாதிப்பதில் கெட்டிக்காரர். அவருடைய ஆட்சியில்

    Enjoying the preview?
    Page 1 of 1