Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mummy
Mummy
Mummy
Ebook51 pages17 minutes

Mummy

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

Arnika Nasser, an exceptional Tamil novelist, Written over 300+ Novels and 100+ Short Stories, Readers who love the subjects Crime, Detective, Police, supernatural and Science will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
Mummy

Read more from Arnika Nasser

Related to Mummy

Related ebooks

Related categories

Reviews for Mummy

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mummy - Arnika Nasser

    8

    1

    கிறிஸ்து பிறப்பதற்கு முன் - 2664 ஆம் ஆண்டு - எகிப்தின் பழைய பேரரசு

    புராதன எகிப்து.

    கலாச்சார புரட்சியின் ஊற்று.

    பொதுவாகவே வறண்ட நாடு.

    புயலோ கடும் மழையோ அரிது.

    வருடம் முழுவதும் கரை புரண்டோடும் நைல் நதி. அவ்வப்போது அரங்கேறும் அரசியல் சதி வன் கொலைகள். புராதண எகிப்தின் தலைநகர் மெம்பிஸ். (Memphis) அரச குடும்பத்தில் அண்ணன் தங்கை திருமணம் சகஜம். காரணம் அரசாட்சி அடுத்தவர் கைக்கு மாறிவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வுதான்.

    - நைல் நதிக்கரையோரம் கிஸா நகரம் அமைந்திருந்தது.

    அரண்மனையில் மன்னர் நெப்கா மரணப்படுக்கையில் கிடந்தார்.

    அரண்மனை வைத்தியர் அன்றைய சிகிச்சைக்குரிய மருந்துகளை மன்னருக்கு புகட்டினார்.

    நெப்கா, வைத்தியரே! மறைக்காமல் கூறுங்கள்... எனக்கென்ன நோய்? நான் பிழைப்பேனா?

    வைத்தியர் தயங்கினார். துர்தேவதைகளின் பிடிப்புதான் பேரரசரே!

    அல்லவே அல்ல... உண்மையைக் கூறுங்கள்!

    கணக்கு வழக்கு இல்லாமல் பெண்களுடன் உறவு கொண்டீர்கள் பேரரசரே! அதன் விளைவே உங்களுக்கு இந்த மர்ம நோய். இந்த நோய்க்கான மருந்து எகிப்து பேரரசிலேயே இல்லை...

    பேரரசன் நெப்கா வெள்ளை லினன் ஆடை அணிந்திருந்தான். தலையில் பனை ஓலை சூடல். மர விக் அணிந்திருந்தான்.

    பெருமூச்சுவிட்டான்,

    படுக்கைக்கு அடியில் பல வர்ணங்களில் பூனைகள் உலாவிக் கொண்டிருந்தன.

    நான் மேலும் சிரமப்படாமல் இறக்க விரும்புகிறேன். அடுத்த பிறவியிலேயாவது ஆரோக்கியமானவனாய் வாழ விரும்புகிறேன். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்!

    பேரரசின் அனைத்து அமைச்சர்களும் வந்து சேர்ந்தனர்.

    என்னுடன் என் பூனைகளும் வரவேண்டும். அவைகளை விஷம் வைத்துக் கொல்லுங்கள்!

    நெப்காவின் 10 வயது மகன் வந்து நின்றான்.

    பெப்பி! நீ உன் தங்கையை மணந்து கொண்டு இந்த பேரரசை நிர்வகிப்பாயாக!

    பெப்பி அழுதான்.

    வைத்தியர் மன்னருக்கும் பூனைகளுக்கும் மூலிகை விஷம் புகட்டினார்.

    மன்னர் மரித்தார். பூனைகளும்.

    பெப்பி கட்டளையிட்டான். உடனே பேரரசருக்கும் பூனைகளுக்கும் மறு உலக வீடு (பிரமிடு) கட்ட ஆரம்பியுங்கள். கட்டும் பணியில் பத்தாயிரம் குடிமக்களை அமர்த்துங்கள்...

    மந்திரி பணிவாய் தலையசைத்தார்.

    நெப்காவின் சடலத்தையும் பூனைகளின் பிரேதங்களையும் புனித நீரால் நீராட்டினர். தொடர்ந்து மந்திரம் ஓதப்பட்டது.

    நெப்காவின் நாசித்துவாரங்களுக்குள் ஒரு குழலை திணித்து மூளையை உறிஞ்சி எடுத்தனர்.

    வயிற்றின் இடப்பக்கம் கீறி நுரையீரல்களையும் குடல் பகுதியையும் அப்புறப்படுத்தி நாட்டு உப்பைத் திணித்தனர்.

    Enjoying the preview?
    Page 1 of 1