Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puratchi Thalaivarin Vettri Mozhigal
Puratchi Thalaivarin Vettri Mozhigal
Puratchi Thalaivarin Vettri Mozhigal
Ebook92 pages31 minutes

Puratchi Thalaivarin Vettri Mozhigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தலைவருடைய திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாம் அவருடைய ஒவ்வொரு ரசிகருக்கும் நான் உள்பட மனப்பாடமாக தெரியும், தலைவர் தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில் கேள்வி பதில்களில், அவர்விட்ட அறிக்கைகளில், மேடைகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் திருமணம் மற்றும் பொது - அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியவைகள் ஆகியவற்றில் தலைவர் பல அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முத்துகளைவிட புரட்சித் தலைவரின் சொல் முத்துக்கள் விலை மதிப்பில்லாதவை; அத்தகைய உயர்ந்த கருத்துக்களை புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகளை நண்பர் சபீதா மிக அழகாக தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார், அவரது முயற்சிக்குப் பாராட்டுகள்.

தலைவரின் படங்கள் - வசனங்கள் - பாடல்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு துணிச்சலை, தன்னம்பிக்கையை தரும், அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் தலைவரின் தன்னம்பிக்கை தரும் உயிர்ப்பான வார்த்தைகள், உயர்வான வெற்றி மொழிகள் பல இந்த நூலில் இருக்கின்றன, படியுங்கள், பயன் பெறுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580122808719
Puratchi Thalaivarin Vettri Mozhigal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Puratchi Thalaivarin Vettri Mozhigal

Related ebooks

Reviews for Puratchi Thalaivarin Vettri Mozhigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puratchi Thalaivarin Vettri Mozhigal - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்

    Puratchi Thalaivarin Vettri Mozhigal

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தன்னம்பிக்கைத் தரும் வார்த்தைகள்

    - திரைக்கலைஞர் சத்யராஜ்

    புரட்சித் தலைவரின் தீவிர ரசிகனான எனக்கு ஒரு பழக்கம் உண்டு, தலைவரின் படங்களை முதலில் பார்த்துவிட வேண்டும். தலைவர் பற்றிய செய்திகளை - புத்தகங்களை வாங்கி படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம்தான் அது.

    அந்த வகையில் மக்கள் திலகத்தின் மனதில் இருந்து வெளிபட்ட கல்வெட்டு போன்ற சொல்வெட்டுகளைக் கொண்ட ‘புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்’ - என்ற இந்தப் புத்தகத்தை முதலில் வாசிக்கும் வாய்ப்பளித்த நண்பர் பத்திரிகையாளர் சபீதா அவர்களுக்கும், முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நல்ல சிந்தனைகள், நல்ல புத்தகத்தின் மூலம் மக்களிடம் போய் சேரும் என்பது ஒரு நிதர்சனம், அதற்கு மிகப் பெரிய உதாரணம் தந்தை பெரியாருடைய பாத்திரம், தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் புத்தகத்தின் வாயிலாகதான் எங்கும் பரவியது, அதேபோல பல புரட்சியாளர்களின் சிந்தனைகள் - செயல்கள் புத்தகத்தின் வாயிலாக வெளிப்பட்டது.

    நான் நிறைய பேருக்கு குறுஞ்சேதி (எஸ்.எம்.எஸ்) அனுப்பும்போது தலைவர் பிரபாகரனுடைய ஒரு வாசகத்தை பயத்தைவிடு அல்லது லட்சியத்தைவிடு என்ற வாசகத்தை அனுப்புவேன்.

    அதேபோல புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், அவர்கள் கையெழுத்து போடும்போது ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என எழுதிவிட்டு கையொப்பமிடுவார், இதெல்லாம் என் மனதில் ஆழமாக பதிந்த விஷயம்.

    தலைவருடைய திரைப்பட காட்சிகள், வசனங்கள், பாடல்கள் எல்லாம் அவருடைய ஒவ்வொரு ரசிகருக்கும் நான் உள்பட மனப்பாடமாக தெரியும், தலைவர் தனிப்பட்ட முறையில் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில் கேள்வி பதில்களில், அவர்விட்ட அறிக்கைகளில், மேடைகளில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் திருமணம் மற்றும் பொது - அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியவைகள் ஆகியவற்றில் தலைவர் பல அரிய கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    முத்துகளைவிட புரட்சித் தலைவரின் சொல் முத்துக்கள் விலை மதிப்பில்லாதவை; அத்தகைய உயர்ந்த கருத்துக்களை புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகளை நண்பர் சபீதா மிக அழகாக தொகுத்து புத்தகமாக்கி இருக்கிறார், அவரது முயற்சிக்குப் பாராட்டுகள்.

    தலைவரின் படங்கள் - வசனங்கள் - பாடல்கள் பார்ப்பவர்களுக்கு ஒரு துணிச்சலை, தன்னம்பிக்கையை தரும், அந்த வகையில் இந்தப் புத்தகத்தில் தலைவரின் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் நிரம்ப இருக்கின்றன.

    நான் ஒரு திருமணத்திற்குப் போன போது, தலைவர் முன்பு சொன்ன ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டி பேசினேன்.

    இன்று தம்பதிகளாகும் தம்பதியர்க்கு வாழ்த்துக்கள்! எதிர்காலத்தில் உங்களுக்குள் ஏதாவது மனக்கசப்போ, பிணக்கோ, கருத்து வேறுபாடோ ஏற்பட்டால், அதை மூன்றாவது நபரை வைத்து தீர்த்துக் கொள்ளாமல், உங்களுக்குள்ளே வைத்து நீங்கள் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்.

    சிலர் என்னிடம் சொல்வார்கள்;

    "உன்னை அறிந்தால் நீ

    உன்னை அறிந்தால்

    உலகத்தில் போராடலாம்"

    "தூங்காதே தம்பி தூங்காதே – நீயும்

    சோம்பேறி என்ற பெயர் வாங்காதே"

    "சிரித்து வாழவேண்டும் – பிறர்

    சிரிக்க வாழ்ந்திடாதே"

    கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

    இதெல்லாம் அவர் சொன்னது இல்லையே வேறு யாரோ, கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி, மருதகாசி, புலமைப்பித்தன், முத்துலிங்கம், ஆலங்குடி சோமு போன்ற கவிஞர்கள் எழுதியது தானே என்பார்கள்.

    சரிதான் ஆனால் அந்த வார்த்தைகள் தலைவரின் வாயிலாக வெளிப்பட்டதால்தான் வெகுமக்களிடம் சென்றது, பிரபலமடைந்தது. இது அந்தக் கவிஞர்களாலும் மறைக்க முடியாதது.

    தலைவர் தனிப்பட்ட முறையில் பேசும் போதும் வள்ளுவர் சொன்னதுபோல பயனில்லாத சொற்களை பேசியதில்லை, வீண் வார்த்தைகள், தரக் குறைவான வார்த்தைகள், பிறரை காயப்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தியதில்லை, அவரது சிந்தனைகள் எத்தனை உயரமானது, விலை மதிப்பில்லாதது என்பது இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெரியும்.

    எம்.ஜி.ஆர் என்கிற அந்த மாமனிதர் எப்படிப்பட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1