Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Sila Suvaiyana Thagavalgal
Kaadhal Sila Suvaiyana Thagavalgal
Kaadhal Sila Suvaiyana Thagavalgal
Ebook132 pages31 minutes

Kaadhal Sila Suvaiyana Thagavalgal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காதல் கடிதங்களுக்கு தேதி தேவையில்லை. “காதல் கடிதங்களை எழுதுவோர் மெலிகின்றனர். அதைக்கொண்டு கொடுப்பவர்கள் கொழுக்கிறார்கள்” என்கிறது ஹாலந்து பலமொழி ஒன்று. சிலர் பதில் பெறுகிறார்கள். சிலர் கிழிபடுகிறார்கள். இப்படிபட்ட பல சுவாரஷியமான தகவல்களை வாசித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateAug 8, 2022
ISBN6580122808729
Kaadhal Sila Suvaiyana Thagavalgal

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Kaadhal Sila Suvaiyana Thagavalgal

Related ebooks

Reviews for Kaadhal Sila Suvaiyana Thagavalgal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Sila Suvaiyana Thagavalgal - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    காதல் சில சுவையான தகவல்கள்

    Kaadhal Sila Suvaiyana Thagavalgal

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    காதலுக்கு ஜே!

    கவிஞன், தேசபக்தன், தத்துவஞானி அனைவருக்கும் வழிகாட்டி காதலே என்றான் அறிஞர் இங்கர்சால். இந்தச் சிந்தனை காதல் மேலுள்ள தூசியைத் தட்டிவிட தூண்டியது.

    காதலுக்கு இத்தனை சக்தியா...

    ‘காதலினால் மானிடர்களுக்குக் கவிதை உண்டாம், சிற்பம் முதல் கலைகள் உண்டாம், ஆதலினால் காதல் செய்வீர்’ என்று பாரதி சொன்னதிலும் நிறைய அர்த்தம் புதைந்து இருப்பதை அறிய முடியும்.

    பகுத்தறிவு பகலவன் பெரியார், பேரறிஞர் அண்ணா, மகாத்மா காந்தியடிகள் போன்ற அறிவுலக சான்றோர்கள் ‘காதலை’ ஏன் பாராட்டினார்கள்.

    காதல் வளர்ந்தால் மக்களிடையே ஜாதி, மத, பேதங்கள் ஒழியும். நிற பேதங்கள் நீங்கும். அதனால் நல்ல சமுதாயம் உருவாகும் என்பதனால்தான் அவர்கள் காதலை பரிந்துரைத்தார்கள்.

    அறிஞர் இங்கர்சால் சொன்னது சரிதானே...

    ‘என்னை எழுத்துபக்கம் இழுத்துவிட்டதும் காதல்தான். நான் நேசித்தவளுக்காகக் கவிதை எழுத வார்த்தைத் தேடல் நடத்தி அப்படியே கவிஞனானேன். என் நண்பர்களின் காதலுக்குக் கடித கவிதை உபயம் செய்ததும் உண்டு!

    வாழவைத்த காதலுக்கு ‘ஜே’ போடும் ஒரு உணர்வுதான் இந்தநூல்.

    காதலைக் குறித்த இந்த சுவையான தகவல்கள் வாசிப்பவர்களை, வாழ்க்கையை, மனிதர்களை தன்னைக் காதலிக்கத் தூண்டும் ஒரு சாதனமாக இருக்குமேயானால் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றியாகும்.

    வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு, தன் பத்திரிகை தொழிலை சின்ஸியராக காதலித்து வரும் அதனால் வெற்றிகளை அள்ளி வரும் அண்ணன் நக்கீரன்கோபால் அவர்களுக்கு எனது காதல் வணக்கத்தை முன் வைக்கிறேன் நன்றியுடன்!

    நட்புடன்

    சபீதா ஜோசப்.

    ***

    எட்டு கடிதம் அறுபதாயிரம் ரூபாய்

    பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன் படையெடுத்து சென்ற இடங்களில் இருந்து தனது இனிய காதலி ஜோசபினுக்குக் காதல் கடிதம் அனுப்புவார். காதலியோ அது போர்கள வர்ணனைகள் என்று நினைத்துக் கொள்வாராம்.

    நெப்போலியன் மாவீரன் என்பது மட்டுமல்ல, காதல் கடிதம் எழுதுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.

    நெப்போலியன் தன் காதலி ஜோசபினுக்கு எழுதிய எட்டு காதல் கடிதங்களும் ஒரு சமயம் லண்டனில் ஏலம் விடப்பட்டன.

    அந்த மாவீரனின் எட்டுக் கடிதங்களும் அறுபதாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

    ***
    நீண்ட கடிதம்

    இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத்தின் அரசவையில் இருந்த ஒருவன், ‘அரபெல்லா வாகன்’ என்ற பெண்ணுக்கு எழுதிய கடிதம்தான் நீண்டது என்ற சாதனைப் பெற்றன. இக்கடிதத்தில் 4,10,000 வார்த்தைகள் உள்ளன. தற்போது இது இங்கிலாந்து அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக உள்ளன. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ‘அரபெல்லா வாகன்’ என்ற அந்தப் பெண் அந்தக் கடிதத்தைப் படிக்கவே இல்லையாம்!

    ***

    இன்னொரு நீண்ட கடிதம்

    ஹாம்ப்சயரைச் சேர்ந்த டெர்ரீபிஞ்ச் என்ற பெண் அமெரிக்க ராணுவத்தில் இருந்த தனது காதலனுக்குக் காதல் கடிதம் எழுதினாள்.

    பெண்களில் அவள் எழுதிய கடிதம்தான் மிகவும் நீண்டது.

    அந்தக் கடிதத்தின் நீளம் எத்தனை அடி தெரியுமா... 3969 அடி!

    ***

    தினமும் மூன்று கடிதம்

    புகழ்பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹ்யூகோவிற்கு அவரது மனைவி ஜூலியட்டி ரௌட் தொடர்ந்து எழுதிய காதல் கடிதங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா. பதினேழாயிரம் (17,000).

    சில வேளைகளில் அவர் ஒரு நாளில் மூன்று கடிதங்கள்கூட எழுதுவாராம்.

    இத்தனைக்கும் இவர்கள் இரண்டு பேரும் (கணவன் மனைவி) தினசரி சந்தித்துக்கொள்ள தவறுவதில்லையாம்.

    கணவன் மனைவிக்குள் எத்தனை ஆழமான காதல் பாருங்கள்.

    ***

    எட்டு ஆண்டு காத்திருந்த காதலன்

    நாலு கடிதம் எழுதி, நாலு நாள் காத்திருந்துவிட்டு போடீங்க... என்று அர்ச்சனை செய்து விட்டு அடுத்த காதலுக்கு தாவும் இளைஞர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

    ஆனால், வெர்ஜினியாவை சேர்ந்த ரான்கிராவட் என்ற இளைஞன் காதலியின் ஒரு சொல்லுக்காக எட்டாண்டு காத்திருந்தான்.

    தன் இதயத்தைக் திறந்து கொட்டி அவன் காதலிக்குச் சுமார் எட்டு ஆண்டுகளாக

    Enjoying the preview?
    Page 1 of 1