Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nesam
Nesam
Nesam
Ebook142 pages54 minutes

Nesam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சைலேந்திரன், சுஸி காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். சில வருடங்களுக்கு பிறகு தன் காதல் நினைவுகளை புதுப்பித்து. தன் குழந்தைகளுடன் கல்லூரிக்கு சென்ற போது அங்கு ஏற்படும் மாற்றங்களையும், அவர்களின் மனநிலையையும், எடுத்துரைக்கும் கதை இது! இதனை போல பல சிறுகதைகளை நேசத்துடன் எடுத்துரைக்கிறார், ஆர்னிகா நாசர்.

Languageதமிழ்
Release dateDec 27, 2021
ISBN6580111007822
Nesam

Read more from Arnika Nasser

Related to Nesam

Related ebooks

Reviews for Nesam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nesam - Arnika Nasser

    https://www.pustaka.co.in

    நேசம்

    Nesam

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளக்கம்

    1. நேசம்

    2. நிலா ஆவேசம்

    3. கிருமி யுத்தம்!

    4. வன்முறை விவசாயம்!

    5. தேசம்!

    6. பூமி உருண்டையும் சில தோட்டாக்களும்!

    7. இடைத்தேர்தல்

    8. ரயில் ஸ்நேகம்

    9. பிறவிக்குணம்

    10. ஆயுத எழுத்துக்கள்!

    11. திரும்பி வந்த கணவன்!

    12. பூக்களுக்கு யார் தீ வைத்தது?

    13. சரஸ்வதி தவம்...

    1. நேசம்

    சுஷ்! என்றான் சைலேந்திரன்.

    ம்! என்றாள் சுசரிதா.

    சுஷ்ஷூ!

    ம்!

    சுசரீ!

    ம்!

    சூஸா!

    கணவன் பக்கம் உருண்டு செல்லமாய் முறைத்தாள்.

    ஹையோ புருஷா! இன்னும் எத்தினி விதமா என் பேர் விளிப்பாய்? (அழுத்தமாக) என்னா?

    குட்டிம்மா! செல்ல குட்டிம்மா!, பொம்மு குட்டிம்மா!, குட்டி குட்டிம்மா! ரோஸ் குட்டிம்மா!, ஜிங்கிலு குட்டிம்மா!

    கணவனின் கொஞ்சலிலுள்ள உலக உற்சாகம் அவளையம் பிடித்தது.

    ஏ அப்பா! எத்ன குட்டிம்மா? ஏய்! என்னப்பா! விடுமுறை நாள் விடியக்காலையில் ரொமான்ஸ் மூடு வந்திருச்சா?

    சுஸி! நம் யூனிவர்சிடி நாட்கள் திரும்ப வருமா?

    எப்டிப்பா வரும்?

    நம் காதல் செமநாவல்டி தெரியுமா? நாம் காதலிச்ச அந்த மூன்று வருடங்களை நினைக்றச்சே. இதயம் கிளிசரின் நிறைந்த பாட்டிலுக்குள் செர்ரி அலைக்கழிக்கப்படுவது போல் ஜிவுஜிவுக்கிறது குட்டீஸ்!

    இடது கைவிரல்கள் நான்கை பின் மடக்கி உதட்டின் முழு நீளத்துக்கு பதித்து பழைய நினைவுகளில் குளுக்கோஸினாள் சுசரிதா.

    நீ எழுத்தாளன். உன் உணர்வை பெனடிக்கா விவரிச்சிட்ட. என் உணர்வை-ஐ கான்ட்ப்பா!

    நம் முதல் சந்திப்பு ஞாபகமிருக்கா? நீ உன் தோழிகளுடன் வந்து கொண்டிருந்தாய். MASS JOL MELA நடத்திக்கொண்டிருந்த நான் உன்னை முதல் பார்வை வெடித்தேன். நீ கறுப்புதான். ஆனால் வழுவழுப்பான அடர் பளபள கறுப்பான மீன் குட்டி போல் அழகு. உன் கவனத்தைக் கவர நினைத்தேன். ஒரே வழி நெகடிவ் டாக்டிஸ். என் பார்வைக்கு அக்நாலஜிய உன்னை பார்த்து ‘உவ்வே!’ என பொய் வாந்தி எடுத்து, ஹேய்! ப்ளாக் மூன்! என விளித்தேன்...

    நீ பாட்டுக்கு என்னை அமாவாசை என்று அழைத்துவிட்டாய். தோழிகளின் முன் எவ்வளவு அவமானம்? அன்றிரவு முழுவதும் எவ்ளவு அழுதேன் தெரியுமா? அன்று நான் அழுத கண்ணீரின் அளவு எவ்ளவு இருக்கும் தெரியுமா? கர்நாடகா நமக்கு தர மறுக்கும் 205 டி.எம்.ஸி காவிரி நீர் அளவிருக்கும்.

    ஆனா மறுநா நீ என்ன பண்ணின? உன் ப்ரண்டு அவதான் டி.எம்.கே முழுப் பேரு திராவிட முக்கனி கலையரசிதான்? அவ உனக்கு சைக்கிள் ஓட்டச் சொல்லிக் குடுத்துக் கிட்டிருந்தா... நீ உட்காருமிடத்தை டேபிள் டென்னிஸ் மேட்ச் பார்க்கும் ஒருவரின் கருவிழிகள் போல அலைக்கழித்துக்கொண்டு பெடலி நேரே படித்துக்கொண்டிருந்த என் மீது மோதி சிதறினாய். அந்த மோதல் எத்தனை அற்புதமானது? அந்த மோதலில் 20000 மெஹா வோல்ட் அதிர்ச்சியும் இருந்தது இம்ம மலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகளின் குளுமையும் இருந்தது.

    கோபமாய் நான் மோதும் போது மோதினேன் சிதறிய நான் உன் கண்களை உன்னித்தேன். கண்களா அவை? லவ் பிரீச்சர்ஸ். பைபிள் கிறிஸ்துவம் போதித்தது. குர் ஆன் அல்லாஹ்வின் இறையாண்மை போதித்தது. பகவத்கீதை மனிதன் வாழ வேண்டிய வழி உபதேசித்தது. உன் கண்களோ பிரபஞ்சத்தையே நேசிக்கச் சொன்னது. நானோ சுயநலமாய் உன்னை மட்டும் நேசிக்க முடிவெடுத்தேன்...

    சைக்கிளில் என்னை மோதிய உன்னை, உன் ஹாஸ்டல் வார்டனிடம் புகாரினர் என் நண்பர்கள். தவறு என் மேல் தான் என்று கூறி உன்னை காப்பாற்றினேன்.

    அன்றிலிருந்து நம் உக்கிர காதல் ஆரம்பித்தது!

    "தம் மூன்று வருட காதலில், நாம் டெல்காம் சென்டர் வாசலில், ஸ்டடி சென்டரில், யுனிவர்சிடி கேன்டினில் பேசிப் பார்த்தோம். அத்தனை இடங்களிலும் நம் மனதுக்கு உகந்தது.

    நீ சைக்கிளில் மோதிய போது அமர்ந்திருந்த பழைய ஸ்போர்ட்ஸ் சாமான்கள் வைக்கப்பட்ட உபயோகமில்லாத பூட்டப்பட்ட சிறு அறைதான். அரைவாசலின் சிமிண்ட் படிக்கட்டுகள் யுனிவர்சிடியின் 80 வருட சரித்திரத்தில் எத்தனை காதல் ஜோடிகள் கண்டிருக்கும்? சுவரிலும் மாடியிலும் எத்தனை காதல் ஜோடிகளின் பெயர்கள் சாக்பீஸால் கரிக்கட்டையால் எழுதப்பட்டிருக்கும்? அது மிகவும் ராசியான இடம் என்று சீனியர் காதலர்கள் நமக்கு சஜஸ்ட் செய்தார்கள்."

    நாம் ஜூனியர் காதலர்களுக்கு சஜஸ்ட் செய்தோம். தான் மேல் படிக்கட்டில் அமர்வேன். நீ கீழ் படிக்கட்டில் அமர்வாய். பேசிக்கொண்டே இருப்போம். பேச்சில் விஷயம் இருக்குமோ இருக்காதோ, பேச்சு மட்டும் குளிர்கால இரவு போல் நீண்டே இருக்கும்.

    அறையின் நான்கு பக்கமும் படிக்கட்டுகள் உண்டு. நான்கும் பிஸியாகவே இருக்கும். நாமும் காதலில் பிஸியாக இருந்தோம்.

    நம்மின் காதலை நம்மின் இரு குடும்பமும் ஏற்கவில்லை. உலகின் அனைத்து, விஷயங்களும் மாற்றத்துக்கு உட்பட்டவை. ஆனால் மனிதனின் காதல் உணர்ச்சி மட்டும் என்றென்றும் மாறாது உலகை ஆக்கவும் அழிக்கவும் சக்தி கொண்டது இதனை காதல் வயப்படாத அல்லது பண வயப்பட்ட கிழடுகள் உணர்வதில்லை... உலக தீர்மானமாக பழனியில் திருமணம் செய்து கொண்டோம். நம் திருமணம் தோற்றுவிடும் என ஹேஸ்யம் சொன்னவர்கள் அவமானித்தனர். ஒவ்வொரு வருட திருமண நாளிலும் நம் அன்பின் ஆழம் அன்ஃபேத்தோமபிளாய் கூடிக் கொண்டே போகிறது.

    யெஸ். ஐ லவ் யூ செல்லு!

    மீ டு!

    இவ்ளவு விவரமாய் பழையவற்றை நீ பேசுகிறாய் என்றால் நிச்சயம் ஒரு காரணமிருக்கும் அதென்ன புருஷா?

    கரக்ட் காதலில் வெற்றி பெற்று ஒரு குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்கிறோமே, அதற்கு அஸ்திவாரமே நம் காதல் வளர்ந்த அந்த பூட்டப்பட்ட ஒற்றை அறைதான். எனக்கு அங்கு போய் வர வேண்டும் என ஆசையாக இருக்கிறது. ஐந்து வருடம் கழித்து யுனிவர்சிடியையும் போய் பார்த்த மாதிரி இருக்கும். வருகிறாயா? போய் வருவோம். அந்த காதல் சின்னத்தை தரிசித்து வருவோம்...

    ஓ தாராளமா எப்ப?

    விடுமுறை நாளில் போனால் யுனிவர்சிடி வெறிச்சோடி இருக்கும். வொர்க்கிங் டேயிலேயே போய் வருவம்.

    கேமிரா எடுத்துக்கிட்டுப் போகனும் சைலு. நாம காதலிச்ச இடத்ல குழந்தையோடு ஃபோட்டோ எடுத்துக்கனும். எடுத்த ஃபோட்டோவை பெரிதாய் ப்ளோ பண்ணி லேமினேட் பண்ணி வீட்லமாட்டிவைக்கனும்...

    நல்ல ஐடியா குட்டிம்மா...

    இப்ப நாம அங்க போறப்ப லேட்டஸ்ட் காதல் ஜோடிகளை அழைத்துப் பேசி விருந்துண்டு மகிழலாம்...

    ஒய் நாட்?

    சுசரிதா இன்னும் பலவிதமாய், பேசிக்கொண்டே போனாள். ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்தான் சைலேந்திரன்.

    ***

    திருவள்ளுவர் புழுதியை கிளப்பிக்கொண்டு நின்றது. கண்டக்டர் திறந்து தள்ளினார் கதவை. சைலேந்திரன், சுசரிதா குழந்தையுடன் இறங்கினான்.

    சுஸு!

    என்னப்பா?

    அதோ நாம் தினம் வந்து நிப்போமே, டீக்கடை இப்பப் பாரு பெரிய கடை ஆய்ருச்சு பாரு!

    ஆமாம்ப்பா!,

    இருவரும் நடந்தனர். கிராமீய பல்கலைக்கழகத்தின் எதிர்ச்சாரியில் புதிது புதியாய் கடைகள் பூத்திருந்தன. மாற்றங்களை ஜீரணித்தபடி இருவரும் நடந்து லெவல் கிராஸிங் கடந்தனர். அக்ரிமாணவர்களின் பரிட்சார்த்த வயலில் பசுமை பூத்திருந்தது.

    சைலேந்திரனைப் போலவே சுசரிதாவும் பிரமிப்பில் இருந்தாள். ஐந்து வருடங்கள் நீண்ட இடைவெளிதான். இல்லையென்றால் மாற்றங்களின் தாக்கம் நச் என்று கண்ணில் தெறிக்குமா?

    சைலேந்திரனுக்கும் சுசரிதாவுக்கும் இதயத்துக்குள் மகா

    Enjoying the preview?
    Page 1 of 1