Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Vennila… Nee… Theyava?
Naan Vennila… Nee… Theyava?
Naan Vennila… Nee… Theyava?
Ebook115 pages30 minutes

Naan Vennila… Nee… Theyava?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்வப்னா - சுதிர் திருமணம் பெரியோர்கள் சம்மத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் ஸ்வப்னாவுக்கும், சுதிரின் நண்பன் நிர்மலுக்கும் திருமணமானது, ஏன்? கதிர் எங்கே? ஏன் அவன் திருமணத்திற்கு வரவில்லை?

ஸ்வப்னா, நிர்மல் திருமணத்திற்கு பிறகு என்ன என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஸ்வப்னா, நிர்மல், சுதிர் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்கள் என்ன? பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580140606445
Naan Vennila… Nee… Theyava?

Read more from R. Manimala

Related to Naan Vennila… Nee… Theyava?

Related ebooks

Reviews for Naan Vennila… Nee… Theyava?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Vennila… Nee… Theyava? - R. Manimala

    https://www.pustaka.co.in

    நான் வெண்ணிலா... நீ…தேயவா?

    Naan Vennila… Nee… Theyava?

    Author:

    ஆர். மணிமாலா

    R. Manimala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/r-manimala

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    நகரின் பிரசித்திப் பெற்ற மண்டபம் அது!

    திருமண நாளுக்கு முந்தைய நாளின் வரவேற்பிற்காக மண்டபம் முழுக்க... வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

    மார்கழிப் பனி... தை மாதத்திற்காக கொஞ்சம் விட்டு வைத்திருந்தது. காற்றில் சிலிர்ப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

    உச்சத்தில் நிலா!

    அழகிற்காகவும், அலங்காரத்திற்காகவும் தொட்டிகளில் பல நிறங்களில் வண்ண மலர்கள் சிலிர்த்துக் கொண்டிருந்தன.

    பூக்களைப் பார்த்து ஜொல்விட்ட நிலவின் எச்சில் ரோஜா இதழ்களின் நுனியில் ஒட்டிக் கொண்டிருந்தன.

    மண்டபத்திற்கு வெளியே கார்கள் நிறுத்த இடமின்றி அணிவகுத்திருந்தன வெளியேதான் பகட்டும், பந்தாவும்.

    உள்ளே... சில இதயங்கள் களேபரத்தில் கலவரமாகிக் கொண்டிருந்தன.

    வாசலில் நின்று வரவேற்றுக் கொண்டிருந்த சுந்தரேசன், பரமேஸ்வரியின் முகத்தில் துளியும் சிரிப்பில்லை.

    ஸ்டேஜில் மணப்பெண் மட்டுமே நின்றிருக்க... மாப்பிள்ளையைக் காணோம்.

    வந்தவர்கள் குழப்பத்துடன் வினவ, தங்களுக்குத் தெரிந்த, தெரியாத பதில்களை அதற்கு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

    பொண்ணு மட்டும் தனியா நிக்குது... மாப்பிள்ள எங்கே?

    மாப்பிள்ளை இன்னும் மண்டபத்துக்கே வரலே?

    அட... ஏனாம்?

    யார் கண்டது? பொண்ணைப் புடிக்கலையோ, என்னவோ?

    இது லவ் மேரேஜ்னு கேள்விப்பட்டேனே?

    இந்தக் காலத்துப் பொண்ணுங்களை பத்தித் தெரியாதா? ரெண்டு மூணு நம்பரை வச்சுக்கிட்டு, மாத்தி மாத்திப் பேசி லவ் பண்ணுங்க. அதுவும் சுந்தரேசன் சொத்து பத்துன்னு சவுண்டான பார்ட்டி! பொண்ணு ஜாலியா ஆட்டம் போட்டிருக்கும்!

    அப்படியாச் சொல்றே?

    பின்னே... அவங்க மூஞ்சிங்களைப் பார்! செத்த எலி மாதிரியில்லே? காரணமில்லாமலா?

    அப்ப... நாளைக்குக் கல்யாணம்?

    வந்துதான் பார்ப்போமே... என்னக் கூத்துதான் நடக்குதுன்னு!

    வந்தவர்களின் நாக்கில் கொடுக்கும், பார்வையில் நகமும் இருந்தது. மேடையில் வீற்றிருந்த ஸ்வப்னாவின் கழுத்திலிருந்த மாலை கனத்தது.

    அலங்காரத்தை மீறி... மனதின் அவலம் ஆட்டம் போட்டது. களையிழந்திருந்த விழிகள் எந்நேரமும் கரைந்து விடத் தயாராய் இருந்தது.

    பாறையில் மோதி... மோதி விலகிப் போன அலையாய் உள்ளத்தில் ஒரே கேள்வி எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

    என்னாச்சு சுதிர்? இப்ப நீ எங்கே இருக்கே?

    முழுக்க ஏசியால் நிரப்பப்பட்ட மண்டபம் தான்! ஆனால், உடம்பிற்குள்ளிருந்த நீரெல்லாம் வெளியேறிக் கொண்டே இருந்தன.

    இதுக்கு மேல என்னால வாசல்ல நிக்க முடியாது. என்ன அசிங்கம் இது பரமு? உன் பொண்ணுக்காகப் பரிஞ்சுப்பேசி... என் கவுரவத்தையே குழிதோண்டிப் புதைச்சிட்டியே... அவன் சைடுல கல்யாணத்தைப் பத்திப் பேசக்கூட யாருமில்லேங்கறப்ப... நாம சுதாரிச்சு இருக்கணும். இப்பப் பாரு எங்கே வந்து நிக்க வச்சிட்டான்?

    அவசரப்படாதீங்க... மாப்பிள்ளைக்கு என்ன பிரச்னையோ? ஃப்ளைட் கிடைக்காம கூட...

    போன் இருக்கில்லே... தகவல் சொல்லலாமில்லே? எதுக்கும் உன் பொண்ணைப் போய் முழுசா விசாரி... வயித்துல கருமத்தை ஏதாவது சுமந்திருக்காளான்னு?

    ஐயோ...! அலறக்கூட முடியாமல் திணறிப்போனாள் பரமேஸ்வரி.

    அவன் எங்கே... அவன் ப்ரண்டுன்னு சொல்லிக்கிட்டு முன்னே நின்னு வாக்குக் குடுத்தானே நிர்மல்... அவனைக் கூப்பிடு...

    ஆத்திரமும், ஆவேசமுமாய் சுந்தரேசன் உள்ளே செல்ல... அவர் பின்னேயே ஓடினாள் பரமேஸ்வரி.

    ஸ்வப்னாவின் கண்களும் நிர்மலைதான் தேடின.

    நிர்மல் விரல் தேய... மீண்டும், மீண்டும் சுதிரின் செல்போனுக்கு ட்ரை பண்ணிக் கொண்டிருந்தான்.

    தூரத்தில் வந்து கொண்டிருந்த சுந்தரேசனின் நடையே சொல்லியது... அவர் நெருப்பாய் தகித்துக் கொண்டிருப்பதை!

    "என்னடா சுதிர் இப்படிப் பண்ணிட்டே? என்னதான் ஆச்சு உனக்கு... போன்ல கூட சொல்ல முடியாத அளவுக்கு? பிடிக்காத கல்யாணமா இது? இந்த நாளுக்காகத்தானே ரெண்டு வருஷமா காதலிச்சே? என்னதான் இருக்கு உன் மனசில?

    நான் வர்றவரைக்கும் ஸ்வப்னா உன் பொறுப்புன்னு சொல்லிட்டுப் போனே? அவங்கப்பனை நம்ப முடியாது. திடீர்னு என் ஸ்வப்னாவை வேற எவனுக்காவது கட்டி வச்சிடுவான். உன்னை நம்பித்தான் கனடாவுக்கேப் போறேன் பார்த்துக்கன்னு சொன்னியே! இப்ப என்னடாப் பண்ணுவேன்? நாளைக்குக் கல்யாணம்! மாப்பிள்ளை நீ இருக்கிற எடமேத் தெரியல. எதுக்காக இல்லாவிட்டாலும், ஸ்வப்னாவுக்காக நீ காண்டாக்ட் பண்ணியிருக்கணுமே! ஒரு வேளை உன் காதலேப் பொய்யோ?"

    சேச்சே... அப்படி ஒரு எண்ணம் தோணுவதே அபத்தம். அதுவும் உன் உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டு!

    பூமிக்குள் ஆயிரம் இருக்கலாம். அது ஆராய்ச்சிக்கு உட்பட்டது. காதலுக்குள்ளும் ஆயிரம் இருக்கலாம். இது ஆராயப்படக் கூடாது!

    கணவர் கோபமாய் முன்செல்ல... தேவையற்ற பிரச்னைகள் முளைத்து, பார்ப்பவர்களின் பார்வைக்கும் வாய்க்கும் தீனி போடுவதாய் அமைந்து விட்டால்?

    சட்டென அவர் கரம் பற்றினாள்.

    என்னடி? விடு… அதோ நிக்கிறான் பார் அந்த காவாலிப்பயல்!

    எல்லாரும் பார்ப்பாங்க... இது நம்ம பொண்ணோடக் கல்யாணம்! ரூமுக்குப் போங்க. அந்த புள்ளைய நான் கூட்டிட்டு வர்றேன்!

    எப்படியும் இந்தக் கல்யாணம் நிக்கப் போ...

    பட்டென வாயைப் பொத்தினாள்.

    "வேண்டாம்... உங்க வாயால அப்படிச் சொல்லாதீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. நாளைக்கு நம்மப் பொண்ணோடக்

    Enjoying the preview?
    Page 1 of 1