Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Punjab Singam Bhagath Singh
Punjab Singam Bhagath Singh
Punjab Singam Bhagath Singh
Ebook67 pages21 minutes

Punjab Singam Bhagath Singh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். மேலும் பல சுவராஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம்...

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580122808205
Punjab Singam Bhagath Singh

Read more from Kalaimamani Sabitha Joseph

Related authors

Related to Punjab Singam Bhagath Singh

Related ebooks

Reviews for Punjab Singam Bhagath Singh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Punjab Singam Bhagath Singh - Kalaimamani Sabitha Joseph

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பஞ்சாப் சிங்கம் பகத்சிங்

    Punjab Singam Bhagath Singh

    Author:

    கலைமாமணி சபீதாஜோசப்

    Kalaimamani Sabitha Joseph

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kalaimamani-sabitha-joseph

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    லட்சியம்

    போராளி குடும்பம்

    பள்ளி மாணவர்

    வீரம் நிறைந்த மண்

    கல்லூரி படிப்பு

    இளம் வீரர் பாரத சங்கம்

    பத்திரிக்கையாளர் பகத்

    யார் அந்த பகத்சிங்?

    அதிரடி நடவடிக்கைகள்

    தலை மறைவு வாழ்வு

    பகத்சிங் புரட்சி முழக்கம்

    தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தார்

    புதிய புரட்சி திட்டம்

    சட்டசபை சத்த சபையானது

    யார் அந்த இளைஞர்கள்

    அவர்கள் தான் இவர்கள்

    பகத்சிங் முழக்கம்

    உண்ணாவிரதப் புரட்சி

    பிரச்சார மேடையான நீதிமன்றம்

    தீர்ப்பு நாள்

    தீர்ப்பை எதிர்த்து கூட்டம்

    சிறையில் பகத்சிங்

    மாவீரனின் வேண்டுகோள்

    திருமண ஆசையில்லை

    ரொட்டி சாப்பிட ஆசை

    புன்னகை மன்னன்

    வாக்கு மாறிய வெள்ளையர்

    லட்சியம்

    பள்ளிக் கூடச் சிறுவர்களை, உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்களை பார்க்கும் போதெல்லாம் மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் அந்த மாணவ மணிகளிடம் ஒரு கேள்வியை மறக்காமல் கேட்பார்.

    "எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக நினைக்கிறீர்கள்? என்பதே அந்த விலை மதிப்பில்லாத கேள்வி.

    அப்துல்கலாமைப் போலவே 1919களில் ஒரு ஆசிரியர் தமது வகுப்பு மாணவர்களைப் பார்த்து எதிர்காலத்தில் நீங்கள் என்ன ஆகப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.

    ஒவ்வொரு மாணவராக எழுந்து ‘நான் வக்கீல் ஆவேன்’ ‘நான் டாக்டர் ஆவேன்’ ‘இன்ஜினியர் ஆவேன்’ ‘கலெக்டர் ஆவேன்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    அப்போது துடிப்புமிக்க ஒரு மாணவன் எழுந்து ஆசிரியரின் கண்களை நேராகப் பார்த்து,

    நான் நாட்டின் விடுதலைக்காகப் போராடப் போகிறேன் என்று நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக சொன்னான்.

    அதுவரை மாணவர்களின் ஆசைகளை புன்னகையுடன் கேட்டு வரவேற்று கொண்டிருந்த ஆசிரியர் அந்த மாணவனின் அருகில் வந்து கட்டியணைத்து முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார். உன்னை நினைக்க பெருமையாக இருக்கிறது என்றார் ஆசிரியர்.

    அந்த மாணவன்தான் பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

    அத்தனை இளம் வயதிலேயே தாய் நாட்டிற்காக உழைக்க வேண்டும். விடுதலைப் போரில் களம் காண வேண்டும். வெள்ளையர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கை அவனுக்குள் ஏற்பட காரணம் அவனது தாத்தா - பாட்டி ஆங்கிலேயர் கொடுமைகளை எடுத்துச் சொல்லி வளர்த்ததே.

    அதுமட்டுமல்ல. பகத்சிங் தொடர்ச்சியான விடுதலை வீரர்

    Enjoying the preview?
    Page 1 of 1