Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thanthai Periyar Oru Arimugam
Thanthai Periyar Oru Arimugam
Thanthai Periyar Oru Arimugam
Ebook92 pages1 hour

Thanthai Periyar Oru Arimugam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவுளின் பெயரால் சாதியைக் கற்பித்த பார்ப்பனர்கள் பிற உயர்சாதியினரின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தை நசுக்கிய போது உருவான சமத்துவமின்மைக்கு எதிராக பெரியார் குரல் கொடுத்தார். 8,20,000 மைல்கள் பயணம் செய்து 10,700 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 21,400 மணி நேரம் பேசிய பெரியாரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580155508532
Thanthai Periyar Oru Arimugam

Read more from V. Chockalingam

Related authors

Related to Thanthai Periyar Oru Arimugam

Related ebooks

Reviews for Thanthai Periyar Oru Arimugam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thanthai Periyar Oru Arimugam - V. Chockalingam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தந்தை பெரியார் ஓர் அறிமுகம்

    Thanthai Periyar Oru Arimugam

    Author:

    சொக்கலிங்கம்

    V. Chockalingam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-chockalingam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    குறிப்பு

    முகவுரை

    தொடக்க காலகட்டம்

    காசியில் இருந்து வீடு திரும்புதல்

    காங்கிரஸ் கட்சியில் பெரியார்

    கள்ளுக்கடை மறியல் போராட்டம்

    தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி)

    வைக்கம் போராட்டம்

    சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்

    காங்கிரஸ் கட்சியுடன் விரிசல்

    காந்தியுடன் கருத்து வேறுபாடு

    சுயமரியாதை இயக்கம்

    சுயமரியாதைத் திருமணம்

    வெளிநாடுகளுக்கு பயணம்

    சுயமரியாதை சமதர்ம கட்சி

    நீதிக்கட்சியில் பெரியார்

    பெரியாரை சந்தித்த அண்ணா

    பெரியார் பட்டம் வழங்கல்

    இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

    கோவில் நுழைவுப் போராட்டம்

    திராவிட நாடு கோரிக்கை

    நீதிக்கட்சியின் பெயர் மாற்றம்

    சுதந்திர நாள் துக்க நாள்

    அடுத்த வாரிசு

    பெரியாரும் மணியம்மையும்

    திராவிட முன்னேற்ற கழகம்

    இட ஒதுக்கீட்டின் வரலாறு

    பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம்

    அரசியலமைப்பு சட்ட நகல் எரிப்பு போராட்டம்

    சேலம் மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி

    பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம்

    பெரியார் நடத்திய இதழ்கள்

    மதங்கள் மீதான விமர்சனம்

    சமூக நீதிக் கொள்கைகள்

    பெரியாரும் அம்பேத்கரும்

    பெரியார் மறைந்துவிட்டாரா?

    முடிவுரை

    குறிப்பு

    பேரரசுகள் வீழ்ந்து, ஜனநாயகத்துவமும் தொழில்நுட்பமும் பிறந்த பிறகும், பார்ப்பனியம் நிலைபெற்ற காலகட்டத்திலே சமத்துவத்திற்காக போராடியவர் பெரியார். கடவுளின் பெயரால் சாதியைக் கற்பித்த பார்ப்பனர்கள் பிற உயர்சாதியினரின் ஆதரவுடன் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திரத்தை நசுக்கிய போது உருவான சமத்துவமின்மைக்கு எதிராக பெரியார் குரல் கொடுத்தார்.

    8,20,000 மைல்கள் பயணம் செய்து 10,700 நிகழ்ச்சிகளில் பங்கேற்று 21,400 மணி நேரம் பேசிய பெரியாரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள், 5 மாதங்கள், 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

    முகவுரை

    அவர் இறந்து அரை நூற்றாண்டுக்கு பிறகும் அவரது பெயரைக் கேட்டு ஒரு கூட்டம் பயப்படுகிறது. அவர் தாம் தொண்டு செய்து பழுத்த பழம் தந்தை பெரியார். சமூக முன்னேற்றத்திற்காக பெரியார் ஆற்றிய தொண்டுகளை சுருக்கமாக தொகுத்து இக்கட்டுரையை எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரை முன்பின் காலகட்டங்களை (Nonlinear Time) உள்ளடக்கி எழுதப்பட்டிருப்பதால், கவனமாகவும் பொறுமையாகவும் வாசிக்க வேண்டுகிறேன்.

    தொடக்க காலகட்டம்

    ஈரோட்டில் ஈரோடு வெங்கட்ட நாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியினர் தினக்கூலி வேலைக்குச் சென்று, பின்னர் மளிகை கடை, அரிசி வியாபாரம் என பல வணிகம் செய்து ஈரோட்டில் வசதியான குடும்பமாகினர். இத்தம்பதிக்கு ஈ.வெ. கிருஷ்ணசாமி, ஈ.வெ. ராமசாமி என இரு மகன்களும், பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற இரு மகள்களும் இருந்தனர்.

    17 செப்டம்பர் 1879 இல் பிறந்த ஈ.வெ. ராமசாமி (ஈ.வெ.ரா), இளம் வயதில் தனது சின்னம்மா வீட்டில் சில காலம் வளர்ந்தார். இளம் வயதில் இருந்தே தாழ்த்தப்பட்ட பள்ளி நண்பர்கள் மீது அன்பு கொண்டு அவர்கள் வீட்டில் பண்டங்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1