Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Andha Akkavai Thedi...
Andha Akkavai Thedi...
Andha Akkavai Thedi...
Ebook185 pages2 hours

Andha Akkavai Thedi...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Jayakanthan (24 April 1934 – 8 April 2015), popularly known as JK, was an Indian writer, journalist, orator, film-maker, critic and activist. Born in Cuddalore, he dropped out of school at an early age and went to Madras, where he joined the Communist Party of India. In a career spanning six decades, he authored around 40 novels, 200 short stories, APART from two autobiographies. Outside literature, he made two films. In addition, four of his other novels were adapted into films by others.

Jayakanthan's literary honours include Jnanpith and Sahitya Akademi awards. He was also a recipient of Padma Bhushan (2009), India's third-highest civilian honour, the Soviet Land Nehru Award (1978), and the Russian government's Order of Friendship (2011)

Jayakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jayakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short-stories particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel. The film focussed on the plight of slum-dwellers. Although a commercial failure, it won the President's Certificate of Merit for the Third Best Feature Film in 1965. The following year he made another film based on his namesake novel Yaarukkaga Azhudhaan which had Nagesh playing the lead role. His novel Sila Nerangalil Sila Manithargal (1970) won him the Sahitya Akademi Award (for Tamil) in 1972. Later this was adapted into a film of the same name by A.Bhimsingh, which won a National Film Award. Promoted by the film's success, Bhimsingh made one more film tilted Oru Nadigai Naadagam Paarkiral, based on his namesake novel.

In 2008, Ravisubramaniyan made a documentary film on Jayakanthan, the second of its kind, and was produced by Ilaiyaraja.



https://en.wikipedia.org/wiki/Jayakanthan
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580103903948
Andha Akkavai Thedi...

Read more from Jayakanthan

Related to Andha Akkavai Thedi...

Related ebooks

Reviews for Andha Akkavai Thedi...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Andha Akkavai Thedi... - Jayakanthan

    http://www.pustaka.co.in

    அந்த அக்காவைத் தேடி...

    Andha Akkavai Thedi…

    Author:

    ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அந்த அக்காவைத் தேடி...

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    முன்னுரை

    அண்மையில் நான் எழுதிய, ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஆனால் தனித் தனியே படிக்கத் தகுந்த இரண்டு கதைகளின் தொகுதி இது. இத்துடன் தொடர்பு உடைய முதல் கதை 'நம்ப மாட்டேளே?’ இதற்கு முந்தைய தொகுதியான 'கழுத்தில் விழுந்த மாலை’யில் சேர்ந்து விட்டது.

    நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான் முக்கியம். வாராவாரம் எழுதுகிறேனா, ஒரே புத்தகமாக எழுதுகிறேனா, நிறைய எழுதுகிறேனா, நீளமாய் எழுதுகிறேனா என்பதெல்லாம் புறநிகழ்வுகளினால் ஏற்படுகிற மாற்றங்களே ஆகும்.

    குறிப்பாக அண்மையில் எழுதிய இந்தக் கதைகளுக்கு - நான் பிரபல பத்திரிகைகளில் எழுதிய கதைகளுக்கு ஏற்பட்டதை விட அதிகமான ‘ரெஸ்பான்ஸ்' இருந்தது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அதிலும் இளம் பெண்கள், உயர்நிலைக் கல்வி பயிலும் மாணவ பருவத்தினரிடமிருந்து எண்ணற்ற கடிதங்கள் வந்தன. அந்த மாணவிகளுக்கு எனது எழுத்துக்களை அறிமுகப்படுத்திய அவர்தம் ஆசிரியர்களுக்கு எனது மானசீகமான நன்றி...

    அந்தக் கடிதங்கள் யாவும் இந்தக் கதைகளில் வருகிற பெண்களை வெகுவாகப் பாராட்டி புகழ்ந்த போதிலும், 'இது சாத்தியப்படுமா? சமூகம் அனுமதிக்குமா?' என்ற கேள்வியை எழுப்பத் தவறவே இல்லை.

    பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதைமை அற்றிடும் என்ற நம்பிக்கை தான் அவசியம்.

    சமூகப் பார்வையும், சித்தாந்தப் பிடிப்பும், கடமையுணர்வும், சுயாபிமானமும் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தக் கூட்டு வாழ்க்கை முறை சாத்தியமானதே ஆகும்.

    பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம்.

    கல்வியும் அறிவும் பண்பும் திறமையும் கொண்ட நவீன கால யுவதிகளுக்கு அடிமைப்படுவது என்பது முந்தைய தலைமுறைப் பெண்களுக்குக் கை வந்திருந்ததைப்போல் இன்று கைகூடுவது சிரமம். இந்தப் பிரச்னையில் சிக்கிக் கொண்டு சமாளிப்பதைவிட, சிக்காமல் விடுதலை பெறுவதுதான் காலப்போக்கில் நற்பயன்களை உண்டாக்கும் என்று நம்புகிற பெண்கள் தோன்றியுள்ளனர்.

    தனியுடைமை ஒழிந்த சமூகத்தில் அல்லாமல் வேறெங்கும் பெண் விடுதலை சாத்தியமில்லை. எனவே பெண்கள் பிறவியிலேயே சோஷலிஸப் பண்பு கொண்டவர்களாக வருங்காலத்தில் மாறுவர்.

    இலக்கியமும் கொள்கைப் பிடிப்பும் உள்ள இளைஞர்கள் ஒன்றுபடுவதன் மூலமும், புதிய வாழ்க்கை முறைகளையும், புதிய மதிப்பீடுகளையும் தத்தம் சொந்த வாழ்க்கையிலும் கூட்டாகவும், நிறுவி நிரூபிப்பதன் மூலமும் இந்தச் சமூக மாற்றத்துக்கு, அவர்கள் போராட்டத்தின் பயன்களாகவும் விளைவுகளாகவும் புதிய கலைகளும் இலக்கியங்களும் பரிணமிக்கும் என்பது எனது நம்பிக்கை.

    அந்த நம்பிக்கையினால் உருவான பாத்திரங்களே இக்கதையில் வரும் பெண்கள்.

    இவர்களைப் போன்ற பெண்கள் உண்டா? என்று என்னிடம் கேட்பவர்களுக்கு:

    உண்டு; உண்டு... தேடுங்கள் கண்டு அடைவீர்கள் என்பதே எனது பதில்.

    - த. ஜெயகாந்தன்

    சென்னை - 78.

    6-10-85

    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்து

    1

    எனக்கு வயசு இருபத்தி ஒண்ணு... பெயர் பைரவி... என்னைப் பெத்த அம்மாவுக்கு சங்கீதத்தின் மேலே ஒரு பிரீதி... அவளுக்கு ரொம்பப் பிடிச்ச ராகம் பைரவி... நான் மூத்த பொண்ணு இல்லையோ... பிடிச்ச ராகத்தின் பெயரை எனக்கு நாமகரணம் பண்ணியிருக்காள். எனக்கும் கூட அந்தப் பெயர் பிடிக்கும்! என் பெயருள்ள ராகம்ங்கறதனாலே அந்த ராகமும் எனக்குப் பிடிக்கும்.

    அம்மா அளவுக்கு இல்லேன்னாலும் எனக்கும் சங்கீத ஞானம் கொஞ்சம் உண்டு. கற்றுக்கொண்டால் நன்றாக வரும் என்று அம்மா அடிக்கடி என்னை வற்புறுத்துவாள். அதற்கு உடன்பட்டு ஏதோ கொஞ்சம் கற்றுக் கொண்டேனே தவிர அம்மா மாதிரி எனக்குப் பாட வராது.

    அம்மாவுக்கு என்னைத் தன்னைப் போலவே ஆக்கி விட வேண்டும் என்று ஆசை. அதில் அவள் ஒருபோதும் வெற்றி அடைய முடியாது என்கிற மாதிரி எனது இயல்பு.

    அது எப்படி முடியும்? அவள் பிறந்த தலைமுறை என்ன... அவளது பெற்றோர்களின் பின்னணி என்ன... அந்தக் காலம் என்ன...? இந்தக்கால வளர்ச்சி என்ன...?

    இதிலெல்லாம் இருபத்தியோரு வயதான ஒரு பெண்ணுக்கு இணையாக என்னதான் அவளைப் பெற்றுச் சொந்தமாக்கிக் கொண்டவளாக இருந்தாலும் நாற்பது வயதைத் தாண்டிய ஒரு அம்மா இணையாக முடியுமா?

    தன்னைப்போல் என்னை ஆக்க முடியாவிட்டால் என்னவாம் இந்த அம்மாவுக்கு...? அதற்குத்தான் என்னை விட எல்லா விதத்திலும் உசத்தியாய் இன்னொரு ராகம் பிறந்திருக்கிறாளே; வசந்தா...!

    நான் போன வருஷமே பி.ஏ., முடித்து விட்டேன். வசந்தா இந்த வருஷம்தான் சேர்ந்திருக்கிறாள்.

    நானும் படிப்பு விஷயத்தில் அம்மா சொல்வதை யெல்லாம் கேட்டுத்தான் படித்தேன். படித்தது போதும் என்று நிறுத்திவிட்டார்கள்... நானும் நின்றுவிட்டேன்.

    கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்ற பேச்சு அடிபட்டவுடன், என் அறிவு வேலை செய்தது.

    நான் படித்த படிப்பு, நான் சேகரித்த அனுபவங்கள் யாவும் இந்தக் கல்யாணம் என்கிற பந்தத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கிற அறிவை எனக்குப் போதித்துள்ளன.

    நான் இது விஷயமாக என் சிநேகிதர்களிடம் - அவர்களில் ஆண்களும் உண்டு; பெண்களும் உண்டு - நிறையவே பேசி இருக்கிறேன். வசந்தாவிடம் கூடப் பேசியிருக்கிறேன்.

    என்னுடைய வாதம் இதுதான் - இது ஏதோ இந்த பைரவியின் சொந்த அபிப்பிராயம் மட்டும் அல்ல. இந்த மண மறுப்புக் கொள்கையை ஆதரித்து எனது சிநேகிதர்களிடையே ஒரு புதிய கோஷ்டியே உருவாகி வருகிறது.

    ஆனால் வசந்தா இந்தக் கட்சியைச் சேர்ந்தவள் அல்ல.

    கல்யாணம் என்பது பெண்களை ஆண்களுக்கு நிரந்தரமாக அடிமைப்படுத்தி, அவளைக் கடைத்தர ஜீவனாக்கும் சதி! - என்று நான் சொன்னபோது அம்மாவோடு சேர்ந்து கொண்டு ஆக்ரோஷமாக மறுத்தாள் வசந்தா. அந்த மறுப்பில் அவளை நான் கண்டு கொண்டேன் - இது தொழுவத்துப் பசு என்று.

    என்ன வெட்கமில்லாமல் சொன்னாள் வசந்தா! - ஆண்களுக்குப் பெண்கள் அடிமை என்பதை அவள் ஒப்புக் கொள்ள மாட்டாளாம்! ஆனால் பெண் என்பவள் யாராவது ஒரு ஆணுக்கு அடிமையாகத்தான் வேண்டுமாம்.

    இவளது இந்த அரிய கண்டுபிடிப்புக்கு அம்மா பெரிசா கைதட்டிப் பாராட்டினாள்.

    அதுக்கு என்ன அர்த்தம்? பெண்களெல்லாம் ஆணுக்கு அடிமை இல்லை! ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணுக்கும் அடிமைன்னா, கடைசியிலே ஒட்டுமொத்தமா பெண்களெல்லாம் ஆண்களுக்கு அடிமைன்னு ஆகறதா இல்லையா...?

    வசந்தா அம்மாவுக்கு அடங்கிய பொண்ணுன்னு பேர் வாங்கணும்னு தீர்மானம் பண்ணியிருப்பவள்! நான் அப்படி இல்லை.

    ஏதோ படிப்பு விஷயத்தில், சங்கீத விஷயத்தில் அம்மாவிடம் யோசனை கேட்பேனே தவிர உடை விஷயத்தில், ஊர் சுற்றுகிற விஷயத்தில், நண்பர்களோடு சுதந்திரமாகப் பழகுகிற விஷயத்தில் எல்லாம் அம்மாவின் சொற்களை மீறி நடந்து, இதற்குள்ளேயே அடங்காப்பிடாரி என்று பெயரெடுத்து விட்டவள் நான்.

    பின்னே என்ன? வசந்தா மாதிரி என்னால் புடவையைச் சுற்றிக் கொண்டு திரிய முடியாது. நான் குர்தாவும் ஜீன்ஸும்தான் அணிந்து கொள்கிறேன். இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது.

    - என்னுடைய நண்பர்கள் பலர் மோட்டார் பைக்குகளில் வருகிறார்கள்... நான் காலேஜுக்குப் போகிறவரை சைக்கிளில்தான் போனேன்... அந்தப் பழக்கம் இப்போதும் நீடிக்கிறது... இதில் என்ன தப்பு...?

    'காலேஜ் படிப்பு எல்லாம்தான் முடிச்சாச்சே... பேசாமல் பாவாடை தாவணி உடுத்திக்கொண்டு வீட்டில் பதவிசாக இருக்க வேண்டும்' என்கிறாள் அம்மா...

    முடியாது! முடியாது! முடியாது! - என்று மூணு தடவை சொல்லிவிட்டேன்.

    அதே மாதிரி வசந்தாவும் 'என்னால் சைக்கிளில் போக முடியாது! ஜீன்ஸ் போட்டுக்கொள்ள முடியாது! படிப்பு தவிர வேறெதிலும் என்னால் ஈடுபட முடியாது' என்று சொல்லிவிட்டாள். அம்மாவிடம் கை தட்டு வாங்கிக் கொண்டாள்.

    அப்பா என் கட்சி... இரண்டே பெண் குழந்தைகளைப் பெற்றதனாலேயோ என்னமோ... அப்பா என்னை ஒரு ஆண்பிள்ளை போல் வளர்த்துவிட்டார். ஆணுக்குப் பெண் அடிமை இல்லை என்கிற என் வாதத்தை அவர் ஆதரிக்கிறார். அவர் அம்மாவை அடிமையாக வைத்திருப்பது போன தலைமுறை விஷயம். அதில் தலையிட நமக்கு அதிகாரம் இல்லை.

    தலைமுறைக்குத் தலைமுறை நியாயம் மாறுகிறது. இதுவரை மாறாதிருந்த அநியாயங்கள் இந்தத் தலைமுறையில் மாறத்தான் போகிறது என்ற நம்பிக்கையில்தான் இவர்களையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது. அப்பாதான் என் கட்சியே தவிர நான் ஒன்றும் அவர் கட்சி அல்ல. இந்தச் சமூக ஆண் வர்க்கப் பிரதிநிதிகளில் அவரும் ஒருவர்... ஆனாலும், எனக்கு அப்பா...

    அவருக்கு ஒரு பெரிய கம்பெனியில் சார்ட்டர்டு அக்கவுண்டென்ட் உத்தியோகம். தாத்தா சம்பாதித்து வைத்த சொந்த வீடு. அவர் வேலை செய்கிற ரகம் அல்ல. பல பேரை வேலை வாங்குகிறவர் என்பதால், செய்கிற உத்தியோகத்தில் அலுப்பே கிடையாது. கார் உண்டு. டிரைவர்கள் உண்டு. சிப்பந்திகள் உண்டு... ஒரே ஜபர்தஸ்து... இன்னும் பதினைந்து வருஷம் இருக்கிறது அவர் ரிடையர் ஆவதற்கு...

    இளந் தம்பதிகளுக்குக் குழந்தைகளாகப் பிறக்கறதனாலே அந்தப் பெற்றோர்களுக்குத் தங்கள் வயசான காலத்தில் இந்தக் குழந்தைகளோட துணை தங்களுக்கு வேணும்ங்கற உணர்ச்சியே தோன்றுவதில்லை போலிருக்கு... அவசர அவசரமாக வளர்த்து, யார் கையிலேயாவது பிடிச்சுக் குடுத்துட்டால் எஞ்சியிருக்கிற இளமைக் காலத்தை ஏக போகமாகக் கொண்டாடலாம்னு எண்ணம் போலிருக்கு... யார் வேண்டாம்னு சொல்றா... அதற்குப் பெத்த குழந்தைகள் கூட இருக்கிறது எப்படி இடைஞ்சலாகும்?

    நானே ஒரு பையனாக இருந்தால்...? ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் இந்த வீட்டை விட்டுட்டு நான் வேற வீட்டுக்குப் போயிடணும்னு நினைப்பாளோ?

    அப்பா சொல்லுகிறார்:

    உங்க அம்மா சொல்றபடியெல்லாம் கேக்கறதுக்கு வசந்தா இருக்காள்... நீ நான் சொல்றதைக் கேளு... உனக்குக் கல்யாணம் ஆகறபோது ஆகட்டும். நான் ஒண்ணும் அந்தச் சிரமத்தை எடுத்துக்கறதாக இல்லை - நீ இவ்வளவும் சொன்னப்பறம்... அதுக்காக நீ எப்பவும் குழந்தையாகவே இருக்க முடியாது... எங்க ஆபீசிலேயோ இல்லாட்டால் வேற எங்கேயாவதோ உனக்கு உத்தியோகம் பார்த்து வைக்கிறேன்... நீ வேலைக்குப்போ... என்ன சொல்றே?

    நானும் எனது சிநேகிதர்களும் சேர்ந்து தீர்மானித்திருக்கிற முடிவை அப்பாவிடம் தெரிவித்தேன்.

    "நாங்கள் கல்யாணமும் செய்து கொள்ள முடியாது? வேலைக்கும் போக முடியாது. என்றென்றைக்கும் இந்த வீட்டில் ஓர்

    Enjoying the preview?
    Page 1 of 1