Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattile Gandhi Kathai
Paattile Gandhi Kathai
Paattile Gandhi Kathai
Ebook92 pages22 minutes

Paattile Gandhi Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பர் அழ.வள்ளியப்பா இந்த அரிய “பாட்டிலே காந்தி கதை" என்ற நூலைக் குழந்தைகளுக்காகவே இயற்றியிருக்கிறார். குழந்தைகளுக்காகப் பல பாடல்களைப் பாடிக் ‘குழந்தைக் கவிஞர்' என்று தமிழ் மக்கள் அன்புடன் பாராட்டும் நிலையில் இருப்பவர் இவர். குழந்தையின் உள்ளப் பாங்கை நன்கு அறிந்து, அவர்களுக்கு எளிதில் விளங்கும் சொற்கள் ஆண்டு, சிறிய சிறிய வாக்கியங்களை அமைத்து இதைப் பாடியிருக்கிறார். குழந்தைகள் தாளம் போட்டு உற்சாகமாகப் பாடும் வகையில் பாடல்கள் அமைந்திருக்கின்றன. நீதிகளையும் தத்துவங்களையும் விரித்துக் கூறிச் சோர்வடையச் செய்யாமல் உணர்ச்சியூட்டும் வகையில் நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கதையைப் பின்னியிருக்கிறார். குழந்தையோடு குழந்தையாகப் பழகிப் பெற்ற அனுபவமும், பாடிப் பாடிக் கைவந்த பழக்கமும் அழ.வள்ளியப்பாவின் பாடல்களுக்கு மதிப்பை உண்டாக்கியிருக்கின்றன.
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580123106493
Paattile Gandhi Kathai

Read more from Kulandai Kavignar Al. Valliappa

Related to Paattile Gandhi Kathai

Related ebooks

Reviews for Paattile Gandhi Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattile Gandhi Kathai - Kulandai Kavignar AL. Valliappa

    https://www.pustaka.co.in

    பாட்டிலே காந்தி கதை

    Paattile Gandhi Kathai

    Author:

    அழ. வள்ளியப்பா

    AL. Valliappa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kulandai-kavignar-al-valliappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசிரியர் முன்னுரை

    கண்ணனும் அண்ணனும்

    கண்ணனின் ஆசை

    காந்தி பிறந்தார்!

    அம்மாவும் அப்பாவும்

    அம்மாவிடம் அன்பு

    அப்பாவின் புத்தகம்

    பள்ளியில் நடந்தது

    அரிச்சந்திரன் நாடகம்

    விளையாட ஒரு தோழி!

    அபராதம்

    ஆடு கத்தியது!

    மன்னிப்புக் கடிதம்

    அன்னையின் அனுமதி

    முதல் பேச்சு

    எதிர்ப்பு

    கப்பல் பயணம்

    நண்பரின் தொப்பி

    நண்பரின் கோபம்

    ஆங்கிலக் கனவான்

    யாரிடம் சொல்வேன்?

    சமையல் வேலை

    முதல் வழக்கு

    கிடைக்காத வேலை

    தென் ஆப்பிரிக்கா பயணம்

    தலைப்பாகைத் தகராறு

    வெளியில் தள்ளினர்

    தொல்லைகள் தொடர்ந்தன!

    முதல் சத்தியாக்கிரகம்

    இந்தியா திரும்பினார்

    கொடிய சட்டம்

    சென்னையில் காந்திஜி

    படுகொலை

    ஒத்துழையாமை

    சௌரி சௌரா

    திட்டங்கள்

    எளிய வாழ்க்கை

    தண்டி யாத்திரை

    இரண்டாம் உலகப் போர்

    வெள்ளையனே, வெளியேறு!

    கஸ்தூரி மறைந்தார்

    புரட்சி

    நாடு பிரிந்தது!

    வெள்ளையர் வெளியேறினர்!

    விடுதலை பெற்றோம்

    ஜோதி மறைந்தது!

    கண்ணன் சொல்கிறான்

    காந்தியுகக் கவிஞர்

    உயர்திரு. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை

    அவர்களின்

    வாழ்த்து

    மாந்தர்கள் உலகினிலே-எங்கும்

    மகிழ்வுடன் குலவிடவும்

    போர்பயம் நீங்கிடவும்-மனிதப்

    பொறுப்புகள் ஓங்கிடவும்

    மதவெறி மொழிவெறியும்-மற்றும்

    இனவெறி அழிவுறவும்

    அன்பறம் செழித்திடவும்-கெட்ட

    அகந்தையை அழித்திடவும்

    சாந்த குணம்வேண்டும்-அத்துடன்

    சத்திய மணம் வேண்டும்.

    அத்தகு நல்லறிவை-எளிதில்

    அளித்திட வல்லதெனும்

    பள்ளிப் படிப்பினையே-இளைஞர்கள்

    பயின்றிடக் கொடுப்பதுவாய்

    கதைகளைச் சொல்வதுவே-மிக்காம்

    களிப்புள கல்வியதாம்.

    அதற்குள சிறந்தகதை-காந்தி 

    அண்ணல் பிறந்தகதை.

    காந்தியின் சரித்திரந்தான்-சிறந்த

    கல்வியை விரித்துரைக்கும்.

    அந்தச் சரித்திரத்தை-நல்ல

    அறிவுப் பொருத்தமுடன்

    ‘பாட்டிலே காந்திகதை’-எனப்

    படங்களும் சேர்ந்ததுவாய்

    அறிஞர்கள் மெச்சும்படி-வெகு

    அழகுற அச்சடித்த

    இளைஞர் இலக்கியத்தைப்-பொலிவுற

    இயற்றிய நலக்குரியான்

    ‘குழந்தைக் கவிஞர்' எனத்-தமிழ்த்தாய்

    குலவிடும் தவப்புதல்வன்

    தெள்ளிய பாவாணன்-அழ

    வள்ளியப் பாவென்னும்

    அன்புள என் நண்பன்-கற்றுணர்ந்(து)

    அடங்கிய மனப்பண்பன்.

    குழந்தை எழுத்தாளர்-சங்கம்

    கூட்டி வளர்த்தவனாய்,

    சிறப்புள எழுத்தாளர்-பலர்

    தோன்றிட வழிசெய்தோன்.

    கவித்ததிறம் வளர்ந்திடவும்-அதில்

    கலைத்திறம் கிளர்ந்திடவும்

    சீரும் சிறப்போடும்-மிக்க

    செல்வச் செழிப்போடும்

    உடல்நலப் பலத்தோடும்-தெய்வம்

    உறைகிற மனத்தோடும்

    பல்லாண்டு வாழ்ந்திருக்க-வாழ்த்திப்

    பரமனைப் பணிந்திடுவோம்.

    -வெ. இராமலிங்கன்

    ‘காந்தி மகான் கதை' ஆசிரியர் கலைமணி

    உயர்திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின்

    ***

    வாழ்த்து

    பாட்டினில் காந்தி கதைபாடி-தமிழ்ப்

    பண்பு நிறைந்த கவிபாடி,

    நாட்டினில் பொய்கள் நலிந்தோடி—ஒரு

    நல்ல பரம்பரை உருவாக,

    அள்ளிக் குடித்திடும் நீர்போலே-மிகத்

    தெள்ளத் தெளிந்த மொழியாலே,

    பிள்ளைக்குப் பாலுடன் புகட்டிடவே-அழ

    வள்ளியப் பாகவி பாடிவிட்டார்.

    வள்ளியப்பா பாப் பள்ளியப்பா-அதில்

    வாசித்த

    Enjoying the preview?
    Page 1 of 1