Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pillai Paruvathiley
Pillai Paruvathiley
Pillai Paruvathiley
Ebook83 pages26 minutes

Pillai Paruvathiley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன். பெரியோரின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்வதால், நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வுமனப்பான்மை நீங்குகிறது; மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழவேண்டும். அவர்களால் நாடும் உலகும் நற்பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லாருடைய ஆசையும் இதுவே.

Languageதமிழ்
Release dateJun 14, 2022
ISBN6580123106492
Pillai Paruvathiley

Read more from Kulandai Kavignar Al. Valliappa

Related to Pillai Paruvathiley

Related ebooks

Reviews for Pillai Paruvathiley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pillai Paruvathiley - Kulandai Kavignar AL. Valliappa

    https://www.pustaka.co.in

    பிள்ளைப் பருவத்திலே

    Pillai Paruvathiley

    Author:

    குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா

    Kulandai Kavignar Al. Valliappa

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kulandai-kavignar-al-valliappa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. குதிரையை அடக்கிய சிறுவன்

    2. சிறுமியின் நாட்டுப்பற்று

    3. சிறுவன் தீட்டிய திட்டம்

    4. விளக்கும் கணக்கும்

    5. மூக்கும் மூடியும்

    6. ஒன்பது வயதில் நாடக ஆசிரியர்!

    7. தந்தையும் பாட்டியும்

    8. அன்னை கொடுத்த அறை!

    9. சுவாமியார் சொன்ன அதிசயம்

    10. வீட்டிலே நடந்த நாடகம்

    11. மோட்டார் மன்னன்

    12. பறந்து காட்டியவன்

    13. வயிற்றிலே ஆடு!

    14. பறவைக்கு விடுதலை

    15. அஞ்சா நெஞ்சன்

    16. ஆணியும் ஆல்பர்ட்டும்

    17. பொம்மைக்குக் கண் வைத்தவள்

    18. குதிரையின் மகிழ்ச்சி

    19. பனிமலைப் புலி

    20. படகுப் பயணம்

    புத்தகத்தைப் பற்றி...

    பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன்.

    பெரியோரின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்வதால், நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வுமனப்பான்மை நீங்குகிறது; மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.

    இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழவேண்டும். அவர்களால் நாடும் உலகும் நற்பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லாருடைய ஆசையும் இதுவே.

    இந்நூல் நல்ல முறையில் உருவாகப் பெரிதும் உதவிய புலவர் திரு. தணிகை உலகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    மாணவர்களின் கல்வி நலத்தில் கருத்துமிக்க பெருமக்கள் இப்புத்தகத்திற்கு அன்பையும் ஆதரவையும் அளித்தருள வேண்டுகிறேன்.

    சென்னை,

    14-11-68

    அழ. வள்ளியப்பா

    1. குதிரையை அடக்கிய சிறுவன்

    கிரேக்க நாட்டிலே ஒரு பகுதியை, பிலிப் என்ற ஓர் அரசர் ஆண்டுவந்தார். ஒருநாள் அவர் முன்னே, ஏவலர் ஒரு குதிரையைக் கொண்டுவந்து நிறுத்தினர். அதன் நிறம் நல்ல கறுப்பு. நெற்றியிலே நட்சத்திரம் போல் வெள்ளைப் புள்ளி இருந்தது. பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதனுடைய பார்வை பயங்கரமாக இருந்தது. அந்தக் குதிரை பொல்லாத முரட்டுக்குதிரை என்பதைப் பார்த்தவுடனேயே அரசர் தெரிந்துகொண்டார்.

    அரசே, இதை இங்கே கொண்டுவருவதற்குள் நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமன்று; ஆனாலும், இதை வசப்படுத்திவிட்டால் இது போர்க்களத்திலே அஞ்சாது எதிரிகளை எதிர்த்து விரட்டப்பயன்படும் என்றான் பிடித்துவந்த ஆட்களிலே ஒருவன்.

    உடனே அரசர், சில குதிரை வீரர்களை வர வழைத்தார். அவர்கள் ஒவ்வொருவராக அந்தக் குதிரையை அடக்கப் பார்த்தார்கள். ஒருவராலும் முடியவில்லை. ஒரு வீரனுக்குத் தலையிலே கடுமையான அடிபட்டது. மற்றொருவனுக்கு முழங்காலில் இரத்தம் வழிந்தது. இன்னொருவனுக்கு முன் பற்கள் உதிர்ந்துவிட்டன. இப்படி எல்லாரும் தோல்வி அடைந்தனர்.

    அப்போது திடீரென்று, அரசரின் பக்கத்திலே உட்கார்ந்திருந்த அவருடைய மகன் எழுந்தான் விரைவாக ஓடினான்; குதிரையின் அருகிலே போய் நின்றான். அவனைப் பார்த்ததும், எல்லாரும் திடுக்கிட்டனர். "என்ன, என் மகனா! பெரிய பெரிய வீரர்களாலேயே இந்தக் குதிரையை அடக்க முடியவில்லையே! சிறுவனாகிய இவனுக்கு ஏன்

    Enjoying the preview?
    Page 1 of 1