Irunda Veedu
By Tamilvanan
()
About this ebook
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பங்களா. அதில் ராஜாபாதர், கண்ணுச்சாமி, அயோத்தி என்னும் மூன்று மர்ம நபர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வரும் ராஜாபாதரின் மகனிடம் ஒரு தோல்பை உள்ளது.
அந்த தோல்பையை வைத்து தான் கதை ஆரம்பமாகிறது.
அந்த தோல்பைக்கும் அந்த சிறுவனுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. இதில் இன்னும் சில சுவராசியமான கதாபாத்திரங்கள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம். வாருங்கள் உள்ளே...
Read more from Tamilvanan
Iyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Maraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Irunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsTokyo Roja Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsInbavalli Ithuva Un Mudivu? Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsNewyorkil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsUnna Koduthittan Uyirgalai! Rating: 0 out of 5 stars0 ratingsTamilvananin Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsBayangara Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsPidi 22 Rating: 5 out of 5 stars5/5Ennai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsFrankfurtil Tamilvanan Rating: 1 out of 5 stars1/5
Related to Irunda Veedu
Related ebooks
Sarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsAvalum Solval Theerpu! Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsNayakkar Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsVer Pidikkum Mann Rating: 0 out of 5 stars0 ratingsSathamillamal Rathamillamal... Rating: 5 out of 5 stars5/5Uyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNooru Kodi Roopai Vairam Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Concrete Manasugal Rating: 4 out of 5 stars4/5Appusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsCurrency Vettai Rating: 5 out of 5 stars5/5Innoruthi + Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Paritchai Ezhuthukirar! Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Human Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsKudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Megalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsAugust Thiyagi Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Irunda Veedu
0 ratings0 reviews
Book preview
Irunda Veedu - Tamilvanan
http://www.pustaka.co.in
இருண்ட வீடு
Irunda Veedu
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 1
குரைக்கும் நாய், கூவும் கோட்டான், ஊளையிடும் குள்ள நரி, ஓலமிடும் சாக்குருவி, கத்தும் தவளை, கதறும் ஆந்தை - இத்தனையும் இருந்தால்தான் இரவின் பயங்கரம் ஏற்றம் பெற்றிருக்கும் என்று இல்லை!
மயான அமைதி நிலவிய அந்தப் பகுதியிலேயும் மகா பயங்கரம் மண்டிக் கிடந்தது.
ஊரையே ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டுத் தனியாக ஒதுங்கி நின்ற அந்தப் பொட்டல் வெளியிலே
ஒரு பங்களா - ஒரே ஒரு பங்களாதான். எந்தக் கொழுத்த பணக்காரன், எதற்காக, எப்போது, ஏன் அந்த இடத்தில் அந்தப் பங்களாவைக் கட்டினானோ, தெரியாது. பழைய பாணியில் கட்டப்பட்டிருந்த அந்த முரட்டுக் கட்டடம், இருளில் மூழ்கிக் கிடந்தாலும், அதன் ராட்சச உருவம், அந்த இரவிலும் கம்பீரமாகத் தெரிந்தது.
அப்போதுதான் அந்தப் பகுதியிலேயும் ஊர் விரிந்து கொண்டு வருகிறது என்பதற்கு அறிகுறியாக, அரையும் குறையுமான அஸ்திவாரங்கள் அங்கங்கே தென்பட்டன. வெற்று மைதானத்தில் எவரையாவது வெட்டிப் புதைத்தால் கூடத் தெரியாதபடி, அங்கே, சூன்யம் தனி ஆட்சி செலுத்தியது.
அப்போது, சரியாக என்ன மணி இருக்கும் என்று தெரியவில்லை. அங்கிருந்த நிலைமையை வைத்துக்கொண்டு, பன்னிரண்டு மணி நள்ளிரவு என்று சொல்லலாம்.
அந்த நட்ட நடுநிசியில் -
அந்த முரட்டுப் பங்களாவுக்குள்ளிருந்து மட்டும் எவரோ இருக்கிறார்கள் - அதுவும் நன்றாக விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை, இரண்டாவது மாடியில், ஒரு பக்கமாக மட்டும் எரிந்து கொண்டிருந்த மின்சார விளக்கு வெளிச்சத்தில் பட்டுத் தெறிக்கும் நிழலாட்டங்கள் தெளிவுபடுத்தின.
இந்த நள்ளிரவில், மனித நடமாட்டமற்ற அந்தப் பொட்டல் வெளியிலுள்ள தனி பங்களாவில், அவர்களுக்கு என்ன அப்பேர்ப்பட்ட வேலை? அவர்கள் யார்? அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
அவ்வளவு பெரிய பங்களாவில் மூன்றே மூன்று பேர்கள் மட்டும் ஒரு மூலையில் கூடியிருந்தார்கள். அவர்களுக்கு நடுவிலே, மேஜை மின்சார விளக்கு, ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் கூடியிருந்த அந்த மூவருள் ஒருவர் -
நடுத்தர வயதுக்காரர். அவர் ஐம்பது வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார். வெளுத்த தோலும் உளுத்த நரம்பும் இழுத்துக்கட்டிய அவர் தேகத்தில் கட்டுக் குலையவில்லை. அவர் முகத்திலிருந்த முரட்டுத்தனம் முழுவதும் மங்கவில்லை. அவர் தலைமயிர், கறுப்பும், வெள்ளையும் கலந்த கதம்பமாயிருந்தது. அது, தொய்ந்து தொங்கிக் கிடக்கவில்லை. சுருண்டு விறைத்துக் கொண்டிருந்தது. அவர் முகத்திலே மீசையில்லை. ஆனால், அந்த முகத்திலிருந்த கம்பீரம், கற்றைக் கறுப்பு மீசை வைத்திருக்கும் கட்டுமஸ்தான ஆளுக்குக்கூட இருக்காது! அவருக்குப் பக்கத்திலே -
ஒரு தோல் பெட்டி.
அந்தத் தோல் பெட்டியைக் கொஞ்சம் தூக்கியிருந்த தம் தொடைக்கடியிலே போட்டு, நன்றாக அமுக்கி இடுக்கிக் கொண்டிருந்தார் அவர்!
அவருக்குப் பக்கத்திலே கறுப்புச் சட்டை போட்ட கம்பீரமான ஆசாமி ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவன் மற்ற இரண்டு பேர்களையும்விடப் பலசாலியாக இருப்பான் போலிருந்தது. முறுக்கிவிடப்பட்ட அவன் முரட்டு மீசையில் எலுமிச்சம்பழத்தை வைத்தால் அப்படியே நிற்கும்! அவன் தலைமயிர் ஒரு பக்கம் மட்டும் சிலுப்பிக்கொண்டதைப்போல் கலைந்திருந்தது. அவன் அடர்ந்த புருவம், அடிக்கடி உயர்ந்து இறங்கியது. செதுக்கி வைத்திருந்ததைப் போன்றிருந்த எடுப்பான அவன் மூக்கு, அடிக்கடி விரிந்து மூடியது. அவன் அசைவுகளிலெல்லாம் கர்வம்!
அவர்கள் இருவருக்கும் எதிர்த்தாற்போலிருந்தவன் அவர்கள் இருவரையும்விட வயதில் குறைந்தவன். இப்போதுதான் அவன் மீசை கறுத்துக்கொண்டு வந்தது. அகன்ற நெற்றியும், குறுகுறுப்பான அவன் பார்வையும் அவனை ஒரு நல்ல அறிவாளி என்று காட்டியது. அவன் அறிவு - அவன் நிரம்பவும் சுறுசுறுப்பாக இருந்தான்.
இப்படி வயதுப் பொருத்தமில்லாத அந்த மூன்று கூட்டாளிகள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?
மூன்று பேர்கள் கையிலும் சீட்டுகள் இருந்தன. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கரன்ஸி நோட்டுக் கற்றைகள் இருந்தன. உழைத்து உழைத்து ஓடாய் மெலிந்து, உடலைப் பிழிந்து கண்ணீரும் செந்நீரும் கொட்டும் கடும் உழைப்பாளிகளின் கரத்திலே சிக்காத கரன்ஸி நோட்டுகள், கற்றை கற்றையாக அந்தக் கண்ணியமற்றவர்களிடம் களிநடம் புரிகின்றன!
அந்த மூன்று பேர்களின் கையை விட்டுக் கைக்குச் சீட்டுகள் மாறும் வேகத்திலேயே கரன்ஸி நோட்டுகளும் மாறிக் கொண்டிருந்தன.
என்ன ராஜாபாதர், தோல் பெட்டிக்குள் இன்னும் எவ்வளவு வைத்திருக்கிறாய்
என்று அந்த நடுத்தர வயதுக்காரரைக் கேட்டான் கறுப்புச்சட்டைக்காரன்.
நடுத்தர வயதுக்காரரின் பெயர், ராஜாபாதர்.
அதற்கு ராஜாபாதர், எங்கே கண்ணுசாமி, அடிக்கிற அதிர்ஷ்டமெல்லாம் அயோத்திக்குத்தான் அடிக்கிறது. நான் பெட்டிக்குள்ளே இருந்துதான் எடுக்கிறேனே தவிர, போடுகிற மாதிரி ஒன்றையும் காணோமே
என்ற அங்கலாய்த்துக் கொண்டார்.
கறுப்புச்சட்டைக்காரன் பெயர், கண்ணுசாமி.
இருவருக்கும் இளையவன், அயோத்தி.
அயோத்தி, ஆட்டத்திலேயே கண்ணாய் இருந்தான். அவன் அநாவசியமாக அவர்களோடெல்லாம் ஒன்றுமே பேச்சுக் கொடுக்கவில்லை.
ஆனால், கண்ணுசாமிதான் விடாமல், ஆமாம், ஆமாம், அயோத்திதான் வாருகிறான்
என்று வம்புக்கு இழுத்தான். அப்போது அவன் குரலிலே தொனித்த கடுமை, தெளிவாகத் தெரிந்தது.
நீங்களுந்தான் வாருங்களேனப்பா, ஏன் இப்படி வயிற்றெரிச்சல் படுகிறீர்கள்?
என்ற வெடுக்கென்று கேட்டான் அயோத்தி.
இதில் வயிற்றெரிச்சல் படுவதற்கெல்லாம் என்னப்பா இருக்கிறது? எல்லாம், வருகிற காலம் வந்தால் வருகிறது; போகிற காலம் வந்தால் போகிறது
என்ற அவனைச் சமாதானப்படுத்துவதைப்போல் சொன்னார் ராஜாபாதர்.
ஆனால், அதே சமயத்தில், கண்ணுசாமியைப் பார்த்து அவர் கண் சிமிட்டியதற்கும், அதற்கு அவன் கடைவாய் விரித்துச் சிரித்துவிட்டு, அயோத்தி தலை குனிந்திருந்தபோது அவனை உருட்டி விழித்து முறைத்துப் பார்த்ததற்கும் என்ன தொடர்போ, தெரியவில்லை!
ராஜாபாதரின் செய்கையில் இருந்த பரபரப்பும் பதற்றமும், அவர் ஒரு நிலையில் இல்லை என்பதைக் காட்டிக் கொடுத்தன. அவர்,