Maraintha Nagaram
By Tamilvanan
()
About this ebook
ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஷீலாவிற்கு ஒரு நாள் அவளின் தாய் மாமன் ஜெய்ப்பூர் கேளப்பனிடமிருந்து ஒரு பார்சல் வருகிறது. அது ஒரு மிகப் பெரிய சாவி!! நகைக் கடைக்காரர் அது ஒரு போலி என்று கூறுகிறார். கலைப்பொருள் சேகரிக்கும் இடத்தில் சுவராஸ்யம் இல்லாமல் இது போலியாக இருக்கலாம் என்று கூறி விடுகிறார். ஷீலாவிற்கு தெரிந்த புரபஸரிடம் கேட்க, அப்பொழுது அதிரடியாக ஒரு பணக்காரர் நுழைந்து அந்த சாவிக்கு அதிகமான விலை பேசுகிறார். புரபஸர், இந்த சாவி ஒரு மிகப் பெரிய பொக்கிஷத்தின் சாவியாக இருக்கலாம் என்று கூற, ஷீலாவின் ஆர்வம் அதிகமாகிறது. அவளும், காதலன் கோமானுடன் ஜெய்ப்பூர் செல்கிறாள். அதற்குப் பிறகு நடந்தது என்ன? பரபரப்பான கதையைப் படியுங்கள்!!!
Read more from Tamilvanan
Hello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsInnoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Puyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Sankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsFrankfurtil Tamilvanan Rating: 1 out of 5 stars1/5Parisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsMaruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsInbavalli Ithuva Un Mudivu? Rating: 0 out of 5 stars0 ratingsAandhai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsNewyorkil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Maraintha Nagaram
Related ebooks
Jaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhali… Ennai Kaadhali… Rating: 0 out of 5 stars0 ratingsHouseful Rating: 5 out of 5 stars5/5Kanavu Paalam Rating: 0 out of 5 stars0 ratings"Pennagadathin Siva Ragasiyam" Rating: 0 out of 5 stars0 ratingsAndha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsMahabalipurathil Marupadi Narasimma Pallavan Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Karuppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsPattikkattu Krishnan Rating: 0 out of 5 stars0 ratingsVaaththiyaaramma Rating: 0 out of 5 stars0 ratingsMaayamaga Pogirargal Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Vidiyatha Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsSowbarnika Rating: 0 out of 5 stars0 ratingsIrandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsAavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Ennam Sivappaagirathu Rating: 0 out of 5 stars0 ratingsThamaraikulam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Muyandrean... Mudiyavillai! Rating: 5 out of 5 stars5/5Kaala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsVanji Nagar Vanji Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5
Reviews for Maraintha Nagaram
0 ratings0 reviews
Book preview
Maraintha Nagaram - Tamilvanan
http://www.pustaka.co.in
மறைந்த நகரம்
Maraintha Nagaram
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
http://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 1
அழகி ஷீலாவுக்குத் திடீரென்று ஒருநாள் ஒரு பெரிய பார்சல் வந்தது. அவள் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது தபால்காரர் அந்தப் பார்சலைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுக் கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்விட்டார். பார்சலில் என்ன இருக்கும் என்று அவள் மிக வியப்புடன் பார்த்தாள்.
அவளால் ஊகம் செய்ய முடியவில்லை.
பார்சல் எங்கிருந்து வந்தது என்று பார்த்தாள். ஜெய்ப்பூரிலிருந்து வந்திருந்தது. யாரோ ஒரு வழக்கறிஞர் அதை அவளுக்கு அனுப்பியிருந்தார். அந்த வழக்கறிஞரை அவளுக்கு முன்பின் தெரியாது. ஆனால் பார்சல் அவளுக்குத்தான் அனுப்பப்பட்டிருந்தது!
அவள் பார்சலைப் பிரித்தபோது, அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருந்த மற்ற பெண்கள் அவளைச் சுற்றிக் கொண்டார்கள்.
பார்சல் யாரிடமிருந்து வந்திருக்கிறது?
என்று கேட்டாள் ஒரு பெண். அவள் பெயர் விமலா.
தெரியாது
என்று சொல்லிக் கொண்டே பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தாள் ஷீலா.
பார்சலில் என்ன இருக்கிறது?
என்று கேட்டாள் மற்றொருத்தி. அவள் பெயர் பத்மா.
தெரியவில்லை
என்றாள் ஷீலா.
ஷீலாவின் காதலர் அனுப்பியிருப்பார்! அதை நாம் பார்க்கலாமோ கூடாதோ?
என்றாள் மற்றொருத்தி. அவள் மலையாளப் பெண். அவள் பெயர் ஞானம்.
என் காதலன் ஜெய்ப்பூரில் இல்லை
என்றாள் ஷீலா. அவள் பார்வை பார்சலின் மீதே பதிந்திருந்தது.
பார்த்தாயா, ஷீலாவின் காதலர் ஜெய்ப்பூரில் இல்லை என்று பதில் வந்துவிட்டது. பார்சல் ஜெய்ப்பூரிலிருந்து வந்திருக்கிறது என்பது தெரிந்துவிட்டது
என்றாள் விமலா.
ஜெய்ப்பூரில் இப்போது யார் இருக்கிறார்கள்?
என்று கேட்டாள் பத்மா.
ஜெய்ப்பூரில் எனக்குத் தெரிந்தவர்கள் இப்போது யாரும் இல்லை!
என்றாள் ஷீலா.
இப்படிச் சொல்லிக்கொண்டே பார்சலைப் பிரித்து விட்டாள். பார்சலில் இருந்த பொருள்
ஒரு பெரிய தங்கச்சாவி. மிகவும் பருமனான தங்கச்சாவி. ஏதோ ஒரு பெரிய கோயில் கதவுக்குப் போடப்படும் சாவியைப்போல் இருந்தது அது. அந்தத் தங்கச் சாவியில் அழகிய சித்திர வேலைப்பாடுகள் அடங்கியிருந்தன. பழைய காலத்துக் கலைப்பொருளைப்போல் இருந்தது அந்தச் சாவி!
சாவியை ஷீலா திருப்பித் திருப்பிப் பார்த்தாள். மிகவும் வேடிக்கையாக இருந்தது.
தங்கச் சாவியைப் போல் இருக்கிறது
என்றாள் அவள்.
அதை வாங்கிப் பார்த்த மற்ற பெண்கள், சாவியை இப்படியும் அப்படியும் மிக வியப்புடன் திருப்பித் திருப்பிப் பார்த்தார்கள்.
இது தங்கத்தினால் ஆனதுதான். ஒரு கிலோ எடை இருக்கும்போல் இருக்கிறது. அப்படியே உருக்கி நகையாகச் செய்து போட்டுக்கொள். உன்னை மணந்துகொள்ள ஆண்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் பார்
என்றாள் ஞானம்.
தங்கத்தை விற்றுப் பணமாக்கிப் பாங்க்கில் போட்டு வை, வட்டி கிடைக்கும்
என்றாள் பத்மா.
முதலில் இது என்ன விலை போகும் என்று மதிப்புப் போடு
என்றாள் விமலா.
பார்சலுக்குள் இருந்த கடிதத்தை அப்போதுதான் பார்த்தாள் ஷீலா. அதை எடுத்து அவள் படித்தபோது, அவளால் நம்பவே முடியவில்லை. ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபல வழக்கறிஞர் ஒரு தங்கச் சாவியை அனுப்பியிருந்தார். கலைப்பொருளாக மதிக்கப்பட்ட அந்தச் சாவியை அவளுக்கு அனுப்பும்படி, அவளுடைய மாமன் கேளப்பன், அவருடைய வழக்கறிஞரிடம் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கேளப்பன். ஆமாம், அவர் என் சொந்த மாமன். என்னுடைய தாயுடன் பிறந்தவர். அவர் பெரும் பணம் வைத்திருந்தார். அவர் பணத்தையெல்லாம் என்ன செய்தார் என்பது தெரியவில்லை. ஒண்டிக்கட்டையாகவே எங்கெல்லாமோ சுற்றிக்கொண்டிருந்தார். புராதனப் பொருள்களை என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்து வாங்குவார். இறுதியில் இறக்கும் போது என் நினைவு வந்து இதை எனக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருக்கிறார்!
என்றாள் ஷீலா.
அப்படியானால் அவரிடம் மிஞ்சிய சொத்து இதுதான். உனக்கு இதை அனுப்பிவிட்டார். போதாதா?
என்றாள் பத்மா.
இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்தச் சாவி முதலில் தங்கந்தானா என்று பார்க்க வேண்டும்
என்று முடிவு செய்தாள் ஷீலா.
வேண்டுமானால் ஏதாவது ஒரு நகைக்கடையில் மதிப்புப் போட்டுப் பார்
என்றாள் ஞானம்.
ஷீலா உடனே தங்கச் சாவியைப் பார்சலில் போட்டு அப்படியே எடுத்து மேசை அறைக்குள் வைத்துப் பூட்டினாள். அன்று முழுவதும் அவளுக்கு வேலையே ஓடவில்லை. அலுவலகம் முடிந்ததும் அவள் பார்சலை எடுத்துக்கொண்டு ஒரு நகைக்கடைக்குப் போனாள்.
நகைக்கடைக்காரரிடம் பார்சலில் இருந்த சாவியை எடுத்து வைத்தாள்.
இதைக் கொஞ்சம் கூர்ந்து பாருங்கள். இதைப் பரிசோதித்து இதன் மதிப்பு எவ்வளவு என்று சொல்லுங்கள்
என்றாள் ஷீலா.
கடைக்காரர், ஷீலாவைக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அவர் அவள் அழகை இரசித்தாரா, அல்லது அவளை ஏமாற்ற முடியுமா, முடியாதா என்ற சிந்தித்தபடி பார்த்தாரா என்பது தெரியவில்லை. பிறகு மெல்ல அவர் தங்கச் சாவியை எடுத்தார். கையாலேயே ஒரு தடவை சும்மா எடை போட்டுப் பார்த்தார். பிறகு சாவியைக் கறுப்புக்கல் ஒன்றில் பல தடவைகள் உரசிப் பார்த்தார்.
ஷீலா மிக ஆவலுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைக்காரர் சொன்னார்: இது முழுக்க முழுக்கத் தங்கம் அல்ல. தங்க முலாம் பூசியது!
என்ன! தங்கம் அல்லவா? முலாம் பூசியது என்றால் எப்படி?
என்று கேட்டாள் ஷீலா.
கனமாக இருக்கிறது பார்த்தாயா? அவ்வளவும் ஈயம்! ஈயத்தினால் செய்து மேலே தங்க முலாம் பூசியிருக்கிறார்கள். கலைப்பொருளாக இதை மதிப்பவர்கள் வேண்டுமானால் பொம்மையை வாங்குவதைப்போல் கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து வாங்குவார்கள். நகைக்கடைக்காரர்கள் ஏமாற மாட்டார்கள்!
அப்படியானால் அதன் மதிப்பு என்ன?
என்று கேட்டாள் ஷீலா.
தங்கத்தை உருக்கி எடுத்தாலும் நூறு ரூபாய் தாளாது! வேண்டுமானால் அப்படியே எடுத்துக்கொண்டு நூறு ரூபாய் கொடுக்கிறேன்
என்றார் கடைக்காரர்.
இது விற்பனைக்கு அல்ல. மதிப்புப் போடவே வந்தேன்
என்று சொல்லிச் சாவியைப் பிடுங்கிக்கொண்டு புறப்பட்டாள் ஷீலா.
நகைக்கடைக்காரர் அவளை ஏமாற்றப் பார்க்கிறாரா, அல்லது உண்மையைத்தான் சொல்லுகிறாரா என்ற ஐயம் வந்து விட்டது அவளுக்கு வாடகைக்காரில் போய்க் கொண்டிருந்தபோது வழியில் ஒரு புராதனக் கலைப்பொருள்கள் விற்கும் கடை தென்பட்டது. விலை மிகுந்த பொருள்கள் எல்லாம் அந்தக் கடையில் இருந்தன. சென்னைக்கு வருபவர்கள் கலைப்பொருள்கள் வேண்டுமானால் இந்தக் கடைக்குத்தான் வந்தாக வேண்டும். வாடகைக்காரைக் கடையின் முன் நிறுத்தும்படி சொன்னாள் ஷீலா.
கலைப்பொருள்கள் விற்கும் கடைக்குள் ஷீலா நுழைந்த போது கடைக்காரர் அவளை வரவேற்கவில்லை. அவர் பாட்டிற்கு ஒரு மேசையின் முன் உட்கார்ந்து புராதனப்பொருள் ஒன்றைக் கையில் வைத்துச் சோதித்துக் கொண்டிருந்தார். அவருடைய தலைமுடி முழுவதும் நரைத்திருந்தது. அவர் முகத்தில் அனுபவ இரேகைகள் நிறையப் படிந்திருந்தன அவர் பார்வை முழுவதும் அவர் கையிலிருந்த கழுகுப் பொம்மையின் மீதே பதிந்திருந்தது.
அவர் பக்கத்தில் போய் நின்றாள் ஷீலா. கொஞ்ச நேரம் பொறுத்துத்தான் அவர் திரும்பிப் பார்த்தார். பிறகு, என்ன வேண்டும்?
என்று புருவங்களை நெரித்தபடி கேட்டார்.
ஷீலா, கையிலிருந்த பார்சலை அவர் மேசைமீது வைத்தாள்.
இந்தச் சாவியைக் கொஞ்சம் பாருங்கள்
என்றாள் அவள்.
கடைக்காரர் பார்சலிலிருந்த சாவியை எடுத்தார். கொஞ்ச நேரம் அதை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தார். பூதக்கண்ணாடியின் உதவியுடன் தங்கச் சாவியில் செதுக்கப்பட்டிருந்த சித்திர வேலைப்பாடுகளைப் பார்த்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் இருந்த கலைப்பொருளின் போலி இது! உண்மையான பொருள் அல்ல! இரும்பினால் செய்து தங்கமுலாம் பூசியிருக்கிறார்கள்! வெளிநாட்டுப் பணக்காரர்கள் எவராவது பார்த்தால் இதை ஏமாந்து வாங்கிப் போய்விடுவார்கள். மேல்நாடுகளில் மட்டுமல்ல, நம் நாட்டிலுங்கூட இப்படிப்பட்ட போலிப்பொருள்களை நிறையச் செய்து விற்கத் தொடங்கிவிட்டார்கள்!
என்றார் கடைக்காரர்.
நகைக்கடைக்காரர் ஈயத்தினால் செய்யப்பட்ட சாவி அது என்றார். இவரோ இரும்பினால் செய்தது என்கிறார். அவளுக்கு வியப்பு மேலிட்டது!
இதன் மதிப்பு என்ன?
என்று கேட்டாள்.
போலிப்பொருளாக இருந்தாலும் பழைய காலத்துக் கலைப்பொருளைப் போலவே இருப்பதால் இதன் விலை ஐநூறு ரூபாய் வரையில் போகும்! வேண்டுமானால் ஐநூறு ரூபாய் கொடுக்கிறேன். கொடுத்து விடுங்கள்
என்றார் கடைக்காரர்.
பொறுத்துக் கொள்ளுங்கள். இது விற்பனைக்கு அல்ல. மதிப்புப் போடவே வந்தேன். இதை விற்க வரவில்லை.
போலிப் பொருளை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இதை என் கடையில் வைத்தால் எவராவது வாங்கிப் போவார்கள். எனக்கு ஒரு நூறு ரூபாய் கிடைக்கும். அதற்காகச் சொன்னேன்
என்றார் கடைக்காரர்.
இதை விற்கவேண்டிய நிலை வந்தால் மீண்டும் வருகிறேன்
என்று சொல்லிவிட்டுச் சாவியை மீண்டும் பார்சலில் போட்டு எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.
கடைக்காரர் மீண்டும் தன் கையிலிருந்த கழுகுப் பொம்மையைச் சோதிக்கத் தொடங்கினார், எதைப்பற்றியும் துன்பம் கொள்ளாமல்.
வாடகைக்காரில் ஏறி உட்கார்ந்த ஷீலா ஒரு தடவை திரும்பிப் பார்த்தாள்.
கடைக்காரர் தமது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கார் புறப்பட்டது.
கார் மறைந்ததும், கடைக்காரர் விரைந்து எழுந்து தொலைபேசி இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்தார்!
*****
அத்தியாயம் 2
வாடகைக் கார் போய்க்கொண்டே இருந்தது. ஹாஸ்டலுக்குப் போவதா வேறு எங்கேயாவது போவதா என்று சிந்தனை செய்துகொண்டிருந்தது அவள் மனம்.
பார்சலில் வந்த தங்கச் சாவியைப் பற்றிய மர்மம் மிகவும் மிகுதி ஆயிற்று. ஆகையால் அவள் அதைப்பற்றி விவரங்கள் தெரிந்த எவரிடமாவது கேட்க வேண்டும் என்று எண்ணினாள். மியூஸியத்தில் பணியாற்றி வந்த புரபஸர் ஒருவரை அவளுக்குத் தெரியும். அவருடைய வீட்டிற்குப் போக முடிவு செய்தாள் அவள்.
அவள் தேடிச்சென்ற புரபஸர் பேரின்பம் ஒரு சரித்திரப் பேராசிரியர். பழைய காலத்து உண்மைகளை நிறையத் தெரிந்து வைத்திருந்தார். அவர் வீடு மயிலாப்பூரில் இருந்தது. வாடகைக்காரை மயிலாப்பூருக்கு விடும்படி சொன்னாள்.
புரபஸர் பேரின்பம் எப்போதும் ஏதாவது சரித்திரப் புத்தகங்களைப் படித்துக்கொண்டு சோதனையிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். சரித்திரப் புத்தகங்களையே மணந்துகொண்டதால், அவர் ஒண்டிக்கட்டையாகவே வாழ்ந்து வந்தார். அவர் ஷீலாவைக் கண்டதும் வியப்புடன் பார்த்தார்.
யாரது? ஷீலாவா? உள்ளே வா. கையில் என்ன அது பார்சல்?
என்றார் புரபஸர் பேரின்பம்.
உங்கள் மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுக்கப் போகிறேன்
என்று சொல்லியபடி பார்சலை அவர் மேசை முன் வைத்தாள். அதிலிருந்த சாவியை எடுத்து மேசை மீது வைத்தாள்.
இரண்டு கைகளாலும் சாவியை எடுத்துத் திருப்பி திருப்பிப் பார்த்த புரபஸரின் கண்கள் மின்னின! இது ஏது? உண்மையிலேயே பழைய காலத்துப் பொருளைப் போல் இருக்கிறது!
என்றார் அவர்.
இதை என் மாமா எனக்கு அனுப்பியிருக்கிறார். இதைப் பற்றிக் கேட்கலாம் என்றால் அவர் உயிருடன் இல்லை
என்றாள் ஷீலா.
கொஞ்சம் இரு
என்று சொல்லிவிட்டு அவர் எழுந்து போய் பளுவான பழைய சரித்திரப் புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்தார். அவற்றைப் புரட்டிப் பார்த்துவிட்டு எதையோ கண்டுபிடித்தவரைப்போல் மேசை மீதிருந்த சாவியைப் பார்த்தார்.
இந்தச் சாவியை யார் அனுப்பி வைத்ததாகச் சொன்னாய்?
என்று கேட்டார் புரபஸர் பேரின்பம்.
என்னுடைய மாமா. அவர் பெயர் கேளப்பன். அடிக்கடி ஏதாவது புதைபொருளைக் கண்டுபிடிக்கப்போவதாகச் சொல்லி எங்கேயாவது சுற்றிக்கொண்டிருப்பார். எங்கேயாவது போனால் பல மாதங்கள் வரையில் அவர் திரும்பி வரமாட்டார்?
அவர் இறுதியாக எங்கே இருந்தார்?
ஜெய்ப்பூரில்.
பார்த்தாயா? ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்திருக்கிறார். இந்தச் சாவியில் ராஜஸ்தானின் கலைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட சாவி இது!
இந்தச் சாவி எதற்குப் பயன்படும்!
என்று கேட்டாள் ஷீலா.
"ராஜஸ்தானின் காட்டுப் பாலைவனத்தில் உள்ள ஏதோ ஒரு பெரிய அரண்மனையின் தங்கச் சாவி இது. அந்த அரண்மனையின் கதவு முழுவதும் தங்கத்தினால் ஆனது. யாரோ ஓர் அரசன் ஏகப்பட்ட தங்கங்களையும் நகைகளையும் சேர்த்து இந்த அரண்மனையில் வைத்துப் பூட்டி வைத்திருக்கிறான். பிறகு ஒரு பெரிய பூகம்பத்தில் ராஜஸ்தானில் ஏகப்பட்ட ஊர்கள் பூமிக்குள் புதைந்துவிட்டன. இந்த அரண்மனையும் எங்கேயோ புதைந்துவிட்டது! அதை உன்