Aavi Rajiyam
()
About this ebook
ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.
- சுஜாதா
Read more from Ra. Ki. Rangarajan
23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsOre Vazhi Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Aangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Viji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Kai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Ungalukkaga! Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Houseful Rating: 5 out of 5 stars5/5Eppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Adimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Thooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsJennifer Rating: 4 out of 5 stars4/5Twist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aavi Rajiyam
Related ebooks
Appusamiyin Thaali Bakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsIni Oru Sathi Seivom Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsRaasi Rating: 5 out of 5 stars5/5Anbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsPulligalum Kodum Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nee….Aathma! Rating: 5 out of 5 stars5/5Kanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Marumagal Rajyathil... Rating: 0 out of 5 stars0 ratingsKannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Azhagi Pottiyum Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyum Arputha Vilakkum Rating: 0 out of 5 stars0 ratingsVaaththiyaaramma Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Vaanvavil Rating: 0 out of 5 stars0 ratingsKadakadanu padinga.. kalakalanu siringa.. Rating: 0 out of 5 stars0 ratingsManathukkuthan Karpu Rating: 0 out of 5 stars0 ratingsCurrency Vettai Rating: 5 out of 5 stars5/5Bakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKarugiya Kaditham Rating: 0 out of 5 stars0 ratingsHuman Bomb Appusamy Rating: 0 out of 5 stars0 ratingsAppusami 80 Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsNeela Nila Rating: 5 out of 5 stars5/5Twist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkendru Oru Idhayam Rating: 5 out of 5 stars5/5Marma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsEndrendrum Un Ethiri Rating: 4 out of 5 stars4/5Koondukkul Appusami Rating: 0 out of 5 stars0 ratingsPokiri Mama Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Aavi Rajiyam
0 ratings0 reviews
Book preview
Aavi Rajiyam - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
ஆவி ராஜ்ஜியம்
Aavi Rajiyam
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
1
(அது காத்துக் கொண்டிருந்தது.
ஹாலை ஒட்டினாற் போலிருந்த உக்கிராண அறையின் பரப்பு மீது, அண்டா குண்டான்களுக்கும் உடைந்த முக்காலிகளுக்கும் உபயோகமில்லாத காபிக் கொட்டை அரைக்கும் மெஷினுக்கும் நடுவே அது காத்திருந்தது.
அதற்கு உருவம் இல்லை. இருந்திருந்தால் அதை எல்லாரும் பார்த்திருப்பார்கள். அதற்குக் குரல் இல்லை. இருந்திருந்தால், ‘இரு, இரு, நாலேகால் மணியாகட்டும்,' என்ற அதன் உறுமல் எல்லாருக்கும் கேட்டிருக்கும். அதற்குக் கண் இல்லை. இருந்திருந்தால் அது ஹாலின் கடியாரத்தின் மீது பதிந்திருப்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதற்குக் கை இல்லை. இருந்திருந்தால் இருக்கை கொள்ளாமல் பிசைந்து கொண்டிருப்பதைக் கண்டிருப்பார்கள்.
அது காத்துக் கொண்டிருப்பதை யாரும் பார்க்கவில்லை.)
மணி காலை 9.52
ஜெஷ்ஷு குழந்தையாயிருந்த போது ஒருநாள் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு கேட்டாள்: எங்க ஸ்கூல்லே யாருக்குமே ஜெஷ்ஷுன்னு பேர் இல்லேம்மா. நீ மட்டும் ஏம்மா எனக்கு அப்படிப் பெயர் வைச்சே?
அம்மா சிரித்துக்கொண்டே இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி, உச்சியில் முத்தமிட்டு விட்டுச் சொன்னாள்: உனக்கு ஆசையாய் யசோதா என்று தான் பெயர் வைத்திருந்தேன். நீ ஒரு வயதுக் குழந்தையாய் இருந்தபோது, உடம்பு சரியில்லாமல் படுத்திருந்த உன் அத்தையைக் கவனித்துக் கொள்வதற்காக நாலு மாசம் கல்கத்தாவுக்குப் போய்த் தங்கியிருந்தேன். அப்ப நீ மொழுக் மொழுக்கென்று கொழுக்கட்டையாட்டம் இருந்தாய். அக்கம் பக்கத்தில் எல்லா வங்காளப் பெண்களும் உன்னைத் தூக்கித் தூக்கிவைத்துக் கொண்டு கொஞ்சுவார்கள். குழந்தையின் பெயர் என்ன என்று என்னை கேட்பார்கள். யசோதா என்று சொல்வேன். அவர்கள் வங்காள வழக்கப்படி ஜெஷோதா என்று கூப்பிடுவார்கள். பிறகு அதை செல்லமாகச் சுருக்கி ஜெஷ்ஷு என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். கடைசியில் நானும் அப்பாவும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டோம்.
ஜெஷ்ஷு தன் சின்ன முகத்தைச் சுளித்துக் கொண்டு, போம்மா! என் கிளாசிலே எல்லாரும் பரிகாசம் பண்றாங்க. ஜொஷ்ஷு, பொஷ்ஷு என்கிறாங்க. எனக்கு வெட்கமாக இருக்கு,
என்றாள்.
இதெல்லாம் ரொம்ப வருஷங்களுக்கு முன்பு. வயசும் தைரியமும் அறிவும் வளர வளர அவளுக்குத் தன் பெயரைப் பற்றி ஒரு தமாஷும் பிரியமும் ஏற்பட்டு விட்டன. பெயர் விஷயத்தில் மட்டுமல்ல. எதையுமே விளையாட்டாயும் வேடிக்கையாயும் எடுத்துக் கொண்டாள். கணிதத்தில் எம்.எஸ்ஸி., முடித்துவிட்டு எம்.ஃபில் பண்ணிக் கல்லூரி ஆசிரியையாகப் போவதா, எம்.எட், பண்ணிப் பள்ளி ஆசிரியையாகப் போவதா, இது எதுவும் வேண்டாமென்று பாங்க்கில் புரொபேஷனரி ஆபீசர் பதவிக்குப் பரீட்சை எழுதுவதா, ஒரு வேளை கல்பாக்கத்தில் வேலை கிடைக்குமோ என்று பலதரப்பட்ட எண்ணங்களில் இருந்தவள் ஒருநாள் அப்பாவிடம் வேடிக்கையாக, ஏம்ப்பா, பேசாமல் எனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுடுங்களேன். அப்புறம் அந்த ஆள் பாடு, என் எதிர்காலத்தை அவன் பார்த்துக்கட்டும்,
என்றாள்.
ஆள், அவன் என்றெல்லாம் மரியாதையில்லாமல் பேசாதே, ஜெஷ்ஷு
என்று ஞானாம்பாள் கண்டித்தாள்.
ஆளே யாருன்னு தெரியலை. அவனுக்கு அவர் போடணுமா அதுக்குள்ளே?
என்றாள் ஜெஷ்ஷு.
அவள் விளையாட்டாகச் சொன்னாளோ, வினையாகச் சொன்னாளோ, ஜெஷ்ஷுவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ‘ஒய் நாட்?' என்று தோன்றிவிட்டது.
ரயில்வேயில் வேலை பார்த்து ரிடையராகியிருந்த ரமேசன், பெண் பிறந்ததிலிருந்தே கெட்டிக்காரத்தனமாக அவள் கல்யாணத்துக்கென்று சேமிக்க ஆரம்பித்திருந்தார். வேறு குழந்தையும் இல்லை. ஆகையால் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மாப்பிள்ளை தேட முடிந்தது.
இன்று காலை அது விஷயமாகத்தான் யாரையோ பார்க்கப் போயிருந்தார். ஞானம்! ஞானம்!
என்று மனைவியை உற்சாகமாக அழைத்தபடி உள்ளே நுழைந்தார்.
என்ன? போன காரியம் பழமா? வாயெல்லாம் பல்லாயிருக்கிறதே!
என்றாள் ஞானாம்பாள் நல்ல சேதி வரப் போவதை ஊகித்துக் கொண்டு.
மாடிப்படியில் உட்கார்ந்திருந்த ஜெஷ்ஷு கையிலிருந்த நாவலை விரல் வைத்து மடக்கிக் கொண்டு, சிவப்புக் குகைக்குள் முப்பத்திரண்டு பேர். வயசான காலத்தில் வெளியே போய் விடுவார்கள், அது என்ன?
என்று விடுகதை போட்டாள். பல்,
என்று தானே பதில் சொன்னாள்.
விளையாடறதுக்கு நேரம் காலம் கிடையாதா ஜெஷ்ஷு? கொஞ்ச நேரம் கம்முன்னு இரு,
என்று மகளை அடக்கி விட்டு, சொல்லுங்கள்,
என்றாள்.
பையன் பாங்க் ஆபீசர். கண்ணுக்கு ராஜாவாட்டம் இருக்கிறான். அம்மா அப்பா இல்லை. ஒரு அத்தை மட்டும் தான். இன்னிக்கு நல்ல நாளாக இருக்கிறதாம். சாயந்தரம் நாலு மணிக்கு ஜெஷ்ஷுவைப் பார்க்க வருகிறதா சொல்லியிருக்காங்க.
பரபரப்பு மின்சாரம் போல் ஞானாம்பாள் உடம்பில் பாய்ந்தது. கடியாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்பதரையாகிறதே! வீடு ஒரே குப்பையும் கூளமுமாய், சகிக்கலை! ஜெஷ்ஷு! கிடுகிடுவென்று எல்லாத்தையும் ஒழுங்குபடுத்து ப்ளீஸ்டி!
என்றாள்.
மணி பகல் 2.06
மயில் கழுத்துக் கலரில் சைனா சில்க் புடவை ஜெஷ்ஷுவின் உடலைத் தழுவியிருந்தது. காலையிலேயே ஷாம்பூ பாத் எடுத்துக் கொண்டிருந்ததால் கூந்தல் மினுமினுவென்று சில்க்காகப் பளபளத்தது. மல்லிகைப் பூவைச் சரிந்தாற்போல் செருகிக் கொண்டிருந்தாள். தோடும் ஒரு மெல்லிய செயினும் அணிந்திருந்தாள். கீழ் இமையில் மெல்லிய கோடாக ஐ லைனர் தீற்றியிருந்தாள். முகத்துக்குப் பேஸ் போட்டு, கொஞ்சமாய்ப் பவுடர் பூசி, லைட் மேக்கப்பாகச் செய்து கொண்டிருந்தாள். நெற்றியின் நடுவில் அரக்கு நிற ஸ்டிக்கர் பொட்டு அளவோடு இருந்தது.
இது போதும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ‘ஆனால் வரப் போகிற குரங்கு என்ன நினைக்குமோ?' என்றும் சொல்லிக் கொண்டாள்.
மணி பிற்பகல் 3.18
டீ ஜெஷ்ஷு.
என்னம்மா?
ஒரு உபகாரம்டி. மறந்தே போயிட்டேன்.
அப்பாவைக் கூப்பிட்டுக்க.
ஏய், நான் ஷேவ் பண்ணிக் கொண்டிருக்கிறேனே, பார்க்கலை?
என்றார் ரமேசன்.
ஒரே ஒரு நடை, ஜெஷ்ஷு. தெருக்கோடி வரையில் தான். போயிட்டு வந்துடேன். வாங்கி வைத்திருந்தது மொத்தமும் தீர்ந்து போச்சு.
நீ என்ன வாங்கி வரச் சொல்றேன்னு எனக்குத் தெரியும்.
என்ன?
மெத்து மெத்துனு இருக்கும். இட்டிலியில்லை. வெள்ளை வெளேரென்று இருக்கும். பஞ்சு இல்லை. முழம் போடுவார்கள். துணியில்லை. அதுதானே?
சமர்த்து வழிகிறது, போ!
ஜெஷ்ஷு, அது என்ன?
என்றார் ரமேசன் ஆவலோடு.
தெரியலை? பூ.
ஞானாம்பாள் நெற்றியில் அடித்துக் கொண்டாள். போதும், போதும்! அந்தப் பாலசந்தர் படம் பார்த்ததிலிருந்து இவளுக்குப் பைத்தியம் பிடிச்சுப் போச்சு. அதிலே வருமே, விடுகதை போடற பொண்ணு, அது மாதிரி இவளும் விடுகதை போடறேன்னு ஆரம்பிச்சிட்டாள்.
ரமேசன் ரேசரைத் தண்ணீர்க் குவளையில் டகடகவென்று அலசினார். அந்தப் பொண்ணு புத்திசாலித்தனமான பழைய விடுகதைன்னா போட்டது? இவள் சொந்தமாகவே இட்டுக் கட்டறேன்னு சொல்லி அறு அறுன்னு அறுக்கிறாள்.
உஷ்?
என்று ஞானாம்பாள் அதட்டினாள் கணவரை. வெள்ளிக்கிழமை. நல்ல காரியம் நடக்கப் போகிற நேரம். இப்பப் பார்த்து உங்கள் வாயில் வருகிறதே வார்த்தை!
மணி பிற்பகல் 3.37
பூ வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்புகையில் ஓர் ஆட்டோ ஜெஷ்ஷுவை உரசினாற் போல் நின்றது.
மூக்குக் கண்ணாடி அணிந்த ஒரு வாலிபன் தலையை நீட்டி, சிதம்பரம் நகர் நாலாவது தெரு எது?
என்று கேட்டான்.
இதே,
என்றாள் ஜெஷ்ஷு. ஆட்டோவுக்குள் அவனைத் தவிர, ஓர் ஐம்பது வயது அம்மாளும் இரண்டு இரண்டுங் கெட்டான் பெண்களும் அடைந்திருப்பதைப் கவனித்தாள்.
எட்டாம் நம்பர் வீடு எது... ரமேசன்னு ரயில் வேலையிலிருந்து ரிடையரானவர்...
எங்க வீடு தான்,
என்றாள் ஜெஷ்ஷு. பெண் பார்க்க வந்திருக்கிறீங்களா?
ஆமாம்மா,
என்று அந்த அம்மா பதிலளித்தாள். அவர்கள் உனக்குத் தெரிந்தவர்களா?
ஜெஷ்ஷு பதில் சொல்லாமல் சிரித்தாள்.
ஏன் சிரிக்கிறே?
பெண்ணைத்தான் இங்கே பார்த்தாச்சே என்று திரும்பிப் போய்விடாதீர்கள்! வீட்டில் ரவாகேசரி பஜ்ஜி எல்லாம் வீணாய்ப் போய்விடும்,
என்று சொல்லிவிட்டு ஜெஷ்ஷு வேகமாய் வீட்டுக்குத் திரும்பினாள்.
மணி மாலை 4.12
தெரு முனையிலேயே தான் பெண் பார்த்து விட்டதை ரமேசனிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தான் பிரபு.
ரமேசனின் அத்தை தன் பூர்வீகங்களைப் பற்றி ஞானாம்பாளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஜெஷ்ஷு பிரபுவைச் சாதாரணமாகப் பார்க்கிற மாதிரி பார்த்து அளவெடுத்து, ஆள் அழகாய்த்தான் இருக்கிறான்
என்று தனக்குள் எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள்.
பாடுவீர்களா?
என்று சம்பிரதாயத்துக்காகக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபு.
ரமேசன், இவள் பாடினாலும் பொறுத்துக் கொள்ளலாம். விடுகதை போடுகிறேன்னு சிலசமயம் ஆரம்பித்து விடுவாள். அதுதான் தாங்காது,
என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பிரபுவின் அத்தையும் அவளுடன் வந்திருந்த இரண்டுங் கெட்டான்களும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
மணி மாலை 4.15
திடீரென்று அது நிகழ்ந்தது.
அதுவரை, நாற்காலியில் பணிவுடன் ஆனால் கட்டுப் பெட்டித்தனமாக அடங்கி ஒடுங்காமல் இயல்பாக உட்கார்ந்திருந்த ஜெஷ்ஷு விருட்டென எழுந்தாள். நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டு அவள் எழுந்த வேகம் அங்கிருந்த எல்லாரையுமே முகத்தில் ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. நாற்காலியின் முன்புறமிருந்த குட்டை டீபாயிலிருந்து காபி டம்ளர்களும் டபராக்களும் அவள் முழங்காலில் இடித்துக் கீழே விழுந்தன. மொசைக் தரையில் அவை மோதிய போது ஙணஙணவென்று உலோகத்தனமான ஓசை எழுந்தது. ஒரு டம்ளர் உருண்டு உருண்டு சுவரை அடைந்து மின்சார விசிறியின் காற்றில் அலைக்கழிந்து ஏதோ ஓர் உயிருள்ள சிறு பிராணி போல் ஆடியது. டம்ளருக்குள்ளிருந்த காபியின் மிச்சம் மெல்ல வெளியில் வழிந்து தரையில் ஈரமான அரைக்கால் வட்டம் வரைந்து கொண்டிருந்தது.
கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நிகழ்ந்த அவளுடைய வேகம் எல்லாரையுமே திடுக்கிட வைத்த போதிலும் ஜெஷ்ஷுவின் அம்மாதான் முதலில் குரல் கொடுத்தாள். என்ன ஜெஷ்ஷு, நாற்காலியில் என்ன?
என்று பதறினாள். பூச்சி பொட்டு எதுவோ இருந்து ஜெஷ்ஷுவைக் கடித்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. எல்லாம் நல்லபடி முடிய வேண்டிய சமயத்தில் அபசகுனமாக டம்ளர்கள் கீழே விழுந்து உருண்டு விட்டதே என்று அவளுக்குச் சங்கடமாயிருந்தது.
ஜெஷ்ஷுவின் அப்பாவுக்கு அப்படித் தோன்றவில்லை. மகளின் முகத்தின் மீது வேறொரு முகமூடி வந்து கவிழ்ந்து கொண்ட மாதிரி அவருக்குத் தோன்றியது.
தன்னையறியாமலேயே அவர் பிரபுவின் பக்கம் திரும்பினார். பிரபுவும் அவரைப் போலவே ஏதோ மாறுதலை உணர்ந்திருக்க வேண்டும். தன்னிடம் என்ன குறையையோ அவள் திடீரென்று கவனித்திருப்பாள் என்று எண்ணினான். என்ன குறை என்று