Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sankarlal
Sankarlal
Sankarlal
Ebook84 pages58 minutes

Sankarlal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

முல்லைவன எஸ்டேட்டை விலைக்கு வாங்கி புதிய பங்களாவில் துப்பறியும் நிபுணரான சங்கர்லால் குடியேறுகிறார். அங்கு தன் மனைவி மற்றும் வீட்டின் பணியாளர்களுடன் வசிக்கிறார். அங்கு திடீரென்று ஒரு எதிர்பாராத ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தில் அனைவரும் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த ஆபத்து என்ன? அதில் இருந்து சங்கர்லால் எப்படி தன்னையும் தன்னை சேர்ந்தவர்களையும் விடுவிக்கிறார். இதை பரபரப்பான தமிழ்வாணனின் நடையில் படித்துப் பாருங்கள்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136605875
Sankarlal

Read more from Tamilvanan

Related to Sankarlal

Related ebooks

Reviews for Sankarlal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sankarlal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    சங்கர்லால்

    Sankarlal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    1

    சங்கர்லால், மாடியில் தன் அறையில் உட்கார்ந்து, கால்கள் இரண்டையும் மேசைமேல் தூக்கிப் போட்டுக் கொண்டு, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்.

    கைவிரல்களில் ஒன்று, புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டியது. எப்பொழுதும் போலச் சிவந்த அவர் முகத்திலே சிரிப்புத் தவழ்ந்து கொண்டிருந்தது. எப்பொழுதும் எதற்கும் கவலைப்படாத ஒப்பற்ற துப்பறியும் சிங்கமான சங்கர்லாலை, ஒரு புத்தகத்தின் சில பக்கங்கள் என்ன செய்துவிடும் என்று கேட்பது போல இருந்தது, அந்த நிழல் படர்ந்த சிரிப்பு!

    அந்த அறையின் ஒரு மூலையிலே ஆள் உயரத்திலே எடுப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய கடிகாரம், தன் எழில் தோற்றத்திற்கு ஏற்ப டிக்டிக்கென்று ஓசையிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கடிகாரம், சங்கர்லாலுக்கு அண்மையில் சுவிட்ஸர்லாந்து அரசினர் அளித்த அன்பளிப்பு.

    அதில், 'தமது ஒவ்வொரு நிமிடத்தையும் துப்பறியும் திறமைக்கே செலவிட்டு உலகத்தில் உயர்ந்த துப்பறியும் திறமையாளராக விளங்கும் சங்கர்லால் அவர்களுக்கு சுவிட்ஸர்லாந்து அரசினரின் அன்பளிப்பு-' என்று பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு, அந்நாட்டு அமைச்சரின் கையெழுத்தும் அத்துடன் இடப்பட்டிருந்தது.

    வியப்புக்குரிய அந்த மாபெரும் கடிகார ஓசை சங்கர்லால் கவனத்தைக் கலைக்கவில்லை.

    வழக்கம்போல், மாது கொடுத்த தேனீரைப் பருகிவிட்டு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார்!

    சில நிமிடங்களுக்குப் பிறகு, சங்கர்லால் தோள்களில் எவரோ கையை வைத்தார்கள்.

    சங்கர்லால் அதிர்ச்சியடையவில்லை. அலறிப்புடைத்து எழுந்திருக்கவில்லை. மிரளவில்லை. தம்முடைய தனிமை அறையில் நுழைந்து இவ்வளவு துணிவாகத் தம்மீது கை வைக்கக்கூடியவர்களும் இருக்கிறார்களா என்று வியப்படைந்து விலவிலக்கவில்லை. அவருக்குத் தெரியும் அந்த மென்கரம்.

    அந்த மென்கரத்தின் சொந்தக்காரியான இந்திரா அங்கே நின்றாள்.

    என்ன இந்திரா? என்று கேட்டுவிட்டுக் கையிலிருந்த புத்தகத்தை மூடினார் சங்கர்லால். பிறகு மேசை மீது அதைச் சுழற்றிப் போட்டார். உற்சாகத்தோடு திரும்பி உட்கார்ந்தார்.

    இந்திரா அவருக்கருகே அமர்ந்தாள்.

    இந்திரா ஒரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று இரவே உன்னிடம் சொல்லிவிட வேண்டுமென்று நினைத்தேன். நான் வீட்டுக்கு வர இரவு நேரமாகிவிட்டது. நீ தூங்கிப் போனாய் என்றார் சங்கர்லால்.

    அப்படியா? என்ன அது? உதவி கமிஷனர் வகாப், கமிஷனராக உயர்ந்து விட்டாரா? அல்லது நமது கத்திரிக்காய்க்கு எந்தத் தையற்காரனாவது சரியான அளவு எடுத்து புஷ்கோட் தைத்து விட்டானா? என்று கேட்டு விட்டு இந்திரா சிரித்தாள்.

    சங்கர்லால் குலுங்கிச் சிரித்தார். அந்த சிரிப்பிலே, அவரது கழுத்தில் தளர்ந்து தொங்கிய கழுத்துப் பட்டை அசைந்து புரண்டது.

    இந்திரா, விரைவில் அவை இரண்டும் நடந்துவிடும். இருக்கட்டும். உன்னிடம் சொன்னேனே முல்லைவன எஸ்டேட், அதைப் பதின்மூன்று இலட்சத்துக்குப் பேசி முடித்து செக் கொடுத்துவிட்டேன். மலை மீதுள்ள அந்த எஸ்டேட்டையும், அதைச் சுற்றியுள்ள வங்காளக் கடற்கரையோரத்து வனப்பையும் சூழந்து கிடக்கும் இயற்கை எழிலையும் நீ பார்த்தால் மயங்கிப் போவாய்! நாளைக் காலை அங்கே போவோமா? என்று உற்சாகத்தோடு கேட்டுவிட்டு இந்திராவின் முகத்தைப் பார்த்தார் சங்கர்லால்.

    அந்த முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது.

    அப்படியா? தவறாது போவோம். ஆனால்? என்று சொல்லி நிறுத்தினாள் இந்திரா.

    ஆனால் என்ன இந்திரா?

    நாளைக்குக் காலைக்குள் தங்களுக்கு எவ்வளவு அலுவல்களோ? எத்தனை தொலைபேசி அழைப்புகளோ? உதவி கமிஷனர் வகாப், எந்த ஒரு வழக்கைத் தூக்கிக் கொண்டு பறந்தோடி வருகிறாரோ? தாங்கள் 'இதோ வந்துவிட்டேன்' என்று என்னிடம் சொல்லிவிட்டு 'வரமுடியவில்லை, வருந்துகிறேன்' என்று எந்த ஊரிலிருந்து, என்னுடன் தொலைபேசியில் பேசுவீர்களோ? இவைகளை எல்லாம் நினைத்தால் என்று இந்திரா சொல்லிவிட்டு வேதனை மேலிட்ட தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தேனீர் குடித்த காலிக் கோப்பையை எடுக்க வந்த மாது, வாயிற்படியிலேயே நின்றான். சங்கர்லால் நிமிர்ந்து நோக்கிவிட்டு, மாது, தயங்காதே வா. உனக்கு ஒரு நல்ல செய்தி. முல்லைவன எஸ்டேட்டை விலை பேசி வாங்கிவிட்டேன். அந்த எஸ்டேட்டில் தேயிலைக்குப் பஞ்மில்லை மாது! செழிப்புடன் பயிராகிறது. உனக்கும் எனக்கும் என்றும் தேனீர்க் கவலை இருக்காது என்றார் சங்கர்லால்.

    மகிழ்ச்சி தம்பி என்று சொல்ல நினைத்த மாதுவின் வாயில்

    Enjoying the preview?
    Page 1 of 1