Unna Koduthittan Uyirgalai!
By Tamilvanan
()
About this ebook
Read more from Tamilvanan
Irunda Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMaraintha Nagaram Rating: 0 out of 5 stars0 ratingsIyarkai Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsHongkongil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsBerlinil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsMarma Theevu Rating: 0 out of 5 stars0 ratingsHello Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Rating: 4 out of 5 stars4/5Innoru Seruppu Engey? Rating: 0 out of 5 stars0 ratingsPei Rating: 5 out of 5 stars5/5Irumbu Kai Mainthan Rating: 0 out of 5 stars0 ratingsCairovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsNaplesil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsSankarlal Vandhu Vittar! Rating: 0 out of 5 stars0 ratingsYogasanam Kattru Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thodathey Rating: 0 out of 5 stars0 ratingsMarma Manithan Rating: 0 out of 5 stars0 ratingsPuyal Veesiya Iravil Rating: 0 out of 5 stars0 ratingsNewyorkil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsIrunda Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsAandhai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsNarpathinayiram Roobai Rating: 0 out of 5 stars0 ratingsParisil Sankarlal Rating: 0 out of 5 stars0 ratingsFrankfurtil Tamilvanan Rating: 1 out of 5 stars1/5Maruthamalai Saaralile Rating: 0 out of 5 stars0 ratingsKadalil Marmam Rating: 0 out of 5 stars0 ratingsTokyovil Tamilvanan Rating: 0 out of 5 stars0 ratingsInbavalli Ithuva Un Mudivu? Rating: 0 out of 5 stars0 ratingsPathu Pergal Thediya Pathu Kodi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Unna Koduthittan Uyirgalai!
Related ebooks
En Anbu Kuzhanthaigale.... Rating: 0 out of 5 stars0 ratingsThik... Thik... Thik... Rating: 0 out of 5 stars0 ratingsKakkaigalin Iravu Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vidum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsAppaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsKaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsMana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsTheerpu Rating: 0 out of 5 stars0 ratingsSirai! Rating: 0 out of 5 stars0 ratingsZen Vazhi Thoguppu 1 Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2021 Rating: 0 out of 5 stars0 ratingsPashana Lingam Rating: 0 out of 5 stars0 ratingsSarppa Pali Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyir Thunaiye...! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Kolai, Innoru Kolai! Rating: 0 out of 5 stars0 ratingsAdharam Madhuram Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsSaami Potta Mudichu! Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAnalai Kaayum Ambuligal Rating: 5 out of 5 stars5/5Irandavathu Nila Rating: 0 out of 5 stars0 ratingsAimbathu Latcham Dosai! Rating: 0 out of 5 stars0 ratingsUyire Nerungi... Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsSaavu Moondru Angulam Rating: 0 out of 5 stars0 ratingsVedhamadi Neeenakku! Rating: 5 out of 5 stars5/5Mulloduthan Muthangala? Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Unna Koduthittan Uyirgalai!
0 ratings0 reviews
Book preview
Unna Koduthittan Uyirgalai! - Tamilvanan
https://www.pustaka.co.in
உண்ணக் கொடுத்திட்டான் உயிர்களை!
Unna Koduthittan Uyirgalai!
Author:
தமிழ்வாணன்
Tamilvanan
For more books
https://www.pustaka.co.in/home/author/tamilvanan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
உண்ணக் கொடுத்திட்டான் உயிர்களை!
வல்லவனுக்கு வல்லவன்
இருள் வழி
உள்ளே போ!
நான் சொல்லட்டுமா, அப்பா?
மனம் திருந்து மன்னவா!
நடு நிசியில் கவிழ்ந்த எக்ஸ்பிரஸ்
உண்ணக் கொடுத்திட்டான் உயிர்களை!
ஆராய்ச்சி, ஆபத்தில் முடிந்தது. ஆபத்து என்றால் சாதாரண ஆபத்து அல்ல, அவர் குடும்பமே அழிந்தொழிந்தது அவர் செய்த ஆராய்ச்சியினால்!
அந்த ஆராய்ச்சி இந்த அளவுக்குப் பயங்கரமான முடிவைத் தரும் என்று ஏற்கனவே பொன்னம்பலத்திற்குத் தெரிந்திருந்தால் இந்த ஆராய்ச்சியைத் தொடங்கியே இருக்கமாட்டார் அவர்!
***
1
கரடுமுரடான இடங்களில் கால்களால்கூட நடந்து போக இயலாத இடங்களில் பொன்னம்பலத்தின் ஜீப் குதித்துக்கொண்டு ஓடியது. பொன்னம்பலம், சரியான பாதையைவிட்டு விலகி வந்தது எத்தனையோ நாள்கள் ஆகிவிட்டன. சுற்றிக்கொண்டிருந்தார், சுற்றிக்கொண்டிருந்தார், காட்டிலேயே சுற்றிக்கொண்டிருந்தார்.
அவருக்கு ஓர் ஐயம், இன்னும் இந்தியாவின் காட்டிலேதான் நாம் இருக்கிறோமா, அல்லது ஜீப்பிலேயே ஆப்பிரிக்காவை அடைந்துவிட்டோமா என்று! வரவேண்டிய ஐயம்தான்!
அவருக்குத் துணை இப்போது அந்த ஜீப்பைத் தவிர வேறு எவரும் இல்லை. அவர் தன்னந்தனியாக ஜீப்பில் புறப்பட்டு ஐந்து நாள்கள் ஆகிவிட்டன. அவர் புறப்பட்டது முதல் அவருக்கும் அந்த ஜீப்புக்கும் கொஞ்சமும் ஓய்வே கிடையாது! எத்தனையோ மாதங்கள் இந்த உலகத்தின் தொடர்பு இல்லாமலே காடுகளில் சுற்றுவதைப் போலிருந்தது அவருக்கு! அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் தேதியும் இருந்தது. கடிகாரம் காட்டிய தேதியைக் கொண்டுதான் அவர் புறப்பட்டு எத்தனை நாள்கள் ஆகின்றன என்பதை அவரால் கணக்கிட்டுப் பார்க்க முடிந்தது!
ஜீப்பை ஓர் இடத்தில் நிறுத்தினார். சுற்றிப் பார்த்தார் எந்தப்பக்கத்தில் பார்த்தாலும் அடர்த்தியான மரங்கள், செடிகள், கொடிகள்! எங்கே பார்த்தாலும் அடர்த்தியான நிழல்!
கதிரவன் எங்கே இருக்கிறான் என்றுகூட அவரால் பார்க்க முடியவில்லை! கடிகாரத்தைப் பார்த்து, நேரத்தின் விகிதப்படி இப்போது கதிரவன் எந்த இடத்தில் இருப்பான் என்று ஊகம் செய்தார். இன்னும் இரவு நேரம் வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று துன்பம் கொள்ளவில்லை பொன்னம்பலம். ஜீப்பில் இருக்கும் பெட்ரோலைக்கொண்டு, இன்னும் எத்தனை நாள்கள் காட்டிலேயே இருக்கலாம் என்று கணக்குப் போட்டார். பெட்ரோல் கொஞ்சந்தான் இருந்தது. பொன்னம்பலம் வேண்டுமானால் பட்டினியாய்க் கிடந்து ஜீப்பை ஓட்டலாம். ஆனால், ஜீப் ஒரு நிமிடம்கூட பட்டினியாக இருக்காதே!
எத்தனை ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொட்டி வாங்கினாலுங்கூட, இக்கட்டான நிலைமைகளில் கொஞ்சம் தொலைவுதான் பெட்ரோல் இல்லாமல் ஓடுவோமே என்ற நன்றி உணர்ச்சி கிடையாது எந்தக் காருக்கும்! இதை நன்கு உணர்ந்திருந்த பொன்னம்பலம் ஜீப்பைக் கொஞ்சமும் நம்பவில்லை. இருக்கும் பெட்ரோலைக் கொண்டு இரவு முழுவதும் சுற்றலாம் என்று திட்டமிட்டார்.
விடிந்ததும்-
காட்டின் எல்லையைக் கடந்து போய்விட வேண்டும். வேறு வழி இல்லை!
பொன்னம்பலம் ஜீப்பில் உட்கார்ந்தபடியே தாடையைத் தடவி விட்டுக்கொண்டே சிந்தனையுள் ஆழ்ந்தார். அவர் முகத்தில் தாடியும் மீசையும் இந்த ஐந்து நாள்களில் எவ்வளவு வளர்ந்துவிட்டன! அவருக்கு ஐம்பது வயது ஆகிவிட்ட போதிலுங்கூட, வீட்டில் இருக்கும்போது, இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் தாடியை வளரவிடமாட்டார். எப்போதும் அவர் மடிப்புக் கலையாத ஆடையைத்தாம் அணிவார். இப்போது-
அவர் அணிந்திருந்த காக்கிச்சட்டையும், காக்கிக் கால்சட்டையும் பல இடங்களில் கிழிந்து தொங்கின. காட்டில் ஜீப் எப்படியெல்லாமோ ஓடியபோது, முட்செடிகள் அவர் மீது உராய்ந்ததால், அவருடைய உடலில் பல இடங்களில் இலேசான கீறல்கள் இருந்தன!
பொன்னம்பலம் ஜீப்பில் இருந்த பைகளைத் துழாவிப் பார்த்து, சில டின்களை எடுத்தார். பதனிடப்பட்ட பழங்களும் ரொட்டியும் இருந்தன. டின்களை எடுத்து உடைத்துப் பழங்களையும் ரொட்டிகளையும் தின்றார். இரப்பர் பை ஒன்றில் குளிர்ந்தநீர் கொஞ்சம் இருந்தது. அதில் பாதியைக் குடித்துவிட்டு, மீதியைக் கவனத்துடன் வைத்தார். ஜீப்பைவிட்டுக் கீழே இறங்கிப் பார்த்தார்.
அவருடைய பார்வையில் சலிப்புத் தோன்றியது!
பொன்னம்பலம் மனிதர்களைப் பார்த்து ஐந்து நாள்கள் ஆகின்றன! காட்டில் புகுந்தது முதல், புலிகளையும், கரடிகளையும், சிறுத்தைகளையுந்தாம் பார்த்தார். மனிதர்களே வராத அக்காட்டிற்குத் துணிந்து அவர் மட்டும் வந்துவிட்டார். அப்படி வந்துங்கூடப் பயனில்லையே என்று எண்ணியது அவருடைய மனம்!
அவர் வேட்டையாட அந்தக் காட்டுக்கு வரவில்லை. ஆபத்துக் காலங்களில் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவரிடம் துப்பாக்கி இருந்தது. குறிதவறாமல் துப்பாக்கியை உபயோகிக்க அவரால் முடியும். இருந்தும் அவர் இதுவரையில் ஒரு காட்டுப்பன்றியைக்கூடச் சுடவில்லை.
பொன்னம்பலம் தாவர இனங்களைப்பற்றியும், அவை எப்படி வளர்கின்றன என்பது பற்றியும் ஓயாமல் படித்து, தமது வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சி செய்து வருகிறார். அவருடைய ஆராய்ச்சிக்கூடத்தில் இல்லாத அதிசயச் செடிகள் இல்லை என்று மற்ற நிபுணர்கள்கூட வியந்தார்கள். அவரிடம், ஆராய்ச்சிக் கூடத்தில், இரண்டே அங்குலம் உயரமுள்ள ஒரு மரம் இருந்தது. அதைச் செடி என்று சொல்லிவிட முடியாது பார்ப்பவர்களால். பல ஆண்டுகளுக்குப் பின் நன்றாக வளர்ந்த பெரியமரத்தைப் போலவே அது இரண்டு அங்குல உயரத்தில் வளர்ந்திருந்தது! அதில் பூவும் பூத்துக் காயும் காய்த்திருந்தது! இந்தக் குறிப்பிட்ட இரண்டு அங்குல மரத்தை அமெரிக்காவிலிருந்து வரவழைத்திருந்தார்.
அவரிடம் இருந்த மற்றொரு செடியில், இலைகளே இல்லை. ஆறு அங்குலம் உயரம் வளர்ந்த அந்தச் செடியில் காய்களோ இலைகளோ இல்லை. ஆனால்-
இரவு நேரங்களில் மட்டும் அவைகளில் வெறும் பூக்கள் பூக்கும்! இலைகள் இல்லாமல் பூக்கள் மட்டுமே தோன்றும். விடிந்ததும் எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும்!
மற்றொரு செடியில், ஒரே செடியில் நான்கு வண்ணங்களி்ல் விதவிதமாகப் பூக்கள் பூக்கும்!
எவரும் இதுவரையில் பார்த்திராத அதிசயமான தாவர வர்க்கங்களை அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வைத்து வளர்த்து வந்தார். அவருடைய ஆராய்ச்சிக்கூடத்தில் என்னென்ன வகைச் செடிகள் இருக்கின்றன என்பது எவருக்கும் சரியாகத் தெரியாது. பொன்னம்பலத்தின் மனைவி பெண்ணரசிக்குக்கூட எல்லாச் செடிகளையும் பற்றிய உண்மை தெரியாது! இப்போது-
அந்தக் காட்டில் அவர் தேடி வந்தது ஒரு புதுவகையான மரம். அந்த மரத்தைப்பற்றி எவனோ ஒரு காட்டுமனிதன் அவரிடம் சொல்லியிருந்தான். நாகபுரிக்கு அடுத்துள்ள சில காடுகளில், மனிதர்கள் புகாத காடுகளில், வியப்புக்குரிய மரம் ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தார். அந்த மரம் எப்படி இருக்கும் என்பதை மட்டும் அந்த மனிதன் சொன்னான். குறிப்பாக எந்த இடத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. ஏனென்றால், அவனுக்கே அது தெரியாது! எப்போதோ, தற்செயலாக அவன் அந்த மரத்தைப் பார்த்திருக்கிறான். அத்துடன் அதைப்பற்றி மறந்துவிட்டான்!
அவன் குறிப்பிட்ட அந்த மரம், படர்ந்து பெரிதாக வளர்ந்திருக்குமாம். அதனுடைய இலைகள் ஊசி இலைகளைப்போல் இருந்தாலும் மிருதுவாக இருக்குமாம். ஆனால்-
அதைப் போன்ற கொடிய மரம் வேறு எதுவுமே இருக்க முடியாது என்றான் அவன்!
அந்த ஊசிஇலை மரம், அதன் கீழே போகும் எல்லா மிருகங்களையும் உயிருடன் அப்படியே