Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - November 2021
Kanaiyazhi - November 2021
Kanaiyazhi - November 2021
Ebook171 pages53 minutes

Kanaiyazhi - November 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507842
Kanaiyazhi - November 2021

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - November 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - November 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - November 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி நவம்பர் 2021

    மலர்: 56 இதழ்: 08 நவம்பர் 2021

    Kanaiyazhi November 2021

    Malar: 56 Idhazh: 08 November 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தீப ஒளி திருநாள் ஆகட்டும்!

    ஜெய்ஹிந்த் என்பது

    இந்து மக்களின் வெற்றி முழக்கம்.

    ஜெய்பீம் என்பது

    அம்பேத்கர் வாழ்க என்பதோடு

    அண்ணாவின் ‘தம்பி’ யைப் போல

    கலைஞரின் ‘உடன்பிறப்பு’ போல

    முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ போல

    சாதி மதம் கடந்த

    அடக்கப்பட்டவர்களின் எழுச்சிக் குரல்!

    அடக்குமுறைக்கு ஆளானவர்கள்

    ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்திக்கொண்டு

    உணர்ச்சி பெறும் சொல்!

    பிரதமர் மோடியும்

    தேர்தல் நேரங்களில் உச்சரிக்க வேண்டிய

    சொல்லாகி இருக்கிறது ஜெய்பீம்!

    நதிக்கரை

    நாகரிகங்களின் பிறப்பிடம் மட்டும் இல்லை

    போர்களுக்கும் அதுவே நிகழ் களம்!

    ஜெய்பீம் பிறந்த இடமும் பீமா நதிக்கரைதான்!

    அம்பேத்கர் பிறப்பதற்கும் முன்பே

    ஜெய்பீம் பிறந்திருக்கிறது.

    ஜெய் பீம் காம்ரேட் என்று

    2011 இலும் ஒரு படம் வந்திருக்கிறது

    ஆனந்த் பட்வர்தன் இயக்கி இருக்கிறார்.

    1997 இல் நடந்த காவல்துறை அத்துமீறலை

    ரமா பாய் கொலையின்

    மர்ம முடிச்சுகளை

    மும்பைத் தலித் மக்களின்

    வாழ்க்கை அரசியலைக்

    காவல் துறையின் கண்ணியத்தை

    வெளிச்சப்படுத்திய படம்!

    14 ஆண்டுகள் உழைப்பில் தயாரான படம்!

    உலக அளவில் விருதுகளையும் பரிசுகளையும்

    வென்றெடுத்திருக்கிறது!

    இதோ

    இருளர் பழங்குடி மக்களிடம்

    நம்ம ஊர் காவல்துறை அரசியல் வாதிகளின்

    கண்ணியமிக்க நடவடிக்கைகள்

    தலைகுனிய வைத்திருக்கின்றன.

    படம் பார்த்ததும் மனசாட்சி உறுத்தியது

    எவ்வளவு அநாகரிகமான சமுதாயத்தில்

    நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

    அழுது தீர்க்கவும் அரற்றவும் மட்டுமே

    பிறந்திருக்கிறோமா?

    நிகழ்வுகளைக் கோர்வையாகப்

    பார்க்கிற போது நெஞ்சம் பதறுகிறது!

    இதைப் போன்ற சமூக அநீதிகள்

    நிலவுகிற சமுதாயத்தில்

    பொறுப்புமிக்க சமூக உணர்வாளர்கள் முன்

    இரண்டு வழிகள் தென்படும்.

    ஒன்று

    ஆயுதம் தாங்கிய போராட்டம்

    மற்றொன்று

    இருக்கிற அமைப்பிலேயே

    சமூக மாற்றத்தைக் கொண்டுவரும்

    வழியினைக் கண்டறிதல்!

    இரண்டாவது வழியில்

    வழக்கறிஞராகவும் நீதிநாயகமாகவும்

    சந்துரு வாழ்ந்து வழிகாட்டியிருக்கிறார்!

    வழக்கறிஞர் சந்துரு

    வாழ்க்கையைப் பணயம் வைத்துப்

    பயணித்திருக்கிறார்!

    மறைந்த ஜெயலலிதா ஆளுகையில்

    மாநில ஆளுநர் மீதே கல்வீச்சு!

    விடுதியை விட்டு

    இந்தியத் தேர்தல் ஆணையரே

    வெளிவர முடியாமல் சிறைப்பட்ட காலம்!

    யாருடன் மோதுகிறோம் என்பதை

    அறிந்தே போராடி

    வெற்றியும் பெற்றிருக்கிறார்.!

    அறைக்குள் வந்து

    கரன்சிப் பெட்டிகள் மிரட்டியதை

    அப்போதே நீதிமன்றத்தில்

    வெளிப்படுத்திய துணிச்சல் போன்ற

    படத்தில் வராத நிகழ்வுகளுக்கும்

    அவரே முன்மாதிரி!

    கூட்டத்தில் ஒருவன் பட

    இயக்குநர் ஞானவேல் தனியாகத் தெரிகிறார்!

    இருளர் வாழ்வியலையும்

    நீதி நாயகம் சந்துருவின்

    நடை உடை அசைவுகளையும்

    மிக நுட்பமாக நடிகர் சூரியாவுக்குக்

    கடத்திப் பதிவாக்கி இருக்கிறார்.

    தணிக்கைக் குழு

    கத்தரித்த காட்சிகளைக் கடந்தும்

    மனதை உலுக்கும் காட்சிகள்!

    ஒவ்வொரு காட்சியிலும்

    இருளர் பெண்ணாக வருபவர்

    கண்களில் ததும்பும் சோகம்

    பார்ப்பவர்களைப் பற்றிக்கொள்கிறது.

    அழுகையின் வாய்க் கோணல்

    பதற வைக்கிறது

    தேடித் தேடி எடுத்த நடிகர்கள்

    திரைப்படத்தில்

    வரலாற்றுப் பெயர்களில் கதை மாந்தர்கள்!

    இருளர் பெண்ணின் அழுகையை மாற்ற

    அவரே தண்ணீர் தருவதும்

    அரசாங்க வழக்குரைஞருக்கு

    கோட் மாட்டிவிடவும்

    ஆள் இருப்பதையும்

    சந்துரு தனது சட்டையைத்

    தானே அயர்ன் செய்து கொள்வதையும்

    முரண்பட்ட வாழ்க்கைக் காட்சிகளில்

    சந்துரு

    மனசாட்சிக்கு அரண் சேர்த்திருக்கிறார்!

    தோளில் வழக்குப் பையும்

    கையில் மடித்த கருப்புக் கோட்டுமாக

    நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில்

    வழக்குகளின் மனவோட்டத்தில்

    தலையசைத்து வரும் பாங்கிலும்

    அவருக்குள் இருக்கும்

    அவருக்குப் பிடித்த

    அவரை நினைக்கும் பெருமிதமும்

    நினைக்க நினைக்கப்

    பெருமை உரம் பெறுகிறது!

    பேராசிரியர் பாரதியின்

    பங்களிப்பில் அங்கங்கே

    படம் மெருகேறி இருக்கிறது.

    தமிழக முதல்வர் சொல்லி இருக்கிறார்

    "ஜெய்பீம் திரைப்படம் பார்த்தேன்.

    அதன் நினைவுகள் இரவு முழுவதும்

    மனதை கனமாக ஆக்கிவிட்டன.

    விளிம்புநிலை இருளர் இன மக்களின்

    வாழ்வியலையும்,

    அவர்கள் அனுபவித்து வரும்

    துன்ப துயரங்களையும்

    இதனைவிடத் துல்லியமாக,

    கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது

    என்பதைக் காட்டிவிட்டீர்கள்"

    முதல்வர் மனதில்

    பழங்குடி மக்களின் வாழ்க்கை துயரங்கள்

    பதிவாகி இருக்கின்றன.

    இருளர் பழங்குடிக்கு

    வெளிச்சம் கிடைக்கும் எனும்

    நம்பிக்கை வந்திருக்கிறது.

    ஜெய் பீம் என்றால்

    ஒளி, அன்பு என்பதோடு

    இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கான பயணம்

    என்றும் பொருள் சொல்லி இருக்கிறார்

    மராத்தியக் கவிஞர்!

    தமிழகத்துக்கே

    விடியலைக் காட்ட உழைக்கும்

    முதலமைச்சர்

    இருளர் வாழ்க்கையிலும்

    ஒளி ஏற்றுகிற நாள்

    தீப ஒளி

    திருநாளாகட்டும்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கவிதை - இலக்கியா நடராஜன்

    சிறுகதை - ஊத்தங்கால் ப.கோவிந்தராசு

    கட்டுரை - நீச்சல்காரன்

    கவிதை - ஆர். வத்ஸலா

    சிறுகதை - சிவகுமார் முத்தய்யா

    கவிதை - சுசித்ரா மாரன்

    கவிதை - செ. புனிதஜோதி

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - கவிதைக்காரன் இளங்கோ

    கவிதை - சௌவி

    குறுநாடகம் - ப.மதியழகன்

    சிறுகதை - கார்த்திக் கிருபாகரன்

    கவிதை - அகராதி

    கட்டுரை – கவிஜி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கவிதை - இலக்கியா நடராஜன்

    இலக்கியா நடராஜன்.jpg

    எப்படி தீபாவளி கொண்டாடுவது?

    தலையில் ஊற்றும்

    கங்கா ஸ்நானம்

    கூவத்துச் சாக்கடையாய்

    நாறுகின்றன.

    ஏற்றி வைக்கப்படும்

    விளக்குகள் எல்லாம்

    இருளையே உமிழ்கின்றன.

    கொளுத்துகின்ற மத்தாப்புக்கள்

    பிரகாசிக்க மறுத்து

    நமத்துப் போய்க் கிடக்கின்றன.

    வானளாவிய பெருத்த ஓசையுடன்

    வெடிக்க வேண்டிய வெடிகள்

    சப்தமற்று நிசப்தமாய்

    ஒலியிழந்து போயின.

    செய்து முடித்த

    விதவிதமான

    இனிப்புப் பதார்த்தங்கள் யாவும்

    சுவை இழந்து கசந்து கமறுகின்றன.

    அணிய வேண்டிய

    புத்தம் புது ஆடைகள் பூராவும்

    பழைய ஆடைகளாய்

    நைந்து கிழிந்து இருக்கின்றன.

    என்ன செய்வது.....

    ஒவ்வொரு நாளும்

    மக்களைக் கொன்று தின்னும்

    நாடாளும் நரகாசுரர்களைக்

    கொல்வதற்கு

    இதுவரை கிருஷ்ண பரமாத்மா

    இங்கு அவதரிக்காத

    இந்திய தேசத்தில்

    நான் எப்படி தீபாவளி கொண்டாட முடியும்?

    kavingnarnatarajan@gmail.com

    ***

    சிறுகதை - ஊத்தங்கால் ப.கோவிந்தராசு

    ஊத்தங்கால் கோவிந்தராசு.jpg

    கிழித்தெறியப்பட்ட கதை

    அவள் அவ்வாறு செய்வாளென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்றைய இராப்பொழுது அமைதியாய் கழிந்திருந்தது, வழக்கம்போல நாட்கள் நகர அந்த நிகழ்வுப் பற்றிய சிந்தனை யாருக்குமில்லாமல் சுத்தமாக மறந்து, சகஜமாக மாறிப் போயிருந்த ஒருநாளில், அதிர்ச்சியடையச் செய்வதாயிருந்த அவளின் செய்கையை அமைதியாய் பார்த்தபடியிருந்த மகன் கண்ணனின் முகம், அவளுக்கு அந்தக் கதை மட்டுமல்ல... இனி எந்தக் கதையையுமே சொல்லமுடியாது என்கிற தவிப்பாய், தானுமிருந்தது எல்லாமே தமிழரசன் கண்முன் நிழலாடியது.

    பத்திரிக்கைக்கு அனுப்புவதற்கு முன்பாகக் கதையைச் சொல்லி, மனைவியின் அபிப்ராயத்தைக் கேட்டு, பிறகு அனுப்ப எண்ணியிருந்த தமிழரசன் வேப்பமர நிழலில் சாக்குப் படுதாவை விரித்துப் போட்டு அதில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.

    வீட்டினுள் உட்கார முடியாது. அனல் வீசும். அறுபதுக்கு நாற்பது மனையின் கடைசி ஓரமாய் இருபதுக்கு பதினொன்று அளவிலான எந்தத் தடுப்புமில்லாமல் ஒரே அறை கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் போடப்பட்டிருந்த சிறிய வீடு. பகலில் உள்ளே உட்கார்ந்திருப்பது சுற்றியும் கருப்பஞ்செத்தையை

    Enjoying the preview?
    Page 1 of 1