Kanaiyazhi - May 2023
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2023 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - May 2023
Related ebooks
Kanaiyazhi - May 2021 Rating: 0 out of 5 stars0 ratingsPaavam, Ival Oru Paapathi! Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Vinnappa Kalivenba Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2018 Rating: 0 out of 5 stars0 ratingsAzhwarkalai Aarathippom Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Vidivelli Thanthai Periyar Rating: 0 out of 5 stars0 ratingsMaharashtra Maanilathin 108 Punitha Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavar Rating: 4 out of 5 stars4/5En Kadan Pani Seivathey! Thoguthi - 1 Samooga Neethiyum Tamizhum En Uyir Moochu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2022 Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Marabukal Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsThendral Varum Neram Rating: 0 out of 5 stars0 ratingsUdanai Nirkindraan Rating: 0 out of 5 stars0 ratingsAali Rating: 0 out of 5 stars0 ratingsArputham Arubathu Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsVaazhathane Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsSaadhigalin Udalarasiyal Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsOppanaikalin Koothu Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2023 Rating: 0 out of 5 stars0 ratings108 Divya Desa Ulaa – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2018 Rating: 0 out of 5 stars0 ratingsSethu Dharisanam! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - May 2023
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - May 2023 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி மே 2023
மலர்: 58 இதழ்: 02 மே 2023
Kanaiyazhi May 2023
Malar: 58 Idhazh: 02 May 2023
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
E:\Priya\Book Generation\May Kanaiyazhi\1-min.jpgமே தின வாழ்த்துகள்!
E:\Priya\Book Generation\May Kanaiyazhi\2-min.jpgஉழைப்பால் தொழிலை ஆளும்
உழைப்பாளர்களைக் கொண்டாடுவது
உழைப்பைக் கொண்டாடுவதாகும்!
உழைப்பு
மூலதனத்திற்கும் முன் பிறந்தது -
உழைப்பு இல்லை என்றால்
மூலதனம் இல்லை!
உழைப்பின் குழந்தை மூலதனம்!
மூலதனத்தின்
மதிப்பிற்குரியது உழைப்பு!
உழைப்புதான் தேசத்தின் சொத்து
ஆகவே உழைப்பைக் கொண்டாடுவோம்!
கம்பங்களில் கயிறு கட்டி
அந்தரத்தில் வயிற்றுக்காக
ஆடி வாழும் மனிதர்களும்
அன்றாடம்
கைகளில் அடுப்படி
கண்களில் குழந்தைகள்
காதுகளில் அலுவலகம் என்று
அல்லாடும் மனிதர்களுமாக
தொடர்கிறது உழைப்பின் ஊர்வலம்!
மே தினம் என்பது
இலாபத்தைக் கொண்டு
முதலாளி, தொழிலாளர்களை
மதிப்பிடும் கணக்கு இல்லை!
முதலாளியும் தொழிலாளியாக வேண்டிய
மனக் கணக்கு!
சூரியன் தூக்கி எறிந்த
துண்டு நெருப்பைப்
பூமியாக்கி இருப்பது
காலம் மட்டும் இல்லை
மனித குல உழைப்பும்தான்!
இந்த உலகை
இப்படி வடிவமைத்தவர்களை
அதற்கான
அவர்களின் பங்களிப்பை
அதற்காக
அவர்கள் எதிர்கொண்ட சவால்களைக்
கொண்டாடும் நாள் மே 1.
உணவுக்கான வேட்டையிலும்
கூட்டுழைப்பு
விலங்குகளுக்கும் தேவைப்படுகிறது.
தனிப்பட்ட உழைப்பு
கூட்டு உழைப்பாகிற போது
உறவுக்கு அடித்தளம் ஆகிறது
ஆகவே
உறவை வளர்க்கிற
உழைப்பைத் தருகிற
உழைப்பாளர்களை வாழ்த்துவோம்!
பரிணாம வளர்ச்சிக்கு
மனித குலத்தைப் பாதை மாற்றியது
உழைப்பு!
தன் வயிற்றுப் பாட்டிற்கு
மட்டும் இல்லை வாழ்க்கை.
அடுத்தவர் தேவைக்கும் உணர்வுக்கும்
அளிக்க நினைக்கிற மனதில்
வாழ்க்கையின் அர்த்தம் கிடக்கிறது!
உடல் திறனில் போட்டியாக
எந்திரம் நுழைந்த போது
இங்கிலாந்தில்
லடைட் அமைப்பு
எங்கள் வேலையைப் பறிக்கிறது
எந்திரம் என்று
இந்த வேலை செய்ய
நாங்கள் பயிற்சி பெற்ற
எங்கள் ஆயுட் காலத்திற்கு
இழப்பீடு என்ன என்று
19 ஆம் நூற்றாண்டிலேயே
போராடத் தொடங்கி இருக்கிறார்கள்!
அவர்கள் பயந்தது போல்
ஆகவில்லை!
மனித குல உடல் உழைப்புக்கு
உதவி செய்கின்றன எந்திரங்கள்,
இப்போது
அறிவுத் திறனில் போட்டியிட
வந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு!
உணவு உற்பத்தியிலிருந்து
யோகா வரை
அதன் வீரியம்
அச்சமடையச் செய்திருக்கிறது.
உடல் உழைப்புக்கு
மனிதர்களின் தேவையை
எந்திரங்கள் குறைத்த போது
அறிவுத் திறனுக்கான பணிகளின்
வாயில்கள் திறந்தன.
இப்போது
அறிவுத்திறன் பணிகளில்
தனிமனித அல்லது
மனிதர்களின் கூட்டுழைப்பைவிடச்
செயற்கை நுண்ணறிவின்
கூட்டுழைப்பில்
மருண்டு போய்க் கிடக்கிறது
உலகம்!
இப்போது வரை
மனிதர்களுக்கு வாய்த்திருப்பவை
உடல் திறன், அறிவுத் திறன் மட்டுமே என்றும்
இரண்டிலும் எந்திரங்களின் ஆட்சி
தொடங்கிவிட்டது என்றும்
இனி உலகில்
மனிதர்கள் எண்ணிக்கையில் அதிகமாகலாம்
ஆனால் செய்வதற்கான
வேலைகள் குறையும் என்று
சொல்கிறார்
யுவால் நோவா ஹராரி.
ஓட்டுநர் இல்லாத வாகனமாக
உலகம் மாறிக் கொண்டிருக்கிறது!
சாதி, மதம், மொழி, நாடு கடந்து
மனிதர்களை இணைக்கிற உழைப்பைக்
கைப்பற்றி வருகின்றன கருவிகள்!
உலகின்
எந்தப் பகுதியிலிருந்தும் கருவிகளை
இணைக்க முடிகிறது.
ஆனால்
ஒரே வீட்டில் உள்ளவர்களும்
உணர்வு ரீதியில் ஒன்றுபட முடியவில்லை.
கூட்டுக் குடும்ப வாழ்க்கை
சிதைகிறது.
குடும்ப உறுப்பினர்களுக்கும்
வீடு கூடாகிப் போகிறது.
கருவிகள்
மனிதர்களுக்கு வேலை செய்யலாம்
மனிதர்கள் வேலையைப் பறிக்கலாம்
ஆனால்
கருவிகளில் மனிதர்களைப் போல்
உணர்வுகளைச் சேர்க்க முடியவில்லை!
கருவிகளுக்கு உணர்வுகள் இல்லை!
அரசு எந்திரமாகிக் கொண்டிருக்கிறது.
ஒருவருக்கு ஒருவர்
தொடர்பே இல்லாமல்
கூட்டு உழைப்பை
நடைமுறைப்படுத்த ஆசைப்படுகிறார்கள்!
வீட்டில் இருந்தே வேலை செய்யுங்கள்
வீட்டிலேயே படம் பாருங்கள்
வெளியே வராதீர்கள் என்று
புதிய கரோனாவாய்
அரசும் முதலும்
அடைத்து வைக்கின்றன!
முதலாளிகளோடும் அரசோடும்
போராடிக் கொண்டிருந்தவர்களை
ஒற்றைச் சாளர முறையில்
அரசோடு நடத்தும்
போராட்ட முறையாக
ஆக்கியிருக்கிறார்கள் முதலாளிகள்!
போராடுபவர்களுக்கு எதிரியாக
எந்திரங்களைக்
களம் இறக்கி இருக்கிறார்கள்!
அரசும் எந்திரமாகி வருகிறது.
உழைப்பைக் கொண்டாடும் போது
உரிமைகளுக்காகத்
தொடரும் போராட்டங்களும்
நடந்த போராட்டங்களும்
கண்முன் நிற்கின்றன!
ஜந்தர் மந்தர் மைதானத்தில்
மல்யுத்த வீராங்கனைகள்
மான உரிமை காக்கப்
போராடிக் கொண்டிருக்கிறார்கள்!
தில்லி சாலையில்
ஆண்டுக் கணக்கில்
விவசாயிகள் போராடி வந்தார்கள்!
உழைப்புக்கு ஒத்துழைக்காமல்
அதிகாரம்
முட்டுக் கொடுத்து நிற்கிறது
முதலுக்கு!
போராட்டங்களுக்கும்
பரிணாம வளர்ச்சி உண்டு போலும்!
போராட்டத்திற்கான
காரணங்களை உணரும் அரசு
எந்திரம் ஆக மறுக்கத் துணிகிறது.
டெல்டா விவசாயிகளைப் பாதிக்கும்
ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்துப்
போராட்டம் அறிவிக்கிறார்கள்
விவசாயிகள்!
கோரிக்கையின் நியாயம் உணர்ந்து
திட்டத்தைக் கைவிடச் சொல்லி
முதலமைச்சர்
தில்லிக்குக் கடிதம் அனுப்புகிறார்.
48 மணி நேரத்தில்
திட்டம் கைவிடப்படுகிறது!
பதினைந்து மணி நேரக் கட்டாய உழைப்பை
எட்டுமணி நேர உழைப்பாக மாற்றி
ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின்
ஆயுட் காலத்தில்
ஏழு மணி நேரத்திற்கு
விடுதலை வாங்கித் தந்தவர்கள்
அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு என்பது
முரண் அழகு!
அதற்காகத் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களைத்
தூக்கில் தொங்கியவர்களை
வரலாறு பதிவு செய்திருக்கிறது.
இந்தியாவில் முதன் முதலாக
மே தினத்தைக்
கொண்டாடி இருப்பது சென்னை!
சிங்கார வேலர் கொண்டாடிய இடத்தில்
உழைப்பின் வெற்றியைக் குறிக்கும்
உழைப்பாளர் சிலை!
தொழில் நுட்ப வளர்ச்சியில்
வாரத்திற்கு 48 மணி நேரம் என்பது
40 மணியாகக் குறைந்து வருகிறது.
ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணியாக
நான்கு நாள் உழைத்து
வாரத்தில் மூன்று நாள்
ஓய்வுக்குப் போகக் கொண்டுவரப் பட்ட
சட்ட முன்வரைவைத்
தொழில் சங்கங்களின்
கோரிக்கையின் நியாயம் உணர்ந்து
திரும்ப பெற்றுக்கொண்ட
தமிழ்நாடு முதல்வருக்கும்
மே தின வாழ்த்து சொல்வோம்!!
உள்ளடக்கம்
கட்டுரை - மு. இராமசுவாமி
கவிதை - ஆர். வத்ஸலா
சிறுகதை - இ.தியாகலிங்கம்
கவிதை - காரைக்குடி சாதிக்
கட்டுரை - கவிதைக்காரன் இளங்கோ
சிறுகதை - வரத.இராஜமாணிக்கம்
கட்டுரை - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்
கவிதை – அன்றிலன்
சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்
கவிதை - சுசித்ரா மாரன்
கவிதை - சா. கா. பாரதிராஜா
கவிதை - சன்மது
கட்டுரை - கஞ்சனூர் ப்ரியா
கடைசிப் பக்கம் – இ.பா
கட்டுரை - மு. இராமசுவாமி
E:\Priya\Book Generation\May Kanaiyazhi\3-min.jpg‘வைக்கம்’ என்பது ஊரின் பெயரல்ல...
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ‘வைக்கம் ஸ்ரீமகாதேவர் திருத்தலம்’, இப்போது, எவரும் சென்று வழிபட்டுத் திரும்பக்கூடிய ஒரு பெரிய சிவன் கோவில் அவ்வளவே! ‘வைக்கத்தப்பன்’ என்று அங்குள்ள மக்களால் அன்பொழுக அழைக்கப்படும் சிவனை, மூலவராய்க் கொண்டிருக்கும் கோயில் அது! மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு இருப்பதைப்போல், நான்கு பக்க மதில்களிலும் வைக்கத்தப்பனுக்கும் நடைவாசல்கள் இருக்கின்றன! பெரிய கோபுர வாசல்களாய் இல்லாமல், கேரளத்தின் அழகோடு, அந்த நடைவாசல்கள் அமைந்திருக்கின்றன. நான்கு பக்கத்து நடை வாசல்களுக்கும் நேரெதிரே நீண்ட நீண்ட தெருக்கள் அமைந்திருக்கின்றன. ‘ஓம் நமச்சிவாய’ எனும் எழுத்தலங்காரம் நான்கு நடைகளிலும் பொருத்தப்பட்டிருக்கிறது. ‘ஏட்டுமானூர் சிவன் கோவில் மற்றும் கடுதுருத்தி சிவன் கோவில், ஆகியவற்றுடன் இதுவும் சிவனின் சக்திவாய்ந்த தலமாகக் கருதப்படுகிறது. உச்ச பூஜைக்குமுன் மூன்று கோவில்களையும் ஒருவர் வழிபட்டால், அவரது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை! கேரளாவின் பழைமையான கோயில்களில் ஒன்றான இது, வைக்கம் அஷ்டமி திருவிழாவிற்குப் பெயர் பெற்றது’ என்கிறது கூகுள்! நீண்ட பிரகாரத்தைக் கொண்டிருக்கிற வைக்கத்தப்பன், கிழக்கு நோக்கி அமர வைக்கப்பட்டிருக்கிறார். மேற்கில், நீண்டு கிடக்கிற தெருவின் முடிவில், வைக்கத்தின் படகுத்திட்டு-வைக்கம் ஜட்டி (jatty)-இருக்கிறது. அதையொட்டி, தீவாந்திரக் கிராமங்கள் பலவும் உள்ளன. வடக்கு வாசல் தெருவின் நுழைவிடத்தில், சரிந்த சனாதன சாம்ராஜ்யத்தின் எச்சமாய் மிகப்பெரிய வளைவுடன்கூடிய கம்பீரமான ‘இண்டம் துருத்தி (தீவு) மனை’ ஒன்று உண்டு. அது, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நம்பூதிரிகளின் தலைவர் ‘தேவன் நீலகண்டன் நம்பியாதிரி’ திருமேனியின் குடிமனை! ஈழவர், புலையர், நாடார், பறையர் வகைத் தாழ்த்தப்பட்ட மக்கள், கோயில் தெருவிற்குள் செல்ல முடியாது