Kanaiyazhi - June 2019
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Apri 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2024 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2023 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - June 2019
Related ebooks
Kanaiyazhi - April 2021 Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Kalaiyai Arinthu Kolvom Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeivangal Ezhuga Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Galatta! Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsTheerarum Karma Veerarum Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2019 Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVaanam Thottu Vidum Thooram Thaan Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2022 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsDinosaurgal Veliyeri Kondirukindrana Rating: 4 out of 5 stars4/5Tiruppur Kumaran Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2019 Rating: 0 out of 5 stars0 ratingsIndiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsVerukku Neer Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingssaagavaram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - June 2019
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - June 2019 - Kanaiyazhi
http://www.pustaka.co.in
கணையாழி, ஜூன் 2019
மலர்: 54 இதழ்: 03 ஜூன் 2019
Kanaiyazhi June 2019
Malar: 54 Idhazh: 03 June 2019
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கணையாழி ஜூன் 2019
தலையங்கம் - ம.ரா.
என்ன செய்யமுடியும் எதிர்க்கட்சிகள்?
வாக்களிக்கவில்லை என்றாலும்
பிரதமர் மோடிக்கு
வாழ்த்து சொல்வோம்!
கடந்த சட்டமன்றத் தேர்தலில்
தி.மு.க. வெற்றியைவிட
சட்டமன்றத்தில் பொதுவுடைமைக் கட்சி
இடம்பெறவில்லையே என்று
கவலைப்பட்டார் கலைஞர்.
இப்போது நடந்த தேர்தலில்
மேற்கு வங்கமும் கேரளாவும்
தோழர்களைக் கைவிட்ட போதும்
நம்பிவந்த கட்சிகளுக்கெல்லாம்
நம்பிக்கை தந்திருக்கிறார் தளபதி.
அதனால் இந்தியாவிலேயே
பன்முகத் தன்மைக்கும்
இணக்கமான வாழ்வுக்கும்
எடுத்துக்காட்டான தமிழகத்தில்
தாமரைக்கு மட்டும் தண்ணீர் இல்லை.
இவ்வளவு நெருக்கடிகளிலும்
சாதி, மத, நடிகர் கூட்டத்துக்குத்
தமிழக அரசியலில்
இடமில்லை என்பதில்
நம்பிக்கை துளிர்க்கிறது.
இமயம் முதல் குமரிவரை
இந்தியா ஒன்றுதான் ஆனாலும்
சிந்தனைகள் பல.
மக்கள் ஆட்சியின்
மாற்றுச் சிந்தனையாகத்
தேர்தல் முடிவில் தமிழகம்!
என்ன செய்ய முடியும்
எதிர்க்கட்சிகள்? என்று
கேள்வி எழுப்புகிறார்கள்.
கேள்விக்குள் கிடக்கின்றன
தோல்வி தந்த விரக்தியும்
அளவுக்கு மீறி வாங்கிய
அதிகாரத் துடிப்பும்!
முகம் முழுதும் மூக்காகவே இருக்க
யாருக்கும் உடன்பாடு
இருக்க வாய்ப்பில்லை.
ஒரே முகத்தில்
கண், காது, மூக்கு வாய், மெய் என
ஐம்பொறிகளின் ஆட்சி வேண்டும்.
இந்திய அளவில்
கட்சி வெற்றி என்பதைவிட
மோடிக்குக் கிடைத்த
தனிப்பட்ட வெற்றி இது என்கிறார்கள்!
தமிழ் நாட்டில்
தளபதிக்குக் கிடைத்த
மாபெரும் வெற்றி இது.
மோடியின் வெற்றி
அதிகாரத் தூண்கள்
தூக்கிப் பிடித்த வெற்றி!
தி.மு.க. வெற்றியோ
அதிகாரத்தை எதிர்த்த வெற்றி!
கலைஞர் இல்லாத களத்தில்
தளபதி மு.க.ஸ்டாலின்
பெற்றிருக்கும் வெற்றி
அரசியல் பார்வையாளர்களுக்கு
ஆச்சரியம் தந்திருக்கிறது.
பிழைப்பு அதிகாரத்தின்
பேர அரசியலுக்குப்
பதில் சொல்லும் அரசியலைக்
கையில் எடுத்திருக்கிறார்.
ஆனாலும் தொடர்கிறது
மத்தியிலும் மாநிலத்திலும்
ஆட்சி தொடர
மக்கள் வாக்களித்திருப்பதாகச்
சாமி ஆடிகளின் ஆவேசம்!
ஒரு இடத்தில் கூடப்
பாரதிய ஜனதாவுக்கு
இடம் கொடுக்காமல்
வஞ்சம் தீர்த்திருக்கிறது தமிழ்நாடு.
தமிழ்நாடு தவறாகப் போவதாகவும்
தமிழ்நாட்டில் வெற்றி பெற்றவர்களால்
என்ன செய்ய முடியும் என்றும்
தோற்றவர்களும்
தோற்றவர்களுக்கு ஆதரவானவர்களும்
கருத்துருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஜனநாயகத்தில் தேர்தல் என்பது
ஆளும் கட்சியைத்
தேர்ந்தெடுக்க மட்டுமில்லை
எதிர்க்கட்சியையும்
தேர்ந்தெடுக்கத்தான்!
எதிர்க்கட்சி என்ன செய்ய முடியும்? என்றால்
ஒரே கட்சி முறை
சட்டத்தில் இல்லையே!
அரசமைப்புச் சட்டத்தின்படி
மக்கள் வாழ்வதற்கு நிருவாகம் செய்ய
ஆளும் கட்சியும்
தவறுகிற போது தடுத்து நிறுத்த
எதிர்க் கட்சியும்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்!
மூக்கு என்ன செய்ய முடியும் என்று
முகம் கேட்பதில்லை.
மூக்கைச் சுமந்துதான்
முகம் இருக்க வேண்டும்
முகத்திற்குமாகத்தான்
மூக்கு மூச்சு விட வேண்டும்.
ஜனநாயகத் தூண்கள்
பழுதாகாமல் பாதுகாக்கப்பட
எதிர்க்கட்சிகளுக்கே
கூடுதல் பொறுப்பு
மக்கள் விழிப்புணர்வை
வளர்த்தெடுக்கவும்
வடிவம் கொடுக்கவும்
அதிகாரத்தால் பயன்பெற நினைக்கும்
ஆளும் கட்சியின்
ஆட்டத்தை நிறுத்தவும்
என்னவெல்லாமோ செய்ய
எதிர்க்கட்சிகளால் முடியும்தானே!
அன்புடன்ம.ரா
***
பொருளடக்கம்
கட்டுரை - எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
கட்டுரை -விவேக் கணநாதன்
அய்யப்ப மாதவன் கவிதைகள்
சிறுகதை - கவிஞர் இலக்கியா நடராஜன்
கவிதை - இரா. கவியரசு
கட்டுரை - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி
சிறுகதை - வாரணாசி நாகலட்சுமி (தமிழில் - ராஜி ரகுநாதன்)
நேர்காணல் - அமிதவ் கோஷ் (தமிழில்: பாரதிராஜா)
கவிதை - கா. முஜ்ஜம்மில்
கட்டுரை - வெளி ரங்கராஜன்
கட்டுரை - ஆத்மார்த்தி
கவிதை - பிறைநிலா
கட்டுரை - முனைவர் கோ. சசிகலா
சிறுகதை - பிச்சையம்மான்
கட்டுரை - முனைவர் எஸ். சாந்தினிபீ
கவிதை - எழில்
கட்டுரை - லஷ்மி சரவணகுமார்
கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி
கட்டுரை - தேர்தல் முடிவு?
எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
தளபதி ஸ்டாலின் இறங்கி அடித்திருக்கிறார்
- கலைச்செல்வி, திருச்சிராப்பள்ளி
கடினமான இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு, அதனை அடிப்படையிலிருந்தே அணுகுவதன் வழியாகக் கட்சியைப் பலப்படுத்துவதும், எதிரணியைத் தோற்கடிக்கச் செய்யும் உள்ளடி வேலைகளை மேற்கொள்ளுவதும், தமக்கு எதிராக வலுவான கூட்டணி அமையவிடாமல் பார்த்துக் கொள்வதுமான தெளிவான உத்திகளைக் கையாண்டு, இன்று பிரம்மாண்டமான அறுவடையைப் பாரதிய ஜனதா கட்சி அள்ளியெடுத்திருக்கிறது. இவையேதுகளிலும் அக்கறை செலுத்தாமலிருந்ததே காங்கிரஸின் பலமின்மைக்கு காரணமாக வைக்கலாம். புரையோடிப்போன விஷயங்களை அது தொடுவதேயில்லை. மாபெரும் தேசத்தின் தேர்தல் அரசியலை அது மேம்போக்கான விஷயமாகவே, எதிர் கொண்டது போலத் தோன்றுகிறது. எதிர்கருத்தாளர்களை மாநிலம்தோறும் இணைக்கத் தவறியதும், ராகுலின் மீதிருந்த பப்பு
இமேஜை அவரே மாற்ற இயலாததுபோல நடந்து கொண்டதும், கட்சியின் மீதான நம்பிக்கையின்மையை அதிகப்படுத்தியிருக்கலாம். தமிழக அளவில் பலம் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் இடதுசாரிகள் பலமிழந்திருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் இடதுசாரிகள் அதிஅவசரமாக அவசியப்படுகிறார்கள். ஏனெனில் முதலாளித்துவம் எளிய மக்களுக்கானதல்ல. அதன் இறுதி என்பது உயிர்ப்பின் கடைசித்துளி வரை உறிஞ்சி கொள்வதே. அதைக் கருத்திற்கொண்டு இடதுசாரிகள் காலத்திற்கேற்ப நெகிழ்வுகளோடு களமாடுவதே சிறப்பு.
தமிழகத்தைப் பொறுத்தவரை முக்கியமான இரண்டு தலைக்கட்டுகள் இல்லாத முதல் களம் இது. ஸ்டாலின் இறங்கி அடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலில் 89 தொகுதிகளில் மட்டுமே பெற்றிருந்த திமுக, தேர்தல்களுக்கான இடைவெளியில் மக்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. அதில் காவிரி உரிமை மீட்புப் பயணம் முக்கியமானது. ஸ்டாலின், முடிந்தவரை மக்களின் பிரச்சனைகளை நேரடியாகப் பேசுகிறார். கருத்தியலின் அடிப்படையில், பிற கட்சியினருடனான அவரின் அணுகுமுறை தமிழக அரசியல் சூழலில் நல்லதொரு முன்னெடுப்பு. கலைஞரின் மகன் என்று இயல்பாகவே அமைந்த நல்வாய்ப்பை, தெளிவாக மீட்டெடுத்துக் கொண்டதற்கு, அவரை மட்டுமே காரணமாக்கி விட முடியாது. மத்திய மாநில எதிரி(ஆளும்) கட்சிகளின் மீதான வெறுப்பும் இங்கு ஓட்டுகளாக மாறியுள்ளன. சாமான்யமான, ஓரளவு அரசியல் அறிவு கொண்டவர், தமிழகத் தேர்தல் முடிவு என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரோ அதுவாகவே முடிவுகளும் வந்துள்ளது ஆச்சரியமான ஒற்றுமை. அதேநேரம், எதையும் யாரும் வெற்றிக்களிப்புடனோ அல்லது தோல்வி மனப்பான்மையுடனோ அணுகிவிட முடியாதளவுக்கு முடிவுகள் ஒருவித அமைதியைக் கடத்துவதும் உண்மை.
இது மாடுகளின் பொற்காலம்
அரி சங்கர், சென்னை
2019 நாடாளுமன்றத் தேர்தலை உண்மையில் நடந்து முடிந்த தேர்தல் என்பதைவிட, நடத்தி முடிக்கப்பட்ட தேர்தல் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். எல்லாத் தேர்தலும் நடத்தி முடிக்கப்படுவதுதான் என்றாலும் இந்தத் தேர்தல் யாரால் நடத்தி முடிக்கப்பட்டது என்பது தான் கேள்வி. பா.ஜ.க.வின் இந்த வெற்றியும் அதனைத் தொடர்ந்து மாட்டுக்கறி வைத்திருந்ததாகச் சிலர் தாக்கப்படுவதும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாடு எத்திசையில் செல்லப்போகிறது என்பதற்கான முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். சரி காங்கிரஸ் வந்திருந்தால்...? ஒன்றும் ஆகியிருக்காது. இதைப்பற்றிப் பெரிதாக யோசிக்க வேண்டியதில்லை. நாம் ஒரு கடைக்குப் போகிறோம். அவர்கள் சேவை பிடித்திருந்தால் தொடருவோம். இல்லை என்றால் வேறு கடைக்கோ அல்லது முந்தைய கடைக்கோ மாறிவிடுவோம். இப்போது பெரும் முதலாளிகளுக்கு மோடியின் சேவையே திருப்திகரமாக இருக்கிறது. அதனால் அவரே தொடர்கிறார், அவ்வளவுதான். மற்றபடி இனி எல்லாமும் அப்படியேதான் இருக்கும். சிறுபான்மை இனத்தவரோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரோ விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றால் நாடு அதைக் கொண்டாடாது. அவர் மேல் ஊக்க மருந்துக் குற்றச்சாட்டோ, முடிந்தால் அவர் ஆணே அல்ல என்றோ அல்லது பெண்ணே அல்ல என்றோ சொல்லி யாரையும் வளரவிடாமல் வெட்டி வீழ்த்தும். இது மாடுகளின் பொற்காலம்.
அச்சப்படுகிறேன்
ஈரோடு கதிர், ஈரோடு
இந்த வரியைச் சொல்வதற்கு அஞ்சுகிறேன். ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். தேர்தல் மிகப்பெரிய அளவில் அலுப்பும் அயர்ச்சியும் தருகின்றது. ஒரு சாமானியனாகத் தேர்தலில் என்னுடைய பங்கு என்ன எனும் கேள்விக்கு, ஜனநாயகக் கடமை என்பதுள்ளிட்ட கிளிஷே சொல்லாடல்களை ஒதுக்கிவைத்துவிட்டு உண்மையாக யோசிக்க விரும்புகிறேன். தேர்தல் என்பது பலம் வாய்ந்த A மற்றும் B ஆகியோருக்கு இடையேயான போட்டி. அந்தப் போட்டியின் முடிவுகளுக்குப் பின்னே பெரும் கணக்குகள் உள்ளன.
மதம், சாதி, பணம் என்ற அடிப்படையில் நிறுத்தப்படும் இரண்டு முக்கிய வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வாக்காளருக்குத் திட்டமிடப்பட்ட(!) ஒருவிதச் சாதக / பாதக மனநிலை புகுத்தப்படுகிறது. அந்தத் திணிப்பு மனநிலை அலையாக மாறிப் பெரும்பான்மையான முடிவுகளில் தாக்கம் ஏற்படுத்துகிறது. இந்த அலையடிக்கும் மனநிலையை முன்வைத்தே சாமானியர்களின் தெரிவுகள் அமைகின்றன. வரும் ஆண்டுகளில் இந்தத் திணிப்பு இன்னும் வலுவாகத் திட்டமிடப்படும் என்று அச்சப்படுகிறேன்.
திருப்தியற்ற மனநிலை
லக்ஷ்மி சிவகுமார், தஞ்சாவூர்.
சுதந்திர இந்தியாவின் இதற்கு முன்னதான பதினாறு தேர்தல் முடிவுகளிலும் இருந்த அதே