Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arasiyal Galatta!
Arasiyal Galatta!
Arasiyal Galatta!
Ebook170 pages56 minutes

Arasiyal Galatta!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரைப்படங்கள், பத்திரிகைகள், பட்டிமன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றைக் காட்டிலும் நகைச்சுவை மிகுந்து காணப்படும் களம் அரசியல் களம்தான் என்பது அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். மற்றவற்றில் நகைச்சுவை அவ்வப்போதுதான் தலைகாட்டும். அத்தகைய ‘அரசியல் கலாட்டா’, படிக்கும்போது சிரிக்க வைக்கும். படித்து முடித்ததும் சிந்திக்க வைக்கும்!

Languageதமிழ்
Release dateFeb 11, 2023
ISBN6580160109372
Arasiyal Galatta!

Read more from Thuglak Sathya

Related to Arasiyal Galatta!

Related ebooks

Related categories

Reviews for Arasiyal Galatta!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arasiyal Galatta! - Thuglak Sathya

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அரசியல் கலாட்டா!

    Arasiyal Galatta!

    Author:

    துக்ளக் சத்யா

    Thuglak Sathya

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பா.ஜ.க. போகும் பாதை

    2. கருணாநிதியும், வைகோவும் பேசியது என்ன?

    3. எச்சரிக்கை: இங்கே தலைவர்கள் பேசுகிறார்கள்!

    4. கூட்டணி தர்மம் என்பது யாதெனில்...

    5. நேர்காணலில் வெற்றி பெற வேண்டுமா?

    6. தி.மு.க. வேட்பாளர்கள் கவனத்துக்கு!

    7. அடிமட்டப் பேச்சாளரின் ஆவேச உரை!

    8. ஒரு வாக்காளர் சிந்திக்கிறார்

    9. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சில வார்த்தைகள்...

    10. காணக் கிடைக்காத காட்சி!

    11. கருணாநிதி கனவில் பெரியார் வந்தால்...

    12. சில்லுன்னு ஒரு பாராட்டு!

    13. இதுதாண்டா ஜனநாயகம்!

    14. மன்மோகன் சிங் மனம் திறந்தால்...

    15. ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம் வாரீர்!

    16. 2020-ல் தமிழகம் எப்படி இருக்கும்?

    17. கருணாநிதியும், ராமதாஸும் கலந்தாலோசித்தால்...

    18. தயாராகிறது - பிரதமரின் சுதந்திர தின உரை!

    19. கருணாநிதியின் கருத்துப் புதையல்!

    20. தி.மு.க. - பா.ம.க. மோதல் முற்றினால்...

    நகைச்சுவை கலாட்டா...

    உயிரினங்களிலேயே சிரிக்கத் தெரிந்தது மனித இனம் மட்டும்தான். எந்த இடத்திலும் பொருந்தி, ரசிகனை உணர்வின் இறுக்கங்களிலிருந்து விடுபட வைத்து மனத்தை லேசாக்குகிறது நகைச்சுவை. எனினும் நமது வாழ்க்கைச் சூழலில் நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்கி ரசிக்க எவ்வளவு சந்தர்ப்பம் கிடைக்கிறது? அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்து நமது நகைச்சுவை உணர்ச்சிக்குத் தீனி போடுகிறது நூலாசிரியர் ‘துக்ளக்’ சத்யாவின் அரசியல் கலாட்டா.

    முன்பின் யோசிக்காமல் கேட்டவுடன் வாய்விட்டுச் சிரிக்கும் நகைச்சுவை, சிரித்தபின் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை, யோசனைக்குப்பின் வாழ்க்கையின் ஆழப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் நகைச்சுவை... சிரிப்பினூடாக யதார்த்தத்தை உணர்த்தும் நகைச்சுவை என்று பல வகைகள் உண்டு. ‘அரசியல் கலாட்டா’, படிக்கும்போது சிரிக்க வைக்கும். படித்து முடித்ததும் சிந்திக்க வைக்கும்!

    இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளவை அனைத்தும் ‘துக்ளக்’ இதழில் வெளியான அரசியல் நையாண்டிக் கட்டுரைகளே. சமீபகால அரசியல் சார்ந்த கட்டுரைகள். எவர் மனத்தையும் புண்படுத்தாமல், எதிராளிகளையும் ரசிக்க வைக்கும் நகைச்சுவைப்பாணி நூலாசிரியர் ‘துக்ளக்’ சத்யாவினுடையது. துக்ளக் பத்திரிகையின் நையாண்டிப் பாரம்பரியத்தை இதில் தெளிவாகக் காணலாம். ‘முழு நீள நகைச்சுவைப் படம்’ என்று கூறுவதுபோல் இது ஒரு முழு நீள நகைச்சுவைப் புத்தகம்.

    தற்கால அரசியல் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வைக்கும் இனிப்பு மருந்து இந்த நூல்!

    ஆசிரியர்

    நகைச்சுவைக் களம்!

    திரைப்படங்கள், பத்திரிகைகள், பட்டிமன்றங்கள், இலக்கியக் கூட்டங்கள் போன்றவற்றைக் காட்டிலும் நகைச்சுவை மிகுந்து காணப்படும் களம் அரசியல் களம்தான் என்பது அரசியலைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும். மற்றவற்றில் நகைச்சுவை அவ்வப்போதுதான் தலைகாட்டும். ஆனால், அரசியலில் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது நகைச்சுவைதான் என்பது எனது கருத்து. அரசியல்வாதிகளைத் தவிர மற்ற எல்லோருமே எனது இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

    மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது மகா சீரியஸாகத் தோன்றும் அரசியல் தலைவர்களின் பேட்டிகள், அறிக்கைகள், செயல்பாடுகள் ஆகிய அனைத்துமே சற்று நுணுக்கமாக அலசப்பட்டால் – ஒன்றுவிடாமல் அத்தனையும் நகைச்சுவையே. அதனால்தான் என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் துக்ளக்குக்கு அரசியல் நகைச்சுவைக் கட்டுரைகள் எழுத எனக்கு தாராளமாக விஷயம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது (படிப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை சிரமமாக இருக்கலாமே தவிர... இதை எழுதுவதில் எனக்கு எந்தவிதச் சிரமமும் ஏற்படுவதில்லை). அந்த வகையில் 2006, 2007-ம் ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளிலிருந்து இருபது கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

    எத்தகைய சூழ்நிலையில் அந்தந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன என்பதைப் புரிந்துகொள்வதற்கு வசதியாக, அவற்றின் துவக்கத்திலேயே அதை விளக்கியுள்ளேன். என்னை அரசியல் விமர்சகனாக இனம்கண்டு வெளிப்படுத்தி வளர்த்து வரும் துக்ளக் ஆசிரியர் பெருமதிப்புக்குரிய ‘சோ’ சார் அவர்களுக்கு நான் என்றென்றும் கடைமைப்பட்டுள்ளேன்.

    இந்தப் புத்தகத்தை சிறப்பான முறையில் வெளிக்கொண்டு வந்துள்ள விகடன் பிரசாத்துக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    ‘துக்ளக்’ சத்யா

    98. சடையப்பன் தெரு,

    சைதாப்பேட்டை,

    சென்னை – 600 015

    கூர்மையான விமர்சனம்...

    தமிழ்ப் பத்திரிகைகளில் எஸ்.வி.வி., தேவன், கல்கி, நாடோடி, மகரம் போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் பலர் நகைச்சுவையை அள்ளி வழங்கியிருக்கிறார்கள். இப்போதும் வெவ்வேறு பத்திரிகைகளில் நகைச்சுவைக் கட்டுரைகளைப் பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர்களில் ‘சத்யா’வுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அரசியல்வாதிகளையும், அரசியல் நிகழ்வுகளையும் கண்டு ஒரு சாரார் மனம் வெதும்பலாம்; அல்லது சிரித்து மனச்சுமையை இறக்கி வைக்கலாம்.

    மனம் வெதும்பி எழுதுபவர்கள் பலர் உண்டு; ஆனால், சிரித்து மனச்சுமையை இறக்கி வைக்க உதவும் எழுத்தாளர்கள் மிகச் சிலர்தான். அப்படிப்பட்டவர்களில் ‘சத்யா’ முன்னணியில் நிற்கிறார்.

    ‘துக்ளக்’ பத்திரிகையில் பல வருடங்களாக அவர் தொடர்ந்து எழுதி வரும் நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு, வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.

    ‘துக்ளக்’கில் சத்யாவின் கட்டுரைகள் இன்றியமையாத ஒரு பகுதியாகவே அமைந்துவிட்டன என்று சொன்னால் அது மிகையல்ல!

    அரசியல்வாதிகளின் பேச்சுகளை ஊன்றி கவனித்து, அவர்களுடைய செயல்பாடுகளை அலசி... நேற்றும், இன்றும் நடக்கிற அரசியல் நிகழ்வுகளை மனத்தில் தேக்கி... அவர் தருகிற கட்டுரைகளே இதற்கு உதாரணம்.

    மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் அது நகைச்சுவைக்கட்டுரை; சற்று யோசித்துப் பார்த்தால், கூர்மையான விமர்சனம்.

    ஏற்கெனவே அவரது கட்டுரைகள் புத்தக வடிவில் வெளிவந்துள்ளன. இப்போது அவரது கட்டுரைகளின் மற்றொரு தொகுப்பு வெளியாகிறது.

    நகைச்சுவை ரசிகர்களிடம் இது பெரும் வரவேற்புப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

    சோ

    ஆசிரியர், ‘துக்ளக்’

    பா.ஜ.க. போகும் பாதை

    1

    சட்டசபைத் தேர்தல் 2006-ன்போது கூட்டணி அமைக்க எந்தக் கட்சியின் ஆதரவும் கிடைக்காமல் தமிழக பா.ஜ.க. திண்டாடியபோது எழுதப்பட்ட கட்டுரை இது.

    வெங்கையா நாயுடு: வாங்க, வாங்க... என்ன விஷயம்... இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?

    இல.கணேசன்: ஒரு முக்கியமான பிரச்னைங்க. பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டோம். எப்படி தப்பிக்கப் போறோம்னே தெரியலை. அதான் உங்ககிட்டே ஐடியா கேக்கலாம்னு வந்தோம்.

    வெ.நாயுடு: அடக்கடவுளே! பா.ஜ.க-வைச் சேர்ந்தவங்க யாராவது மறுபடியும் காமிராவிலே மாட்டிக்கிட்டாங்களா? எத்தனை பேரு?

    திருநாவுக்கரசர்: சேச்சே! அதெல்லாம் இல்லைங்க, தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரப்போகுது. நம்ம கட்சி என்ன நிலையை எடுக்கணும்னே புரியலை.

    வெ.நாயுடு: எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கறோமோ, அதுக்குத் தகுந்த மாதிரி ஒரு நிலையை எடுத்துக்க வேண்டியதுதானே? அதானே வழக்கம்? மற்ற மாநிலங்களிலே எல்லாம் அப்படித்தானே முடிவெடுக்கிறோம்.

    சி.பி.ராதாகிருஷ்ணன்: அது தெரியாதுங்களா? எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்னு புரியலை. மற்ற கட்சிகள் எல்லாம் ஆட்சியிலே பங்கு வேணும்னு கேக்கறாங்க. நாம் கூட்டணியிலே பங்கு வேணும்னுதான் கேக்கறோம். அதுகூட கிடைக்கமாட்டேங்குது.

    இல.கணேசன்: மற்ற கட்சிகளுக்கும், நம்ம கட்சிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்குது. மற்ற கட்சிகளுக்கெல்லாம் கூட்டணியிலே எத்தனை ஸீட் கிடைக்குமோங்கற கவலை. நமக்கு மட்டும்தான் ஸீட் கவலை கொஞ்சம்கூட இல்லை. கூட்டணி கிடைக்குமா... கிடைக்காதாங்கற கவலைதான்.

    திருநாவு: நீங்க எப்படியாவது முயற்சி செஞ்சு, ஒரு கூட்டணியிலே எங்களைச் சேர்த்து விட்டுட்டீங்கன்னா, அந்தக் கூட்டணி முறியறவரைக்கும் கட்சியைக் காப்பாத்திடுவோம். அடுத்த தேர்தல் வரை பிரச்னை இல்லாம இருக்கும்.

    வெ.நாயுடு: ஏன் நம்ம கட்சி தமிழ்நாட்டுல வளரவேமாட்டேங்குது?

    இல.கணேசன்: பத்திரிகைகள் நம்மைப் புறக்கணிக்கிறதுதான் காரணம். காங்கிரஸ்ல நடக்கிற உட்கட்சித் தகராறுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரிக்கிறாங்க. ஆனா, தமிழக பா.ஜ.க-விலே இருக்கிற பூசல்களை இருட்டடிப்பு பண்ணிடறாங்க. அதனாலதான் காங்கிரஸ் அளவுக்கு நம்மாலே வளர முடியல.

    வெ.நாயுடு: நான் வேணும்னா ஹிந்துத்துவா பற்றி தமிழ்நாட்டிலே பிரசாரம் பண்ணட்டுமா?

    திருநாவு: ஐயையோ! வேண்டாங்க. இங்கே கட்சி ஏற்கெனவே மோசமான நிலையில இருக்குது.

    வெ.நாயுடு: அப்ப சரி, தமிழ்நாட்டு அரசியல் நிலைமையைப் பத்தி நீங்கதான் எனக்குச் சொல்லணும். எந்தக் கட்சியோட

    Enjoying the preview?
    Page 1 of 1