Arasiyalum Nagaichuvaiyum
()
About this ebook
நகைச்சுவை நோய் தீர்க்கும் மருந்து போன்றது. அநேகமாக எல்லா அரசியல் தலைவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் நாம் விமர்சித்து வருகிறோம். நகைச்சுவை என்கிற உன்னத கலையின் வளர்ச்சிக்கு, அரசியல்வாதிகள் சீரியஸான அறிக்கைகள், பேட்டிகளின் மூலம் நம்மை எவ்வாறு சிரிக்க வைக்கிறார்கள்? என்பதை சத்யாவின் அரசியலும் நகைச்சுவையும் கட்டுரையில் காண வாருங்கள்!
Read more from Thuglak Sathya
Sarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsSirippatharkku Sila Visayangal... Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Galatta! Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Varungal Naguga! Rating: 0 out of 5 stars0 ratingsSmile Please Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsPathavi Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsMadasamiyin Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalvaathiyin Aavi Rating: 0 out of 5 stars0 ratingsSir, Post...! Rating: 0 out of 5 stars0 ratingsNaadu Thazhuviya Nagaichuvai Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsCho Sir Peatti Alithaal Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Kalaiyai Arinthu Kolvom Rating: 0 out of 5 stars0 ratingsKizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsOozhal Nam Pirappurimai Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Arasiyalum Nagaichuvaiyum
Related ebooks
Manohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsMadasamiyin Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsIndiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsPrathamarudan Iru Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsKizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsGlucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nila Muttrathile! Rating: 5 out of 5 stars5/5O! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsMannithu Vidu... Magane...! Rating: 0 out of 5 stars0 ratingsAthirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsNaadu Thazhuviya Nagaichuvai Rating: 0 out of 5 stars0 ratingsUyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsIdhayaraagam Rating: 5 out of 5 stars5/5Sirikka Vaikkum Kurumbana Kutty Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsMuththam Thedum Mugam! Rating: 4 out of 5 stars4/5Ippadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsSakalakala Babu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Arasiyalum Nagaichuvaiyum
0 ratings0 reviews
Book preview
Arasiyalum Nagaichuvaiyum - Thuglak Sathya
https://www.pustaka.co.in
அரசியலும் நகைச்சுவையும்
Arasiyalum Nagaichuvaiyum
Author:
துக்ளக் சத்யா
Thuglak Sathya
For more books
https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
1. ஹலோ மிஸ்டர் வாஜ்பாய்...
2. போலிகள் சிறப்பு மலர்
3. அதர்மபுத்திரன் பதில்கள்
4. கடவுளும் கருணாநிதியும்
5. ஒரு தீவிரவாதி விசாரிக்கப்படுகிறார்
6. விக்கிரமாதித்தன் தந்த விளக்கம்
7. சோனியாவுக்கு ராமதாஸ் (எழுதாத) கடிதம்
8. 2000-ஆவது ஆண்டு இதுவரை வெளிவராத பரபரப்புத் தகவல்கள்
9. தமிழக முதல்வருக்கு சந்தனக் கடத்தல் வீரப்பன் (எழுதாத) கடிதம்
10. வணக்கம் துக்ளக்
11. தமிழக முதல்வர் தராத பேட்டி
12. மூப்பனார் (அளிக்காத) பேட்டி
13. பா.ம.க.தலைவரின் பரபரப்பான கொள்கைகள்
14. வாழப்பாடி ராமமூர்த்தி வழங்காத பேட்டி
15. வை.கோ. படைத்த வரலாறு
16. ராமதாஸுக்கு வந்த சோதனை
17. பால்தாக்கரே பேட்டியளித்தால்...?
18. தமிழக முதல்வருடன் சந்தன வீரப்பன் பேசினால்...?
19. சந்தனக் கடத்தல் வீரப்பனை சமாதானப்படுத்துவது எப்படி?
20. நீதி வழங்குகிறார் ஜெயலலிதா
முன்னுரை
அன்பு நண்பரே/சகோதரியே,
வணக்கம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ ‘நையாண்டிக் கட்டுரைகள்’ ஆகிய இரு புத்தகங்களைத் தொடர்ந்து, ‘அரசியலும் நகைச்சுவையும்’ என்ற எனது இந்த மூன்றாவது புத்தகம், சவால்களைத் தொடர்ந்து சந்திக்க சற்றும் தயங்காதவர் என்பதை நண்பர் திரு. அல்லயன்ஸ் சீனிவாசன் அவர்கள் இதன் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
நகைச்சுவை என்கிற உன்னத கலையின் வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பதை, இக்கட்டுரைத் தொகுப்பின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நகைச்சுவை, நோய் தீர்க்கும் மருந்து போன்றது என்று ஏற்கெனவே பலர் கூறியிருக்கிறார்கள். அலோபதி, ஆயுர் வேதம், சித்த வைத்தியம், ஹோமியோபதி என மருத்துவ முறைகளில் பல வகைகள் இருப்பது போல நகைச்சுவையும் ஒரு வகை என்று கூறிவிடலாம். இந்த முறையில்தான் அரசியலில் பல ‘டாக்டர்கள்’ ஃபீஸ் கூட வாங்காமல் நகைச்சுவை வைத்தியத்தின் மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
பொதுவாகவே, சமுதாயத்தில் நகைச்சுவை உணர்வு குறைந்து வருகிறது. அதனால்தான் இப்போதெல்லாம் டி.வி.யில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நாடகங்களில் கூட, பின்னணியில் ‘சிரிப்பு ஒலி’ பதிவு செய்யப்படுகிறது. எந்த இடத்தில் சிரிக்க வேண்டும் என்பது நேயர்களுக்கு தெரியாது என்பதால்தான் அவர்களுக்கு உதவும் வகையில் பின்னணியில் சிரித்துக்காட்டுகிறார்கள். நேயர்களும், ‘ஒஹோ...! இதுதான் சிரிக்க வேண்டிய இடம் போலிருக்கிறது’ என்று கண்டுபிடித்து சிரிக்கிறார்கள். இப்படி, எது நகைச்சுவை, எப்போது சிரிக்க வேண்டும் என்று கூட புரியாத அளவுக்கு மக்களிடையே நகைச்சுவை உணர்வு மங்கியிருக்கிற கால கட்டத்தில், அரசியல்வாதிகள் சீரியஸான அறிக்கைகள் பேட்டிகளின் மூலமாக நம்மை சிரிக்க வைக்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
இத்தொகுப்பில் வெளியாகியுள்ள 20 நகைச்சுவைக் கட்டுரைகளும் (நீங்கள் சிரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் நகைச்சுவைக் கட்டுரைகள் என்று நான் இவற்றிற்கு பெயரிட்டிருகிறேன்) துக்ளக்கில் பிரசுரமானவை. வாசகர்களின் வசதிக்காக, எத்தகைய அரசியல் சூழ்நிலையில் இவை எழுதப்பட்டவை என்பதையும் ஒவ்வொரு கட்டுரையின் துவக்கத்திலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
அநேகமாக எல்லா அரசியல் தலைவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் நான் விமர்சித்து வந்திருக்கிறேன். எல்லோரும் அவற்றை என்னைப் போலவே நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, எனக்குத் தெரிந்து யாரும் அவற்றால் கோபமடைந்ததில்லை. ஒரு சிலர் ரசித்ததோடு நில்லாமல் பெருந்தன்மையுடன் பாராட்டியும் இருக்கிறார்கள் என்பது நகைச்சுவைக்கு தரப்பட்ட மரியாதையாகவே நான் கருதுகிறேன்.
அரசியல் விமர்சன உலகிலும், நகைச்சுவை இலக்கியத்திலும் குறிப்பிட்ட இடத்தை நான் பெறும் வகையில் என்னை உருவாக்கி, வளர்த்து வரும் பெருமதிப்பிற்குரிய மாமனிதர் துக்ளக் ஆசிரியர் சோ ஸார் அவர்களுக்கு என் காலம் உள்ளவரை நன்றிக்கடன் பட்டவன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரிப்பது ஓர் உயர்ந்த பண்பு. நீங்கள் பண்புள்ளவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.
அன்புடன்
சத்யா
1. ஹலோ மிஸ்டர் வாஜ்பாய்...
வாஜ்பாய் அவர்கள் முதல் முறை பிரதமராக பதவி ஏற்கவிருந்த நிலையில், அவருக்குப் போதுமான எம்.பி.க்களின் ஆதரவு இல்லாமல் இருந்தது. அவரை ஆதரிப்பதற்கு பல எம்.பி.க்கள் விதித்த நிபந்தனைகள் கொஞ்சநஞ்சமல்ல. எந்த எம்.பி. என்ன நிபந்தனை விதித்தாலும் அதற்குப் பணிய வேண்டிய நிலையில் அவர் பதவி ஏற்க முன் வந்ததால், அவரது நிலையை இப்படி கிண்டல் செய்ய வேண்டியிருந்தது.
***
பாரதிய ஜனதா கூட்டணிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டாலும் ஏற்பட்டது. அவரை ஆதரிப்பதாகக் கூறி ஜெயித்தவர்கள் படுத்துகிற பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ‘வெளியிலிருந்து ஆதரவு’ என்று ஜெயலலிதா பயமுறுத்துகிறார். மேற்கு வங்காளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக ஸி.பி.ஐ. விசாரணை தேவை என்று மம்தாபானர்ஜி நிபந்தனை விதிக்கிறார். மூன்று எம்.பி.க்களை வைத்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனக்கெதிரான வழக்குகளை உ.பி. அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும், கல்யாண் சிங் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்றும் கேட்பதாகச் செய்திகள் வருகின்றன. இன்னும் யாரெல்லாம், என்னவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. யார் கண்டது? இப்படிக் கூட எங்காவது ஒரு எம்.பி. கேட்டுக் கொண்டிருக்கலாமோ என்னவோ!
ஹலோ... வாஜ்பாய் இருக்காரா?
வாஜ்பாய் தான் பேசறேன். நீங்க யாரு?
என்ன? என்னையா யாருன்னு கேக்கறீங்க? அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டீங்களா?
கோவிச்சுக்காதீங்க. சத்தியமா நீங்க யாருன்னு தெரியலை...
மனசுக்குள்ளே பிரதம மந்திரி ஆயிட்டதாகவே நினைப்பா? உங்களுக்கு 271 எம்.பி.ங்க ஆதரவு இருக்கலாம், ஆனால் என்னைச் சேர்த்தாத்தான் 272. அதை ஞாபகம் வெச்சுக்குங்க!
ஐயையோ... நீங்க எம்.பி.யா? மன்னிச்சுக்குங்க. தெரியாம பேசிட்டேன். நீங்க எந்தக் கட்சி எம்.பி. ஸார்?
கட்சியெல்லாம் விடுங்க. கட்சி பேர் எல்லாம் ஞாபகத்துக்கு வரலை. எப்படியோ ஜெயிச்சு எம்.பி. ஆயிட்டேன். பத்து நாள் ஆகுது. இன்னும் உங்க ஆளுங்க யாரும் என்னை வந்து பாக்கலை. இதான் ஒரு எம்.பி.க்கு கொடுக்கற மரியாதையா? உங்களை பிரதமர் ஆக்கலாம்னு நினைச்சேன் பாருங்க. அது என் தப்பு!
நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. உங்களை. நம்பித்தான் இந்த நாடே இருக்குது.
அது எனக்குத் தெரியாதா? நீங்க நடந்துக்கற முறையே சரி இல்லையே. ஆட்சி அமைக்கிற எண்ணமே இல்லையா? என்ன வேணும்னு இது வரைக்கும் ஒரு வார்த்தையாவது கேட்டீங்களா என்கிட்டே?
இப்ப கேக்கறேன் சொல்லுங்க. உங்க ஆதரவு மட்டும் இல்லைனு சொல்லிடாதீங்க!
நான் நினைச்சா உங்களை ஆட்சி அமைக்க முடியாத படி தடுக்கவும் முடியும். ஆட்சி அமைச்ச பிறகு கவுக்கவும் முடியும். என் பலம் தெரியுமா தெரியாதா?
தெரியாம என்ன ஸார்? அதான் என்ன வேணும்னு கேக்கறேனே...
மறுபடியும் தேர்தல் வந்தா ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். நான் அவ்வளவு கேக்கலை. அதுலே பாதி கொடுத்தா போதும்!
ஐயையோ! கேக்கறதுக்கே பயங்கரமா இருக்கே.
கேக்கறது நான். நீங்க இல்லே!
காதாலே கேக்கறதுக்கே பயங்கரமா இருக்குன்னு சொல்றேன்.
பின்னே மதவாதக் கட்சியை சும்மா ஆதரிக்கச் சொல்றீங்களா? நாளைக்கு மக்கள் முகத்திலே நான் எப்படி முழிக்க முடியும்? சிறுபான்மை இனத்தவர் ஓட்டு போயிடுமே. அந்த தியாகத்துக்கு மதிப்பே கிடையாதா?
அப்படி இல்லை எம்.பி. ஸார்! பணமெல்லாம் கொடுக்கிறதுக்கில்லை. பாரதிய ஜனதாக் கட்சி நேர்மையான கட்சின்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!
"கேள்விப்பட்டிருக்கேன். உங்க கட்சியைப் பிடிக்காதவங்க கிளப்பி விட்ட புரளியா இருக்கும்னு நினைச்சேன்.