Kanaiyazhi - November 2022
By Kanaiyazhi
()
About this ebook
Read more from Kanaiyazhi
Kanaiyazhi - June 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - September 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Septembet 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - May 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2020 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2024 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2023 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2020 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kanaiyazhi - November 2022
Related ebooks
Sabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsVerukku Neer Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - July 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Tamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - January 2021 Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsJayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsMunneru! Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsOvvoru Naalum Urchagam Rating: 5 out of 5 stars5/5Dalit Kalai, Ilakkiyam... Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Mahakavi Bharathiyar! Rating: 0 out of 5 stars0 ratingsIndiravin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsIniya Vazhvirku Irubathu Vazhigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kanaiyazhi - November 2022
0 ratings0 reviews
Book preview
Kanaiyazhi - November 2022 - Kanaiyazhi
https://www.pustaka.co.in
கணையாழி நவம்பர் 2022
மலர்: 57 இதழ்: 08 நவம்பர் 2022
Kanaiyazhi November 2022
Malar: 57 Idhazh: 08 November 2022
Author:
ம.ரா
Ma. Raa
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
தென்திசை ஆளும் தென்னவன் வாழ்க!
சொல்லின் தலையெழுத்து
சொல்பவரைப் பொறுத்தது!
கணியன் பூங்குன்றனால்
யாதும் ஊரே -
திருவள்ளுவரால் பிறப்பொக்கும் -
இரண்டாயிரம் ஆண்டுகளாகச்
சொல்பவர்களுக்கும்
உயிர்ப்பு தருவன!
தமிழ்ச் சிந்தனைக்கும்
அவையே
தலையெழுத்தாயின!
இதோ முதல்வரின் திராவிட மாடல்!
பிறக்கும் போதே
வியக்க வைக்கிறது!
மாற்றாரை வியர்க்க வைக்கிறது!
அதிகாரத்திற்காக மொழிகளை
வேட்டையாடுகிறார்கள்!
மனித உரிமை போல
மொழிகளுக்கும் உரிமை உண்டு!
ஓருவரை வளர்க்க
மற்றவர்களை அழிக்கச்
சட்டம் அனுமதிப்பதில்லையே!
மொழிக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?
நமது வீட்டுச் சிலிண்டர்
கசிகிறது என்றால்
1906 க்குத் தொலைபேசி
செய்யச் சொல்கிறார்கள்!
செய்தால் இந்திக்கு 1
ஆங்கிலத்துக்கு 2
வங்காளம் ஒடியாவுக்கு 3
தமிழ், மலையாளம்,
கன்னடத்துக்கு 4 என்று
எண்ணை அழுத்தச் சொல்லி
ஏலம் போடுகிறார்கள்!
அழுத்திப் பாருங்கள்
இந்தியைத் தவிர
வேறு எண்ணைத் தொட்டால்
பதில் வருவதில்லை!
அபாய அவசரங்கள்
மொழிபார்த்து வருவதில்லையே!
இந்தி பேசாத மாநிலங்களிலும்
ஒன்றிய அரசின்
எல்லாத் துறைகளிலும்
இந்திக்கு மட்டுமே உரிமை!
விமான நிலையங்களிலும்
இந்திதான்.
வங்கியில் விவரம் வேண்டி
தொலைபேசி செய்தால்
இந்தியில் பதில் சொல்கிறார்கள்!
தமிழில் கேட்டால்
காத்திருக்கச் சொல்லித்
தொடர்பைத் துண்டிக்கிறார்கள்!
தமிழ் தெரியாதவரையே
தபால் கொண்டுவரும் பணிக்கு
அஞ்சல் துறையில் அமர்த்துகிறார்கள்.
தமிழோ ஆங்கிலமோ
தெரியாதவர்களைத்
தேடிப்பிடித்துத் தமிழ்நாட்டில்
ஓடும் இரயிலில் உணவுப் பொருட்களை
விற்க வைத்திருக்கிறார்கள்!
தண்ணீரைப் பாணி என்று
இந்தியில் சொல்ல வைக்கிறார்கள்!
உணவு விடுதிக்குச் சென்றால் -
முடிவெட்டிக்கொள்ளப் போனால்
இந்தியில் பேசுகிறார்கள்!
மாநிலக் காவல்துறைக்கு
இந்தியா முழுதும் ஒரே சீருடையாம்!
அடுத்து
ஒவ்வொரு மாநிலத்துக்கும்
தனித்தனிக் காவல்துறை எதற்கு?
தில்லி யூனியன் போல
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்
ஒட்டுமொத்தக் காவல்துறை என்பார்கள்!
அலுவல் மொழி நிலைக்குழு (11 ஆவது)
அறிக்கை தந்திருக்கிறது.
அனைத்து நிலையிலும்
இந்தியை மட்டும் வளர்ப்பார்களாம்!
ஒரே சூரியன் ஆனாலும் ஏழுநிறம்
ஒரே பூமி ஆனாலும்
மலை, கடல், வயல், காடு, மணல் என
ஐந்திணையில் உலகம்.
பூமியில் ஒரு பிரபஞ்சம் கடல்
நீராரும் கடலுடுத்த என்பதுதான்
தமிழ்த்தாய் வாழ்த்தின் தொடக்கம்.
இந்து மாக்கடல்
மர்மங்கள் நிறைந்தது!
குமரிக் கண்டத்தின்
மறைவிடம்!
தமிழ்ச் சங்கத் தென்மதுரையைக்
கடல்கொண்ட போது,
குமரிக் கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி’ என்று
சிலப்பதிகாரம் பாராட்டுகிறது!
இப்போது
கடலில் மீன்பிடிக்கச் செல்லும்
தமிழர்களுக்கு
இந்தி தெரியவில்லை என்பதால்
விரட்டி அடிக்கிறது
இந்தியக் கப்பல்படை!
இதுவரை மட்டுமில்லை
இனிமேலும்
உலகை மாற்றப் போகிறவை
சொற்கள்தாம்!
உண்மையைச் சொல்ல
அதிகம் சொற்கள் தேவைப்படுவதில்லை!
அன்பு எனும் மொழிக்கு
எல்லைகள் கிடையாது!
சிரிப்புக்கும் அழுகைக்கும்
மொழி வேறுபாடு கிடையாது!
உலகில் அந்தந்த மொழிகளில்
ஆற்றல் மிக்க சொல்
‘வேண்டாம்’ என்பதுதானாம்.
சொல்வதில் தெளிவும்
துணிவும் வேகமும்
தொடர்ச்சியாக இருந்தால்
வரலாறு மாறுமாம்!
இந்தித் திணிப்பு வேண்டாம் என்று
சட்டமன்றத்தில் தீர்மானம்!
வடக்கே கங்கையும் இமயமும்
இப்போதும்
இந்தியாவில்தான் இருக்கின்றன.
இப்போது தேர்தல்தான்
படையெடுப்பு!
சிலம்பு போல போற்றுவோம்
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆளும் தென்னவன் வாழ்க!"
***
உள்ளடக்கம்
இயக்குனர் பவன் இராஜகோபாலனுடன் ஒரு நேர்காணல்
அம்மா சொன்ன கதைகள்
கவிதை - கவிஜி
சிறுகதை - செந்தில்குமார் ந
கட்டுரை அ. நாகராசன்
அம்மா சொன்ன கதைகள் - ஆர்.கே.இராமநாதன்
கவிதை - ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
சிறுகதை - ஹமீது தம்பி
கவிதை - ரகுநாத் வ
நாடகம் - மு. இராமசுவாமி
அம்மா சொன்ன கதைகள் - மு.ச.சதீஷ்குமார்
கவிதை - கி.சரஸ்வதி
கட்டுரை - சா.தேவதாஸ்
குறுங்கதைகள் - முபீன் சாதிகா
சிறுகதை - சன்மது
கவிதை - இலக்கியா நடராஜன்
கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி
***
நேர்காணல் - எம்மா பார்க்
தென்னிந்தியாவில் மீண்டெழும் அறிவொளிவாதம்:
இயக்குனர் பவன் இராஜகோபாலனுடன் ஒரு நேர்காணல்
இந்தியாவிலிருந்து வெளிவந்துள்ள பகுத்தறிவு சார்ந்த புதிய திரைப்படம் விவேசினி இந்த படம் உருவான விதம், இந்தியாவில் இன்று பகுத்தறிவு, சமயச்சார்பின்மை ஆகிய கருத்துக்களின் நிலை, தி ஃபிரிதிங்கர் (லண்டன் 1881) இதழுடன் இந்திய சுயாதீன சிந்தனைப்போக்குகள் கொண்டுள்ள உறவு ஆகியன பற்றி இயக்குனர் பவன் இராஜகோபாலன் அளித்துள்ள நேர்காணல்.
இந்த படத்தை உருவாக்க உங்களுக்கு தூண்டுகோலாக அமைந்தது எது?
இது ஒரு உள்முகமான பயணம். நான் பிறந்து வளந்த வைதீகக் குடும்பச் சூழலால் ஒரு பொறுப்பற்ற, அறிவுக்கு ஒவ்வாத தனி மனிதனாக உருவாக்கப்பட்டிருந்தேன். இப்படிப்பட்ட குடும்பச் சூழலில் வளர்ந்ததால் எல்லாமே புனிதமானதாகவும், மதவிசேஷமுள்ள விஷயங்களாகவும் அமைந்து, அவையே அன்றாட வாழ்வை முற்றுகையிட்டு இருந்தது. ‘திருநாவுக்கரசர்’ கொள்கை மாற்றம் போல, நாத்திகத்திலிருந்து நம்பிக்கைவாதத்தை நோக்கி வந்தவனல்ல நான். மாறாக எதிர்த்திசையில் ஆத்திகத்திலிருந்து பகுத்தறிவை நோக்கி மெதுவாகவும் படிப்படியாகவும் நகர்ந்துகொண்டு வந்தேன். என் இளம் வயது நம்பிக்கைகளைத் தொடர்ந்து கேள்வி கேட்பது, அனுபவங்களின் அடிப்படையில் பகுத்தாய்ந்து விடைகளைக் கண்டறிவது என்பவற்றின் மூலம், நான் எந்தச் சூழலில் வளர்ந்தேனோ, அதிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு புதிதாக வள்ர்ந்தேன். இந்த அறிவார்ந்த விழிப்பு நிலைதான் இந்தத் திரைப்படத்தை உருவாக்குவதற்கு எனக்கு தூண்டுகோலாக அமைந்தது என்று சொல்லலாம். பகுத்தறிவு வெளிச்சத்தின் மூலம் இந்த உலகைப் புதிதாகப் பார்க்க தொடங்கியதோடு, இந்தியாவில் உள்ள மிக பெரும்பான்மையான மக்கள் மதம் சார்ந்த, மாறாநிலை கொள்கைகளாலும் அது சார்ந்த சமூக மன அழுத்தம் எனும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும் இருப்பதைக் கண்டேன். அவர்களும் அதிலிருந்து விடுவிக்கப்படவேண்டியதாக உணர்ந்தேன். கலைகளில் மிகப் பெருந்திரளான மக்களை சென்று சேர்ந்திருப்பது சினிமா. எனவே ஒரு திரைப்பட இயக்குனராக என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குறிப்பாக இன்றைய அரசியல் சூழலில் பகுத்தறிவின் முக்கியத்துவத்தைப் பரப்புவதை எனது பொறுப்பாக ஏற்றுக்கொண்டேன்.
இப்படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டீர்கள்? இதை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?
விவேசினி படத்தை 2019 நவம்பர்-இல் தொடங்கினோம். 2020 ஏப்ரலில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். அதன் பிறகு பெருந்தொற்று வந்து சேர்ந்தது. ஒரு வழியாக திரைப்படத் தயாரிப்பை 2021-இல் முடித்து 2022-இல் தான் மக்களிடம் வந்து சேருகிறோம். விவேசினியை இயக்கியது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அதே சமயத்தில் அது ஒரு பிரச்சாரப் படமாக வந்துவிடக்கூடாது என்கிற கவலையும் கண்காணிப்பும் எனக்கு இருந்தது. பிரச்சாரத்தை விட கலையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில் எவர் ஒருவரையும் திறந்த மனத்தோடு அரவணைக்கும் பண்பு கலைக்கு இருப்பதாகப் பார்க்கிறேன். அவர்கள் எந்த கொள்கையோடுச் சம்மந்தப்பட்டவராகவும் இருக்கலாம். இப்படத்தின் மைய கருவாகிய பகுத்தறிவின் முக்கியத்துவத்திற்கு நியாயம் செய்திருப்பதாகவும்