Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - March 2020
Kanaiyazhi - March 2020
Kanaiyazhi - March 2020
Ebook180 pages51 minutes

Kanaiyazhi - March 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

March 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580109505146
Kanaiyazhi - March 2020

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - March 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - March 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - March 2020 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி மார்ச் 2020

    மலர்: 54 இதழ்: 12 மார்ச் 2019

    Kanaiyazhi March 2020

    Malar: 54 Idhazh: 12 March 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி மார்ச் 2020

    தலையங்கம் - ம.ரா.

    பாதுகாப்பைப் பலப்படுத்திக் கொள்வோம்!

    பாதுகாப்பு, பலமாக

    அமெரிக்க அதிபர்

    வந்து போயிருக்கிறார்!

    நவீன காலனி

    நாடாக மாறுவதற்கு

    இந்தியா

    துடித்துக் கொண்டிருப்பதைப் போல

    நமது பிரதமர்

    எழுச்சியுரை ஆற்றியிருக்கிறார்!

    வழியெங்கும் வரவேற்பு.

    தெரு ஓரங்களில்

    இந்தியக் கலைகளின் உயிரோவியங்கள்!

    சிறுவர்களும் பெண்களுமாக

    இலட்சக் கணக்கில்

    திரட்டிக் காட்டிய

    எஜமான விசுவாசம்!

    வந்த விருந்தினரை

    வரவேற்பதில் தவறில்லை!

    நமது பிரதமர்

    அமெரிக்கா சென்றபோது

    வழியில் வந்து வரவேற்றவர்கள்

    அமெரிக்கர்கள் என்றால்

    வரவேற்க நாமும்

    வழியில் நிற்பதில் தவறில்லை.

    ஆனால்

    மோடியை வரவேற்றவர்கள்

    அமெரிக்க இந்தியர்கள்!

    இங்கே

    அமெரிக்க அதிபரை வரவேற்றவர்கள்

    அப்பாவி இந்தியர்கள்!

    இன்னொரு நாட்டுத் தலைவரை வரவேற்க

    இந்திய மக்கள்

    விரும்பி வந்தால் தவறில்லை!

    பிரதமர் மோடிக்காக வருகிறவர்களைக்

    கட்டாயத்தில் தெருவில்

    காக்க வைப்பது

    உலக அளவில் இந்திய மக்களின்

    மதிப்பை உயர்த்துமா?

    இந்திய மக்களின் தன்மானத்தில்

    உலக வர்த்தக வியாபாரமா?

    முன்பெல்லாம்

    வியாபாரக் கம்பெனிகள் வரும்

    அதற்குப் பிறகு அரசு வரும்.

    இப்போது

    அரசாங்கமே சுமந்து வந்து

    அடுத்தவர் தலையில் கட்டுகிறது!

    ஒருபக்கம்

    சீனாவின் நச்சுக்கிருமி

    உலகை மிரட்டுகிறது!

    கருப்புச் சாவுக்குப் பயந்து

    உலகம்

    கவலையில் கிடக்கிறது!

    இயற்கைச் சுரண்டலில்

    பருவநிலை மாற்றங்களில்

    மரபுச் சிதைவுகளில்

    வெட்டுக்கிளிகள் போல்

    கொன்றுண்ணிகளின் இனப்பெருக்கம்!

    கொள்ளைநோய்க் கிருமிகளின்

    கொடூரத்திலிருந்து

    மக்களைக் காப்பாற்ற

    வழிதேடி அலையும் காலத்தில்

    மக்களைக் கொல்லும்

    கொலைகாரக் கருவிகளின்

    வியாபார ஒப்பந்தங்கள்!

    அமெரிக்க அதிபர்

    தேர்தல் பணியைத்

    தொடங்கி இருக்கிறார்.

    இந்தியாவில்!

    அமெரிக்க இந்தியர்களின்

    ஆதரவுப் பாதுகாப்பிற்கு

    இந்தப் பயணம் தேவை போலும்!

    குடியுரிமைத் திருத்தக்

    கொந்தளிப்பில்

    இந்திய மக்களின்

    ஆதரவுப் பாதுகாப்பு

    பிரதமர் மோடிக்கும்

    அவசியம் போலும்!

    எனவே

    பிரதமர் மோடியும்

    அமெரிக்க அதிபரும்

    ஒருவரை ஒருவர் புகழ்ந்து

    அரசு செலவில்

    ஒருவருக்கு ஒருவர்

    தங்கள் பாதுகாப்பைப்

    பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்!

    தலைநகர் தில்லியில்

    ஒருபக்கம்

    அமெரிக்க அதிபருக்கு

    வரவேற்பும் விருந்தும்!

    இன்னொரு பக்கம்

    வன்முறை உயிர்ப்பலி!

    அதிபர் கண்களில் படாமல்

    இந்திய ஏழ்மைக்குத்

    தடுப்புச் சுவர் போட்டவர்கள்

    போராட்டங்களைத் தடுக்க

    இணக்கச் சுவர்

    எழுப்பி இருக்கலாம்!

    எதிர்ப்பும் ஆதரவும் என்று

    வழிபாட்டிடங்களில்

    பிரார்த்தனைகளில்

    நம்பிக்கை இழந்து

    தெருவில் நிற்கிறார்கள்!

    மனதில் மூட்டிய தீ

    தெருவில் படர்கிறது!

    நச்சுக் கிருமிகளின் பசி,,

    எதிர்ப்புச் சக்திகளை

    வலுவிழக்கச் செய்து

    நமக்குள் இருந்தே

    நம்மைக் கொல்லும்

    உயிர்ப் பலியைத் தொடர்கிறது!

    புரிந்து கொல்ல விடாமல்

    புதுப்புது அவதாரங்களில்

    நம்மை அறியாமல்

    நாமே சுமந்து பரப்பும்

    உயிர் எடுக்கும் உண்ணிகளின்

    திக்விஜயங்களைக்

    காலம் முடிக்கும் என்று

    காத்திருக்க முடியவில்லை!

    இராணுவத் தளவாடங்களின்

    இறக்குமதிகளும்

    உலக வியாபார நுணுக்கங்களும்

    உயிர்ப் பலியை நிறுத்தப் போவதில்லை!

    பாதுகாத்துக்கொள்ள

    இருக்கிற ஒரே வழி

    எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதுதானாம்!

    எனவே

    இருக்கிற எதிர்ப்பு சக்தியை

    வளர்த்தெடுத்துப்

    பாதுகாப்பைப்

    பலப்படுத்திக் கொள்வோம்!

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    கவிதை - கவிஜி

    கவிதை - இரா. மதிபாலா

    சிறுகதை - ராம் ஸ்ரீதர்

    கட்டுரை – உரு. அரசவேந்த

    கவிதை - நலங்கிள்ளி

    சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

    கவிதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    மாணவர் பக்கம்

    கவிதை - எஸ். நிவேதா

    சிறுகதை - மு. புனிதா

    கவிதை - சா.கா.பாரதி ராஜா

    கட்டுரை - கிருஷ்ணமூர்த்தி

    சிறுகதை - ஹேம்குமார்

    கவிதை - யாழ் எஸ். ராகவன்

    கவிதை - மீனா வாசு

    முனைவர். கோ.சின்னதுரை அவர்களுடன் ஒரு நேர்காணல்

    கட்டுரை - ஆனந்த் அமலதாஸ். சே.ச.

    சிறுகதை - முனைவர் கு. புகழேந்தி

    கவிதை - மு. முபாரக்

    கவிதை - கீர்த்தி கிருஷ்

    கட்டுரை - இரா.வீரமணி

    சிறுகதை - க.அரவிந்த் குமார்

    கட்டுரை - வ.ந. கிரிதரன்

    கடைசிப்பக்கம் - இந்திராபார்த்தசாரதி

    ***

    கட்டுரை - ஸ்ரீதர் சுப்ரமணியம்

    தில்லி மாடல் vs குஜராத் மாடல்

    தில்லியில் ஆம் ஆத்மி பெற்ற அபார வெற்றி தேசமெங்கும் அலைகளை எழுப்பி உள்ளது. பாஜக எனும் மாபெரும் பிரச்சார இயந்திரத்தை எதிர்த்து நின்று அரவிந்த் கேஜ்ரிவால் வென்றிருக்கிறார். நரேந்திர மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் போன்றவர்களின் தீவிரப் பிரச்சாரங்களை மீறிக்கிடைத்திருக்கும் வெற்றி இது. எனவே ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

    தில்லியில் வாழும் எங்களுக்கு இந்த வெற்றி பெரிய ஆச்சரியம் தரவில்லை. தில்லி மாநில சட்டசபைக்குத் தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் ஆம் ஆத்மிதான் வெல்லப்போகிறது என்பது தில்லிவாசிகள் எல்லாருக்கும் தெளிவாகத் தெரிந்தே இருந்தது. எத்தனை தொகுதிகள் என்பதில்தான் சஸ்பென்ஸ் இருந்தது.

    அதற்குக் காரணம் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆம் ஆத்மி நடத்திய ஆட்சி. ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினார்கள் என்பது உண்மைதான். மத்தியில் அசுர பலத்தில் மோடி ஆட்சி. அவர்கள் நியமித்திருந்த லெஃப்டினண்ட் கவர்னர் எந்த அளவு தொல்லை கொடுக்க முடியுமோ கொடுத்தார். அவரை எதிர்த்துப் போராடுவதற்கே கேஜ்ரிவாலுக்கு முதல் வருடம் சரியாக இருந்தது. போதாத குறைக்கு உள்கட்சிப் பூசலை சரிசெய்ய எடுத்த அதிரடி நடவடிக்கைகள் கட்சியிலும், ஊடகங்களிலும் கசப்புணர்வை வரவழைத்திருந்தது. கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரிக்கப்பட்டார். இப்படி சதா போகிற வருகிறவர்களிடம் எல்லாம் சண்டை போட்டுக்கொண்டு இருந்தால் என்ன ஆட்சி செய்யப்போகிறார்கள் என்று என்னைப் போன்றவர்கள் சந்தேகப்பட்டோம்.

    அடுத்த வருடமே அதையெல்லாம் ஓரங்கட்டி விட்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். ஷீலா தீக்சித் ஆட்சியில் குடிநீர், மின்சாரம் போன்றவற்றுக்குக் கட்டணங்கள் மிக அதிகமாக இருந்தன. அதையெல்லாம் குறைத்தார்கள். பின்னர் நிர்வாகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். கல்வியை நோக்கி அரசின் பார்வை திரும்பியது. ஒருபுறம் கொள்ளைக்கட்டணங்கள் வாங்கும் தனியார் பள்ளிகள் மேல் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தார்கள். பள்ளிகளின் கட்டமைப்புகளுக்கு பட்ஜெட் ஒதுக்கி அவற்றை வலுப்படுத்த ஆரம்பித்தார்கள். கல்வித்திட்டத்தில் புதிய பாடங்களை எல்லாம் புகுத்தினார்கள். பெண்களுக்குத் தற்காப்புக்கலை, மகிழ்ச்சியாக இருத்தல் மற்றும் மன அழுத்தங்களின்றி வாழ்தல் பற்றிய பாடங்கள் சேர்ந்தன. தொழில் முனைவோர்களாக ஆவது பற்றிய பாடங்கள் இணைக்கப்பட்டன. உச்சகட்டமாக அரசுப்பள்ளிகளில் நீச்சல் குளங்கள் கட்டமைக்கப்பட்டன. இன்று இந்தியாவிலேயே நீச்சல் குளங்கள் இருக்கும் அரசுப்பள்ளிகள் தில்லியில்தான் இருக்கின்றன. கூடவே ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அதிகரிக்கப்பட்டன. அதன் மூலம் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது. வழக்கமாக பள்ளிச்சேர்க்கையின் பொழுது கான்வென்ட் பள்ளிகள் முன்புதான் கியூ கட்டுவார்கள். தில்லியில் அரசுப்பள்ளிகள் முன்பு கியூ சேர்ந்தது முதல் பக்க செய்தியானது.

    தில்லியில் பெண்களின் பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சினையாக வெகுகாலம் நிலவியது. அடுத்ததாக இதனைச் சரிசெய்ய ஆம் ஆத்மி அரசு இறங்கியது. பொதுவிடங்களில் சிசிடிவி அமைத்தார்கள்.

    Enjoying the preview?
    Page 1 of 1