Dalit Kalai, Ilakkiyam...
()
About this ebook
உலகளவில் இலக்கியத்தின் பங்கு என்பது சமூகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நாடு, மொழி, இனம் பல்வேறாக இருந்தாலும் இலக்கியம் அதற்கே உரிய தனித்தன்மைகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன்றயக் காலக்கட்டத்தில் இயங்குகிற படைப்பாளிகளிடம் ஒரு உன்னதத் தேடலும் கலை இலக்கியங்களின் அயராத முயற்சியில் ஒரு தொடர்ச்சியான சமூகப் பயன்பாட்டையும் நாம் இலக்கியத்தின் வாயிலாக இருப்பதைக் காணலாம். அத்தகையதொரு தீர்வுக்கான ஒரு பயிற்சிக் களமாய் இலக்கியம் இருப்பதையும் அவை இந்த சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாயும் நான் உணர்ந்துள்ளதின் வெளிப்பாடுகள் தாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
இவற்றில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளின் தொகுப்புக்களாகவும் ஒட்டுமொத்த அனுபவங்களின் சிறு வெளிப்பாடாகவும் ஏற்றுக்கொண்ட அரசியிலின் சாயலாகவும் உள்ளதாக நான் உணர்கிறேன்.
திறனாய்வுக் கட்டுரைகள், தலித்தியம் மட்டுமின்றி, மதிப்புரைகள், விமர்சனங்கள், நேர்க்காணல்கள், கடிதங்கள்... என சேர்க்கப்பட்டுள்ளது. எழுத்தையும் ஓர் ஆயுதமாகக் கொண்டு ஆயுத எழுத்தாக இலக்கியத்தில் பதிக்கப்பட வேண்டும் என்கிற எனது நோக்கத்தின் வெளியீடாகவும் இத்தொகுப்பைச் சொல்லலாம். அதற்காக சமூக நோக்கங் கொண்ட பல்வேறு மக்கள் படைப்பாளிகளும் இலக்கியப் படைப்பாளிகளும் உதவியிருக்கிறார்கள். அரங்குகளில் என்னோடு விவாதித்தும் விமர்சித்தும் கருத்துக்களில் ஒன்று பட்டும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் 'இலக்கியத்தின் இலக்கு' உட்பட சில கட்டுரைகள் தாமரையிலும் இந்தியா டு டேயிலும் வெளிவந்தது. இரண்டாம் பாகத்தில் புதிய கோடாங்கி, மீண்டும் அறிவு வழி உட்பட பல இதழ்களில் வெளிவந்தது. மூன்றாவதாக நூல் மதிப்புரைகளில் ஒரு சில மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. கவிஞர் பழமலயின் 'இரவுகள் அழகு’ என்னும் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது கடந்த 23 ஆண்டுகாலம் அவரோடு இணைந்து கலை, இலக்கிய, அரசியல், பண்பாடு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருவதின் குறியீடாகவும் இன்னும் சொல்லப்போனால் பெருமையாகவும் கருதுகிறேன்.
நான்காவதாக உள்ளவற்றில் 'கல்யாணி கையால் போட்ட விதை' என்பது என் சுய அடையாளமாகும். அத்தோடு பேராசிரியர் பழமலய் அவர்களோடு நானும் கவிஞர் இந்திரனும் பங்குபெற்ற ஒரிசா - கலைப் பயண அனுபவம் புதுமையானது மட்டுமின்றி, வித்தியாசமானதுங்கூட. சினிமா குறித்தான ஒன்றிரண்டு எனது பார்வையும் இவற்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய எழுத்தாளர்களுடன் அனுபவப் பகிர்வு என்பது வேறு எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கருதினேன். நூறு கருத்துக்கள் மோத குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்கானத் தீர்வாய் கருத்தரங்கு இருந்ததை அன்றைக்கே உணர முடிந்தது.
கடைசியாக கி. ராஜநாராயணன், கோவை ஞானி, பாவண்ணன் ஆகியோரின் நேர்க்காணல்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவப் பதிவுகள் எனவும் சில இடம் பெற்றுள்ளது.
இலக்கிய உலகில் உள்ள பல்வேறு இலக்கியப் போக்குகளும் நிகழ்வுகளும் அவ்வந்த காலத்தின் குறியீடாகவும் அதன் வெளிப் பாடாகவும் ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலுங்கூட ஒரு சிலவாவது இவற்றில் கட்டுரைகளாக எழுதி வெளிவந்துள்ளது.
சிறுகதைகளை மட்டுமே குறியாக எழுதி வந்த நான் பல மார்க்சிய புத்தங்களையும் மார்க்சிய வாதிகளின் ஆய்வு நூல்களையும் கலை இலக்கிய நூல்களையும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பதின் விளைவாகக் கட்டுரைகள், கவிதைகள்... என எழுத நேர்ந்தது. எனது பன்னிரெண்டாவது புத்தகமான இது எனது இரண்டாவது கட்டுரை நூலாகும்.
இத்தொகுப்பு வெளிவருவதற்கு முன்பும் வெளியாவதற்கும் பலரும் உதவியிருக்கிறார்கள். முனைவர் பத்மாவதி விவேகானந்தன் பங்கு பெற்ற பல கருத்தரங்கங்களில் நானும் பங்கு பெற்றுள்ளதோடு இத்தொகுப்பு வெளிவர பெரிதும் அவர் ஊக்கப் படுத்தியிருக்கிறார்.
இனி நீங்கள் எழுதுங்கள்.
விழி. பா. இதயவேந்தன்
Read more from Vizhi Pa. Idhayaventhan
Vathai Padum Vazhvu Rating: 0 out of 5 stars0 ratingsThai Mann Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Viriyum Rating: 0 out of 5 stars0 ratingsIni Varum Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsIrul Thee Rating: 0 out of 5 stars0 ratingsDalit Ilakkiya Arasiyal… Rating: 0 out of 5 stars0 ratingsMuranthadai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsEvarum Ariyatha Naam Rating: 0 out of 5 stars0 ratingsUyirizhai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Dalit Kalai, Ilakkiyam...
Related ebooks
Chitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum Rating: 0 out of 5 stars0 ratingsJayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6 Rating: 0 out of 5 stars0 ratingsSamuthaya Marumalarchi Ilakkiyangal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - March 2022 Rating: 0 out of 5 stars0 ratingsOru Kathasiriyarin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMalargalukkaga Malarnthavai! Rating: 0 out of 5 stars0 ratingsBharathi – Sila Paarvaikal Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Tamizhum Chitrithazhgalum Rating: 0 out of 5 stars0 ratingsThakkaiyin Meethu Naangu Kangal Rating: 4 out of 5 stars4/5Vazhkai Nalam Rating: 0 out of 5 stars0 ratingsTamil Mozhi Ilakkiyam Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pugaiyin Kallarai Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsEn Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsKamban Tamizhum Kanini Tamizhum Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsIlakkai Thedum Idhayangal Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsVerukku Neer Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsPadaippu Thiranum Yerpu Kotpaadum Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaarpugal Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Dalit Kalai, Ilakkiyam...
0 ratings0 reviews
Book preview
Dalit Kalai, Ilakkiyam... - Vizhi Pa. Idhayaventhan
http://www.pustaka.co.in
தலித் கலை, இலக்கியம்...
Dalit Kalai, Ilakkiyam…
Author:
விழி பா. இதயவேந்தன்
Vizhi Pa. Idhayaventhan
For more books
http://www.pustaka.co.in/home/author/vizhi-pa-idhayaventhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சமூகப் பயன்பாட்டிற்கான இலக்கு
I. திறனாய்வுகள்
1. இலக்கியத்தின் இலக்கு
2. எழுத்தாளன் என்னவாக இருக்கிறான்?
3. தமிழில் வெகுசன இலக்கியம்
4. எழுத்தும் எழுத்தாளனும்
5. வேலையற்ற வேலை
6. தமிழே தமிழா!
7. கற்றதனாலாய பயன்...
8. மாணவ வன்முறை
9. கனம் தமிழ்ச் சான்றோர்களே!
10. தேர்வு எனும் வைரஸ்
11. நினைவு மெய்ப்படுமா?
II. தலித்தியம்
1. தலித் சிறுகதைகள்: நோக்கும் போக்கும்
2. கோடங்கிக் கவிதைகள் - ஒரு பார்வை
3. சாதியக் கொடுமைகளுக்கெதிராக தலித்துக்களின் 'தப்பாட்டம்'
4. பல்கலைப் பாடம் யாருக்கு?
5. தூசு படிந்த கண்ணாடி: தலித்தியம்
6. சமூகமும் தலித்தும்
7. தமிழ் இலக்கியத்தில் தலித் இலக்கியம் தேவையா?
8. தலித் துயரங்கள்
III. மதிப்புரைகள்/விமர்சனங்கள்
1. புதிய புதிய பரிமாணங்களில்...
2. பாரதியின் பார்வையில் நால்வருணம்
3. எல்லோருக்குமான சூரியன்!
4. கழுவேத்தி
IV. பிற கட்டுரைகள்
1. கல்யாணி கையால் போட்ட விதை
2. ஒரிசா: ஒரு கலை இலக்கியப் பயணம்
3. இன்றைய சமூக அவமானம்
4. இந்திரன்: கதானுபவம்
5. 'அழகி' - இயல்பாய் ஒரு காதல் மொழி
6. சினிமா: மக்களே ஆயுதம்; மக்களே கேடயம்!
V. நேர்க்காணல்கள்/கடிதங்கள்
1. 'இலக்கியத்தில் பம்மாத்து கூடாது'
2. மானுட துக்கம்
3. கோவை ஞானியுடன்...
4. 'நிஜம்' - கடிதம்
5. 'கணையாழி' - கடிதம்
எழுத்தாளர் ப. சிவகாமி
அவர்கட்கு
சமூகப் பயன்பாட்டிற்கான இலக்கு
உலகளவில் இலக்கியத்தின் பங்கு என்பது சமூகத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. நாடு, மொழி, இனம் பல்வேறாக இருந்தாலும் இலக்கியம் அதற்கே உரிய தனித்தன்மைகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன்றயக் காலக்கட்டத்தில் இயங்குகிற படைப்பாளிகளிடம் ஒரு உன்னதத் தேடலும் கலை இலக்கியங்களின் அயராத முயற்சியில் ஒரு தொடர்ச்சியான சமூகப் பயன்பாட்டையும் நாம் இலக்கியத்தின் வாயிலாக இருப்பதைக் காணலாம்.
அத்தகையதொரு தீர்வுக்கான ஒரு பயிற்சிக் களமாய் இலக்கியம் இருப்பதையும் அவை இந்த சமூக மாற்றத்திற்கான ஒரு கருவியாயும் நான் உணர்ந்துள்ளதின் வெளிப்பாடுகள் தாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பு.
இவற்றில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளின் தொகுப்புக்களாகவும் ஒட்டுமொத்த அனுபவங்களின் சிறு வெளிப்பாடாகவும் ஏற்றுக்கொண்ட அரசியிலின் சாயலாகவும் உள்ளதாக நான் உணர்கிறேன்.
திறனாய்வுக் கட்டுரைகள், தலித்தியம் மட்டுமின்றி, மதிப்புரைகள், விமர்சனங்கள், நேர்க்காணல்கள், கடிதங்கள்... என சேர்க்கப்பட்டுள்ளது.
எழுத்தையும் ஓர் ஆயுதமாகக் கொண்டு ஆயுத எழுத்தாக இலக்கியத்தில் பதிக்கப்பட வேண்டும் என்கிற எனது நோக்கத்தின் வெளியீடாகவும் இத்தொகுப்பைச் சொல்லலாம். அதற்காக சமூக நோக்கங் கொண்ட பல்வேறு மக்கள் படைப்பாளிகளும் இலக்கியப் படைப்பாளிகளும் உதவியிருக்கிறார்கள். அரங்குகளில் என்னோடு விவாதித்தும் விமர்சித்தும் கருத்துக்களில் ஒன்று பட்டும் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாகத்தில் 'இலக்கியத்தின் இலக்கு' உட்பட சில கட்டுரைகள் தாமரையிலும் இந்தியா டு டேயிலும் வெளிவந்தது. இரண்டாம் பாகத்தில் புதிய கோடாங்கி, மீண்டும் அறிவு வழி உட்பட பல இதழ்களில் வெளிவந்தது.
மூன்றாவதாக நூல் மதிப்புரைகளில் ஒரு சில மட்டும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. கவிஞர் பழமலயின் 'இரவுகள் அழகு’ என்னும் கவிதை நூலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு கிடைத்தது கடந்த 23 ஆண்டுகாலம் அவரோடு இணைந்து கலை, இலக்கிய, அரசியல், பண்பாடு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருவதின் குறியீடாகவும் இன்னும் சொல்லப்போனால் பெருமையாகவும் கருதுகிறேன்.
நான்காவதாக உள்ளவற்றில் 'கல்யாணி கையால் போட்ட விதை' என்பது என் சுய அடையாளமாகும். அத்தோடு பேராசிரியர் பழமலய் அவர்களோடு நானும் கவிஞர் இந்திரனும் பங்குபெற்ற ஒரிசா - கலைப் பயண அனுபவம் புதுமையானது மட்டுமின்றி, வித்தியாசமானதுங்கூட. சினிமா குறித்தான ஒன்றிரண்டு எனது பார்வையும் இவற்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய எழுத்தாளர்களுடன் அனுபவப் பகிர்வு என்பது வேறு எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பாகக் கருதினேன். நூறு கருத்துக்கள் மோத குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைக்கானத் தீர்வாய் கருத்தரங்கு இருந்ததை அன்றைக்கே உணர முடிந்தது.
கடைசியாக கி. ராஜநாராயணன், கோவை ஞானி, பாவண்ணன் ஆகியோரின் நேர்க்காணல்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அனுபவப் பதிவுகள் எனவும் சில இடம் பெற்றுள்ளது.
இலக்கிய உலகில் உள்ள பல்வேறு இலக்கியப் போக்குகளும் நிகழ்வுகளும் அவ்வந்த காலத்தின் குறியீடாகவும் அதன் வெளிப் பாடாகவும் ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலுங்கூட ஒரு சிலவாவது இவற்றில் கட்டுரைகளாக எழுதி வெளிவந்துள்ளது.
சிறுகதைகளை மட்டுமே குறியாக எழுதி வந்த நான் பல மார்க்சிய புத்தங்களையும் மார்க்சிய வாதிகளின் ஆய்வு நூல்களையும் கலை இலக்கிய நூல்களையும் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பதின் விளைவாகக் கட்டுரைகள், கவிதைகள்... என எழுத நேர்ந்தது. எனது பன்னிரெண்டாவது புத்தகமான இது எனது இரண்டாவது கட்டுரை நூலாகும்.
இத்தொகுப்பு வெளிவருவதற்கு முன்பும் வெளியாவதற்கும் பலரும் உதவியிருக்கிறார்கள். முனைவர் பத்மாவதி விவேகானந்தன் பங்கு பெற்ற பல கருத்தரங்கங்களில் நானும் பங்கு பெற்றுள்ளதோடு இத்தொகுப்பு வெளிவர பெரிதும் அவர் ஊக்கப் படுத்தியிருக்கிறார்.
இனி நீங்கள் எழுதுங்கள்.
விழி. பா. இதயவேந்தன்
*****
I. திறனாய்வுகள்
1. இலக்கியத்தின் இலக்கு
இலக்கியத்தின் இலக்கு என்னவாக இருக்கும் என்கிற கேள்வி நம்மில் பலருக்கு எழ வாய்ப்புண்டு. இலக்கு இல்லாத இலக்கியம், இலக்கியமாக இருக்க வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
இலக்கியத்தில் இலக்கு மட்டுமில்லை, அது சார்ந்த நோக்கம், இலட்சியம் என்பதும் முக்கியம். எந்தவித நோக்கமோ இலட்சியமோ இன்றி இலக்கியத்தில் இலக்கை அடைய வாய்ப்பில்லை.
படைப்பிலக்கியம் என்பது ஒரு தனி மனிதனுக்காகவோ அல்லது ஒரு சிறு தனி மனிதக் குழுவினதற்கானதாகவோ இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது மானுட வளர்ச்சிக்கான இலக்கியமாய் இராது. அது பொதுவானத் தன்மையை நோக்கிச் செல்ல வேண்டும். அவற்றின் சமூகப் பயன்பாடு என்பது பொதுமை நிறைந்தவையாக இருந்தால்தான் இலக்கியமும் வெற்றி கொள்ளும் முகமாக அமையும்.
இலக்கியத்தின் இலக்கு என்பதைப் பலர் பலவித அளவுகோல் வைத்துப் பார்ப்பதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கு முன்பாக கலை இலக்கியம் என்பது ஏன், எதற்காக, எப்படி, யாருக்காக என்ற கேள்விகளுக்கு விடைத் தெரிந்துவிட்டால் இலக்கியப் பயன்பாடு என்பதும் அதன் இலக்கு எதை நோக்கி என்பதும் நமக்குப் புரிந்துவிடும்.
மனித சமூகம் தோன்றிய நாள் முதல் நம் புராதான நிலவுடமை சமூகத்திலும் சரி அதற்குப் பிந்திய சமூகத்திலும் சரி, நாகரீகம் தோன்றிய நாள் முதற்கொண்டே நம்மின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாய் வளரத் தொடங்கியது. நமது பண்பாட்டு நெறிமுறைகள் வளர வளர கூடவே ஆடல் பாடல் கலைகளும் அது சார்ந்த இலக்கிய வடிவங்களும் தோன்றாமலில்லை.
மக்களின் எண்ணங்களை மனதில் கொட்டிக் கிடக்கிற ஏராளமான கற்பனைகளின் வாயிலாக கலையாய், இலக்கியமாய் தொடர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இது சமூகத்தளத்தில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது? சமூகத்தை அடுத்தக் கட்டத்திற்கு இட்டுச் செல்கிறதா, அல்லது ஒரு புதிய சமூகத்திற்கான தேடல் நம் கலை இலக்கிய வளர்ச்சி நிலையில் எந்த அளவுக்கு மேலோங்கியுள்ளது என்பதையும் நாம் அறிய வேண்டியுள்ளது.
இயற்கை அறிவு மனிதனுக்கு வளர வளரக் கூடவே செயற்கையான அறிவும் நம்மேல் சமூகத்திலிருந்து திணிக்கப் படுவதால் எவற்றை நாம் உள்வாங்குவது அதே நேரத்தில் எவற்றை நாம் வெளிப்படுத்துவது என்கிற சிக்கல்களும் ஏற்படுகிறது. அவற்றால் ஒரு கலாச்சார சிதைவு ஏற்பட்டு இலக்கியத்தின் இலக்கை வேறு திசைக்கு இட்டுச்செல்லும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது.
காலப் போக்கில் நமது தமிழ்மொழியில் பழம்பெரும் இலக்கியங்களைத் தோண்டியும் கால ஓட்டத்தில் வெளியான இலக்கியச் சூழல்களை கருத்தில் கொண்டும் நம் மொழிக்கு அறிமுகமான பிற இலக்கியக் கோட்பாடுகளை அரசியல் சார்ந்தும் அரசியல் சாராமலும் உள்வாங்கி அவற்றின் கருத்துக்களும் ஆழமான விமர்சனங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இவற்றால் இலக்கியக் கோட்பாடுகள் அதன் இலக்குகள் குறித்து நிறையவேப் பேசப்பட்டாலும் அது அதன் சுயதன்மை என்பது எவற்றின் பின்னணியாகவும் அல்லது யாருடைய பின்புலமாகவும் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சமூகத்தில் எழுதுகிற, உருவாக்குகிற அல்லது படைக்கப் படுகிற எல்லா எழுத்துக்களும் வெற்றிக் கொண்டவை என நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு குறிப்பிட்ட காலம் செல்வாக்கு செலுத்துகிற படைப்பும் பின்னாளில் காணாமல் போகவும் வாய்ப்புண்டு. அதே நேரத்தில் அவற்றின் ஒரு குறிப்பிட்ட விசயத்தை மட்டும் மாற்றி வெவ்வேறு விதமாக வேவ்வேறு தளங்களில் வெவ்வேறு கோணங்களில் படைப்பிலக்கியங்கள் வருவதை நாம் காணலாம்.
இலக்கு என்பது கூட இலக்கியத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குறிப்பிட்ட எல்லைப் பரப்புக்குள் குறுக்கிவிட முடியாது. 'கற்க கசடற...' என்பது போல சமூகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளதைப் போலவே, கற்றுக் கொடுக்க வேண்டியதும் நிறையவே உள்ளது. அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவும் குறிப்பிட்ட பயணத்திற்குள்ளாகவும் முடிந்து போகிற விசயமில்லை; அதே போன்று அது தனிமனிதன் சார்ந்தவையும் அல்ல. இயக்கமாய்ப் பங்கெடுக்க வேண்டியது.
இங்கு இலக்கு - நோக்கம் - இலட்சியம் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. அன்றாடம் நம்முன் விரிகிற ஏராளமானப் பிரச்சினைகளில் ஒரு பிரச்சினையை மையப்படுத்தி அதன் இலக்கை கவனிப்பதும் அது எதற்கான நோக்கமாக இருக்கிறது என்பதையும் அதன் இறுதி இலட்சியம் அல்லது தீர்வு என்னவாக இருக்க முடியும் என்பதும் படைப்பாளன் தனக்குள் அலசி ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டியவனாகிறான்.
கலை இலக்கியங்கள் என்பவை வாழ்வின் அத்தனை அம்சங்களையும் உள்வாங்கி ஒட்டுமொத்த பரிமாணங்களோடு அவை சமூக மேன்மைக்காகவும் அதன் பயன்பாட்டிற்காகவும் அமைய வேண்டியது அவசியம்.
பொதுவாகவே கலைகள் கலைக்காகவா, கலைகள் மக்களுக்காகவா என்கிற கேள்வி நீண்ட நாட்களாகப் பலரிடம் இருந்து வருகிறது. இது பொதுமைப் பேசும் படைப்பாளிகளின் கேள்வியாக மட்டும் கருத வேண்டியதில்லை. அனைத்து படைப்பாளிகளின் எதிர்பார்ப்பும் உள்ளார்ந்தோ வெளிப்படையாகவோ அதுவாகத்தான் இருக்கமுடியும்.
முன்னர் குறிப்பிட்டதுபோல அவரவர் சார்ந்துள்ள சமூக சூழலில் தனித்தன்மை வாய்ந்ததாகவோ பொதுத்தன்மை வாய்ந்ததாகவோ இருக்குமேயானால் அதனதன் படைப்பும் சரி, படைப்பிலக்கிய எதிர்பார்ப்புக்களும் சரி கலை இலக்கியங்கள் யாருக்காக என்பதை உறுதி செய்ய முடியும்; அல்லது ஒரு வரையரைக்கு கொண்டுவர முடியும்.
கலையை தூயக்கலை என்றும் உன்னதங்கள், புனிதங்கள், மகிமைகள் நிரம்பியவையாகவும் பார்க்கிற ஒரு சமூகச்சூழல் நம்முன் நிழலாடுகிறது. இது கலை கலைக்காக எனப் பேசுபவர்கள் தங்களை அறிவு ஜீவிகளாக அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களாகும்.
இவர்களுக்குள் ஏற்படுகிற குழப்பம் புதியவை, புனிதமானவை என்று தங்களுக்குள் ஒரு ஒளிவட்டம் வீசுவதாகக் கற்பனை