Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6
()
About this ebook
கலை கலைக்காக அல்ல. கலை எந்த மக்களால் உணர்ச்சி காட்டப்பட்டு உருவெடுக்கிறதோ, எந்த மக்களுக்குப் பணிபுரிகிறதோ, அந்த மக்களுக்காகவே என்ற உண்மையை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. “ஒரு உண்மையான எழுத்துக் கலைஞனுக்கு தனக்கென்று எந்த ஒரு நல உரிமையும் கிடையாது.” பொது மக்களின் நல உரிமைதான் அவனுடைய நல உரிமை. இந்தப் பொது மக்கள் தானே உடம்பாலும், மூளையாலும் பாடுபடுகிற மக்கள்? மனித சமுதாயத்தின் பௌதீக, ஆத்மீக மதிப்பீடுகளைப் படைக்கிற பிரம்மாக்கள்? இந்தப் பாட்டாளிப் பெருமக்கள் தானே உலகத்திற்கு அதன் கோனியர் கருத்துக்களையும், ஆகச்சிறந்த உணர்ச்சிகளையும் அருளுகிற வள்ளல்கள். எனவே இன்றைய எழுத்துக் கலைஞனின் புனிதத்திலும் புனிதமான நன்மதிப்பிலும் நன்மதிப்புக்குரிய பணி எது? முன்னேற்றப் பாதையில் போராடும் பொது மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களுக்கு எதார்த்தவாதக் கலைவடிவம் தீட்டுவதும், இதர பகுதி மக்கள் அம்மாதிரியான போராட்டங்களிலும் நன்முயற்சிகளிலும் ஈடுபட உணர்ச்சி ஊட்டுவதும், மனித வர்க்கம் முழுவதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்து இன்பக் கடலாடப் பணிபுரிவதும் ஆகும்.
Read more from Thozhar P. Jeevanandham
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 5 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 8 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6
Related ebooks
Oru Kathasiriyarin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsSamuthaya Marumalarchi Ilakkiyangal Rating: 0 out of 5 stars0 ratingsJayabaskaran Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsDalit Kalai, Ilakkiyam... Rating: 0 out of 5 stars0 ratingsMalargalukkaga Malarnthavai! Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsVathai Padum Vazhvu Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla Dr. Marx Rating: 0 out of 5 stars0 ratingsVekkai Rating: 5 out of 5 stars5/5Kamban Tamizhum Kanini Tamizhum Rating: 0 out of 5 stars0 ratingsElakkia Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaarpugal Rating: 0 out of 5 stars0 ratingsChitrithazh Varalarum Pudhu Kavithai Valarchiyum Rating: 0 out of 5 stars0 ratingsSinthikkum Naanal Rating: 0 out of 5 stars0 ratingsCommunisathirkku Pin Russia Rating: 0 out of 5 stars0 ratingsKop Meyor Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aanathu Rating: 0 out of 5 stars0 ratingsBharathi – Sila Paarvaikal Rating: 0 out of 5 stars0 ratingsThalaikeezh Vikithankal Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsPenvazhipaadu Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratingsChanakya Neeti In Tamil Rating: 3 out of 5 stars3/5Muthukkal Pathu Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pugaiyin Kallarai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Mathiriyana Kaalathil Vazhgirom Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6
0 ratings0 reviews
Book preview
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6 - Thozhar P. Jeevanandham
https://www.pustaka.co.in
தோழர் ப. ஜீவானந்தம் படைப்புகள் - தொகுதி 6
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 6
Author:
தோழர் ப. ஜீவானந்தம்
Thozhar P. Jeevanandham
For more books
https://www.pustaka.co.in/home/author/thozhar-p-jeevanandham
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
இலக்கியத்தில் சோசலிச எதார்த்த வாதம்
முன்னுரை
1. சோவியத் இலக்கியத்தில் சோஷலிஸ்டு எதார்த்த வாதம்
2. சோஷலிஸ்டு எதார்த்த வாதமும், லெனினும்
3. கார்க்கியும் கலை இலக்கியமும்
4. கார்க்கியும் சோஷலிஸ்டு எதார்த்த வாதமும்
5. மாக்சிம் கார்க்கியும் மாயக்கோவ்ஸ்கியும்
6. மாயக்கோவ்ஸ்கி - கவிஞனும் கவிதைகளும்
7. மாயக்கோவ்ஸ்கி படையல்களும் புரட்சிப் புதுமையும்
8. மாயக்கோவ்ஸ்கியின் மாதிரிப் படையல் பிப்ரவரி 1961
சோஷியலிஸத்தின் சரித்திரம்
1. சோஷியலிஸ்ட் சிந்தனைகள்
2. விஞ்ஞான சோஷியலிஸம்
வர்க்கப் போராட்டம்
முன்னுரை
சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியப் பேராசான், தோழர் ப. ஜீவானந்தம் கம்பராமாயணத்தின் மானுடநேயக் கருத்துக்களை மக்களிடம் எளிய தமிழில் கொண்டு சென்றவர்.
எல்லாரும் தேசியக்கவி மட்டுமே என்று குறுக்கிய காலத்தில் பாரதியை உலக மகாகவி
என்று அங்கீகரிக்க விவாதங்கள் மூலமாக வென்று அவரைப் போற்றி பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் ஜீவா. மேலும் பாரதியின் கருத்துக்களை மக்களிடத்தில் பாரதி வழி ஜீவா
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார்!
பெண்களின் சமூக விடுதலைக்காகவும் பெண்கள் சமூகத்தில் சம ஊதியம் பெறவும் புதுமைப் பெண்
என்ற நூலினை எழுதி மக்களிடத்தில் புரட்சிக்கு வித்திட்டவர்.
ஜீவாவின் மொழிபெயர்ப்புத் திறமையைப் பறைசாற்றும் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்?
என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் இன்றுவரை சிறப்பாகப் போற்றப்படுகிறது.
இலக்கியத்தில் உள்ள சோசலிசக் கருத்துக்களை மக்களிடத்தில் இலக்கியச் சுவை
என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார். சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் அமைக்க மற்ற பாதையை விட அதாவது (மற்ற மாடல்களை விட) பொதுவுடைமைப் பாதையே சிறந்தது என முழங்கியவர்!
சுதந்திரத்திற்காக இந்தியாவில் பல தலைவர்கள் போராடினாலும் ஜீவா ஒருவர்தான் வாய்ப்பூட்டுச் சட்டம், நாடு கடத்தல், ஊரை விட்டு வெளியில் நடமாடத்தடை போன்ற வெள்ளை அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.
அப்பேர்ப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இலக்கியப் பேராசான் ப. ஜீவா அவர்கள் எழுதிய நூல்கள் பல பதிப்புகள் வந்திருந்த போதும் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்கால இளைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என அனைவரும் கற்றுணர ஜீவாவின் நூல்களே முதன்மையானவை என்ற வகையில் இனி எந்தக் காலத்திலும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் படிக்கும் வண்ணம் மின்னூலாகவும் ஆடியோ புத்தகமாகவும் அச்சுப் பிரதியாகவும் எது தேவையோ அது எளிதாக தங்கு தடையின்றிக் கிடைக்கும் வண்ணம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஓர் அரிய முயற்சியின் முன்னோட்டமே இந்தப் பதிப்பு.
அந்த வகையில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய நூல்களை மறுபதிப்புச் செய்து மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், ஜீவா அவர்களின் இதுவரை கிடைக்கப் பெறாத நூல்கள் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நூல்கள் தொகுக்க உதவிய கணியம் அறக்கட்டளை மற்றும் ஆர்வமுடன் நூல்களை அனுப்பியும் ஆலோசனைகள் வழங்கியும் பேருதவி செய்த 200க்கும் மேற்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழமையுடன்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
புதுக்கோட்டை நகரக் கிளை
நூல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய புதுக்கோட்டை நகரக் கிளை அலைபேசி எண்: 7094000253
இலக்கியத்தில் சோசலிச எதார்த்த வாதம்
&
சோஷியலிஸத்தின் சரித்திரம்
&
வர்க்கப் போராட்டம்
இலக்கியத்தில் சோசலிச எதார்த்தவாதம்
முன்னுரை
கலை கலைக்காக அல்ல. கலை எந்த மக்களால் உணர்ச்சி காட்டப்பட்டு உருவெடுக்கிறதோ, எந்த மக்களுக்குப் பணிபுரிகிறதோ, அந்த மக்களுக்காகவே என்ற உண்மையை வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது.
ஒரு உண்மையான எழுத்துக் கலைஞனுக்கு தனக்கென்று எந்த ஒரு நல உரிமையும் கிடையாது.
பொது மக்களின் நல உரிமைதான் அவனுடைய நல உரிமை. இந்தப் பொது மக்கள் தானே உடம்பாலும், மூளையாலும் பாடுபடுகிற மக்கள்? மனித சமுதாயத்தின் பௌதீக, ஆத்மீக மதிப்பீடுகளைப் படைக்கிற பிரம்மாக்கள்? இந்தப் பாட்டாளிப் பெருமக்கள் தானே உலகத்திற்கு அதன் கோனியர் கருத்துக்களையும், ஆகச்சிறந்த உணர்ச்சிகளையும் அருளுகிற வள்ளல்கள்.
எனவே இன்றைய எழுத்துக் கலைஞனின் புனிதத்திலும் புனிதமான நன்மதிப்பிலும் நன்மதிப்புக்குரிய பணி எது? முன்னேற்றப் பாதையில் போராடும் பொது மக்களின் வாழ்க்கைச் சித்திரங்களுக்கு எதார்த்தவாதக் கலைவடிவம் தீட்டுவதும், இதர பகுதி மக்கள் அம்மாதிரியான போராட்டங்களிலும் நன்முயற்சிகளிலும் ஈடுபட உணர்ச்சி ஊட்டுவதும், மனித வர்க்கம் முழுவதும் அமைதியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்து இன்பக் கடலாடப் பணிபுரிவதும் ஆகும்.
இப்படி சில கருத்துக்களை சோவியத் நாவலாசிரியன் தனது நாவல் ஒன்றின் முகவுரையில் எழுதியிருக்கிறான்.
இதை இலக்கியத்தில் புதிய எதார்த்தவாதக் கண்ணோட்டம் என்றும் சொல்லலாம்.
எதார்த்தவாதம் மார்க்சியத்தின் பார்வையிலும் விளக்கத்திலும் விழுந்த பிறகு புதிய எதார்த்தமாகிவிட்டது. சோவியத் வாழ்வு உலகில் நடப்பில் வந்த பிறகு சோஷலிஸ்டு சமுதாய வாழ்வை மக்கள் அனுபவித்தறியவும் அந்த அனுபவத்தின் வீச்சு ஏனைய சமுதாயத்தில் விழவும் தொடங்கிய பிறகு இலக்கியத்தில் கண்ட புதிய எதார்த்தவாதம் சோஷலிஸ்டு எதார்த்தவாதமாக உருவெடுத்திருக்கிறது. இன்று சோஷலிஸ்டு எதார்த்தவாதம் சோஷலிஸ்டு நாடுகளில் கலை இலக்கியத் துறையில், அதிகாரபூர்வமான கொள்கையாகவும் இதர நாடுகளில் முற்போக்கு சக்திகளால் மென்மேலும் வரவேற்கப்படும் கொள்கையாகவும் விளங்குகிறது.
சோஷலிஸ்டு எதார்த்தவாதம் உண்மையான நிலைக் கண்ணாடியைப் போல வாழ்க்கையை மானசீகமாக அல்ல, தூலமாகக் காட்டுகிறது. வாழ்க்கையை சரித்திரபூர்வமாக உருவாகி வரும் சமுதாய அமைப்பிலும் அதன் பல்வேறு புரட்சிகரமான வளர்ச்சிகளிலும் காட்டுகிறது. சோஷலிஸ்டு எதார்த்தவாதம் மனித வர்க்கம் முழுமைக்கும் மனித வாழ்வின் சகல துறைகளிலும் சோஷலிச உணர்வுடன் பயிற்சி அளிக்கிறது.
பழமும் விதையும்
மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுத்துக் கலைஞன், தான் ஒரு உறுப்பினனாக விளங்கும் சமுதாயத்தில், சென்ற காலம் முழுவதின் பலனாக, விளைவாக, பழமாக விளங்குகிறான். அதே பொழுதில் அவன் எதிர்காலம் முழுவதின் விதையாகவும் விளங்குகிறான். எழுத்துக் கலைஞன் சென்ற காலத்தின் வாரிசு; வருங்காலத்தின் வழிகாட்டி.
காலத்தின் குரல்
எழுத்தாளன் தவிர்க்க முடியாதபடி தன்னுடைய காலத்தின் குரலாகத் திகழ்கிறான். ஆனால் அவன், "காலத்தின் குரல் அப்படியே வானொலி மாதிரி, இசைத்தட்டு மாதிரி கேட்டதைக் கேட்டபடியே எதிரொலிப்பவன் அல்ல. எழுத்துக் கலைஞன் தன்னுடைய தனி அனுபவத்தில் காலத்தின் குரலைத் தட்டி எதிரொலிக்கிறான். அவன் தன்னுடைய உணர்ச்சிப் பெருக்குகள் விருப்பு வெறுப்புகள், நாட்டங்கள், சிந்தனை முடிவுகள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவைகளில் காலத்தின் குரலை மோதவிட்டு எதிரொலிக்கிறான். இவ்வாறு எழுத்துக் கலைஞன் தனது காலத்தின் ஆத்மாவுக்கு குரல் கொடுப்பதிலேயே அக்காலத்தைப் பற்றிய தனது உணர்ச்சி, அக்காலத்தைப் பற்றிய தனது திறனாய்வுத் தீர்ப்பு, தனது சமுதாய அமைப்பு. அது தனக்குச் செய்துள்ள நன்மை - தீமை ஆகியவைகளையெல்லாம் பற்றி குரல் கொடுக்கிறான்.
ஆகவே, எல்லாக் கலையும் அதனதன் போக்கில் சாதகமாகவோ, பாதகமாகவோ, எதார்த்த வாழ்வைப் பற்றிய ஒரு விமர்சனமாகவே காணக் கிடக்கிறது.
ஒரு கலைஞன் தனது காலத்தில் மனமார மகிழ்ச்சியில் திளைக்கலாம். தனது சூழ்நிலையும், அதன் வளர்ச்சியும் நிலைந்து நின்று தனக்கு உணர்ச்சிப் பெருக்கையும் மன நிறைவையும் கொடுக்க வேண்டும் என்று விரும்பலாம். அப்படியானால், அவன் இந்தச் சூழ்நிலைக்கும், இதன் பலாபலன்களுக்கும் எதிரிடையானவைகள் மீதெல்லாம் எதிர்ப்பையும் வெறுப்பையும் வீசுவான். அல்லது அதே கலைஞன்