Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1
Ebook186 pages56 minutes

Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“சும்மாவிருப்பதே சுகம்” என்ற திருக்கூட்டத்தைத் திரும்பிக்கூட பாராதவன் நான். 1932-ல் காங்கிரஸ் சட்டமறுப்பில் ஈடுபட்டு, ஓராண்டுச் சிறைவாசம் பெற்றேன். கடலூர், திருச்சி சிறைச்சாலைகளில் எனது பொழுதைச் சும்மா கழிக்க முடியவில்லை. படிப்பும், எழுத்தும் பொழுதை போக்கின. என் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயங்களில் ஒன்று பெண்ணடிமை. பெண்ணடிமை தேய்ந்து, பெண்ணுரிமை தழைக்க வேண்டுமென்னும் ஆர்வத்தோடு சில பாட்டுகள் அக்காலங்களில் இயற்றினேன். அவற்றை தமிழுலகத்தின் முன் விநயமாக சமர்ப்பிக்கிறேன். அவசியமாயின் ஆதரிக்கட்டும்.

ப. ஜீவானந்தம்

Languageதமிழ்
Release dateFeb 18, 2023
ISBN6580162509556
Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1

Read more from Thozhar P. Jeevanandham

Related to Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1

Related ebooks

Reviews for Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1 - Thozhar P. Jeevanandham

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    தோழர் ப. ஜீவானந்தம் படைப்புகள் - தொகுதி 1

    Thozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 1

    Author:

    தோழர் ப. ஜீவானந்தம்

    Thozhar P. Jeevanandham

    For more books

    https://www.pustaka.co.in/home/author/thozhar-p-jeevanandham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    புதுமைப் பெண்

    கடிதம் 1

    கடிதம் 2

    கடிதம் 3

    கடிதம் 4

    கடிதம் 5

    கடிதம் 6

    கடிதம் 7

    கடிதம் 8

    கடிதம் 9

    கடிதம் 10

    கடிதம் 11

    கடிதம் 12

    கடிதம் 13

    கடிதம் 14

    கடிதம் 15

    கடிதம் 16

    கடிதம் 17

    கடிதம் 18

    கடிதம் 19

    கடிதம் 20

    பெண்ணுரிமைக் கீதங்கள்

    முன்னுரை

    1. சுதந்திரோதயம்

    2. பெண் அடிமை பழித்தல்

    3. காதல் மணம் பேணல்

    4. வேண்டுகோள்

    5. விடுதலைப்போர்

    6. பெண்ணுரிமைப் போருக்கு அழைப்பு

    7. வெளிவேஷம்

    8. நவநாரி

    9. (கிளிக்கண்ணி)

    10. (அண்ணி தயைபண்ணி என்ற மெட்டு)

    11. பெண்கள் முன்னேற்றம்

    12. பெண்கள் எழுச்சி

    13. விதவைத் துயர்

    14. பெண் கல்வி

    15. பொது

    16. பாப்பா பாட்டு

    17. மாதர் விடுதலை

    18. இளமை மணக்கேடு

    19. ஆடவர் ஆதிக்க நிந்தனை

    20. ஓர் யோசனை

    21. கடமையுணர்த்தல்

    22. (என்ன கொடுமை இங்கிலீஷ்துரைத் தனத்தில் என்ற மெட்டு)

    ஜீவாவின் புதுமைப் பெண்
    மற்றும்
    பெண்ணுரிமைக் கீதங்கள்

    முன்னுரை

    சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியப் பேராசான், தோழர் ப. ஜீவானந்தம் கம்பராமாயணத்தின் மானுடநேயக் கருத்துக்களை மக்களிடம் எளிய தமிழில் கொண்டு சென்றவர்.

    எல்லாரும் தேசியக்கவி மட்டுமே என்று குறுக்கிய காலத்தில் பாரதியை உலக மகாகவி என்று அங்கீகரிக்க விவாதங்கள் மூலமாக வென்று அவரைப் போற்றி பெருமை சேர்த்தவர்களில் முதன்மையானவர் ஜீவா. மேலும் பாரதியின் கருத்துக்களை மக்களிடத்தில் பாரதி வழி ஜீவா என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார்!

    பெண்களின் சமூக விடுதலைக்காகவும் பெண்கள் சமூகத்தில் சம ஊதியம் பெறவும் புதுமைப் பெண் என்ற நூலினை எழுதி மக்களிடத்தில் புரட்சிக்கு வித்திட்டவர்.

    ஜீவாவின் மொழிபெயர்ப்புத் திறமையைப் பறைசாற்றும் பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? என்ற மொழிபெயர்ப்புப் புத்தகம் இன்றுவரை சிறப்பாகப் போற்றப்படுகிறது.

    இலக்கியத்தில் உள்ள சோசலிசக் கருத்துக்களை மக்களிடத்தில் இலக்கியச் சுவை என்ற நூலின் மூலம் கொண்டு சென்றார். சாதி சமய வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வுகளற்ற சமுதாயம் அமைக்க மற்ற பாதையை விட அதாவது (மற்ற மாடல்களை விட) பொதுவுடைமைப் பாதையே சிறந்தது என முழங்கியவர்!

    சுதந்திரத்திற்காக இந்தியாவில் பல தலைவர்கள் போராடினாலும் ஜீவா ஒருவர்தான் வாய்ப்பூட்டுச் சட்டம், நாடு கடத்தல், ஊரை விட்டு வெளியில் நடமாடத்தடை போன்ற வெள்ளை அரசின் அடக்குமுறைக்கு ஆளானவர்.

    அப்பேர்ப்பட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் இலக்கியப் பேராசான் ப. ஜீவா அவர்கள் எழுதிய நூல்கள் பல பதிப்புகள் வந்திருந்த போதும் அனைத்தும் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்கால இளைஞர்கள், மேடைப் பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், பெண்ணுரிமைப் போராளிகள் என அனைவரும் கற்றுணர ஜீவாவின் நூல்களே முதன்மையானவை என்ற வகையில் இனி எந்தக் காலத்திலும் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் படிக்கும் வண்ணம் மின்னூலாகவும் ஆடியோ புத்தகமாகவும் அச்சுப் பிரதியாகவும் எது தேவையோ அது எளிதாக தங்கு தடையின்றிக் கிடைக்கும் வண்ணம் மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான ஓர் அரிய முயற்சியின் முன்னோட்டமே இந்தப் பதிப்பு.

    அந்த வகையில் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் எழுதிய நூல்களை மறுபதிப்புச் செய்து மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும், ஜீவா அவர்களின் இதுவரை கிடைக்கப் பெறாத நூல்கள் கிடைத்தால் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். நூல்கள் தொகுக்க உதவிய கணியம் அறக்கட்டளை மற்றும் ஆர்வமுடன் நூல்களை அனுப்பியும் ஆலோசனைகள் வழங்கியும் பேருதவி செய்த 200க்கும் மேற்பட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தோழமையுடன்,

    தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

    புதுக்கோட்டை நகரக் கிளை

    நூல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ள வேண்டிய

    புதுக்கோட்டை நகரக் கிளை அலைபேசி எண்: 7094000253

    புதுமைப் பெண்

    கடிதம் 1

    அன்பு மிக்க…

    உனது முடங்கல் தடங்கலின்றிக் கிடைத்தது. கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சுவைத்தேன்; மேலும் சுவைத்தேன். என் நெஞ்சம் உணர்ச்சியை இன்பத்தில் தோய்த்துத் தோய்த்து எடுத்தது.

    பழம்பெரும் தமிழ்ப்பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்து என்ன? கண்ணோட்டம் என்ன? சாதாரண மக்களிடையில், தலைமுறைத் தத்துவமாக, பெண்களைப் பற்றி இருந்துவரும் மனப்பான்மை என்ன? சான்றோர்கள் பெண்மையைப் பற்றிக் குறைத்துப் பேசுகிறார்களா? கூட்டிப் பேசுகிறார்களா? சரியாக, முறையாகப் பேசுகிறார்களா?

    அன்பே! இவ்வாறு உனது கடிதத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கிறாய்.

    இன்று உலக முழுவதிலும் பெண்கள் நிலைமை என்ன? பாரத நாட்டில் பெண்கள் வாழ்வு எப்படி? தமிழகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஜனநாயகம் என்றும், சமதர்மம் என்றும், சமாதானம் என்றும் உலகமெங்கும் முழங்கப்படுகிறது அல்லவா இன்று? இந்த கோஷங்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஒட்டு? என்ன உறவு?

    பெண்களுக்குத் தனிப் பிரச்சினைகள் உண்டா? உண்டென்றால் அவைகளுக்கு பைசல் காண பெண்களுக்கு மட்டும்தான் பங்கா? அல்ல ஆண்களுக்கும் பங்கு உண்டா? பெண்ணுரிமைக்காக, பெண் விடுதலைக்காகத் தனி இயக்கம் வேண்டுமா? தனி ஸ்தாபனங்கள் வேண்டுமா?

    உலகத்தில், இந்தியாவில், தமிழகத்தில் பெண்கள் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது?

    இவ்வாறு உனது அன்புக் கடிதத்தில் கேள்வி மாரி பொழிந்திருக்கிறாய். என்றும் இல்லாதவாறு, என்னைக் கேள்வி மழையில் தள்ளி, திக்கு முக்காடச் செய்திருக்கிறாய்.

    இதுகாறும் தீட்டிய கடிதங்களில், நீ குடும்பக் கதைகளை எழுதுவாய்; உனது படிப்பையும், பரீட்சைகளையும் பற்றி எழுதுவாய்; ஆடல் பாடல்களைப் பற்றி எழுதுவாய்; கிடைத்த ‘மார்க்கு’களையும் தேறிய தரத்தையும், பெற்ற பரிசுகளையும் பற்றி எழுதுவாய்; நீயும் உனது தோழியர்களும், பொழுதுபோக்குக்காக அவ்வப்போது நடத்தும் இனிய உரையாடல்கள் பற்றியும், அவற்றில் நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் செல்லச் சண்டைகள் பற்றியும் எழுதுவாய்.

    இவைகளையெல்லாம், நான் படிக்கப் படிக்க சுவை சொட்ட, இன்பம் சொட்ட எழுதுவாய்; இது உனது வழக்கம்.

    ஆனால், இன்று நான் பெற்ற உனது கடிதமோ, முன்மாதிரியானதல்ல. உன் உணர்ச்சியில் ஒரு ‘புதிய திருப்பத்’தைக் காட்டுகிற கடிதம் இது.

    அன்பே! உலகச் சரித்திரத்தில் பெண்கள் இயக்கம் எப்படித் தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்று வினா எழுப்பி, விடை கேட்கிறாய், சகல துறைகளிலும், சர்வ வியாபகமாய்ப் பெண்கள் இயக்கம் எப்படிப் பரவிப் படர்ந்து நிற்கிறதென்று என்னிடம் கேட்கிறாய். இவைகளைப் பற்றிய எனது அறிவையும், அனுபவத்தையும் பற்பல கேள்விகளால் நயமாகக் கிண்டிவிட்டு விடை காண முயல்கிறாய்.

    என்றைக்கும் இல்லாத புதுமையாக நீ சரமாரியாகக் கேள்விகள் கேட்டும் கடிதம் எழுதியிருக்கிறாய். உலகம் தழுவிய ஒரு பெரும் இயக்கமான பெண்கள் இயக்கத்தைப் பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறாய். தேனென இனிக்கும் வகையில் சுவைபடக் கடிதம் எழுதியிருக்கிறாய். இவை யாவற்றிற்கும் மேலாக, பொட்டு வைத்தது மாதிரி, மனித இனத்தின் செம்பாதியும், உன்னினமும் ஆகிய பெண்ணினத்தின் பிரச்சினைகளையெல்லாம் கிளறி, முன்னிறுத்தி எனது பதில்களில் என்ன தீர்வுகள் பிறக்கின்றன என்று பார்க்கவும் துணிகிறாய்.

    எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அன்பே இன்றையப் பெண்கள் இயக்கத்தில், நவீனப் படிப்புப் படித்த பெண்களின் கடமை என்ன, சொல்லுங்கள் என்றும் கேட்டு எழுதியிருக்கிறாய்.

    உனது கடிதத்தை, குறிப்பாக, உனது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உனது எழுத்துப் பாணியை, நினைக்க நினைக்க ஏற்பட்ட எதிரொலியைத்தான், உனது கடிதத்தைப் படித்ததும் எனது நெஞ்சம் இன்பக் கடலாடுகிறது என்று தொடக்கத்தில் படம் பிடித்துக் காட்டினேன்.

    இவ்வளவு தூரம் உனது கடிதத்தைப் பற்றியே எனது மனவெழுச்சியைக் கூறினேன். இது இருக்கட்டும்.

    அன்பே! உனது வேண்டுகோள்படி பெண்கள் இயக்கத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றி உனக்கு அடுத்த கடிதத்திலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1